.

Thursday, July 5, 2007

சிவகங்கை: சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடித்து அழிப்பு

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றபோது குண்டு வெடித்து பலியான அதிர்ச்சியிலிருந்து இன்னும் சிவகங்கை மக்கள் மீளவில்லை. இந்த கொடூர கொலையில் கவுன்சிலர் உள்பட 2 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை சிவகங்கை பையூர்பிள்ளைவயலில் பேருந்து நிலையம் அருகே கண்மாய் ஒன்றில் 5 பயங்கர வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் வேறு குண்டுகள் இருக்கிறதா என்பதை அறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் குண்டுவீசி கொல்லப்பட்டுள்ள நிலையில் இப்போது பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...