.

Tuesday, April 17, 2007

50 கோடி 'அலேக்' - இரண்டே நிமிடத்தில்

மிகப் பாதுகாப்பான நகரெனக் கருதப்படும் துபாய் நகரின் பளபளப்பும் படோடபமும் நிறைந்த வாஃபி வணிக வளாகத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இயந்திரத் துப்பாக்கிகளோடு நுழைந்து அங்கிருந்த வைர நகைககடையில் இருந்த சுமார் 50 மில்லியன் திர்ஹாம் (50 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள வைர நகைகளை அள்ளிச் சென்றிருக்கிறது.
மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட இந்தச் சம்ப்வம் மொத்தம் இரண்டே நிமிடங்களீல் நடந்து முடிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் துபாய் நகரை உலுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை துணிகரமான் கொள்ளை நடந்திருப்பது காவல்துறையை தனியார் காவல் ஊழியர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்குவது பற்றி யோசிக்க வைத்திருக்கிறது

'பலியான வி ஏ ஓ குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி !

காஞ்சிபுரத்தில் வேன் மீது ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலியான விஏஓ (கிராம நிர்வாக அலுவலர்) குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் வட்டம் கோவிந்தவாடி அகரம் கிராம அருகே செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஆளில்லாத லெவல் கிராசிங்கில் வேன் மீது மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 22 பேர்களில் 11 பேர் பலியானார்கள். அதில் 9 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள். ஒருவர் கிராம நிர்வாகி ஒருவரின் மகன் மற்றொருவர் ஓட்டுனராவார். விபத்து செய்தி கிடைத்ததும்,காஞ்சிபுரம் அமைச்சர் அன்பரசனையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியில் இருந்தும்,இறந்த அரசு அலுவலர் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியாக ரூ. ஒரு லட்சமும் சேர்த்து ரூ. இரண்டு லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு, அவர்களின் காயத்தின் தன்மைக்கேற்ப மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் நிவாரண வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...