.

Friday, July 27, 2007

மொபைல் போன் மூலம் புத்தகம் எழுதினார்

இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட் பெர்னாக்கோ என்பவர் தனது அலுவலகப் பணிக்குப் போய் வரும் போது மொபைல் போனை பயனப்டுத்தி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். மொத்தம் 384 பக்க அறிவியல் நாவலை அவர், தனது நோக்கியா போனை பயன்படுத்தி இந்த நாவலை எழுதியுள்ளார்.

கேம்பனி டி வியாகோ என்ற பெயரிலான அந்த நாவல் மொபைல் போனில் எழுதப்பட்டிருப்பது உலகிலேயே முதல் முறை என்று தெரிய வந்துள்ளது. இந்தப் புத்தகம் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது. லுலு டாட் காம்-இல் அந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக பதிப்பக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Commuter writes book using mobile phone | Reuters.ca
First book ever written using mobile phone is published

திருநங்கைகள் - விழிப்புணர்வு இயக்கம்


ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகள், விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியிருக்கின்றனர். மனித உரிமைகள், எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஹோமோசெக்ஸ் பழக்கம் கொண்ட இளைஞர்களிடம் காண்டம் பயன்படுத்துவது குறித்து விளக்குகிறார் ஒரு அரவாணி.


செய்தி, படம்:

நன்றி: தமிழ் முரசு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பிரீஜாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் பிரீஜா ஸ்ரீதரன் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் புதன்கிழமை இப் போட்டி தொடங்கியது.

மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரீஜா ஸ்ரீதரன், 36 நிமிஷம் 4.54 வினாடிகளில் இலக்கை எட்டி 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

இது, கடந்த மே மாதம் கோல்கத்தாவில் நடந்த ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் அவர் வெளிப்படுத்திய திறமையைக் காட்டிலும் மோசம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 33 நிமிஷம் 19.71 வினாடிகளில் 10 ஆயிரம் மீட்டர் தூரத்தைக் கடந்திருந்தார்.

பஹ்ரைன் வீராங்கனை கரீமா சலே ஜாஸ்மின் (34 நிமிஷம் 26.39 வினாடி) தங்கப் பதக்கத்தைப் பெற்றார். வட கொரியாவைச் சேர்ந்த கியோங் கிம் 38 நிமிஷம் 29.90 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்தியாவிலிருந்து நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட 14 மகளிர் உள்பட 41 பேர் கொண்ட குழு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளது. உலகப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை எட்டுவதற்கு அஞ்சு பாபி ஜார்ஜுக்கு இதுவே கடைசிப் போட்டியாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெறுகிறது.

தினமணி

The Hindu : Sport / Athletics : Francis shatters Asian 100m record

டென்னிஸ்:சானியா தொடர் வெற்றி !

அமெரிக்காவின் ஸ்டான் போர்டில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் கிளாசிக் பேங்க் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை தாதியானாவை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சானியா வென்றார். இதன் மூலம் அவர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதே போல இரட்டையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சானியா மிர்சா-ஷகார்பீர் ஜோடி அகுல்-ஏஞ்சலினா ஜோடியை வென்றது. இதன் மூலம் சானியா ஜோடி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடக்கும் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பட்டி சிசென்டருடன் மோதுகிறார் சானியா. இந்தப் போட்டியில் சானியா சாம்பியன் பட்டம் பெற்றால் உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.

கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின

www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற அறிவிப்பே வரவேற்கிறது. அவரைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் 'முன்னாள்' என்ற அடைமொழி சேர்க்க வலைத்தளம் மூடப்பட்டுள்ளதாக குடியரசுதலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தளத்தில் அவரது பேச்சுக்கள், புத்தகங்கள், கவிதைகள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் போன்றவை இருந்தன. சிறுவர்களுக்கான பகுதியும் பார்வை குறையுற்றவர்களுக்கு ஒலி ஊடக தளமும் இருந்தது. நாளும் 250,000 பேர் வருகைதந்த இந்த தளம் மிகவும் படிக்கப் பட்டு வந்தது.

இனி அவருக்கான தனி தளமாக abdulkalam.com இருக்கும். இது அவர் கு்.தலைவராக பதவியேற்கும் முன் அவரது 69வது பிறந்தநாளன்று இன்ஃபோசிஸ் நிறுவனரால் துவக்கி வைக்கப் பட்டது. இதனை Aeronautical Development Agency யின் துணை திட்ட இயக்குனராக பணிபுரியும் பொன்ராஜ் நிர்வகித்து வருகிறார்.

India eNews - Kalam's writings disappear from presidential website

ஹனீஃப் மீது குற்றம் எதுவுமில்லை: ஆசி. காவல்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த மூன்று வாரங்களாக காவல்துறையினரால் 'விசாரிக்கப்'பட்டு வந்த இந்திய மருத்துவர்ஹனீஃப் மீது சாட்டப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு உதவியவர் என்ற குற்றசாட்டை விலக்கிக் கொள்வதாக அரசுவக்கீல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். இவ்வழக்கை காமன்வெல்த் அரசு குற்றத்துறை இயக்குனர் (Commonwealth Director of Public Prosecution) மீள் ஆய்வு செய்து 'தவறு' நடந்திருப்பதாகக் கூறி வழக்கை விலக்கிக் கொண்டதாகக் கூறினார்.

இனி அவரது பணிவிசா இரத்து செய்யப்பட்டதும் விலக்கிக் கொள்லப்படுமா என தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை முற்றிலும் சரிசெய்துகொண்டே திரும்ப உறுதியாக உள்ளனர்.

Terrorism charges against Haneef dropped

சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார்.

நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம் வந்துள்ளார். தான் விஞ்ஞானியாக இருக்கும்போது அடிக்கடி சாப்பிடும் ஓட்டலான அண்ணாசாலை அன்னலட்சுமி ஓட்டலுக்கு சென்ற கலாம், அங்கு சாம்பார், ரசம், போண்டா உள்ளிட்டவைகளை ருசித்தார். அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகள் கலாமிடம் வந்து பேசி ஆட்டோகிராப் பெற்றுச் சென்றனர். இரவு 11.45 மணி வரை அவர் அங்கு இருந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

நடிகர் சரத்குமார் கேள்வி!

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டாடா நிறுவனம் தொழிற்சாலையின் முதல்கட்டத்தை துவங்க 30 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கணிமவளத்தினை தோண்டி எடுத்து வெளியில் விற்பார்களா? அல்லது 30 மாதங்கள் கழித்து தொழிற்சாலை ஆரம்பித்து டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் வரை கணிம வியாபாரம் செய்யாமல் இருப்பார்களா? அணுசக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கணிமங்களை சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதாகவும், அதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்தலாமே என்று அந்த அறிக்கையில் நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கதகளி கலைஞர் குமாரன் நாயர் காலமானார்

பிரபல கதகளி கலைஞர் குமாரன் நாயர் (93) வியாழக்கிழமை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக கேரளத்தில் உள்ள பாலக்காடு மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உள்ள அவர், கேரளத்தின் முன்னணி நடனப் பள்ளியான கலமண்டலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950-களில் வெளிவந்த தமிழ் உள்பட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கதகளி கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்பட்ட மோகன் லால் நடித்த 'வனப்பிரஸ்தம்' என்ற மலையாளத் திரைப்படத்திலும் குமாரன் நாயர் நடித்துள்ளார்.

தினமணி

The Hindu News :: Kathakali maestro Kumaran Nair dead

'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டி.வி. சேனல் அளித்த விளக்கங்கள் திருப்தியளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பிசிங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு எதிராக கீழ்நீலை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்றதை ரகசிய கேமராவில் படம்பிடித்து 'ஜீ' டி.வி. 2004-ம் ஆண்டு ஒளிபரப்பியது.

இந்தியா முழுவதும் இச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. நீதித்துறையின் கீழ்மட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைகளைச் வெளிக் கொணரவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜீ டிவி தரப்பில் கூறப்பட்டது.

'இந்த ரகசிய கேமரா நடவடிக்கையால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாகக் கேள்விக்குள்ளானது. இது போன்ற செயல்கள் நடந்திருக்குமோ என நாட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல' என தலைமை நீதிபதி கூறினார்.

நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நீதிபதிகளின் கருத்துக்கு டி.வி. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடவேண்டும் என்ற எண்ணம் டி.வி.க்கு இல்லை; மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டி.வி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

'இந்த நடவடிக்கையால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

'இந்த நடவடிக்கை மூலம், அதைச் செய்த செய்தியாளர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவரது செயலால் வாரன்ட் வழங்கிய நீதிபதி இரண்டு ஆண்டுகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் நீதிபதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த ஆவணமும் இல்லாமல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாரன்ட் பெற்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி

NDTV.com: SC orders journalist to apologise
The Hindu News :: Cash-for-warrant: SC for unconditional apology from channel

அட்டகாசம் செய்த யானைகள் கொல்லப்பட்டன

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அசாம் மற்றும் மிசோராம் மநிலங்களின் எல்லைப் பகுதியில், ஆக்ரோசம் கொண்டு, 8 கிராமவாசிகளைக் கொன்ற பழக்கப்படுத்தப்பட்ட இரண்டு யானைகளைப் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

மரங்களை இழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த யானைகள், மதங்கொண்டு, மூங்கிலாலும், வைக்கோலாலும் அமைக்கப்பட்ட பல குடிசைகளைத் துவம்சம் செய்தன. யானைகள் இயற்கையாக வாழும் இடங்களை மனிதர் ஆக்கிரமிப்புச் செய்வதால், கடந்த காலங்களில் காட்டு யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படியாகப் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் அட்டகாசம் செய்வது மிகவும் அரிதாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

BBC Tamil

Rogue elephants shot after killing eight in Assam | Reuters.com

1 பைசாவுக்கு 29 ஆண்டு போராடிய வியாபாரி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் மிதாபூர் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவ்ராஜ் 1976ம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த தன்ராஜ் மதன்லால் என்பவருக்கு 52,934 ரூபாய் ஒரு பைசா கடன் கொடுத்திருந்தார். தன்ராஜ் அந்த கடனை 1978-ம் வருடம் ஆகஸ்டு 14 திருப்பிச் செலுத்தினார். அப்போது ஒரு பைசாவை மட்டும் திருப் பிக்கொடுக்கவில்லை.

தனக்கு தன்ராஜ் ஒரு பைசா கடன் மற்றும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.14,934ஐ கேட்டு ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற் காக நோட்டீசு அனுப்ப ரூ.11 செலவு செய்தார்.

விசாரணைக்குப் பின் 1988ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் தேவ ராஜிடம் ஒரு பைசாவை மட்டும் தன்ராஜ் திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 1989ல் தேவராஜின் மகன் பிரசன்ராஜ் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். 18 ஆண்டு விசாரணைக் குப் பின் ஐகோர்ட்டு நீதிபதி கோபால் கிரிசன் வியாஸ் அளித்த தீர்ப்பில் தேவராஜுக்கு தன்ராஜ் ஒரு பைசா மற்றும் வழக்கு நோட்டீசு செலவு ரூ.11ஐ மட்டும் திருப்பி செலுத்தினால் போதும் இரு வரும் கடனுக்கான வட்டி தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.

மாலைமலர்

Trader fights 29 years to recover one paisa - India

ஜனாதிபதி பதவியேற்பு விழா துளிகள்...

* நாடு சுதந்திரம் அடைந்த 57 ஆண்டுக்குப் பின் முதல்பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதீபா பட்டீலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த முதல் தலித் நீதிபதி.

* பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு, பகல் 1.30 மணியில் இருந்தே முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். 1.50 மணிக்கு சோனியா வந்தார். எம்.பி.க்கள் புடை சூழ வந்த உ.பி. முதல் - மந்திரி மாயாவதி, நீண்டகால தோழியை போல் சோனியாவின் தோளில் கைபோட்டு வணக்கம் தெரிவித்தார்.

* கருணாநிதியுடன் வந்த துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி கருணாநிதி எம்.பி. இருவரும் தலைமை நீதிபதியின் மனைவி மற்றும் பிரதீபா பட்டீலின் நெருங்கிய உறவினர்கள் அருகே அமர்ந்தனர்.

* ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததை உணர்த்தும் விதத்தில், முதல் மந்திரிகள் கருணாநிதி, மாயாவதி இருவரும் சோனியாகாந்தியின் அருகில் அமர்ந்து இருந்தனர்.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

* அத்வானி 4-வது வரிசையில் அமர்ந்து இருந்தார். பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முதல் வரிசையில் பிரதீபா பட்டீலின் கணவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்தார்.

* ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த பைரோன்சிங் செகாவத் விழாவில் பங்கேற்றார். முதலில் பிரதமர் மன்மோகன்சிங் அருகில் அமர்ந்த அவர், மத்திய மந்திரி அர்ஜுன்சிங் வந்ததும் அவருக்கு அந்த இடத்தை கொடுத்துவிட்டு அடுத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்.

* 2.10 மணிக்கு பிரதீபா பட்டீலின் கணவர் தேவிசிங் செகாவத்தை கவர்னர் மாளிகையின் மெய் காப்பாளர்கள் மரியாதையுடன் அழைத்து வந்து பார்வையாளர் முதல் வரிசையில் கடைசி இருக்கையில் அமர வைத்தனர்.

* விழா தொடங்குவதற்கு முன்பு அவரை யாருக்கும் தெரியவில்லை. விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்து சம்பிரதாய முறைப்படி பிரதீபா பட்டீல் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலை நோக்கி கைகளை கட்டியபடி மெதுவாக நடந்துசென்றபோது அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவரும் நேராக நின்றபடி மரியாதை செலுத்தினார்கள்.

மண்டபம் முழுவதும் அமைதி நிலவிய அந்த நேரத்தில் முன் வரிசையில் வெள்ளை நிற உடையில் இருந்த உயரமான தேவிசிங் மட்டும் பின்புறம் திரும்பி பிரதீபா பட்டீல் செல்வதை பார்த்தார். பிரதீபா பட்டீல் வெளியேறிய போது, தேவிசிங்கும் தனக்கு அருகில் இருந்த நுழைவாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றதை பார்க்க முடிந்தது.

* விழா முடிந்ததும் பிரதீபா பட்டீலுக்கு முதலில் வாழ்த்து சொன்னவர் பா.ஜனதாவை சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல் - மந்திரி வசுந்தரா ராஜே ஆவார்.

* ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் முதன் முறையாக மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

* அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஆற்றும் உரைகளில் திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து கவிதை வரிகளை எடுத்துச்சொல்வது வழக்கம். நேற்று உரையாற்றிய புதிய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மராத்தி கவிஞர் துக்காராமின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டினார்.

* அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

தினத்தந்தி

அனைத்து ஊர்களுக்கும் ஆப்டிக் பைபர் வயர் மூலம் கேபிள் டி.வி. இணைப்பு: தமிழக அரசு முடிவு

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் இணைப்பு வழங்குவது எப்படி? டி.வி. ஒளிபரப்பு தெளிவாக இருக்கும் வகையில் எவ்வாறு இணைப்பு கொடுப்பது என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தொலைபேசி, இணைய தள வசதிக்காக ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும், ஆப்டிக் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்கினால் 17 ஆயிரம் வருவாய் கிராமங்களுக்கு இது பயன்படும்.

டி.வி. தவிர டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகளையும் இதன் மூலம் வழங்க முடியும். இதனால் தமிழ் நாட்டின் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும், விரைவில் கேபிள் டி.வி. இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் வசதிகளை வழங்க முடியும். தற்போது ஒன்றியங்கள் அளவில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் இணைப்பு சிறிய கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டால், 2 வருடங்களில் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்க முடியும்.

இந்த தகவலை எல்காட் நிறுவன நிர்வாக இயக்கு னர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ரூ.500 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை பராமரித்தல், கட்டணம் வசூல் செய்தல் ஆகிய பணிகளை உள்ளாட்சி துறை மற்றும் சுய உதவிகுழுக்கள் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நகர் புறங்களில் 6 மாதங்களுக்குள்ளும், கிராமங்களில் ஒரு வருடங்களுக்குள்ளும் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்காக சென்னையிலும், மதுரையிலும் தனி அலுவலகங்ககள் அமைக்கலாம்.

'டிஜிட்டல்' முறையில் இந்த இணைப்பு வழங்கப்பட்டால் தெளிவான ஒளிபரப்பு கிடைக்கும். பணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்க முடியும். கட்டண வசூலையும் 'ஆன்லைன்' செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

ELCOT to bring all households under cable TV network in Tamil Nadu @ NewKerala.Com News Channel

-o❢o-

b r e a k i n g   n e w s...