வட கொரியா 2007 முடியும் முன்் தன் அணு ஆயுதத் திட்டம் குறித்து முழு விபரங்களையும் வெளியிட்டு ்வெளியிட்டு அத்திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் தூதுவர் கிரிஸ்டோபர் ஹில் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
North Korea 'to end nuclear work' - BBC
Sunday, September 2, 2007
"அணு ஆயுதத் திட்ட்டத்தை கைவிட்டது வடகொரியா''
Posted by
சிறில் அலெக்ஸ்
at
11:05 PM
0
comments
அர்னால்டு இந்தியா வருகிறார்

அணுஆயுத ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு நவம்பர் மாதம் டெல்லி வருகிறார்.
இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்க அரசியலில் அதிரடியாக குதித்தார். அரசியலில் அமோக வெற்றி அவருக்குக்கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக கலிபோர்னியா மாநில கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் அர்னால்டு வருகிற நவம்பர் மாதம் தனது குடும்பத்தாருடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அப்போது அவர் டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். அரசியல் நல்லெண்ண தூதராகவும், அணுஆயுத விவகாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்காவிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் இந்தியா வருகிறார்.
எனவே அவர் டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
6:18 PM
0
comments
Saturday, September 1, 2007
நிருபர்களிடம் அசடு வழிந்தார் புஷ்.
மலேசிய பிரதமர் அப்துல்லா பாத்வி அண்மையில் மறுமணம் செய்து கொண்டதையும், அவருக்கு தான் வாழ்த்து கூறியதையும் அடியோடு மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் புஷ், இறந்துபோன பாத்வியின் மனைவியைப் பற்றி பேசியதால் நிருபர்கள் முன் அசடு வழிந்தார்.
வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை ஆசிய பசிபிக் நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் புஷ், "மலேசிய பிரதமர் பாத்வியின் மனைவி 2005-ல் மரணமடைந்த போது, நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தேன்' என்று சோகம் ததும்ப கூறினார்.
பாத்வி கடந்த ஜூனில் மறுமணம் செய்து கொண்டார் என்று புஷ்ஷிடம் நிருபர்கள் நினைவுப்படுத்திய போது, "அப்படியா, நான் உடனே அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமே' என்றார்.
அப்போது குறுக்கிட்ட புஷ்ஷின் நேர்முக செயலாளர், "நீங்கள் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள் அதிபர் புஷ்" என்று நினைவுப்படுத்தினார்.
அதைக்கேட்டதும் நிருபர்கள் மத்தியில் அசடு வழிந்து சிரித்த புஷ், "பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறேன்" என்றார்.
சமீபத்திய ஒரு பேட்டியில், பிபிசி நிருபரின் வழுக்கைத் தலையை கிண்டலடித்த புஷ்ஷுக்கு, சரியான பதிலடி கொடுத்திருக்கின்றனர் ஆசிய நிருபர்கள்.
தினமணி
Posted by
வாசகன்
at
6:34 PM
0
comments
Thursday, August 30, 2007
அணுசக்தி ஒப்பந்தம்: 6 வினாக்கள் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இதுபற்றி ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவை இப்போது வாபஸ் பெறுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசிடம் 6 விளக்கங்களை கேட்க இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.
1. அணுசக்தி 123 ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு என்ன பயன்கள் ஏற்படும் இதன் விளைவு என்ன?
2. அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?
3. ஒப்பந்தத்தில் இந்தியாவில் சொந்த அணுசக்தி திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? குறிப்பாக அணு ஆயுதம் தொடர்பாக என்ன விளைவு ஏற்படும்?
4. இதனால் இந்தியா- மேற்கு ஆசியா, 3-ம் உலக நாடுகள் இடையே பாதிப்பு ஏற்படுமாப அணி சேரா கொள்கை என்ன ஆகும்?
5. இந்த ஒப்பந்தத்தால் நமது மின்சார தேவை எந்த அளவுக்கு பூர்த்தியாகும். இது பொருளாதார ரீதியில் லாபம் தரக்கூடியதா?
6. இது பாதுகாப்பான ஒப்பந்தம்தானா?
மாலைமலர்
Cong likely to freeze nuke deal temporarily - Newindpress.com
Govt bows to Left, will go slow on nuclear deal
Posted by
Boston Bala
at
8:23 PM
0
comments
Wednesday, August 29, 2007
அமெரிக்க ஓப்பன் - இரண்டாம் சுற்றில் சானியா
எஸ்டோனியாவின் கயியா கனெப்பியை 6-2 6-7 6-1 எனும் செட் கணக்கில் தோற்கடித்து சானியா அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தார்.
மகளிர் டென்னிஸ் தர வரிசையில் 26ஆம் இஅட்த்தில் இருக்கும் சானியா 60ஆம் இடத்தில் இருக்கும் அமரிக்கர் லாரா கிரான்வில்லோடு இரண்டாம் சுற்றில் விளையாடவிருக்கிறார்.
US Open: Sania moves to second round NDTV.com, India -
Sania Mirza advances at US Open
Sania Mirza stumbles into second round
Sania Enters Second Round Of US Open
Posted by
சிறில் அலெக்ஸ்
at
1:20 AM
0
comments
Tuesday, August 28, 2007
நாரீகாவை நாடுகடத்த நீதிபதி ஒப்புதல்
பனாமாவின் முன்னாள் தலைவர் மானுவல் நாரீகா (Manuel Noriega)வை ஃபிரான்சுக்கு நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் சம்மதித்திருக்கிறது. அடுத்த மாதத்துடன் தன்னுடைய ஃப்ளோரிடா சிறைவாசத்தை 73 வயதாகும் நாரீகா நிறைவு செய்கிறார்.
பணமாற்றுதலில் (money-laundering) மோசடி செய்ததற்காக பத்தாண்டு வரை ஃபிரான்சில் தண்டனை கிடைக்கலாம். போதைப்பொருள் கடத்தியதற்காக 1992 முதல் அமெரிக்காவின் மியாமி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
BBC NEWS | Americas | Judge agrees Noriega extradition
America's tyrant | Special reports | Guardian Unlimited: "Manuel Noriega ruled Panama as a favourite of Washington until his dictatorial excesses and green light for cocaine trafficking became too much"
Posted by
Boston Bala
at
11:31 PM
0
comments
Monday, August 27, 2007
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் இராஜிநாமா
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். நீதித் துறையை அவர் தலைமையேற்று நடத்துவது குறித்து, தொடர்ந்து பல மாதங்களாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.
கடந்த ஆண்டு ஒன்பது அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கப்பட்ட விடயத்தில் அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தீவிரவாதத்தின் மீதான போர் என புஷ் அரசால் கூறப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் அதிபர் புஷ் அவர்களின் அதிகாரங்களை விரிவுபடுத்த அவர் அனுமதித்தார் என்கிற விடயம் தொடர்பாக அவர் அதிகப்படியான அழுத்தத்தை சந்தித்து வந்தார்.
தமிழ் பிபிசி
US Attorney General Gonzales Resigns | World Latest | Guardian Unlimited
Gonzales has been loyal voice for administration - CNN.com
Posted by
Boston Bala
at
10:58 PM
0
comments
2000 அடி ஆழத்தில் மூன்று வாரங்களாக...
அமெரிக்காவின் உட்டாவ் பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்து அந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்களில் 6 தொழி லாளர்களை 3 வாரங்கள் ஆகியும் மீட்க முடிவில்லை. 2000 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடும் அவர்களை மீட்க மேல் பகுதியில் இருந்து இதுவரை 6 ஆழ் துளைகள் போட்டனர். ஆனாலும் மீட்க முடியவில்லை. அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.
இந்த நிலையில் 7-வதாக மீட்பு படையினர் ஒரு துளை போட்டு அதில் நவீன கேமரா பொருத்தப்பட்ட ரோபாட்டை செலுத்துகிறார்கள். துளை வழயாக இந்த போராட் 1000 அடி ஆழத்தில் சென்று தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை படம் பிடித்து அனுப்பும். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா.. இருந்தால் அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்ற தகவலையும் இந்த ரோபாட் தெரிவிக்கும்.
Posted by
வாசகன்
at
6:48 PM
0
comments
ஆப்கன்: அமெரிக்கத் தாக்குதலுக்கு ஹமீத் கர்சாய் கண்டனம்.
ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
தெற்கு பகுதியில் மூசா காலா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறது.
இதை தொடர்ந்து இந்த பகுதிகளில் அமெரிக்க கூட்டு படையினர் விமான தாக்குதல் நடத்தியது.
தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி பொது மக்களின் குடியிருப்புகள் மீது விமானங்கள் சரமாரி குண்டு வீசின. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 அப்பாவி பொது மக்கள் பலியாகி விட்டனர். இன்னும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அமீது கர்சாய் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்
நன்றி: மாலைமலர்
Posted by
வாசகன்
at
6:34 PM
0
comments
Thursday, August 23, 2007
மீண்டும் வருகிறது அமெரிக்கப் போர் கப்பல் 'நிமிட்ஸ்'
"அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்', அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வரும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த "நிமிட்ஸ்' கப்பல், உலகின் பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பலில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. அதனால், இக்கப்பல் இந்தியாவுக்கு வருவதற்கு, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், கடந்த மாதம் சென்னை துறைமுகம் அருகே, இந்தக் கப்பல் நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் கிளம்பிச் சென்றது.இந்நிலையில், "தற்போது ஹாங்காங்கில் முகாமிட்டுள்ள நிமிட்ஸ் கப்பல், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வங்காள விரிகுடா கடலில், இந்திய எல்லைப் பகுதியில் நிறுத்தப்படும். அங்கு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 25 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும். இந்த பயிற்சி வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இதன் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த அமெரிக்கா உதவும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.
தினமலர்
Posted by
வாசகன்
at
10:50 PM
0
comments
Tuesday, August 21, 2007
அமெரிக்காவுக்கான தூதரைத் திரும்பப் பெற மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், "தலையில்லாத கோழிகள்" என்று கிண்டல் செய்த, தூதர் ரொனேன் சென் உடனடியாக திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.
"வாஷிங்டனில் நமக்கொரு தூதர் இருக்கிறார்; ஆனால் அவர், நமக்குத் தூதராக இல்லாமல், ஜார்ஜ் புஷ்ஷுக்குத் தூதராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய அரசுக்கு சுய மரியாதை என்று ஏதேனும் இருக்குமானால், உடனடியாக அவரைத் தாய்நாட்டுக்கு வரவழைக்க வேண்டும்' என்றார் பிரகாஷ் காரத்.
தினமணி
Posted by
வாசகன்
at
6:57 PM
0
comments
Monday, August 20, 2007
அணுசக்தி உடன்பாடு: நடுக்கத்தில் நடுவன் அரசு.
இதனால் கடுப்பான இடதுசாரிகள், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர். ஒப்பந்தம் அமல்படுத்தப்படக் கூடாது. மீறினால் ஆதரவு நிச்சயம் வாபஸ் பெறப்படும், தேவையில்லாத பல விளைவுகள் ஏற்படும் என பிரதமரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்தார். மேலும்...
Posted by
Adirai Media
at
10:35 AM
0
comments
Friday, August 17, 2007
அணுசக்தி உடன்பாடு - மேலும் பின்னடைவு
இந்தியா அமெரிக்காவிற்கிடையேயான அணுசக்தி உடன்பாட்டுக்கு இடதுசாரி கட்சிகளின் ஒப்புதலை வாங்குவதற்கு மன்மோகன்சிங் அரசு முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் அமலானால் இந்தியாவால் அணுகுண்டு தயாரிக்கும் சோதனைகள் செய்ய இயலாமல் போகும் எனும் கருத்தை இடதுசாரிகளும் முக்கிய எதிர் கட்சிகளும் வலியுறுத்திவந்தன. இதை மன்மோகன்சிங்கின் அரசு மறுத்து அணுகுண்டு தயாரிப்பது இந்தியாவின் தார்மீக உரிமை என அறிவித்தது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியா அணுகுண்டு வெடிக்கும் சோதனைகளைச் செய்தால் அமெரிக்கா ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்ளும் என தெரிவித்தது.
இதனால் அணுகுண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க இன்று அவையில் பிரதமர் மன்மோகன்சிங் தவறான தகவல்களைத் தந்து உரிமை மீறல் செய்துவிட்டதாக புகாரை முன்வைத்துள்ளது (Breach of Privilege Motion).
BJP seeks privilege motion against PM Hindustan Times -
BJP to move privilege motion against PM
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:26 AM
0
comments
Thursday, August 16, 2007
அமெரிக்கா இஸ்ரேேலுக்கு $30பில்லியன் இராணுவ உதவி
அமெரிக்கா இஸ் ரேலுக்கு $30 பில்லியன் அளவுக்கு இராணுவ உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இன்று செய்தது. சவுதி அரேபியாவுக்கு இதுபோன்ற உதவி வழங்கும் முடிவுடன் இந்த முடிவும் சேர்ந்து வருகிறது. முன்னதாக இஸ்ராயேல், சவுதிக்கு அமெரிக்கா உதவுவதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தது.
"There is no question that, from an American point of view, the Middle East is a more dangerous region now than it was 10 or 20 years ago and that Israel is facing a growing threat," Mr Burns said. "We look at this region and we see that a secure and strong Israel is in the interest of the United States."
US Offers Israel $30B Aid Package
Israel, US sign 30-billion-dollar defence aid package
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:09 PM
0
comments
Wednesday, August 15, 2007
லட்சக் கணக்கில் பொம்மைகள் திரும்பப்பெறப்படுகின்றன
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு உடல் ஊறுவிளைவிக்கும் பொம்மைகள் லட்சக்கணக்கில் மார்க்கெட்டிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள்.
மாட்டெல் எனும் நிறுவனம் கடந்த மாதகாலத்தில் இரண்டாவது முறையாக தன் பொம்மைகள்ளை திரும்பப்பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
மாட்டெலின் பங்குகள் இன்று 6% சரிந்தன.
Mattel Recalls Chinese Toys, Second Time in Two Weeks (Update4)Bloomberg
Mattel recalls 18m more Chinese toys
UPDATE 3-Mattel recalls millions more Chinese-made toys
Posted by
சிறில் அலெக்ஸ்
at
3:00 AM
0
comments
Monday, August 13, 2007
புஷ்ஷின் 'வலது கை' பதவி விலகுகிறார்
புஷ்ஷின் நீண்ட நாள் ஆலோசகரும் வெள்ளை மாளிகையில் அதிபருக்கு அடுத்த அதிமுக்கிய உறுப்பினருமான கார்ல் ரோவ் தன் பதிவியிலிருந்து சுயவிலக்கம் செய்துள்ளார். தன் குடும்பத்திற்காக இதைச் செய்வதாகவும் தான் பதவி விலக கட்டாயப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் முடிவில் அவர் வெள்ளை மாளிகை பதவியிலிருந்து விடுப்பு பெறுவார். கார்ல் ரோவ் தன் அரசின் கொள்கைகளின் சிற்பி என அதிபர் புஷ்ஷினால் வர்ணிக்கப்பட்டவர். ்ஷஅ
புத்தகம் ஒன்றை எழுதுவதிலும் ஆசிரியராய் கல்வி புகட்டுவதிலும் நேரம் செலவிடப் போவதாக கார்ல் அறிவித்துள்ளார்.
Rove says he was not forced to quit
Karl Rove To Resign At End Of August
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:45 PM
0
comments
123 உடன்பாடு: பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி உடன்பாட்டினால் நமது பாதுகாப்பு சுதந்திரம் பாதிக்கப்படாது என்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு இடையீடும் வராது என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மக்களவையில் நிகழ்த்திய உரையில் கூறினார். பலத்த கோஷங்களுக்கிடையே தன் உரையை நிகழ்த்திய அவர் இந்திய அணுசக்தி பரிசோதனைகளையோ இராணுவ நடவடிக்கைகளையோ இந்த ஒப்பந்தம் பாதிக்காது என்றும் கூறினார்.் வெளியுறவுக் கொள்கையில் இந்திய அரசின் நேர்மைபற்றி மற்ற நாடுகள் வைத்திருக்கும் அளவாவது தம் அரசின் மீது குறைகாணுபவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றார்.
அவரது உரையின் மற்ற விவரங்களுக்கு....The Hindu News Update Service
அவரது மக்களவை பேச்சின் முழு உரைவடிவம்:
Posted by
மணியன்
at
4:15 PM
0
comments
Wednesday, August 8, 2007
123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்
பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டியதில்லை என்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்டு பேரம் பேசபோவதில்லை என்றும் பிரதமரின் அலுவலகம் CNN/IBN க்கு தெரிவித்துள்ளது. திங்களன்று பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இதனை அறிவிப்பார் என்றும் அப்போது பிஜேபி மற்றும் இடது கட்சிகளின் கவலைகளுக்கு பதிலளிப்பார் என்றும் பிரதமர் அலுவலகத்தினர் கூறினர்.
மேலும்....IBNLive.com > UPA won't turn Left, says N-deal on right track :
Posted by
மணியன்
at
3:13 PM
0
comments
Saturday, August 4, 2007
சான் டியாகோ: சானியா,வீனஸ் தோல்வி
சாண்டியகோவில் நடைபெறும் அகூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியில் இன்று மரியா சரபோவா இந்தியாவின் சானியா மிர்சாவை 6-2,6-1 என்ற கணக்கில் வென்று அவரது தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் சானியா டென்னிஸ் வீராங்கனைகள் சங்கத்தின் (WTA) தரவரிசையில் முப்பதிற்கு கீழ்வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அவரது யுஎஸ் ஓப்பன் ஆட்டதொடரில் பங்கேற்பதற்கு பேருதவி புரியும்.
மற்றொரு கால் இறுதிப் போட்டியில் விம்பிள்டன் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸை உருசிய வீராங்கனை அன்னா சக்வெதட்ஸ் விறுவிறுப்பான மூன்று செட் ஆட்டத்தில் 6-7(5),7-6(3),6-2 என்ற கணக்கில் வென்று பரபரப்பை உண்டாக்கினார். அடுத்த சுற்றில் சரபோவாவுடன் மோதுவார்.
மற்ற அரையிறுதிப் போட்டியாளர்களும் நிச்சயமாகியுள்ளது. பட்டி ஸ்னைடரும் எலெனா டெமெந்தீவாவும் ஆடுகிறார்கள். ஸ்னைடர் நாடியா பெற்றோவாவை 6-2,6-4 என்ற கணக்கிலும் டெமெந்தீவா மாரியா கிரிலென்கோவை 6-2,6-4 என்ற கணக்கிலும் வென்றனர்.
Acura Classic
Posted by
மணியன்
at
6:42 PM
0
comments
செவ்வாய் பயணத்தை துவங்கியது பீனிக்ஸ்
நாசா நிறுவனம் தனது கேப் கானவெரால் நிலையத்திலிருந்து டெல்ட்டா இராக்கெட் மூலமாக பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செல்லுமுகமாக இன்று கிழக்கு அமெரிக்க நேரப்படி காலை 0526க்கு ஏவியது. ஒன்பது மாதங்கள் பயணித்து செவ்வாய் கிரகத்தை இக்கலம் அடையும். அங்கு தரையை அகழ்ந்து முந்தைய,தற்போதைய உயிர் வாழ்வைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும். பூமியின் அலாஸ்காவைப் போன்ற ஒரு தரைபிரதேசத்தில் இதனை தரையிறக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில செ.மீ ஆழத்திலேயே தண்ணீர் உறைந்து ஐஸாக இருப்பதாக நம்பப் படுகிறது.
இது பற்றிய BBC NEWS செய்தி துணுக்கு | Science/Nature | Lift off for Nasa's Mars probe
Posted by
மணியன்
at
6:18 PM
1 comments
b r e a k i n g n e w s...
