குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திண்டாடும்போது, 20 வயதான முகமது பைசல் என்பவர், ஒரு நிமிடத்தில் 50 கை பேசி எண்களை மளமளவென்று கூறுகிறார். புதுடில்லி, ராஜ்தானி ஓக்லாவில் வசிப்பவர் முகமது பைசல்(20).
எல்.ஜி., நிறுவனத்தில் சேவைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு நினைவுத் திறன் மிக அதிகமாக உள்ளதால், 50 கை பேசிஎண்களை மளமளவெனக் கூறுகிறார். 224 நாட்டின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.டி., எண் அனைத்தையும் ஒப்பிக்கிறார். எந்த நாட்டைப் பற்றிய செய்தியையும் 0.8 செகண்டில் தந்து, நடமாடும் குறிப்பேடாக (டைரக்டரி)'யாக இருக்கிறார்.
பைசலின் சாதனை இதோடு நிற்கவில்லை. 600 வருடம் வரை உள்ள நாட்காட்டியை முழுவதுமாக நினைவு வைத்துள்ளார். அவர் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருப்பதால், அவருடைய பெயர், "ஹோல்டர்ஸ் ரிபப்ளிக் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு,' மற்றும் "ஓபன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.
தன்னுடைய ஞாபகத் திறன் குறித்து பைசல் கூறியுள்ளதாவது: முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்தி வைக்க, ஆர்வம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் எந்த ஒரு பொருளையும் ஐந்து புலன்கள் மூலம் நினைவில் வைத்துக் கொள்வேன். பொருள்களை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து, படித்து, அனுபவித்து மூளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு பைசல் கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே இவரது இலட்சியமாம்.
தினமலர்
Tuesday, September 4, 2007
ஞாபகத்திறனுக்கொரு முகமது ஃபைசல்.
Posted by
வாசகன்
at
4:06 PM
0
comments
Sunday, September 2, 2007
இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
தினமலர்
Posted by
வாசகன்
at
5:35 PM
1 comments
Saturday, September 1, 2007
பத்திரிக்கையாளர் சாய்நாத்துக்கு மகசேசே விருது.
தமிழக ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான மகசாசே விருது இன்று வழங்கப்பட்டது.
ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசாசே விருதை பிலிப்பைன்ஸ் நாடு வழங்கி வருகிறது. இவ்விருதிற்குச் சிறப்பான கிராமிய பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிய தமிழக பத்திரிகையாளர் சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு "சற்றுமுன்" குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
Posted by
வாசகன்
at
6:51 PM
2
comments
பார்வையற்றோரும் பயன்படுத்த மின்-அஞ்சல் - சாதித்த மாணவியர்
தஞ்சாவூரை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவிகள் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் தொலைபேசி வழி மின் அஞ்சல் வசதிக்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் புலத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) பி. ரவிச்சந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் ஜி. ஜெகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் பேராசிரியர் கே. மீனா வழிகாட்டுதலின் கீழ் மாணவிகள் டி. சித்ரா, பி. ரேவதி, ஐ. தென்றல், கே. வித்யா ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
இம்மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு சார்பில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பப் கல்லூரியில் ஆக. 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
நாம் வழக்கமாக பயன்படுத்தும் கணினியில் எழுத்துக்களை ஒலிகளாக மாற்றும் ஒரு கருவியை பொருத்துவதன் மூலம் இணையதளத்தில் தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையற்றவர்கள் தொலைபேசி கருவி மூலம் காதால் கேட்டுக் கொள்ளாம். மேலும் இதே முறையில் இ-மெயிலும் அனுப்பலாம். இதற்கென தனியே பயன்படுத்துவோர் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த வசதியை பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
"வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இணையதளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பார்வையற்றவர்கள் இணைய தள வசதியை பெற இயலாத நிலையில் உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கருவியை மாணவிகள் செய்துள்ளனர்' என்று கூறி மாணவிகளைப் பாராட்டினார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.
நன்றி: தினமணி
Posted by
வாசகன்
at
6:25 PM
0
comments
Friday, August 31, 2007
அதிகாரமிக்க முதல் பத்து பெண்களில் சோனியா
பிரபல வணிக இதழ் ஃபோர்பஸ் வெளியிடும் உலகின் நூறு அதிகாரமிக்க பெண்கள்
வரிசையில் ஐந்தாவதாக இந்திய அமெரிக்கரும் பெப்சி நிறுவன தலைவர்மற்றும் முதல் நிர்வாகியுமான இந்திரா நூயி இடம்பெற்றிருக்கிறார். இவரை அடுத்து ஆறாவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி இடம் பெற்றுள்ளார்.
ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள அஞ்செலா மெர்க்கில் இரண்டாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சீன துணை பிரதமர் உ யி யும் சிங்கப்பூரின் டெமெஸ்க் நிறுவன முதல் நிர்வாகி ஹோ சிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டெலெஸ்சா ரைஸ் நான்காம் இடத்தில் உள்ளார்.
சோனியா காந்தியைப் பற்றி இவ்விதழ் இத்தாலியில் பிறந்த இந்தியாவின் மிகுந்த அதிகாரமிக்க இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தான் அரசியலில் 1990இல் இறங்கியபின்னர் வெகுதூரம் வந்துள்ளார் எனக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு இவரது பங்கை சிறப்பாக கருதுகிறது.
முழு கட்டுரைக்கு Sonia Gandhi, Indra Nooyi among world's 10 most powerful women-Politics/Nation-News-The Economic Times
Posted by
மணியன்
at
7:17 PM
4
comments
Thursday, August 30, 2007
நாளிதழ் வாசிக்கும் மூன்றே வயது குழந்தை.
2004 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி பிறந்தா அர்ஜயா நிஸ்காம் என்ற மூன்று வயது குழந்தை நாளிதழ்களையும், பாடபுத்தகங்களையும் தெளிவான உச்சரிப்புடன் சரளமாக வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
இச்சிறுவன் இன்னமும் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்பது இதில் இன்னும் வியப்பு. மாவட்ட கூடுதல் நடுவர் நிதின் பானுதாஸ் ஜாவலே என்பார் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது
எஃகு நகரமான ரூர்கேலாவில் வசிக்கும் இந்த பிறவி மேதையின் தந்தை அம்ரேந்திர பெஹரா, அங்குள்ள எஃகாலையின் ஊழியர்களுள் ஒருவராவார்.
மேலும் படிக்க... பி/டி/ஐ செய்தி..
Three-year-old reads newspapers and text books
Posted by
வாசகன்
at
9:09 PM
0
comments
Monday, August 13, 2007
ஷங்கர், விஜய்க்கு டாக்டர் பட்டம்
மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் இயகுநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
விஜய்க்கு டாக்டர் பட்டம் - சினி சவுத்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:54 PM
8
comments
Wednesday, August 8, 2007
டென்னிஸ்: சானியா ஜொலிக்கிறார்
தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடருமுகமாக சானியா மிர்சா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் $ 6 இலக்கம் முதற்பரிசுள்ள ஈஸ்ட்வெஸ்ட் வங்கி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் மார்டினா ஹிங்கிஸை 6-2,2-6,6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளார். பல நல்ல வெற்றிகளைப் பெற்று தன் வாழ்நாளின் சிறந்த தரவரிசை எண் 30 ஐ அடைந்திருக்கும் சானியா ஆட்டம் ஜொலிக்கிறது.
கால் இறுதி ஆட்டத்தில் தனது இரட்டையர் கூட்டாளி பியரையோ அல்லது பிரெஞ்ச் ஆட்டக்காரர் விர்ஜின் ரஸ்ஸனோவையோ எதிர்த்து ஆடுவார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
11:41 AM
3
comments
Saturday, July 14, 2007
முரளிதரன் சாதனை: 700 விக்கெட்கள்
முத்தையா முரளிதரன் சனிக்கிழமையன்று தனது 700வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனையால் ஸ்ரீலங்கா அணி பங்களாதேசத்தை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 193 ஓட்டங்களில் வென்றது. இந்த டெஸ்ட்டில் முன்னதாக குமார சங்ககாரா 222 ஓட்டங்கள் எடுத்திருந்ததும் குறிப்பிடத் தகுந்தது.
ஸ்கோர்: ஸ்ரீ லங்கா 500-4 (ஆ.மு), பங்களா 131 &176 ( முரளி 6/28 & 6/54)
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
4:11 PM
0
comments
Saturday, June 23, 2007
அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது .
அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம்கடந்த 8-ந்தேதி அட்லாண்டிஸ் விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீராங்கனை சுனிதாவை அழைத்து வரவும் அங்கு தளவாடங்களை பொருத்தவும் இந்த விண்கலம் அனுப்பபட்டது. சுனிதா மற்றும் 6 விண் வெளிநிபுணர்களுடன் அட்லாண்டிஸ் ராக்கெட் கடந்த 19-ந்தேதி மீண்டும் பூமிக்கு புறப்பட்டது.ஏற்கனவே அட்லாண்டிஸ் விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட போது அதன் வெப்ப தடுப்பு தகடு சேதம் அடைந்தது.ஆய்வுக் கூடத்தில் கம்ப்ïட் டர்களும் பழுதடைந்தன. இதனால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்த கோளாறுகள் சரி செய் யப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட் டதும் புளோரிடா மாநிலம் கேப்கனவரால் கென்னடி தளத்தில் தரை இறங்க திட்ட மிடப்பட்டு இருந்தது.ஆனால் புளோரிடா மாநிலத்தில் மோசமான வானிலை காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. இதனால் விண்கலம் தரை இறங்குவது மேலும் தாமதமானது.இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.
விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன. விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.
சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது.
Posted by
Adirai Media
at
10:57 AM
0
comments
Wednesday, June 20, 2007
ச:தமிழ்நாட்டில் பதின்ம வயது சிறுவன் நிகழ்த்திய அறுவை சிகிட்சை சர்ச்சையில்
கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு மகனை குழந்தைப்பேறு அறுவை நடத்த உதவிய மருத்துவ பெற்றோர்கள் இன்று சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளனர். மூன்றுமாதங்களுக்கு முன் திலீபன் ராஜ் என்ற பதினைந்து வயது சிறுவன் தன் மருத்துவ தாய்,தந்தையர், மரு. முருகேசன் மற்றும் மரு.காந்திமதி முன்னணியில் மணப்பாறை மதி அறுவை மற்றும் குழந்தைபேறு மருத்துவமனையில் குழந்தைப்பேறு அறுவை சிகிச்சையொன்றை நிகழ்த்த தந்தை அதனை நிகழ்படமாக குறுந்தட்டில் பதிவு செய்தார். இன்று சாதனையாளர் என்று பாராட்டு கிடைக்கும் என்று ்இந்திய இந்திய மருத்துவக் கழகத்தின் சந்திப்பு ஒன்றில் வெளியிட மற்ற மருத்துவர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். இதற்கு இந்திய மருத்துவக் கழகமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
NDTV.com: Teenage surgeon triggers outrage in TN
Posted by
மணியன்
at
6:52 PM
2
comments
Tuesday, June 19, 2007
உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி
உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழத்தை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்திக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களாக இயந்திர மனிதனை உருவாக்குவதற்கு தேவையான பல வகையான மென்பொருள் மொழிகளை அவர் உருவாக்கியுள்ளார். 1980 களின் தொடக்கம் 1990 ஆம் ஆண்டுகளின் மைய காலம் வரை மருத்துவ துறையில் உதவக் கூடிய வகையில் தன்னிறைவுடன் செயல்படக் கூடிய வகையில் இயந்திர மனிதனின் வடிவமைப்பில் அவர் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
தான் வடிவைமைத்துள்ள இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் பெரிதும் உதவியாக இருக்கும் என டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இந்த ரோபோவின் விலை தற்போது 70,000 அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்தாலும், வணிக ரீதியில் தயாராகும் போது அதன் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
- பிபிசி தமிழ்
1. Deccan Herald - First Indian American woman receives Robotics Tech Award
2. Indian American woman gets US tech award-Software-Infotech-News By Industry-News-The Economic Times
Posted by
Boston Bala
at
11:28 PM
0
comments
Sunday, June 17, 2007
புற்றுநோய் பகுப்பாய்வு: தமிழ் விஞ்ஞானியின் சாதனை!

புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி முனைவர். வ.மாசிலாமணி நிரூபித்துள்ளார். மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு (Masila's Cancer Diagnostics) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வரிய சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பு வழமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். 'தென்றல்' என்று பெயரிடப்பட்டுள்ள தனது அரசுசாரா, இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு தாம் சேவையாற்றவிருப்பதாக விஞ்ஞானி மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
முனைவர் மாசிலாமணி தன்னுடைய கண்டுபிடிப்பை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -டெல்லி (AIIMS - DELHI), குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஹமதாபாத் ஆகியவற்றில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தார் இச்சாதனையை அங்கிகரித்து அளித்த சான்றிதழைப் பெற்ற பின், தன்னுடைய மகனும் இளம் விஞ்ஞானியுமான இளங்கோவனுடன் குடியரசு தலைவர்
அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
விஞ்ஞானி முனைவர் வ.மாசிலாமணி ரியாதிலுள்ள அரசர் சவூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
MASILAMANI'S
Invention Gets Validation
ரியாத் பதிவர் பாலமுகுந்தன் இது பற்றி
Posted by
வாசகன்
at
11:49 AM
6
comments
Sunday, June 10, 2007
சென்னையில் 25-ந்தேதி சந்திரமுகி படம் 800-வது நாள் விழா: கருணாநிதி, ரஜினிகாந்த் பங்கேற்பு
விரைவில் சந்திரமுகி படம் 800-வது நாளை தொட்டு புதிய சாதனை படைக்க இருக்கிறது. தியாகராஜ பாகவதர் நடித்த "அரிதாஸ்'' படம் 784 நாட்கள் (112 வாரங்கள்) நாட்கள் ஓடியதே தென் இந்திய படங்களில் சாதனையாக இருந்தது.
சந்திரமுகியின் படத் தின் 800-வது நாள் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள முதல் அமைச்சர் கருணாநிதி ஒப்புதல் அளித்து உள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து சந்திரமுகியின் 800-வது நாள் விழா கொண் டாடப்படுகிறது.
மாலை மலர்
Posted by
Boston Bala
at
11:26 PM
5
comments
Saturday, June 9, 2007
ச: Forbes பத்திரிகை முகப்பில் HCL
இந்திய தகவல்நுட்ப நிறுவனங்களில் வன்பொருள், மென்பொருள் இரண்டிலும் வலிமைபெற்றுவரும் சிவ நாடாரின் எச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை அட்டைப் படத்தில் சித்தரித்து சிறப்பு கட்டுரையுடன் வெளியிட இருக்கிறது உலக வணிக இதழ்களில் முதன்மையான ஃபோர்பஸ் இதழ். இந்தியாவின் முதல் கணினி நிறுவனம் இன்று பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுக்க நடந்தவழியை மீள்நினைவாற்றியிருக்கிறது.ஜூன் 18 அன்று புத்தகநிலையங்களில் கிடைக்கவிருக்கும் இதழில் அந்த நிறுவனம் சந்தித்த பணதட்டுப்பாட்டையும் முக்கிய வாடிக்கையாலர்களை இழந்ததையும் கூட எழுதியிருக்கிறது.
மேலும்..Indian IT firm HCL on Forbes' cover
Posted by
மணியன்
at
5:17 PM
0
comments
எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி முதலிடம் வென்ற மாணவி
உத்தரபிரதேச மாநிலம் தல்லபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திரபிரதான். இவரது மனைவி சூர்யாபத்தி. இவர்களுக்கு 4மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ராணிவர்மா. இவர் கடந்த 2001ம் ஆண்டில் நடந்த விபத்து ஒன்றில் 2 கைகளையும் இழந்தார்.
அவர் கால்களால் எழுத பயிற்சி பெற்று, சிறிது நாட்களிலேயே கையால் எழுதும் வேகத்தைப் போல கால்களால் கடகடவென எழுதக் கற்றுக் கொண்டார்.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராணி வர்மா மாநிலத்தில் முதலிடம் வென்று சாதனை படைத்தார். பிரதமர் மன்மோகன்சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்து, அவரது படிப்பு செலவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதுபற்றி ராணி வர்மா கூறும்போது, இந்த உலகத்தில் என்னைப் போல யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது. நான் படித்து உயர் அதிகாரியாகி வாகன விபத்துகளைத் தடுப் பதற்காக முயற்சிகளை மேற் கொள்வேன்.
நான் படித்து இந்த நிலைக்கு வர காரணமானவர் என் அம்மாதான். அவர் 2 மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தால் என்னை விட பல மடங்கு சந்தோஷப்பட்டிருப்பார் என்றார்.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
2:26 AM
0
comments
Wednesday, June 6, 2007
ஏழு வயதில் மெட்ரிக் தேர்ச்சி! - இந்தியச் சாதனை.

அந்த சிறுமியின் பெயர் சுஷ்மா வர்மா. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
மெட்ரிகுலேஷன் படிப்பு
சிறுமி சுஷ்மா 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தாள். இவளுடைய தந்தை தேஜ் பகதூர் வர்மா. கூலித்தொழிலாளி. தாய் சாயா. குடும்பத்தலைவி.
வறுமை காரணமாக சுஷ்மாவை அவளது பெற்றோர், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஆனால் சுஷ்மா பொது அறிவில் சிறந்து விளங்கினாள்.
அவளுடைய கல்வி திறனை பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி மாநில பள்ளிக் கல்வித்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இதையடுத்து லக்னோ செயின்ட் மீனா பள்ளியில் சுஷ்மாவை 9-ம் வகுப்பில் நேரடியாக சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு அவள் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினாள்.
7 வயது சிறுமி மெட்ரிக் எழுதும் தகவல் அறிந்ததும் பத்திரிகைகளும், டி.வி.க்களும் சுஷ்மாவை பற்றி பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அளவுக்கு அதிமான விளம்பரத்தால் சுஷ்மாவின் திறமை பாதிக்கப்படலாம் என்று பள்ளி நிர்வாகம் கவலை அடைந்தது.
சாதனை
உ.பி.மாநில மெட்ரிகுலேஷன் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சிறுமி சுஷ்மா 600-க்கு 354 மதிப்பெண்கள் வாங்கி தேர்வு பெற்றாள்.
அவள் இந்தியில் 58, ஆங்கிலத்தில் 60, கணிதத்தில் 66, விஞ்ஞானத்தில் 63, சமூக அறிவியலில் 68, கம்ப்ïட்டர் பாடத்தில் 39 மதிப்பெண்கள் பெற்று இருந்தாள்.
இதற்கு முன்பு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த துளசி என்ற 9 வயது சிறுமி மெட்ரிகுலேசன் பரீட்சையில் பாஸ் செய்து இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சாதனையை படைத்த மாணவி என்ற பெருமையை பெற்று இருந்தாள். அந்த சாதனையை இப்போது சுஷ்மா முறியடித்து விட்டாள்.
அவளுக்கு சக மாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். சாதனை படைத்த சுஷ்மா கூறுகையில், "கம்ப்ïட்டர் பாடத்தில் மார்க் குறைந்ததால் முதல் வகுப்பில் பாஸ் செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதுதான் தனது வருத்தம்'' என்று குறிப்பிட்டாள்.
சுஷ்மாவின் குடும்பத்தை பொறுத்தவரை அவள் மட்டுமின்றி அவளுடைய அண்ணன் சைலேந்திரனும் அறிவு ஜீவிதான். இவன் 11-வது வயதில் 12-ம் வகுப்பு பாஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவன். ஆங்கிலத்தில் இவனுடைய அபார திறமையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவனுக்கு மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாததால் அவன் அமெரிக்கா போகமுடியவில்லை.
தினத்தந்தி
அஞ்சல்வழித் தகவல்: நண்பர் 'ஷஃபீக்'
Posted by
வாசகன்
at
4:32 PM
0
comments
Sunday, June 3, 2007
குத்தம்பாக்கம் இளங்கோவுக்கு "அறம்' விருது: ஜூன் 6-ல் ஆளுநர் வழங்குகிறார்
2006-ம் ஆண்டுக்கான "அறம்' விருது, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். இளங்கோவுக்கு (47) வழங்கப்படுகிறது. இவர், குத்தம்பாக்கம் கிராமத் தன்னாட்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அடங்கும்.
வேதிப்பொறியியலில் பட்டம் பெற்ற இளங்கோ, விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு கிராமச் சேவையில் ஈடுபடத் தொடங்கினார். குத்தம்பாக்கம் ஊராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டார். தற்போது, தொடர்ந்து அப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இளங்கோவுக்கு விருதுத் தொகை ரூ. 1 லட்சத்துடன், மேலும் ரூ. 1 லட்சம் மானியமாக அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை அவரின் 'வலைய வளர்ச்சிப் பொருளாதாரம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த உதவும். மேலும், வட்டியில்லாமல் ரூ. 2 லட்சம் கடனுதவி அளிக்கப்படுகிறது என்று கூறினர்.
Dinamani
Posted by
Boston Bala
at
8:45 PM
3
comments
Thursday, May 31, 2007
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.
பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம் 8,67,707 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 79.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 77.6 சதவீதமாக இருந்தது. இவர்களில் மாணவிகள் 83 சதவீதமும் மாணவர்கள் 76 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு புனித மேரி பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.அக்ஷயா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார். சேரன்மாதேவியைச் சேர்ந்த அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெசீமா சுலைஹாவும், திருவாரூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவகாமசுந்தரியும், புந்துச்சேரி விவேகானந்தா உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யபாரதியும் 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். தக்கலை அமலா பள்ளியைச் சேர்ந்த லம்சே, தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த பாலவித்யா, மயிலாடுதுறை டிபிடிஆர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி, கூடலூர் புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். கணிதப் பாடத்தில் 2,512 பேரும், அறிவியலில் 66 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 13,033 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். இந்த முறை அது 2,512 ஆகக் குறைந்துவிட்டது.
Posted by
Adirai Media
at
4:01 PM
4
comments
Wednesday, May 30, 2007
எவரெஸ்ட் சிகரத்தை சுத்தமாக்கிய மலையேறிகள்
சாதனைக்காக சிகரத்தின் உச்சியைத் தொட்டு கொடியேற்றுபவர்கள் மத்தியில், ஜப்பானின் கென் நொகுச்சி (Ken Noguchi) தலைமையில் அமைந்த குழு ஐநூறு கிலோ குப்பைகளை எவரெஸ்ட் மலையில் இருந்து துப்புரப்படுத்தி சாதனை படைத்துள்ளார்கள்.
Climbers clear mountain of garbage from Everest: Scientific American
Posted by
Boston Bala
at
3:06 AM
2
comments
b r e a k i n g n e w s...
