.

Showing posts with label சர்ச்சை. Show all posts
Showing posts with label சர்ச்சை. Show all posts

Tuesday, August 28, 2007

யுபிஏ-இடது கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

அணுசக்தி உடன்படிக்கையின் கூறாக அமெரிக்க ஹைட் சட்டத்தின் தாக்கம் இந்திய வெளியுறவு கொள்கைகளை பாதிப்பதைப் பற்றி ஆராய யுபிஏ- இடதுசாரிகட்சிகளின் கூட்டுக்குழு அமைக்கப்படவிருக்கிறது. இன்று இந்திய கம்யூனிஸ்ட்களிடமும் பின்னர் மார்க்சிய கம்யூனிஸ்ட்களிடமும் காங்கிரஸ் நடத்திய மராத்தன் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவின் அதிகாரம், எல்லைகள், அமைப்பு போன்றவை அடுத்த இருநாட்களில் முடிவாகும். இக்குழுவின் ஆய்வறிக்கை வரும்வரை காங்கிரஸ் 123 உடன்பாட்டை மேற்கொண்டு எடுத்துச் செல்லாமல் இருக்க சம்மதித்துள்ளது என சீதாராம் யெச்சூரி கூறினார்.

Left-UPA peace panel this week- Hindustan Times

Sunday, August 26, 2007

ஃபிடல் காஸ்ட்ரோ மரணமா? - சாவேஸ் மறுப்பு.

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணமடைந்து விட்டதாக வந்த தகவல்கள் உண்மையல்ல என காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக, அதிபர் பதவியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்டிரோவிடம் ஒப்படைத்தார். அதன்பின் அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 13 ம் தேதி, காஸ்ட்ரோவின் பிறந்த நாளன்று அவர் பொது மக்களுக்கு காட்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததால், உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்திருப்பார் என அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூயூகோ சாவேஸ் இந்த தகவல்களை மறுத்துள்ளார்.

தினமலர்

Thursday, August 23, 2007

மீண்டும் வருகிறது அமெரிக்கப் போர் கப்பல் 'நிமிட்ஸ்'

"அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்', அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வரும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த "நிமிட்ஸ்' கப்பல், உலகின் பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பலில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. அதனால், இக்கப்பல் இந்தியாவுக்கு வருவதற்கு, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், கடந்த மாதம் சென்னை துறைமுகம் அருகே, இந்தக் கப்பல் நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் கிளம்பிச் சென்றது.இந்நிலையில், "தற்போது ஹாங்காங்கில் முகாமிட்டுள்ள நிமிட்ஸ் கப்பல், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வங்காள விரிகுடா கடலில், இந்திய எல்லைப் பகுதியில் நிறுத்தப்படும். அங்கு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 25 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும். இந்த பயிற்சி வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இதன் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த அமெரிக்கா உதவும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.

தினமலர்

தனி இரயில்வே மண்டலம் கோருகிறது கேரளா

தெற்கு இரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலுவிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை வைத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாக பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என்று பார்லிமென்ட்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது தற்காலிக அலுவலகம், சிக்னல்கள் அமைப்பது போன்ற பணிகளுக்காக ரூ.மூன்று கோடியில் பணிகள் முடிந்துள்ளன.

புதிய கோட்டத்தை வரும் செப்டம்பர் 14ம்தேதி தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கேரள எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் அமளி செய்தனர். இதைத்தொடர்ந்து பேசிய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் "இரு மாநில முதல்வர்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்று கூறினார். இதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதற்கிடையில் டில்லியில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் சேலத்தில் ரயில்வே கோட்டம் தொடங்கப்பட்டால், தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என்று தனி ரயில்வே மண்டலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து கூறிய லாலு, இரு மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

தினமலர்

Monday, August 20, 2007

பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அதிமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. கருணாநிதியை பொருத்தவரை இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தே தீரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் விடாபிடியாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் தெரிந்தே பொய் சொல்வது, உண்மைகளை சொல்லாமல் மறைப்பது, மக்களுக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுவது போன்ற நிலைகளில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்பட்டுள்ளார்.

எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும். இல்லை என்றால் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டியது வரும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Sunday, August 19, 2007

வக்பு வாரிய கட்டிடம்: மேலும் ஒரு அறிக்கை.

வக்பு வாரிய முன்னாள் தலைவரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வக்பு வாரிய கட்டிட திறப்புவிழா தொடர்பாக தமிழக வக்பு வாரிய தலைவர் கூறி இருப்பது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் 79 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜரத் முகமது இனாயத்துல்லா என்ற மகான் அடக்கமாகி உள்ள கட்டிடத்தை இடித்ததை கண்டித்துத்தான் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதை வக்பு வாரிய தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருவது எனது கடமை என்று கருதுகிறேன்.

வக்பு வாரிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் காலதாமதம் ஆனது என்று அவர் கூறி இருப்பது முற்றிலும் தவறானது. வக்பு வாரிய கட்டிடம், அ.தி.மு.க. ஆட்சியில் பணம் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியும் முடிக்கப்பட்டது. கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாரானது இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், திறக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் சில பகுதியை வேண்டும் என்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இடித்துவிட்டு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். வாரியத் தலைவரும் கட்டிடம் திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளார் என்பதுதான் உண்மை.

இவ்வாறு பதர் சயீத் அறிக்கையில் கூறி உள்ளார்.

தினத்தந்தி

Saturday, August 18, 2007

'நான் இறக்க வேண்டி யாகம் செய்தனர்' - மன்மோகன் சிங்

இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங், சில எதிர்கட்சி தலைவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட நாளில் இறந்து போக வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தியதாகக் கூறியிருக்கிறார். இதற்கு விளக்கமளித்து மன்னிப்புக் கோரவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.

மூத்த பா.ஜ.க தலைவர் விஜய குமார் மல்ஹோத்ரா கூறுகையில்,"இந்த நூற்றாண்டில் பிரதமர் இப்படி ஒரு கூற்றைச் சொல்வார் என எங்களால் இன்னும் நம்ப இயலவில்லை." என்றார்.

BJP seeks apology from PM over "havan" remarks The Hindu

Friday, August 17, 2007

'தஸ்லிமாவைக் கொல்பவருக்குப் பரிசு' - கொல்கொத்தா இமாம்

அதிர்சியூட்டும் விதமாக பேரணி ஒன்றில் பேசிய கொல்கொத்தா இமாம் ஒருவர் இன்னும் ஒருமாத காலத்துக்குள் பெண் எழுத்தாலர் தஸ்லீ நஸ் ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் இல்லையேல் அவரைக் கொல்பவருக்கு 'அளவற்ற' (Unlimited) வெகுமானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Imam puts unlimited reward on Taslima's head - Rediff

Tuesday, August 14, 2007

மக்களவையில் அமளி: தெற்கு இரயில்வே பிரிவினை

இன்று கேரள எம்பிக்கள் மக்களவையில் தெற்கு இரயில்வேயின் நிர்வாக சீரமைப்பு குறித்து ஏற்படுத்திய அமளியை அடுத்து அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை 20 நிமிடங்களுக்கு தள்ளிவைத்தார். கேள்விநேரத்தை இரத்து செய்து இப்பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்த அவைத்தலைவர் அவர்களது நடத்தையை கடுமையாக விமரிசித்தார்.

மேலும் ...The Hindu News Update Service

Tuesday, July 31, 2007

டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய ஒருவருக்கு' 1000 ஏக்கராவில் தாது பிரித்தெடுக்கும் உரிமையை வழங்கியதே டாடாவிற்கு அனுமதி வழங்காமல் இருந்ததிற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதனை ஜெயலலிதா 'கற்பனை' என்று கூறி மானநட்ட வழக்குப் போடப் போவதாகக் கூறியிருந்தார். இன்று மீண்டும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'அந்தக் குறிப்பிட்ட நபர்' தொழில் அமைச்சர் நயனார் நாகேந்திரன் நவம்பர்22,2005 இல் கூட்டிய கூட்டத்திற்கும் வந்திருந்ததாகக் கூறியுள்ளார். டாடா ஸ்டீல் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை எனவும் வினவியுள்ளார்.
முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

Monday, July 30, 2007

வரதட்சணையாக 'மெர்சிடீஸ்' கார்: அர்ஜுன்சிங் மீது வழக்கு

நடுவண் அரசின் மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் மீதும் அவரது மனைவி பீனா சிங், மகன் அபிமன்யூ சிங், பேரன் அபிஜீத்சிங் ஆகியோரின் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று மொரதாபாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது அமைச்சர் தான் குடும்ப விதயங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.
அர்ஜுன்சிங்கின் பேரனின் மனைவி பிரியங்காவிடம் அவரது கணவர் குடும்பத்தினர் மெர்சிடீஸ் காரும் அடுக்கக குடியிருப்பும் கேட்டு துன்புறுத்தியதாக பிரியங்காவின் தந்தை மத்வேந்தர் சிங் கொடுத்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதியப் பட்டுள்ளது.

IBNLive.com > Dowry case against Arjun Singh for 'demanding' Mercedes : Arjun Singh, Dowry, Madhvendra Singh

Saturday, July 28, 2007

ஜல்லிக்கட்டுக்கு தடை! - உச்சநீதிமன்றம்.

சர்ச்சைகளுக்கிடையே ஒவ்வொரு பொங்கல் விழாக்கொண்டாட்டங்களின் போதும் வீரவிளையாட்டான 'ஜல்லிக்கட்டு'க்கு இடப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கி வைக்க... மேல்முறையீட்டைக் கேட்ட உச்சநீதிமன்றமோ இறுதி உத்தரவு வரும்வரை தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மிருகவதை தடுப்புச்சட்டம் 1960ஐ முன்வைத்து விலங்கின நல வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தருண் சாட்டர்ஜி, ஆர்.வி ரவீந்திரன் அடங்கிய நீதிமன்ற குழு (பெஞ்ச்) இத்தீர்ப்பை அளித்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அதிரடி தடை * சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு - தினமலர்

Thursday, July 26, 2007

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரணை.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதே நேரத்தில் இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இந்த விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி தொடங்குவது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடையை நீக்கும்படி மத்திய அரசு மனு செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

மாலைமலர்

Wednesday, July 25, 2007

துருக்கியின் அதிபர் தேர்தலில் அப்துல்லா குல் போட்டியிடலாம்

துருக்கியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா குல், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதாக குறிப்புணர்த்தியுள்ளார். கடந்த வாரம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, குல் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

மே மாதம் அதிபர் தேர்தலில் குல் போட்டியிட்டபோது, இராணுவத்தின் அழுத்தம் காரணமாக அவரது வேட்பு மனு தடுக்கப்பட்டது. முன்னாள் இஸ்லாமியவாதியான குல், துருக்கியின் மதசார்பற்ற அரசியல் சட்டட்திற்கு ஆபத்தாக இருப்பார் என்று இராணுவத்தின் சார்பில் அச்சம் அப்போது வெளியிடப்பட்டது.

ஆனால், தற்போதைய தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மக்களின் மனநிலையை புறந்தள்ளும்படி தம்மிடம் யாரும் எதிர்பார்க்கமுடியாது என்று குல் தெரிவித்துள்ளார். குல்லின் இந்த கருத்துக்கள், அந்நாட்டின் மதசார்பற்ற நிர்வாகத்தின் மத்தியில் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்று துருக்கியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்தார்.

BBC Tamil

BBC NEWS | Europe | Turkey's Gul hints at presidency
Turkish foreign minister Gul hints he will run for president again, despite opposition - International Herald Tribune

சபரிமலை பெண்கள் வழிபாடு: கேரள சட்டமன்றத்தில் விவாதம்

கேரள தேவஸ்வம் அமைச்சர் ஜி சுதாகரன்சபரிமலையில் பெண்கள் வழிபட வகைசெய்யவேண்டும் என்ற தங்கள் அரசின் கொள்கைக்கு ஆதரவாக 10-50 வயதுள்ள பெண்கள் அங்கு வழிபட்டதற்கான ஆதாரங்களை சட்டமன்றத்தில் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்த ஒரு உரிமையை மீட்பதே தவிர எந்த ஒரு வழக்கத்தையும் புதியதாக தாங்கள் கொண்டுவர வில்லை எனவும் 1940இல் திருவாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி வழிபட்ட ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். 1990இல் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒட்டியே இன்று இவ்விதி தீவிரமாக அமலாக்கப் படுகிறது என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் உறுப்பினர் கே சுதாகரன் மத நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் அரசு தலையிடுகிறது என்று அமைச்சருடன் எதிர்வாதம் செய்தார். அமைச்சர் நம்பிக்கை என்பது சபரிமலை ஐயப்பன் மீதானதாகும்;அது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொது என்று பதிலிறுத்தார். பழக்கவழக்கங்கள் காலத்திற்கேற்ப மாறியே வருகிறது; கோவில் பூசாரி முன்பெல்லாம் குளத்தில்தான் குளிப்பார், ஆனால் தற்போதைய தந்திரிகள் குழாய் தண்ணீரில்தான் குளிக்கிறார்கள் என்றும் அவர் பதிலளித்தார். சபரிமலை செல்லும் பக்தைகளை 'மாளிகாபுரம்' என்றழைப்பதிலிருந்தே அவர்கள் வழிபட தடையேதும் இருந்திருக்கவில்லை எனத் தெரிகிறதென்றார்.

பெண்ணிய சங்கங்களிலிருந்து அரசிற்கு ஏராளமான மனுக்கள் இதுபற்றி வந்திருப்பதாகக் கூறிய அமைச்சர் பெண்களுக்காக தனி பருவம் ஒதுக்கபடலாம் என்ற ஆலோசனையும் வந்திருப்பதாகக் கூறினார்.

The Hindu News Update Service

Tuesday, July 24, 2007

சந்திரபாபு நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார் ஆந்திர முதல்வர்

ஆந்திர சட்டமன்றத்தையே உலுக்கிய நிகழ்ச்சிக்கு காரணமான தனது பேச்சிற்கு அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திரபாபு நாயுடுவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மன்னிப்பைக் கோரினார். திங்களன்று சட்டமன்றத்தில் தன்னை அவமதித்ததாக நாயுடு கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக 35 எம் எல் ஏக்கள் சட்டமன்றத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தி இன்று கைதாயினர். சட்டமன்றத்திலும் அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

NDTV.com: Andhra CM apologises to Naidu

Monday, July 23, 2007

பா ஜ க: ஐந்து குஜராத் எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்

குடியரசுத்தலைவர் தேர்தலில் பிரதீபாவுக்கு வாக்களித்ததாகக் கருதப்படும் குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஐவரை கட்சி இடை நீக்கம் செய்துள்ளது.

மேலும் விபரமறிய: TOI

ஷில்பா ஷெட்டி மீது இலண்டன் வாழ் இந்தியப்பெண் புகார்.

லண்டனில் வசிக்கும் இந்தியர் ராஜ்குந்த்ரா, சினிமா பட தயாரிப்பாளர். இவரது மனைவி கவிதா. ஷில்பா ஷெட்டி மீது கவிதா ஆங்கில பத்திரிகை ஒன்றில் புகார் கூறியதாவது:-

எங்களது திருமண வாழ்க்கை நிம்மதியாக போய் கொண்டு இருந்தது. சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. சினிமா பட சம்பந்தமாக ஷில்பா ஷெட்டியுடன் எனது கணவர் ராஜ்குந்த்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்றில் இருந்து அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர் விவாகரத்து கேட்கிறார். எனது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க ஷில்பா ஷெட்டி துடிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷில்பாஷெட்டியின் செய்தி தொடர்பாளர் டாலே பக்வாகர் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ஷில்பா வும், ராஜ×வும் நல்ல நண்பர் கள்தான். இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக வதந்தி பரப்பபட்டு வருகிறது. இதில் எந்த ஆதாரமும் இல்லை. சினிமா பட சம்பந்த மாக இருவரும் பொது இடங்களில் சந்தித்து இருக்கலாம் என்றார்.

ராஜ்குந்த்ரா கூறும்போது, நாங்கள் நல்ல நண்பர்கள். வியாபாரம் சம்பந்தமாக அவருடன் தொடர்பு உள்ளது. எனது திருமண வாழ்க்கை முடிந்து 1 ஆண்டு ஆகிறது. இதற்கு ஷில்பா எந்த காரணமும் இல்லை.

மாலைமலர்

டாக்டர் ஹனீஃப் விவகாரம்: இட்டுக்கட்டியதா காவல்துறை?

இதுபற்றி தினமலர் செய்தி பின்வருமாறு:

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப் விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலர் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கபில் அகமதுவுக்கு மொபைல் போன் சிம் கார்டு கொடுத்ததாக முகமது அனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்பை மோதி பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் கபில் அகமது. அந்த ஜீப்பில் இருந்து தான் சிம் கார்டு கிடைத்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், கபில் அகமது வீட்டில் இருந்து சிம் கார்டை கைப்பற்றியதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். இது ஆஸ்திரேலிய போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இத்துடன் புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி முகமது அனீப் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரிடம் குயின்ஸ்லாண்டு புலனாய்வு சார்ஜென்ட் ஆதம் சிம்ஸ் மற்றும் பெடரல் போலீஸ் அதிகாரி நீல் தாம்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலரது பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முகமது அனீப்பிடம் நடத்திய விசாரணை தொடர்பாக 142 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்ளூர் பத்திரிகைகளிடம் கிடைத்துள்ளன. அதில் இருந்தே போலீசார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தொழிலாளர் கட்சி எம்.பி.,க்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முகமது அனீப் விவகாரத்தில் சர்வதேச அளவில் நகைப்பு செயலை செய்து விட்டதாக போலீசாருக்கு ஆஸ்திரேலிய பசுமை கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்துடன் முகமது அனீப்புக்கு தற்காலிக விசா வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய சட்ட கவுன்சில், குடியேற்ற அமைச்சர் கெவின் ஆன்ட்ரூசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர்

Friday, July 20, 2007

ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம்

லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் ஹனீஃப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அதனால் அனீப் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக அனீப் மீது ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சுமத்தினர். தற்போது இக்குற்றச்சாட்டும் பொய்யானதாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அதனால் ஹனீஃப் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

-o❢o-

b r e a k i n g   n e w s...