அரிய நிகழ்வாக தென் ஆஃப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது.
தென் ஆஃப்ரிக்காவின் தேசிய வானொலி நிலையம் இச்செய்தியை அறிவித்துள்ளது.
கூடுதல் உறுப்புகளுடன் பிறப்பதை மருத்துவ அறிவியலில் "பாலிமிலியா" என்றழைக்கப்படுகிறது.
இதே போன்ற நிலையில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் ஜாம்பியாவிலும் குழந்தை பிறந்துள்ளது.
Child born with four legs in South African town
Sunday, July 8, 2007
நாலு கால்களுடன் பிறந்த குழந்தை.
Posted by
வாசகன்
at
2:38 PM
0
comments
Friday, June 15, 2007
சொமாலிய நாட்டு திரையரங்கில் குண்டுவெடிப்பு
சொமாலியாவின் Baidoa நகரத் திரையரங்கில் குண்டுவீசப்பட்டது. இதில் ஐவர் மரணமடைந்துள்ளார்கள். ஒன்பது பேருக்கு பலத்த காயம். . திரையிட்ட படத்தில் நிர்வாணக்காட்சிகள் நிறைந்திருந்தது.
தலைநகரம் மொகாதிஷுவில் வெடித்த மற்றொரு குண்டில் ஒருவர் இறந்தார். எத்தியோப்பிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம்
இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாக்கள் துன்மார்க்கத்தை பிரச்சாரப்படுத்துவதாக ஏற்கனவே இஸ்லாமியர்களிடம் இருந்து வந்த இடையூறுகளினால் திரையிடல்கள் தடைப்பட்டிருக்கிறது.
BBC NEWS | Africa | Grenade attack on Somalia cinema
Posted by
Boston Bala
at
11:46 PM
0
comments
Tuesday, June 5, 2007
Pfizer நிறுவனத்தின் மீது நைஜீரிய அரசு வழக்கு
pfizer நிறுவனத்தின் அனுமதி பெறாத மருந்து பரிசோதனைகள், சுமார் இருநூறு நைஜீரிய குழந்தைகளின் உயிர், உடல்நல, மனநல பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ளன. இது குறித்து ஏழு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு நைஜிரிய அரசாங்கம் பிஃபைசர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
போன மாதம் இதே காரணங்களுக்காக, நைஜிரியாவின் மிகப் பெரிய மாநிலமான கானோ(Kano)அரசாங்கமும், pfizer நிறுவனத்தின் மீது இரண்டே முக்கால் பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜிரியாவில் காலரா, அம்மை, போன்ற தொற்றுநோய்கள் பரவியபோது, pfizer நிறுவனமும் உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்து தன்னார்வத்துடன் இந்த நாட்டுக்கு வந்திருந்து மருந்துகள் விநியோகித்து உதவினர். இந்தச் சமயத்தில் pfizer அனுமதியின்றி பயன்படுத்திய ட்ரோவன் ப்ளோக்ஸின் என்ற மருந்தே சுமார் இருநூறு குழந்தைகளுக்கு meningitis என்ற நோய் தொற்றக் காரணமாகிவிட்டது என்பதே நைஜிரிய அரசாங்கத்தின் வாதம்.
இந்த வழக்கு இந்த மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. pfizer நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.
Nigeria sues Pfizer over 'killer drugs'
Posted by
பொன்ஸ்~~Poorna
at
11:12 AM
0
comments
Monday, June 4, 2007
ச: ஆப்பிரிக்காவின் சியாரா லியானில் ஹெலிகாப்டர் விழுந்து 22 பேர் மரணம்
ஞாயிறன்று சியோரா லியானின் முக்கிய பன்னாட்டு விமானநிலையத்தில் உருசிய MI8 ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் இறந்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள்
டோகோ நாட்டு விளையாட்டு அதிகாரிகள் ; ஆப்பிரிக்க தேசங்களிடையேயான கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்துவிட்டு திரும்பும் பயணத்தில் இவ்வாறு நடந்துள்ளது.
மேலுமறிய DNA - World - Helicopter crashes in Sierra Leone, 22 killed - Daily News & Analysis
Posted by
மணியன்
at
12:17 PM
0
comments
Friday, May 25, 2007
ச: தென்னாப்பிரிக்காவில் சாலைவிபத்தில் 15 பேர் மரணம்
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் நடந்த நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர் என செய்தி குறிப்பொன்று கூறுகிறது. ஐந்து வாகனங்கள் ஈடுபட்ட இந்த விபத்தில் இரண்டு மினிபஸ் டாக்ஸிகள், ஒரு டிரக் மற்றும் இரு கார்கள் அடிபட்டன. இது பற்றி மேலுமறிய..The Hindu News Update Service
Posted by
மணியன்
at
12:37 PM
0
comments
Friday, May 4, 2007
இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மனித உரிமைக்கான சர்வதேச விருது
மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான மார்ட்டின் என்னல்ஸ் சர்வதேச விருது இலங்கையைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்களூக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் இந்த விருதினை புரூண்டியின் முன்னாள் பொலிஸ்காரர் ஒருவரும் பகிர்ந்துகொள்கிறார்.
இலங்கையின் இன மோதலில் இழைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டுவரும், அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், (யூ.டி.எச்.ஆர், ஜாப்னா) என்ற அமைப்பை நடத்திவரும் பேராசிரியர்கள் ராஜன் ஹுல் மற்றும் பேராசிரியர் கோபாலசிங்கம் சிறிதரன் ஆகிய இருவருக்குமே சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இணைந்து வழங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட 11 மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த மனித உரிமைகள் விருதை, இந்த இலங்கை மனித உரிமையாளர்கள், புருண்டி நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமை ஆர்வலர் பியர் க்ளேவர் ம்போனிம்ப்பா அவர்களுடன் இணைந்து பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் அமைப்பின் நடுவர்கள் குழுத் தலைவர் ஹான்ஸ் தூலன் அவர்கள், ‘’இந்த மூவரும், ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதே ஆபத்தான ஒரு செயலாக ஆகிவிட்ட, அவர்கள் பணியாற்றும் நாடுகளில், மனித உரிமைகள் இயக்கத்தின் குறியீடாகத் திகழ்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார், இவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் சுதந்திரமாக இயங்க விடுமாறு, இலங்கை மற்றும் புருண்டி அரசுகளுக்கு இந்த விருதினை வழங்கும் 11 மனித உரிமை அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.
தமிழோசை
Posted by
Boston Bala
at
11:39 PM
0
comments
Friday, March 23, 2007
சற்றுமுன்:72 பேர் மரணம் - மொசாம்பிக் ஆயுதக் கிடங்கு வெடிப்பு
மொசாம்பிக்கின் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடிப்புகள், தீயில் 72 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகர் கூறினார்.300 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சாவு எண்ணிக்கை உயரலாம் என்றும் மேலும் அவர் கூறினார். கிடங்கிலிருந்த இராணுவத்தினரும் அருகாமையில் அமைந்த சேரிவாசிகளும் பாதிக்கப் பட்டவர்களாகும்.
72 Die in Mozambique Weapons Depot Blast - washingtonpost.com
Posted by
மணியன்
at
3:45 PM
0
comments
b r e a k i n g n e w s...
