அதிமுக தலைவர் ஜெயலலிதா 2001 தமிழக தேர்தல்களில் போட்டியிட்டபோது விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நடப்பு வழக்கில், தேர்தல் அதிகாரிகளின் கவனமான ஆய்வின்படி, 177 பிரிவு( பொய்த் தகவல்களை அரசு அதிகாரிக்கு தருதல்) படி எந்தக் குற்றமும் காண இயலவில்லை என கூறியுள்ளது. தேர்தல் விண்ணப்பங்களில் பொய்த் தகவல்கள் கூறியதாக தன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றத்தின் ஜூன் 13 ஆணையிட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் உச்சநீதிமன்ரத்தில் பதிந்த மேல்முறையீட்டினை ஒட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம் தேர்தல் ஆனையத்தை குறைகண்டிருந்ததை குறிப்பிட்டு " தேர்தல் அதிகாரிகளே சட்டப்படி விண்ணப்பங்களை வாங்கவும் பரிசீலிக்கவும் தகுதியானவர்கள்; அதனால் இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்தான் இம்மனுக்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 177 உடன் பிரிவு 195 படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்; அவர்கள் இவ்விதயத்தில் செயல் நீதிமன்ற அதிகாரத்தைப் பெறுகிறார் " என அவர்களை கைகாட்டி விட்டது.
இந்த நிலைப்பாட்டால் நாளை தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமா இல்லை புதிய பிரச்சினைகள் கிலம்புமா எனத் தெரியவில்லை.
The Hindu News Update Service
Monday, September 10, 2007
ஜெயலலிதா தேர்தல் வழக்கு
Posted by
மணியன்
at
8:10 PM
0
comments
Friday, August 31, 2007
சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை
உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி
Posted by
மணியன்
at
6:55 PM
0
comments
மான் வேட்டை:சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது
சிங்காரா மான் வேட்டை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமும் ரூ50,000க்கு கடன்பத்திரமும் பெற்று ஜாமீனில் விட உத்திரவிட்டது. வழக்கின் விசாரணை 24 அக்டோபருக்கு தள்ளிப் போடப்பட்டது.
முழு விவரங்களுக்கு Rajasthan HC grants bail to Salman
Posted by
மணியன்
at
6:30 PM
0
comments
Monday, August 27, 2007
தா.கிருட்டிணன் கொலைவழக்கு ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றி உச்சநீதமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் வாக்கிங் போன நேரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டிக் ெகால்லப்பட்டார். திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால் இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
இந் நிலையில் கொலை வழக்கில் முக்கிய சாட்சியும், முதல் சாட்சியுமான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி அரசியல் பலம் கொண்டவர்.
எனவே இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை மதுரையிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அசோக் பான் மற்றும் சிர்புர்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கை மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்: Ta.Krittinan murder case transfered to Andra
Posted by
மணியன்
at
8:00 PM
0
comments
Friday, August 24, 2007
சல்மான் சிறை தண்டனை உறுதி்: மேல்முறையீடு தள்ளுபடி
சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல் உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று மனு தாக்கல் செய்வார். ஹைதராபாத்தில் விமானத்தை தவறவிட்டதால் சல்மான் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் இல்லை.
No respite for Salman, Court sends him to jail
Posted by
மணியன்
at
4:56 PM
0
comments
Wednesday, August 22, 2007
சிபு சோரென் விடுதலை:சிபிஐ தலைகுனிவு
கொத்ரோக்கியை கோட்டைவிட்ட சிபிஐயிற்கு மற்றுமொரு ஏமாற்றமாக தில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சொரெனை அவரதி தனிச்செயலர் சசிநாத் ஜாவை கொலைசெய்த குற்றத்திலிருந்து போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவித்தது. கீழ்நீதிமன்றம் வித்திதிருந்த ஆயுள்தண்டனையை இரத்துசெய்த நீதியரசர்கள் ஆரெஸ் சோதி மற்றும் எஹ் ஆர் மல்ஹோத்ரா அடங்கிய பென்ச் சிபிஐயின்சாட்சிகளை காட்டமுடியாத 'இயலாமை'யை மிகவும் மோசமாக எடுத்துரைத்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற நால்வரையும்-- நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர
பட்டாசார்யா,பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா-- அதே காரணங்களால் விடுதலை செய்தது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
5:44 PM
0
comments
Tuesday, August 21, 2007
ஆஸி. நீதிமன்றத்தில் நீதி நிலைத்தது
ஆஸ்திரேலிய அரசிற்கு ஒரு பெருத்த தர்மசங்கடமாக பிரிஸ்பேன் நீதிமன்றம் இந்திய மருத்துவர் முகமது ஹனிஃபிற்கு கொடுத்திருந்த வேலைக்கான விசாவை முடக்கியதை தள்ளுபடி செய்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது.குடியேற்ற அமைச்சர் தமது எல்லைக்கு புறம்பாக முடிவெடுத்ததாக மாநில நீதிபதி ஜெஃப் ஸ்பெண்டர் கூறினார். இருப்பினும் அமைச்சர் மேல்முறையீடு செய்ய 21 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளதால் ஹனிஃப் ஆசிக்கு திரும்ப சற்று தாமதமாகலாம்.ஹனிஃபின் சட்டமுறையீட்டின் செலவுகளையும் அரசு வழங்க உத்திரவிட்டுள்ளார்.
Aus Court reinstates Haneef’s visa
Posted by
மணியன்
at
11:42 AM
0
comments
Sunday, August 19, 2007
சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள்
சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள்
சர்வதேச காவல்துறை தேடிவரும் பட்டியலில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகள் ராகத் உசேன் ( வயது 38 ) பெயர் இடம் பெற்றுள்ளது.
தூக்கிலிடப்பட்ட சதாமின் மூத்த மகளான ராகத் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அறிவித்து அவரைத் தேடி வருகிறது. சர்வதேச காவல்துறையான இண்டர்போல் சிவப்பு நோட்டிஸ் ராகத்தின் பெயரில் வெளியிட்டுள்ளது சர்வதேச கைது வாரண்ட் அல்ல. மாறாக வெளிநாட்டு காவல்துறை ராகத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுவதுடன், ஈராக்கிற்கு கொண்டு வர உதவி அந்நாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
ராகத் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஜோர்டான் நாட்டில் வசித்து வருகிறார். சிறிய சதாம் என்றழைக்கப்படும் இவர் தனது தந்தை கைது செய்யப்பட்டதும் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார்.
சதாமின் பாதுக்காப்புக் குழுவில் இடம்பெற்ற ஹிஸாம் அல் கஸ்ஸாவி ராகத் ஜோர்டான் மன்னரின் விருந்தினராக இருந்து வருகிறார். கடந்த வருடம் ஈராக் அரசு ராகத்தை ஒப்படைக்க கேட்டுக் கொண்டாலும் அதனை ஜோர்டான் மறுத்து விட்டது.
நன்றி : Gulf News
இண்டர்போல் இணைய முகவரியில் ராகத் உசேன்
http://www.interpol.com/public/Data/Wanted/Notices/Data/2006/06/2006_54606.asp?HM=1
Posted by
முதுவை ஹிதாயத்
at
11:40 PM
0
comments
Friday, August 10, 2007
கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ....
நடிகர் கமல ஹாசன் தனது தசாவதாரம் படம் பற்றிய வழக்கொன்றிற்க்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். துணை இயக்குனர் செந்தில்குமார் என்பவர் தசாவதாரம் கதை தன்னுடையது , இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் கமலஹாசன் இக்கதை எதையும் தழுவியதில்லை எனவும் தன்னுடைய கதையே எனவும் விவரமாக எடுத்துரைத்தார். ஆங்கிலத்தில் படத்தின்் திரைக்கதையை தரவும் ஒப்புக் கொண்டனர். பல ஆண்டுகளாக பலபரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற தனக்கு யாருடைய கதையையும் திருடவேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.
ஏராளமான கமல் இரசிகர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
IndiaGlitz - Kamal Haasan in court - Tamil Movie News
Posted by
மணியன்
at
7:58 PM
0
comments
Wednesday, August 8, 2007
உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்
நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்கும் சட்டவரைவினை தயாரித்துள்ளது எனக் கூறினார். அரசு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீக்காவிடினும் தனது இறுதி தீர்ப்பை விரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலிறுத்தார்.
மேலும்...IBNLive.com > Arjun says SC order not a setback, new Bill ready :
Posted by
மணியன்
at
7:44 PM
0
comments
இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை நீக்க மறுப்பு
உயர்கல்வி நிலையங்களில் இதர பிந்தங்கிய வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அமலாக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நடுவண் அரசு கொடுத்த மனுவை உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய பெஞ்ச் இன்று நிராகரித்தது. இதுபற்றிய சட்டத்தினை எதிர்த்து இடப்பட்டுள்ள வழக்குகளை தீர்மானிக்காமல் சட்டத்தை அமலாக்க இயலாது என நீதிமன்றம் கூறியது. கடைசி நிமிட சலுகையாக அரசு OBC இடஒதுக்கீட்டில் கிரீமி மட்டத்தை விலக்கி வைக்கவும் முன்வந்தது.
முழு விவரங்களுக்கு...IBNLive.com > SC turns down govt plea, OBC quota stays frozen :
Posted by
மணியன்
at
12:14 PM
0
comments
Monday, August 6, 2007
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஐவர் குற்றவாளிகள்
கோவை குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஐவர் மீதான குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி உத்திராபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. குற்றமற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்ட 84 பேரின் பிணை மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை அல் உம்மாவின் நிறுவனர் எஸ் ஏ பாட்சா உட்பட 69 பேர் மீது தீவிர குற்றங்கள் இழைத்ததாகவும் மற்ற 89 பேர் மீது சில்லறைக் குற்றங்கள் இழைத்ததாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
5:54 PM
0
comments
Monday, July 30, 2007
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்: SCயில் பொதுநல வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர் அசோக் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் பொதுநலவழக்கொன்றை பதிந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் படியே தலமைநீதிபதி எந்தவொரு உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதியை நியமிக்க முடியும். ஆனால் அசோக் குமாரின் நியமனத்தை இந்த உயர்மட்டக்குழு பரிந்துரைக்காத போதும் தலைமை நீதிபதி நீதியரசர் கே ஜி பாலகிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார். நீதியரசர்கள் அர்ஜித் பசயத் மற்றும் டிகே ஜைன் அடங்கிய பெஞ்ச் அரசை 1999 இலிருந்து இதுவரை வெவ்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு ஆணையிட்ட நியமனங்களின் விவரங்களை குறித்த அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டனர்.
IBNLive.com > Madras HC judge chosen despite SC objection, PIL filed : Supreme Court, judge, appointement, CJI Balakrishnan, Madras High Court, Collegium, PIL
Posted by
மணியன்
at
4:26 PM
0
comments
Thursday, July 26, 2007
நீதிபதிகளை கழுதை என்று திட்டியவர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில், தனது பதவிநீக்க வழக்கை விசாரித்து வரும் இரண்டு நீதிபதிகளை 'மூளை இல்லாதவர்கள்' என்றும் 'கழுதை' என்றும் திட்டிய ஒரு முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.... பி/டி/ஐ
Posted by
வாசகன்
at
9:24 PM
1 comments
Monday, July 23, 2007
காஞ்சி சங்கராச்சாரியார் மீது குற்றம் பதியப்பட்டது
சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் காஞ்சி மடாதிபதி மற்றும் 11 பேர் மீதான ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் அடிதடி வழக்கில் குற்றங்கள் பதியப்பட்டன(Framing of charges). செப்டம்பர் 2002இல் மடத்தின் கணக்காய்வாளராக பணியாற்றிய ஜி இராதாகிருஷ்ணன், அவரதுமனைவி மற்றும் ஊழியரை அவர்கள் வீட்டில் ஆள்வைத்து அடிக்க திட்டம் வகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜெயெந்திரரைத் தவிர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன்,மீனாட்சிசுந்தரம், ஆனந்த்,லக்ஷ்மணன், பூமிநாதன், கண்ணன், குமார்,ரவி சுப்பிரமணியம் ஆகியோர் மீதும்குற்றங்கள் பதியப்பட்டன. இந்திய குற்றவியல் பிரிவுகள் 120-B, 307/109 கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை 2005இல் பதியப்பட்டது.
IBNLive.com > Kanchi seer, 11 others charged in assault case : Sankararaman murder, Kanchi Seer
Posted by
மணியன்
at
6:51 PM
0
comments
Monday, July 16, 2007
இடஒதுக்கீடு: இடைக்காலத் தடையை நீக்க நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
உயர்கல்வி நிறுவனக்களில் 27% இடஒதுக்கீடு வழங்குவதை நிறுத்திவைத்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு மனு கொடுத்துள்ளது. தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து நாளை விவாதங்களை கேட்க முடிவெடுத்துள்ளது.
Centre approaches SC for vacating quota stay -Education-Services-News By Industry-News-The Economic Times
Posted by
மணியன்
at
5:55 PM
0
comments
பொய் கடவுச்சீட்டு: மோனிகா விடுதலை
போபால் நீதிமன்றம் இன்று மும்பை தாதா அப்துல் சலேமின் தோழி மோனிகா பேடிமீது போடப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டு வழக்கில் அவரையும் அவரது கூட்டாளியையும் விடுதலை செய்தது. அரசுத்தரப்பு தகுந்த ஆதாரங்களை தரத் தவறியது என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி அஜய் சிரிவஸ்தா கூறினார். இந்த தீர்ப்பு மோனிகாவிற்கு அதிர்ச்சிகலந்த மகிழ்ச்சியை தந்ததாக அவர் வக்கீல் கூறினார். மோனிகா ஹைதராபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போலி கடவுச்சீட்டு வழக்கில் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்.
Fake passport: Monica aquitted by Bhopal court
Posted by
மணியன்
at
5:45 PM
1 comments
ஹனீஃப்பிற்கு ஜாமீன் கிடைத்தது:மனைவி மகிழ்ச்சி
பிரிஸ்பேனில் உள்ல நீதிமன்றமொன்று டாக்டர் முகமது ஹனீஃப்பிற்கு ஜாமீன் வழங்கியது. பிணைத்தொகையாக $10,000 கட்டவேண்டும் என்றும் வாரத்திற்கு மூன்றுமுறை காவல்நிலையத்தில் வந்துசெல்ல வேண்டுமெனவும் ஆனையிட்டார். அரசுத்தரப்பில் அவர் விமானமேறி தப்பிவிடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியதை, அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பில்லை என்பதை சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தார்.அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் அவர் பொறுப்பின்றி தனது சிம் அட்டையை தனது உறவுமுறை உடன்பிறப்பிறப்பான சபீல் அஹமதிற்கு கொடுத்ததே ஆகும்.
பிணைவிதிகளை நிறைவேற்றும் வரை ஹனீஃப் இரண்டொருநாள் காவலிலேயே இருப்பார் எனவும் இந்த இடைவெளியில் அரசு மேல்முறையீடு செய்யுமா என தான் அறியவில்லை என அவரது வக்கீல் பீட்டர் ரூஸ்ஸோ கூறினார். அங்கு சென்றுள்ள ஹனீஃபின் மனைவி பிர்துஸ் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதில் தலையிட்ட பிரதமருக்கும் தனது கணவருக்காக பிரார்த்தித்த இந்திய மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
NDTV.com: Haneef granted bail
Posted by
மணியன்
at
10:55 AM
1 comments
Friday, July 13, 2007
ஹனீஃப் காவல்நீட்டிப்பு: ஆஸி. அரசு கைவிட்டது
பிரிட்டனில் நடந்த கார் குண்டுகளுக்காக குற்றம் எதுவும் சாட்டப்படாமலே 11 நாட்கள் காவலர் பாதுகாப்பில் இருந்த இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் காவலை மேலும் நீட்டிக்க நீதிமன்றத்தில் கொடுத்த மனுவை ஆஸி. காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. இனி சட்டப்படியான 24 மணிநேர விசாரணையில் மீதமுள்ள 12 மணிநேர விசரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்படுவார். இந்த 12 மணிநேர விசாரணை ஒருசேர தொடர்ந்து இருக்குமா அல்லது இடைவெளிகள் விட்டு இருக்குமா என காவல்துறை தெளிவாக்கவில்லை.
Extension bid on doctor dropped | UK | Reuters
Posted by
மணியன்
at
1:04 PM
0
comments
Thursday, July 12, 2007
'இட்லி'க்கு எதிரான வழக்கு தள்ளுபடி.
மதுரை முருகன் இட்லி கடையில் இட்லிக்கு வழங்கப் பட்ட சட்னி, சாம்பார் சரியில்லை என வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றிய தினமலர் செய்தி:
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நல்லபெருமாள். இவர், முருகன் இட்லி கடை உரிமையாளர் மனோகரனுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்,"29.9.2006ல் முருகன் இட்லி கடைக்கு சாப்பிட சென்றேன்; 6 இட்லி சாப்பிட்டேன்; ஒரு இட்லி ரூ.4 என தெரிவிக்கப்பட்டது; இதற்காக வழங்கப்பட்ட சட்னி, சாம்பார், பொடி ருசியாக இல்லை. இதுகுறித்து கடை மேலாளரிடம் தெரிவித்த போது சரியான பதில் சொல்ல மறுத்து விட்டார். ஆனால், 6 இட்லிக்கு ரூ.37.40 வாங்கிக் கொண்டனர். இதற்காக பில் கேட்ட போது தர மறுத்து விட்டனர். எனவே, இந்த சேவைக்குறைவுக்காக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்' என குற்றம் சாட்டினார்.
முருகன் இட்லி கடை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " சட்னி, சாம்பார் ருசி இல்லை என்ற குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை. உரிமையாளரை மிரட்டும் நோக்கத்தில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. கடை சார்பில் வக்கீல் பிறவிபெருமாள் ஆஜரானார்.குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை நீதிபதி பரமேஸ்வரன் தள்ளுபடி செய்தார். வழக்கை தொடர்ந்தவர் 2 மாதங்களுக்குள் ரூ.2 ஆயிரம் அபராதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
Posted by
வாசகன்
at
7:33 PM
6
comments
b r e a k i n g n e w s...
