.

Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Tuesday, September 4, 2007

பிராண்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன

பிரான்ஸ் நாட்டு எரிசக்தி நிறுவனங்களான சூயஸ் மற்றும் அரசுக்குச் சொந்தமான காஸ் த பிரான்ஸ் ஆகியவற்றின் இணைப்பை வரவேற்றுள்ள பிரான்ஸின் பிரதமர் பிரன்ஸ்வா ஃபில்லான் அவர்கள், இதன் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சர்வதேச எரிசக்தி வணிகத்தில், வலுவான பிரசன்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தற்போது உலகின் இரண்டு முன்னணி எரிசக்தி நிறுவனங்களைக் தன்வசம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாவது நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டது அரசுக்குச் சொந்தமான மின்சக்தி விநியோக நிறுவனத்தையாகும்.

பிரஞ்சு அதிபர் நிக்கொலஸ் சர்கோசி அவர்களின் ஆதரவு பெற்ற ஒப்பந்தம் ஒன்றின்படி, இந்தப் புதிய நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை அரசாங்கம் தன்வசம் வைத்திருக்கும்.

பிபிசி தமிழ்

French GDF, Suez agree new energy merger | Reuters.co.uk
Suez and Gaz de France Announce Merger - WSJ.com

Wednesday, August 29, 2007

ஷோலே பட உரிமை: ரூ400 கோடி

இந்தி திரைப்படமான ஷோலே இரமேஷ் சிப்பி இயக்கி ஜிபி சிப்பி தயாரிப்பில் வெளிவந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம். கப்பர்சிங்கின் வில்லத்தன சிரிப்பும் பசந்தியின் தொடர்ந்த வாயாடிப் பேச்சும் இன்னும் அதன் ஈர்ப்பை விடவில்லை. இந்தப் படத்தின் கதையை ஒட்டி தென்னக இராம்கோபால் வர்மா புதிய ஷோலே படத்தை எடுத்துவருகிறார். மோகன்லால், அமிதாப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படம் சர்ச்சையை கிளப்பியது. உரிமை மீறல் வழக்கு காரணமாக முதலில் 'இராம்கோபால்வர்மாவின் ஷோலே' என்றும் பின்னர் இராம்கோபால்வர்மாவின் ஆக் 'என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் பிரிதீஷ் நந்தியின் தயாரிப்பு நிறுவனம் ஷோலே படத்தின் உரிமத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து ரூ400 கோடி($100 மில்லியன்)க்கு வாங்கியுள்லதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி இவர்களே இப்படத்தை மீண்டும் எடுக்கவோ படத்தை ஒட்டிய முன்கதையையோ பின்கதையையோ எடுக்கவும், சித்திரங்களாலான படமெடுக்கவோ உரிமை உள்ளது.

இது பற்றிய செய்தி துணுக்கு: It's official: Pritish Nandy ki Sholay-Entertainment-Media / Entertainment -News By Industry-News-The Economic Times

Sunday, August 26, 2007

விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton
In Vidarbha’s darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com
Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt

Saturday, August 25, 2007

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோக-கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் ஜாலி பேசியது:

தமிழகத்தில் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 100 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, ரூ. 35 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கானகத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமே 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும்.

தமிழகத்தில் உள்ளது போன்று, மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவில் 150 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 1000 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமணி

Friday, August 24, 2007

பிக் பிரதர் 2008 ஒளிபரப்பாகாது

2008- ஆம் வருடத்திற்கான பிக் பிரதர் (Celebrity Big Brother) நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சென்ற வருடம் இனவெறியை ஆதரிக்கும் விதமாக ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் விமர்சித்ததாக சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. மீண்டும் 2009-ல் ஒளிபரப்பைத் தொடரலாமா என்பதற்கான முடிவை அடுத்த வருடம் எடுக்கப் போவதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

BBC NEWS | Entertainment | Celebrity Big Brother 2008 axed

கபில்தேவை போல கவாஸ்கரும் தனி கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியாக கபிலதேவ் இந்திய கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி தனி அணிகளை உருவாக்குகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற உள்ளனர்.

கபில்தேவுக்கு போட்டியாக முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் இதே போல தனி அமைப்பை ஏற்படுத்தி அணிகளை உருவாக்க உள்ளார். கவாஸ்கர் ஏற்படுத்தும் அணிக்கு இந்திய கிரிக்கெட் சங்கமே உதவியாக இருக்க முன் வந்துள்ளது. இந்த அமைப்புக்கு ப்ரொஃபஷனல் கிரிக்கெட் லீக் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் இவர்கள் ஆடினால் குறைவான சம்பளமே கிடைத்து வந்தது.

கபில்தேவ் தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அணியில் சேரும் வீரர்களுக்கு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரை சம்பளம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கபில் தேவ் அணியில் சேர்ந்து விட்டனர். அவர்களிடம் 3 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை தடுக்க உள்ளூர் வீரர் களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கமும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெறும் மற்றும் 2-வது இடம் பெறும் அணிகளுக்கான பரிசு பணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு போட்டியில் ஆட வீரருக்கு ரூ.36 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு முன்பு ரூ.26 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதன்படி வருடத்துக்கு 45 ஆட்டங்களுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு வருடத்துக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் கிடைக்கும். வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு பரிசு பணமும் தனியாக கிடைக்கும்.

இந்த வகையில் மட்டும் இந்திய கிரிக்கெட் சங்கம் ரூ.26 கோடி வரை உள்ளூர் போட்டி வீரர்களுக்கு வழங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.650 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ.430 கோடியாக இருந்தது.

வருமானத்தில் 26 சத வீதத்தை வீரர்களுக்கு வழங்கு வது. அதில் பாதியை உள்ளூர் வீரர்களுக்கு வழங்குவது என்று கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மாலைமலர் : கபில்தேவ் அணியில் சேராமல் தடுக்க உள்ளூர் வீரர்களுக்கு ரூ.26 கோடி பரிசு மழை: கிரிக்கெட் சங்கம் முடிவு


Cricinfo - Newspaper reports BCCI to start its own league
IndianExpress.com :: BCCI kitty swells, pay hike likely for domestic players

Thursday, August 23, 2007

மாயாவதி அதிரடி: ரிலையன்ஸ் கடைகள் மூட ஆணை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பத்து சூப்பர்மார்கெட்களையும் உடனடியாக மூடும்படி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். சிறுவணிகர்களின் கடந்தவார போராட்டங்களையடுத்து உபி அரசு இம்முடிவெடுத்துள்ளது.தான் அமைத்திருக்கும் உயர்மட்டக் குழு சிறுவணிகத்தை தாராளமயமாக்கும் பிரச்சினையை ஆய்ந்து முடிவு கூறும்வரை ரிலையன்ஸ் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று முதல்வர் கூறினார்.

Uttar Pradesh orders Reliance retail stores to close | Top News | Reuters

Wednesday, August 22, 2007

சீனாவின் ஏற்றுமதிகள் குறித்து தொடர்ந்து கவலைகள்

சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பரவியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகளில், அதிக அளவு ஃபார்மால்டிஹைட் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆராயும் புலனாய்வு தற்போது நியூசிலாந்தில் துவங்கியுள்ளது.

துணி பூஞ்ஞைக்காளானால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ரசாயனப் பொருள் உதவுகிறது. இருந்தும் இது தோலிலும், கண்ணிலும், தொண்டையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொம்மைகள், டயர்கள், உணவுப் பொருட்கள், பற்பசைகள் போன்ற பொருட்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறித்த அச்சங்களைத் தொடர்ந்து தற்போது இந்தப் பிரச்சனை வந்துள்ளது.

இது போன்ற அச்சங்கள், வர்த்தக பாதுகாப்புக்கான புதிய உத்தி என்று சீனா வர்ணித்திருப்பது முற்றிலும் தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் பீட்டர் மெண்டல்சன் கூறியுள்ளார்.

தமிழ் பிபிசி

China reports quality problems with U.S. soybean imports - International Herald Tribune
Chinese-made blankets recalled over formaldehyde content in Australia, New Zealand - International Herald Tribune
FT.com / In depth - Poison clothes add to China export scares

நாடாளுமன்றத்தில் ஜப்பான் பிரதமர்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்தில் ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று உரையாற்றினார். அணுசக்தி எரிபொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த ஜப்பானின் பிரதமர் இவ்வாறு இந்த நேரத்தில் உரையற்றியது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இருநாட்டு பிரதமர்களின் பேச்சுவார்த்தையில் அணுசக்தி ஒத்துழைப்பு முக்கிய இடம் வகிக்கும். பொருளாதார பங்கீடல் மற்றும் தில்லி- மும்பை தொழிற்தடம் திட்டத்திற்கு பண உதவி ஆகியவை குறித்து அபேயின் தற்சமய வருகையின்போது முடிவெடுக்கப்படும்.

NDTV.com: Japan PM addresses Parliament

Tuesday, August 21, 2007

ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அவரது துணைவியார் அகி யுடன் இந்தியாவிற்கு இன்று வந்துள்ளார். இந்திய தொழிலதிபர்களுடன் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க 200 தொழில் நிர்வாகிகளுடன் அவர் வந்துள்ளார்.

Japan's Prime Minister Shinzo Abe (L) and his wife Akie walk down from the plane upon their arrival at the airport in New Delhi August 21, 2007. Abe arrived in India on Tuesday for a high-profile visit with around 200 business executives in a trip designed to boost trade with a booming economy and counterbalance China. REUTERS/B Mathur

தமிழகம்: நுழைவு வரியை எதிர்த்து வழக்கு.

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெண்சுருட்டு (சிகரெட்),
பளிங்குகல் (கிரானைட்)) போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு நுழைவு வரி விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனவே 32 வகை பொருட்களுக்கு நுழைவு வரி விதித்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தது ஆனாலும் வழக்கில் சம்பந்தப்படாத நிறுவனங்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பாணை அனுப்ப நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Wednesday, August 15, 2007

லட்சக் கணக்கில் பொம்மைகள் திரும்பப்பெறப்படுகின்றன

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு உடல் ஊறுவிளைவிக்கும் பொம்மைகள் லட்சக்கணக்கில் மார்க்கெட்டிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள்.
மாட்டெல் எனும் நிறுவனம் கடந்த மாதகாலத்தில் இரண்டாவது முறையாக தன் பொம்மைகள்ளை திரும்பப்பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மாட்டெலின் பங்குகள் இன்று 6% சரிந்தன.

Mattel Recalls Chinese Toys, Second Time in Two Weeks (Update4)Bloomberg
Mattel recalls 18m more Chinese toys ABC Online
UPDATE 3-Mattel recalls millions more Chinese-made toys Reuters.uk

Wednesday, August 1, 2007

பிஎஸ் என் எல் நிறுவனத்தில் VRS ?

பி எஸ் என் எல் நிறுவனத்தின் வயதான ஊழியர்களை களையெடுக்கும் விதமாக தாமாகவே ஓய்வு பெறும் திட்டத்தை தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக ஓய்வுதருவாயில் உள்ள நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஏகே சின்ஹா கூறினார்.தலைநகரில் இதுவரை அமைச்சகத்தின் கட்டிடத்தில் இயங்கிவந்த பிஎஸ் என் எல் நிறுவனம் தனக்கென கட்டிக் கொண்ட புதிய கட்டிட திறப்பு விழாவின் போது அவர் இவ்வாறு கூறினார். பி எஸ் என் எல் இன் ஊழியர்கள் அரசு ஓய்வூதியத்தைப் பெறுவதால் இத்திட்டத்திற்கு அரசின் அனுமதி தேவைப்படுகிறது.

BSNL set to prune ageing workforce with VRS offers

Tuesday, July 31, 2007

டெல் கணினிகள் சென்னையருகே தயாரிப்பு

உலகில் அதிகமான கணினிகளை தயாரித்துவரும் பன்னாட்டு நிறுவனமான டெல் திங்களன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை துவக்கியது. முதல் கணினியை தனது மிகப் பெரும் வாடிக்கையாளரான இன்ஃபோசிஸிற்கு இலவசமாக கொடுத்து தனது இந்திய அலுவலை துவக்கியது.

வரும் ஐந்தாண்டுகளில் முப்பது மிலியன் டாலர்வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்டிற்கு 40,000 கணிகள்வரை தயாரிக்கக் கூடிய இத்தொழிற்சாலையின் உற்பத்தி இந்தியாவின் 75% தேவையை ஈடுசெய்ய முடியும்.


India eNews - Dell launches first Indian manufacturing base in south India

Saturday, July 28, 2007

வைகுண்ட ராஜனும், போஸ்டரும்!

தலைமறைவாக இருக்கும் வைகுண்டராஜன் மீது, புதிய புதிய வழக்குகளைப் போட்டு வருகிறார்கள். அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது காவல்துறை. ஆனால் முதல்வரோ, "அ.தி.மு.க.வுக்கு பண்ணையார் வெங்கடேஷ் என்கௌன்ட்டர் போல் தி.மு.க.வுக்கு வைகுண்டராஜன் விவகாரம் ஆகிவிடக்கூடாது'' என்று கவனமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

இதற்கிடையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகிறது நாடார் தரப்பு. அதில் உள்ள வாசகங்கள், நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் வைகுண்டராஜனின் விவகாரத்தை தனிப்பட்ட மோதலாக அந்தச் சமுதாய மக்கள் நினைத்தார்கள்.

ஆனால் டாட்டாவிற்கு தொழிற்சாலை அமைக்க நடைபெறும் நில எடுப்பிற்குப் பிறகு தங்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாக நினைக்கிறார்கள். இதில் சமுதாய உணர்வு அடங்கிக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் தற்போது, "டாட்டா தொழிற்சாலையில் சமுதாய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று அறிக்கை விட்டுள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ்

Vaikundarajan case takes a new turn :: Chennai Online News Service - View News
The Hindu News Service :: Company MD files anticipatory bail application
Jaya TV partner files petition for bail: ஜெயா டிவி பங்குதாரர் 'தலைமறைவு' - வைகுண்டராஜன் முன் ஜாமீன் கோரி மனு
Zee News - Stiff opposition to Tata`s titanium-di-oxide project in TN: "40,000 families would be displaced as the Tata company is planning to set up the plant on 12,000 acres of land. "

Friday, July 27, 2007

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

நடிகர் சரத்குமார் கேள்வி!

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டாடா நிறுவனம் தொழிற்சாலையின் முதல்கட்டத்தை துவங்க 30 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கணிமவளத்தினை தோண்டி எடுத்து வெளியில் விற்பார்களா? அல்லது 30 மாதங்கள் கழித்து தொழிற்சாலை ஆரம்பித்து டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் வரை கணிம வியாபாரம் செய்யாமல் இருப்பார்களா? அணுசக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கணிமங்களை சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதாகவும், அதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்தலாமே என்று அந்த அறிக்கையில் நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து ஊர்களுக்கும் ஆப்டிக் பைபர் வயர் மூலம் கேபிள் டி.வி. இணைப்பு: தமிழக அரசு முடிவு

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் இணைப்பு வழங்குவது எப்படி? டி.வி. ஒளிபரப்பு தெளிவாக இருக்கும் வகையில் எவ்வாறு இணைப்பு கொடுப்பது என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தொலைபேசி, இணைய தள வசதிக்காக ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும், ஆப்டிக் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்கினால் 17 ஆயிரம் வருவாய் கிராமங்களுக்கு இது பயன்படும்.

டி.வி. தவிர டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகளையும் இதன் மூலம் வழங்க முடியும். இதனால் தமிழ் நாட்டின் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும், விரைவில் கேபிள் டி.வி. இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் வசதிகளை வழங்க முடியும். தற்போது ஒன்றியங்கள் அளவில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் இணைப்பு சிறிய கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டால், 2 வருடங்களில் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்க முடியும்.

இந்த தகவலை எல்காட் நிறுவன நிர்வாக இயக்கு னர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ரூ.500 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை பராமரித்தல், கட்டணம் வசூல் செய்தல் ஆகிய பணிகளை உள்ளாட்சி துறை மற்றும் சுய உதவிகுழுக்கள் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நகர் புறங்களில் 6 மாதங்களுக்குள்ளும், கிராமங்களில் ஒரு வருடங்களுக்குள்ளும் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்காக சென்னையிலும், மதுரையிலும் தனி அலுவலகங்ககள் அமைக்கலாம்.

'டிஜிட்டல்' முறையில் இந்த இணைப்பு வழங்கப்பட்டால் தெளிவான ஒளிபரப்பு கிடைக்கும். பணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்க முடியும். கட்டண வசூலையும் 'ஆன்லைன்' செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

ELCOT to bring all households under cable TV network in Tamil Nadu @ NewKerala.Com News Channel

Wednesday, July 25, 2007

அணுசக்தி உடன்பாடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அண்மையில் வாஷிங்டனில் செயலர்கள், நுட்பவியலாளர்கள் அளவில் ஏற்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் இறுதிவரைவிற்கு இந்தியாவின் கவலைகளுக்கு திருப்திகரமான முறையில் தீர்வு காணப்பட்டிருப்பதாகக் கூறி அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரதமரின் தலமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி , பாதுகாப்பு அமைச்சர் ஏகே அண்டனி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீல், நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,வேளாண் அமைச்சர் சரத் பவார்,இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இனி பிரதமர் எதிர்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பேயி மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோருக்கும் இந்த உடன்பாட்டு விதிகளை விளக்குவார். வியாழனன்று இடதுசாரி தலைவர்களின் ஒப்புதலை பெறுவார். பின்னர் நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 10 அன்று தொடங்கவிருக்கும் பருவகால கூட்டத்தொடரில் இந்த உடன்பாடு பற்றி அரசு அறிக்கை வெளியிடும்.

DNA - India - Indian cabinet okays US civilian nuclear pact - Daily News & Analysis

சாத்தான்குளத்தில் 'டாடா' தொழிற்சாலை வருகிறது.

சாத்தான் குளத்தில் டாடா நிறுவனம் கனிமத்தொழிற்சாலை நிறுவ உள்ளதாக தினமலர் செய்தியொன்று தெரிவிக்கிறது:

சாத்தான்குளம் பகுதியில் "இல்மனைட்', "மோனாசைட்' போன்ற கனிமப் படிவங்கள் இயற்கையாகவும் பெருவாரியான அளவிலும் உள்ளன. தற்போது ஒரு சில நிறுவனங்கள் இதை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்து வருகின்றன. இக்கனிமங்கள் சில தனியார் நிறுவனங்களால் சட்ட விரோதமாகவும், அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமலும், உரிய அரசு அனுமதி ஏதுமின்றியும் கடத்தப்படுவதாக தெரியவந்தது.

அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கனிமங்களைச் சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய சட்டவிரோத ஏற்றுமதியால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பொருளாதார பயனும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு "இல்மனைட்' கனிமத்தை அப்பகுதியிலேயே சுத்திகரித்து, மதிப்பூட்டி, "டைட்டானியம் டை ஆக்சைட்' என்ற விலை உயர்ந்த வேதிப் பொருளாக மாற்ற இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மூவாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.என அரசு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சாத்தான்குளத்தில் "டாடா' நிறுவனம் துவங்க உள்ள "டைட்டானியம் டை ஆக்சைட்' தொழிற்சாலையால் பல பயன்கள் கிடைக்க உள்ளன. இதற்கு தடையாக இருந்தால் நாடு வளர முடியாத நிலையில் வறண்டு கிடக்க நேரிடும்' எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Tuesday, July 24, 2007

உணவு எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின ஒரு பகுதியாக உணவு எண்ணெய் இறக்குமதிக்கான வரியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 5 முதல் 10 சதவீதம் வரை வரி விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த வரி விலக்கினால் சில்லரை விலையில் உணவு எண்ணெய் கிலோவுக்கு ரூ. 4 வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதான சுங்க வரி 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய்யின் மீதான சுங்கவரி 57.5 சதவீதத்தில் இருந்து 52.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

MSN Tamil

The Hindu : Front Page : Government cuts import duty on edible oil
Edible oil prices seen stable as crop prospect brightens :: Economic Times

-o❢o-

b r e a k i n g   n e w s...