மஹாராட்டிர மாநிலத்தில் பர்தூரில் பழங்குடி மக்களுக்காக சிறுவர் பள்ளி/விடுதி ஒன்றில் மூன்று பதின்ம வயது மாண்வர்கள் தங்கள் இளைய பள்ளித்தோழர்களை விடுமுறை கிடைக்கும் என்பதற்காக கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிப்யா காலே,வல்லப் காலே, நாம்தேவ் காலே ஆகிய மூவரும் 8 வயது அஷோக் காலே மற்றும் அவன் தம்பி ஐந்து வயது மங்கல் காலே இருவரையும் செவ்வாய் இரவு பக்கத்தில் இருந்த பண்ணைக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூச்சை நிறுத்தி கொன்றிருக்கிறார்கள். அங்கேயே படிக்கும் இறந்தவர்களின் சகோதரியின் புகாரின் பேரில் தேடத்தொடங்கிய ஆஸ்ரமமசாலை மேலாளர்கள் இருவரின் உடலையும் பள்ளி கழிவறையொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பழங்குடி சிறுவர்களுக்காக நடத்தப்படும் அந்த விடுதியில் யாரேனும் இல்லவாசிகள் இறந்தால் 15 நாட்கள் விடுமுறை விடுவது பழக்கமாயிருந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவரும் இந்த விடுமுறைக்காகவே இக்கொலையை செய்ததாக கூறினர். காவலர்கள் பாலியல் குற்றங்களுக்காக கொலை நடக்கவில்லை என உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனையும் அதனை உறுதிசெய்துள்ளது.
இக்குழந்தைகளின் பெற்றொர் மும்பையில் கூலிவேலை செய்கின்றனர். தங்களால் ஆஸ்ரமத்தில் கிடைக்கும் வசதியை கொடுக்கமுடியாது என்பதால் சகோதரி இந்திராவை அங்கேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
Khabrein.info
Thursday, August 23, 2007
பள்ளி விடுமுறைக்காக கொலை செய்த மாணவர்கள்
Posted by
மணியன்
at
4:56 PM
0
comments
Sunday, August 19, 2007
சுதந்திர நாளில் சுதந்திரத்தை மறுத்த கைதி.
முதல் சுதந்திரப்போரின் 150வது நாளை முன்னிட்டு, சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்ட கைதி ஒருவர், தனது விடுதலையை ஏற்க மறுத்து சிறையிலேயே இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் பட்டியலில் முதலாக இருந்தவர் கொண்டிசு சோமு நாயுடு; வயது 78. அவரை விடுதலை செய்ய, சிறை அதிகாரிகள் முடிவுசெய்தனர். சில கைதிகளுக்கு தண்டனைக்குறைப்பும் கிடைத்தது. ஆனால், சோமு நாயுடு,"நான் எங்கே போவேன்; எனக்கு இந்த சிறையில் தான் சுதந்திரம்' என்று கூறி, விடுதலையை ஏற்க மறுத்துவிட்டார்.
விழிநகரம் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வந்த சோமு நாயுடு, 1995ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 2000ம் ஆண்டு, ஆயுள் சிறை விதிக்கப்பட்டார். இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். ஆனால், கொலை வழக்கில் இவர் தண்டனைபெற்ற பின், யாரும் எட்டிப்பார்க்கவில்லை. கிராமத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். "என் பிள்ளைகள் என்னை ஒரு முறை வந்து பார்த்தனர். அப்புறம் வரவே இல்லை. முகவரியும் தரவில்லை. நான் விடுதலையாகி எங்கே போவேன். எனக்கு இந்த சிறை வாழ்க்கையே சுதந்திரமாக உள்ளது. நான் இங்கேயே தங்கி விடுகிறேன்' என்று அதிகாரிகளிடம் கூறினார் சோமு நாயுடு. ஆனால், விடுதலை செய்யப்பட்ட கைதியை, சிறையில் வைத்திருக்க முடியாது என்று விதி உள்ளதால், சோமு நாயுடுவை, தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகத்தில் சிறை அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.
தினமலர்
Posted by
வாசகன்
at
7:13 PM
1 comments
ம.பி: கைப்பேசி வெடித்ததால் பரபரப்பு
மத்திய பிரதேசம் மாநிலம் ராய்சென் நகரில் ஒரு கடையில் கைப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கைப்பேசியின் மின்கலன் (பேட்டரி) வெடித்துச் சிதறியது. வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்காவிட்டாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அந்தக் கடையில் இருந்த மரச்சாதனங்கள், கண்ணாடிச்சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்தச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் செய்தியையொட்டி....
Posted by
வாசகன்
at
6:01 PM
0
comments
Friday, August 17, 2007
'@' எனப் பெயரிடப் பட்டவர்
சீனாவில் இணையத்தின் ஆதிக்கம் அதிகமாயிருக்கிறது. பலரும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி சீனப் பெயர்களுக்குப் பதில் ஹாலிவுட் சினிமாவில் வரும் பெயர்களையும் இணையத்தில் உலவும் பெயர்களையும் சூட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதில் உச்ச கட்டமாய் ஒருவருக்கு @ எனப் பெயரிடப் பட்டுள்ளது. @ என்பதற்கு சீன மொழியில் இவரை அன்பு செய்யுங்கள் (Love him) எனும் மறைமுக அர்த்தம் உள்ளதாம்.
Strange names like '@' enter Chinese language -DNA India
Posted by
சிறில் அலெக்ஸ்
at
5:53 PM
1 comments
Monday, August 13, 2007
இலண்டன்: பிக்பென் கடியாரத்திற்கு ஓய்வு

Photographs: Scott Barbour/Getty Images
இலண்டனின் நகரமக்களுக்கு பழக்கமான பிக்பென் கடிகாரத்தின் மணியோசை சனிக்கிழமை 8 மணிக்கு நின்றது. அடுத்த ஆறு வாரத்திற்கு பராமரிப்பு வேலைகளிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அதன் தென்மூலையில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.2009 ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் அதன் 150 வருட ஆண்டுநிறைவிற்கு ஆயத்தமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடிகாரம் செப்.7.1859இல் நிறுவப் பட்டது.
rediff.com: Big Ben, London
Posted by
மணியன்
at
4:50 PM
0
comments
Friday, August 10, 2007
இராமாயணம் கணினி விளையாட்டாகிறது
இராமாயணத்தை கணினி விளையாட்டு (Computer Game) வடிவில் உருவாக்கும் பெரும் முயற்சியை இந்தியாவின் விர்ஜின் காமிக்ஸ் மற்றும் உலக முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் சோனியும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. தேர்ந்த திரைப்பட இயக்குநர் ஷேகர் கபூர் இதில் முன்னணி பங்கு வகிக்கிறார்.
Ready for an online game on Ramayana? - The Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:22 PM
0
comments
Tuesday, August 7, 2007
குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்
இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மேற்கிந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் இருக்கும் சடாரா மாவட்டத்தில், தங்களின் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் புதுமண தம்பதிகளுக்கு, இரண்டாவது தேனிலவுக்கான நிதி உதவி செய்யப்போவதாக அரசு அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் முப்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் இருபத்தையாயிரம் தம்பதிகள் புதிதாக திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இவர்களில் சுமார் 85 சதவீத புதுமண தம்பதிகள் திருமணமான முதல் ஆண்டு முடிவதற்குள்ளாகவே தங்களின் முதல் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த போக்கை மாற்றவே இந்த புதிய திட்டம் முயற்சி செய்வதாக தெரிவித்தார் மாவட்ட சுகாதார அதிகாரி வி.எச்.மொஹிதே.
தமிழ் பிபிசி
BBC NEWS | South Asia | Honeymoon offer to delay babies
Delay a baby and win a second honeymoon - India - The Times of India
Honeymoon at state's expense - Pune
Posted by
Boston Bala
at
11:01 PM
0
comments
Friday, August 3, 2007
ஹைவேயில் ஹெலிகாப்டரை நிறுத்தியதற்கு லாலு மீது புகார்
வெள்ள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் பகுதியை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற லாலுபிரசாத் யாதவ் அதை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக அவர்மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Case against Lalu for landing IAF chopper on highway Hindu
Case against Lalu, others for ‘misusing’ chopper crisis
Lalu lands on highway, and in trouble
Posted by
சிறில் அலெக்ஸ்
at
12:34 AM
1 comments
Sunday, July 29, 2007
ஜப்பான்: அஞ்சல் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பணம்.
ஜப்பானில் டோக்கியோ உட்பட பல நகர்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை யார் வைத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்ட மழை என்பதா? டோக்கியோவில் மட்டும் 18 தபால் பெட்டிகளில் இத்தகைய அனோமதேய பணக்கட்டுகள் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர்
Posted by
வாசகன்
at
12:01 PM
1 comments
Friday, July 27, 2007
மொபைல் போன் மூலம் புத்தகம் எழுதினார்
இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட் பெர்னாக்கோ என்பவர் தனது அலுவலகப் பணிக்குப் போய் வரும் போது மொபைல் போனை பயனப்டுத்தி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். மொத்தம் 384 பக்க அறிவியல் நாவலை அவர், தனது நோக்கியா போனை பயன்படுத்தி இந்த நாவலை எழுதியுள்ளார்.
கேம்பனி டி வியாகோ என்ற பெயரிலான அந்த நாவல் மொபைல் போனில் எழுதப்பட்டிருப்பது உலகிலேயே முதல் முறை என்று தெரிய வந்துள்ளது. இந்தப் புத்தகம் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது. லுலு டாட் காம்-இல் அந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக பதிப்பக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Commuter writes book using mobile phone | Reuters.ca
First book ever written using mobile phone is published
Posted by
Boston Bala
at
11:44 PM
0
comments
சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார்.
நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம் வந்துள்ளார். தான் விஞ்ஞானியாக இருக்கும்போது அடிக்கடி சாப்பிடும் ஓட்டலான அண்ணாசாலை அன்னலட்சுமி ஓட்டலுக்கு சென்ற கலாம், அங்கு சாம்பார், ரசம், போண்டா உள்ளிட்டவைகளை ருசித்தார். அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகள் கலாமிடம் வந்து பேசி ஆட்டோகிராப் பெற்றுச் சென்றனர். இரவு 11.45 மணி வரை அவர் அங்கு இருந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Posted by
Adirai Media
at
10:38 AM
0
comments
1 பைசாவுக்கு 29 ஆண்டு போராடிய வியாபாரி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் மிதாபூர் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவ்ராஜ் 1976ம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த தன்ராஜ் மதன்லால் என்பவருக்கு 52,934 ரூபாய் ஒரு பைசா கடன் கொடுத்திருந்தார். தன்ராஜ் அந்த கடனை 1978-ம் வருடம் ஆகஸ்டு 14 திருப்பிச் செலுத்தினார். அப்போது ஒரு பைசாவை மட்டும் திருப் பிக்கொடுக்கவில்லை.
தனக்கு தன்ராஜ் ஒரு பைசா கடன் மற்றும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.14,934ஐ கேட்டு ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற் காக நோட்டீசு அனுப்ப ரூ.11 செலவு செய்தார்.
விசாரணைக்குப் பின் 1988ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் தேவ ராஜிடம் ஒரு பைசாவை மட்டும் தன்ராஜ் திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 1989ல் தேவராஜின் மகன் பிரசன்ராஜ் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். 18 ஆண்டு விசாரணைக் குப் பின் ஐகோர்ட்டு நீதிபதி கோபால் கிரிசன் வியாஸ் அளித்த தீர்ப்பில் தேவராஜுக்கு தன்ராஜ் ஒரு பைசா மற்றும் வழக்கு நோட்டீசு செலவு ரூ.11ஐ மட்டும் திருப்பி செலுத்தினால் போதும் இரு வரும் கடனுக்கான வட்டி தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.
மாலைமலர்
Trader fights 29 years to recover one paisa - India
Posted by
Boston Bala
at
2:40 AM
0
comments
ஜனாதிபதி பதவியேற்பு விழா துளிகள்...
* நாடு சுதந்திரம் அடைந்த 57 ஆண்டுக்குப் பின் முதல்பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதீபா பட்டீலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த முதல் தலித் நீதிபதி.
* பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு, பகல் 1.30 மணியில் இருந்தே முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். 1.50 மணிக்கு சோனியா வந்தார். எம்.பி.க்கள் புடை சூழ வந்த உ.பி. முதல் - மந்திரி மாயாவதி, நீண்டகால தோழியை போல் சோனியாவின் தோளில் கைபோட்டு வணக்கம் தெரிவித்தார்.
* கருணாநிதியுடன் வந்த துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி கருணாநிதி எம்.பி. இருவரும் தலைமை நீதிபதியின் மனைவி மற்றும் பிரதீபா பட்டீலின் நெருங்கிய உறவினர்கள் அருகே அமர்ந்தனர்.
* ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததை உணர்த்தும் விதத்தில், முதல் மந்திரிகள் கருணாநிதி, மாயாவதி இருவரும் சோனியாகாந்தியின் அருகில் அமர்ந்து இருந்தனர்.
* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
* அத்வானி 4-வது வரிசையில் அமர்ந்து இருந்தார். பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முதல் வரிசையில் பிரதீபா பட்டீலின் கணவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்தார்.
* ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த பைரோன்சிங் செகாவத் விழாவில் பங்கேற்றார். முதலில் பிரதமர் மன்மோகன்சிங் அருகில் அமர்ந்த அவர், மத்திய மந்திரி அர்ஜுன்சிங் வந்ததும் அவருக்கு அந்த இடத்தை கொடுத்துவிட்டு அடுத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்.
* 2.10 மணிக்கு பிரதீபா பட்டீலின் கணவர் தேவிசிங் செகாவத்தை கவர்னர் மாளிகையின் மெய் காப்பாளர்கள் மரியாதையுடன் அழைத்து வந்து பார்வையாளர் முதல் வரிசையில் கடைசி இருக்கையில் அமர வைத்தனர்.
* விழா தொடங்குவதற்கு முன்பு அவரை யாருக்கும் தெரியவில்லை. விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்து சம்பிரதாய முறைப்படி பிரதீபா பட்டீல் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலை நோக்கி கைகளை கட்டியபடி மெதுவாக நடந்துசென்றபோது அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவரும் நேராக நின்றபடி மரியாதை செலுத்தினார்கள்.
மண்டபம் முழுவதும் அமைதி நிலவிய அந்த நேரத்தில் முன் வரிசையில் வெள்ளை நிற உடையில் இருந்த உயரமான தேவிசிங் மட்டும் பின்புறம் திரும்பி பிரதீபா பட்டீல் செல்வதை பார்த்தார். பிரதீபா பட்டீல் வெளியேறிய போது, தேவிசிங்கும் தனக்கு அருகில் இருந்த நுழைவாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றதை பார்க்க முடிந்தது.
* விழா முடிந்ததும் பிரதீபா பட்டீலுக்கு முதலில் வாழ்த்து சொன்னவர் பா.ஜனதாவை சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல் - மந்திரி வசுந்தரா ராஜே ஆவார்.
* ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் முதன் முறையாக மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
* அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஆற்றும் உரைகளில் திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து கவிதை வரிகளை எடுத்துச்சொல்வது வழக்கம். நேற்று உரையாற்றிய புதிய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மராத்தி கவிஞர் துக்காராமின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டினார்.
* அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
தினத்தந்தி
Posted by
Boston Bala
at
2:30 AM
0
comments
Thursday, July 26, 2007
'இறந்தவர்' உயிருடன் திரும்பினார்
வாராணசி அருகே ஒரு கிராமம்.
அது ஒரு சவ ஊர்வலம்.
இறந்தவர் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர். கல்லு (லல்லு அல்ல)யாதவ் என்பது அவர் பெயர்.
கடந்த செவ்வாய் இரவு அவருடைய நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் அடங்கிப்போயிருந்தது.
சில மணி நேரங்களுக்குப்பின்னர், உறவினர்களும், கிராமத்தினரும் துக்கத்துடன் அவரை எரியூட்ட சவகட்டிலில் சுமந்துச்செல்கின்றனர்.
மெதுவாக உணர்வு திரும்பிய அவர் கேட்கிறார்: "என்னை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள்?"
ஏதோ துக்க நினைப்பில் இருந்த உறவினர்கள் "இறந்துவிட்டீர்கள், எரியூட்ட எடுத்துச்செல்கின்றோம்" என்றுச்சொல்ல "என்ன, என்னை உயிருடன் எரியூட்டப்போகிறீர்களா?" என்று கத்துகிறார்.
துக்க உணர்விலிருந்து நிதானத்து வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி.
காட்டுத்தீயாகப் பரவிய இச்செய்தி 'சற்றுமுன்'னையும் வந்தடைந்தது.
பி/டி/ஐ
Posted by
வாசகன்
at
9:31 PM
1 comments
கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்கள்.
அவருடன் திருச்சி சிவாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி இராஜாவும் மாநிலங்களவை துணைத்தலைவர் இரகுமான்கான் அறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜி கே வாசன், நாடாளுமன்ற செயல்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி, அஹ்மத் படேல் ஆகியோரும் உடனிருந்தனர்.
NDTV.com: Kanimozhi, D Raja take oath
Posted by
மணியன்
at
1:14 PM
3
comments
இட்லியிலிருந்து ஊத்தப்பத்துக்கு...
குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பதவியேற்றதை அடுத்து, சுவையான ஊத்தப்பம் செய்யும் பணியில் ராஷ்டிரபதி பவன் சமையல் கலைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
"அப்துல் கலாம் இட்லி, தோசை, சாம்பார் வகைகளையே விரும்பி உண்பார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த வரை ராஷ்டிரபதி பவன் "டைனிங் டேபிள்' தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றால் நிரம்பி வழியும்" என்று நினைவு கூர்ந்தார் ராஷ்டிரபதி பவன் மூத்த அதிகாரி.
72 வயதான பிரதிபா பாட்டீலுக்கு பிடித்த உணவு ஊத்தப்பம் மற்றும் பருப்புக் கூட்டு. அவருக்குப் பிடிக்காதது கீரை மற்றும் உருளைக்கிழங்கு.
"பிரதிபாவுக்கு எளிமையான உணவுதான் மிகவும் பிடிக்கும். எண்ணெய் மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் சேர்க்காமல் சமைத்த உணவை அவர் விரும்பி உண்பார்" என்றார் ஜெய்ப்பூர் ஆளுநர் மாளிகை தலைமை சமையல் கலைஞர் கைலாஷ்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, ராஷ்டிரபதி தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார். அதாவது, ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சமையல் செய்யப்படும் பொது சமையல் கூடத்திலேயே, தனக்கும் சமையல் செய்ய வேண்டும். தனக்காக தனி சமையல் கூடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
அதே போல், இரவில் தான் உணவு சாப்பிடும் வரை மற்ற ஊழியர்கள் காத்திருக்கக் கூடாது. உணவு பரிமாறுவதற்கு ஒருவர் மட்டும் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தார்.
கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, அவரிடம் 4 ஆண்டுகள் செயலராக இருந்த பி.எம். நாயர் கூறியது:
வழக்கமாக நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்குத் தான் கலாம் தூங்கச் செல்வார். இருந்தாலும் காலை 6.30 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.
தினமணி
Posted by
Boston Bala
at
2:41 AM
5
comments
Monday, July 23, 2007
ஆறு கிலோ எடையுடன் பிறந்த குழந்தை.
ஆறு குழந்தைகளை ஏற்கனவே பெற்ற பெண்ணுக்கு ஏழாவது குழந்தை ஆறு கிலோ எடையில் பிறந்துள்ளது.
குஜராத்தின் ச்சிப்பா பொதுநல மருத்துவமனையின் பிரசவ விடுதியில் பிறந்து இருநாட்களே ஆன குழந்தை ஹபீப் அலி தன் தாயுடன் நலமாக இருப்பதாக மருத்துவர் ஜபீன் தெரிவித்துள்ளார்.
வழமையை விடவும் மூன்று கிலோ அதிக எடையுள்ளதாக ப் பிறந்த இக்குழந்தை மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாம்.
பி.டி.ஐ செய்தி
Posted by
வாசகன்
at
7:56 PM
0
comments
Sunday, July 22, 2007
நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னர் ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் நேபாள மின்சார ஆணையத்திற்கு ரூ. 3.6 கோடி மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் நடந்த உள்நாட்டு கலவரம் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான மானியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வரும் நவம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாள பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல் வருமாறு: கடந்த 2005 பிப்ரவரியில் இருந்து ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் நேபாள மின்சார ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை. கடந்த மாதம் 14ம் தேதி வரை நேபாள அரண்மனையில் மட்டும் ரூ. 2.6 கோடிக்கு கட்டண பாக்கி வைத்துள்ளனர். இளவரசர் பரசின் வீட்டிற்கான மின்சார கட்டண பாக்கி ரூ. 20 லட்சம். ஞானேந்திராவின் சகோதரர் தீரேந்திரா ஷாவின் மூன்று மகள்கள் ரூ. 20 லட்சம் பாக்கித் தொகையை செலுத்தவில்லை. இதுதவிர அவரது உறவினர்கள் பலரும் மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளனர். மொத்தத்தில் ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் ரூ. 3.6 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
Posted by
வாசகன்
at
8:06 PM
0
comments
Friday, July 20, 2007
ஜனாதிபதி தேர்தல் துளிகள்
- நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. இந்த விவரம் தெரியாமல் ஓட்டுப் போடுவதற்காக பாராளுமன்ற வாக்குச் சாவடிக்கு வந்த நியமன உறுப்பினர் கபிலா வாத்சாயன் பின்னர் திரும்பிச் சென்றார்.
- டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநில ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. ஆர்.எல்.மகாதோ டெல்லி சட்டசபை கட்டிடத்துக்கு ஆம்புலன்சில் வந்து ஓட்டுப் போட்டார்.
- டெல்லி திகார் சிறையில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி. பப்பு யாதவ் சிறை வாகனத்தில் வந்து ஓட்டுப் போட்டார்.
- இதேபோல் பீகாரில் உள்ள சிறையில் இருக்கும் முகமது சகாபுதீன் எம்.பி. பாட்னா நகரில் உள்ள சட்டசபைக்கு சென்று வாக்கு அளித்தார்.
- பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டுவிட்டு திரும்பும் போது 'பெண்கள் சக்தி வாழ்க' என்று கோஷம் போட்டனர்.
- மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் தவறுதலாக முதலில் செகாவத்துக்கு ஓட்டுப் போட்டு விட்டார். உடனே அந்த தவறை உணர்ந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் கூறி வேறு வாக்குச் சீட்டு வாங்கி மறுபடியும் ஓட்டுப் போட்டார். இதனால் அவர் முதலில் வாக்கு அளித்த சீட்டு நிராகரிக்கப்பட்டது.
- ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஓட்டுப் போடுவதற்கு தவறாக தனது பேனாவை பயன்படுத்தி விட்டதாக கூறினார். இதனால் அவர் ஏற்கனவே வாக்களித்த வாக்குச் சீட்டு மாற்றபட்டு அவருக்கு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
- இதேபோல் ஜெயாபென் கக்கர் (காங்கிரஸ்) அடுத்தடுத்து வாங்கிய இரு வாக்குச்சீட்டுகளும் தவறாக இருந்ததால் அவை மாற்றப்பட்டு வேறு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
- தெலுங்கு தேசம் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பாரெட்டி, ஜி.நாகசிவா ரெட்டி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டனர்.
- எம்.பி.க்களான நடிகைகள் ஹேமமாலினி, ஜெயப்பிரதா, ஜெயாபச்சன் ஆகிய மூவருமே ஓட்டுப் போடவில்லை. ஹேமமாலினி நியமன உறுப்பினர் என்பதாலும், மற்ற இருவரும் தேர்தலை புறக்கணித்த சமாஜ்வாடியை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஓட்டுப் போடவில்லை.
தினத்தந்தி
Posted by
Boston Bala
at
9:55 PM
6
comments
Wednesday, July 18, 2007
ஷில்பா ஷெட்டிக்கு டாக்டர் பட்டம்
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. ஜூன் மாதத்தில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஷபான ஆஷ்மி போன்ற சினிமா பிரப்பலங்களுக்கு லீட்ஸ் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
Shilpa Shetty to be awarded doctorate by Leeds varsity today Hindustan Times
After Big B, Dr Shilpa Shetty's here to treat you
Degree awarded to Bollywood star
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:33 PM
4
comments
b r e a k i n g n e w s...
