கர்நாடக மாநிலத்தின் விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெறக் கூடாது என்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் கூறியுள்ளது.
இந்த மன்றத்தின் நிறுவனர் பெ. பராங்குசம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மாநில அரசின் உயரிய விருதான பசவாசிறீ விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விருதில் ரூ. 10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் ஒரு தமிழர். குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியனாகவும், தேசியவாதியாகவும் இருந்தார். இவருக்குப் பிடித்த நூல் திருக்குறள்.
திருக்குறள் எழுதிய திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் பல ஆண்டுகளாக சாக்குப் பையால் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. சிலை திறக்க முடியாமல் இருக்கிறது. கன்னடர்கள் சிலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
அதனால் இந்த விருதை பெறுவதற்கு முன் திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பராங்குசம்.
தினமணி
Sunday, September 2, 2007
கர்நாடக மாநில விருதை அப்துல்கலாம் புறக்கணிக்கக் கோரிக்கை
Posted by
வாசகன்
at
5:52 PM
0
comments
Thursday, August 23, 2007
தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007
தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007
தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதை இந்திய அரசு நிறுவியுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ( என்.ஜி.ஓ ) அல்லது மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிலைநாட்ட பணிபுரிந்த்திருக்க வேண்டும்.
ஆண்டுக்கு நான்கு விருதுகள் வழங்கப்படும். போராளிக்கு வழங்கப்படும் விருத்துதொகை இரண்டு இலட்சம். நிறுவனத்துக்கு வழங்கப்படும் தொகை ஐந்து இலட்சம்.
மேற்கண்ட துறைகளில் தீவிரமாக சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளி என யாராவது ஒருவருக்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளை கணக்கில் கொண்டு மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்படலாம்.
இந்த விருது 2007 ஆம் ஆண்டு நிறுவப்படுகிறது. தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படும். இனம், பால், ஜாதி, மத அடிப்படையில் ஒடுக்குதல், வேறுபாடுகளைக் கடந்து இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளிகளின் முக்கிய பணிகளை ஒரு தேர்வுக் குழுவும், நீதிபதிகள் குழுவும் தீவிரமாக பரிசீலனை செய்யும்.
கூடுதல் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்
Shri R K Meena
Under Secretary
Room No 721 A
Shastry Bhawan
New Delhi
Tel : 011 23386981 / 23384918
www.socialjustice.nic.in
கடைசி தேதி : அக்டோபர் 31, 2007
Posted by
முதுவை ஹிதாயத்
at
12:04 AM
0
comments
Sunday, August 19, 2007
தமிழறிஞர்களுக்கான தொல்காப்பியர் விருது-ரூ.ஐந்து இலட்சம்
மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் இதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் அர்ஜூன் சிங் பேசுகையில்,
செம்மொழித் தமிழில் உள்ள பழம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்களை தொகுத்து அச்சிடும் பணி கோவையில் நடந்து வருகிறது. அப்பணி இறுதி வடிவத்தில் உள்ளது. அச்சிடும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும்.
இதுதவிர செம்மொழித் தமிழில் உள்ள படைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களாக உருவாக்கும் திட்டமும் உள்ளது. இவற்றை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் வெளியிடுவோம்.
செம்மொழித் தமிழில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தொல்காப்பியர் விருது என்று பெயரிடப்பட்டுள்ளது.என்றார்.
இந்த விருதுக்குரிய பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இத்தொகை முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர குறள் பீடம் விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்கான பரிசுத் தொகையும் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படும்.
செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவும் தமிழக மக்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த மையத்தை அமைக்க 29 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மையத்தில் தமிழ் ஆய்வுகள் தவிர செம்மொழி தமிழ் போதனைகளும் நடத்தப்படும். மேலும் பட்டப் படிப்புகளையும் தமிழக அரசு இந்த மையம் மூலம் நடத்த நான் யோசனை தெரிவித்துள்ளேன்.
கடந்த 2 நூற்றாண்டுளாக சமஸ்கிருதம் குறித்து விரிவாக ஆய்வுகள் நடந்துள்ளன. அதே அளவு சிறப்புடைய, 20 திராவிட மொழிகள் தோன்றக் காரணமான தாய் மொழியான தமிழுக்கும் அந்த அளவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மையம் அதனை நிறைவு செய்யும்
Posted by
வாசகன்
at
7:28 PM
0
comments
Wednesday, August 8, 2007
2005க்கான தேசிய திரைப்பட விருதுகள்
Best feature film
Kaalpurush (Bengali), Director Buddhadeb Dasgupta
Indira Gandhi Award for Best First Film of a Director
Prodip Sarkar, Parineeta (Hindi)
Best Director
Rahul Dholakia, Parzania (English)
Best Actress
Sarika, Parzania
Best playback singer (Male)
Naresh Iyer, Roo ba roo, Rang De Basanti
Best playback singer (Female)
Shreya Ghoshal, Apne aansoo peene ke liye (Paheli)
Best music direction
Lalgudi Jayaraman (Sringaram)
Best Popular Film
Rang de Basanti (Hindi)
Nargis Dutt Award for Best Feature Film on National Integration
Daivanamathil (Malayalam)
Best Actor
Amitabh Bachchan, Black
Best supporting actor
Naseeruddin Shah, Iqbal
Best supporting actress
Urvashi, Achhuvinte Amma
Best child artiste
Sai Kumar, (Bommalata)
Best cinematography
Madhu Ambat, Sringaram
Special jury award
Anupam Kher, Maine Gandhi Ko Nahin Mara
நன்றி: Indian Express
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:39 PM
2
comments
புக்கர் ் பரிசு: பட்டியலில் இரண்டு இந்தியர்கள்
இங்கிலாந்தில் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இருக்கும் 13 பேரில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நிகிட்டா லால்வானியின் கிப்ஃடட்(Gifted) நாவலும் இந்த்ரா சின்ஹாவின் அனிமல்ஸ் பீப்பிள் (Animal's People) புத்தகமும் 50,000 பவுண்ட் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் அக்டோபரில் அறிவிக்கப்படும்.
Two Indian writers in 13-strong Booker Prize longlist - the Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:18 PM
0
comments
Friday, August 3, 2007
சிவதாணுப் பிள்ளைக்கு திலகர் விருது
அறிவியல் அறிஞரும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை செயல் அலுவலருமான சிவதாணுப் பிள்ளைக்கு 2007-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
திலகரின் 87-வது நினைவு நாளை முன்னிட்டு புணே நகரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், திலகரின் கொள்ளுப் பேரன் தீபக் திலக் இந்த விருதை சிவதாணுப் பிள்ளைக்கு வழங்கினார்.
திலகர் விருது பெறுபவருக்கு தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது.
தினமணி
India a strategic power, says Pillai-Pune-Cities-The Times of India: "Noted scientist and chief executive officer of BrahMos Aerospace A. Sivathanu Pillai accepted the prestigious Lokmanya Tilak award from Deepak Tilak, chairman of the Lokmanya Tilak Memorial Trust, in the presence of Union energy minister Sushilkumar Shinde and scientist Vasant Gowariker."
Posted by
Boston Bala
at
2:04 AM
0
comments
இந்தியருக்கு காமன்வெல்த் புகைப்பட விருது
2007-ம் ஆண்டுக்கு தெற்காசியாவுக்கான காமன்வெல்த் புகைப்பட விருது இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் வனவிலங்குகளை மிகச்சிறப்பான முறையில் புகைப்படங்களில் கொண்டுவந்ததற்காக சுரேஷ் நாராயணனுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 'இயற்கையின் வெற்றி' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இவரது புகைப்படக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.
மெச்சத் தகுந்த புகைப்படங்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தபஸ் முகோபாத்யாயா, ஸ்ரீநிவாச ரெட்டி, பிராணபந்து சமாஜ்பதி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அரிந்தாம் தத்தா, தீரஜ் பால், சுகந்த சின்கா, டி.என்.பராஸ்கர் ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றனர்.
தினமணி
The Hindu News :: Suresh Narayanan wins Commonwealth Photographic Award for S. Asia
Posted by
Boston Bala
at
1:47 AM
0
comments
Wednesday, August 1, 2007
டைரக்டர் அமீர் மீது கார்த்தி பாய்ச்சல் - ஆசிய பட விழாவுக்கு அழைக்கவில்லை என்பதா?
டெல்லியில் நடந்த ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' சிறந்த படமாக தேர்வானது. இதில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் 'பருத்தி வீரன்' கதாநாயகன் கார்த்தி பங்கேற்றார்.
இந்த விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று 'பருத்தி வீரன்' டைரக்டர் அமீர் குறை கூறினார். தன்னை ஓரம் கட்டுவதாகவும் சொன்னார். என்னை ஒதுக்குவது இது முதல் தடவை அல்ல. கேன்ஸ் பட விழாவுக்கு பருத்தி வீரன் படத்தை அனுப்பியதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுபற்றி நடிகர் கார்த்தி கூறியதா வது:-
ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' படத்துக்கு இரு விருதுகள் கிடைத்தது பெருமையான விஷயம். இந்தி, பெங்காளி என 100 படங்கள் பங்கேற்றன. அதில் இரு விருதுகளை 'பருத்தி வீரன்' வென்றது. விருது பெறும் விழாவுக்கு இ-மெயில் மூலம் என்னை அழைத்தனர். டைரக்டர் அமீருக்கும் இ-மெயில் அனுப்பி அழைத்தார்கள். அவர் வரவில்லை.
விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று அமீர் சொல்வது சரியல்ல. இது போன்ற விழாக் களுக்கு இ-மெயில் மூலம்தான் அழைப்பாளர்கள். கேன்ஸ் பட விழாவுக்கு 'பருத்தி வீரன்' படம் அனுப்பப்பட்டது பற்றியும் அமீருக்கு இ-மெயிலில் தகவல் தெரிவித்தேன். தன்னை ஓரம் கட்டுவதாக அவர் சொல்வது நியாயமற்றது.
இது போன்ற விழாக்களுக்கு படத்தை அனுப்ப ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். படத்தின் இயக்குனர், நடிகர்கள், கதை போன்ற விவரங்கள் அடங்கிய குறிப்பு புத்தகமும் தயார் செய்து அனுப்ப வேண்டும். இதையெல்லாம் சொந்த செலவில் செய்துதான் ஒவ் வொரு விழாவுக்கும் அனுப்புகிறேன்.
இத்தனையும் செய்த பிறகும் டைரக்டர் அமீரிடம் இருந்து விமர்சனம் வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் மீது எப்போதும் மரியாதை வைத்துள்ளேன். ஓரம் கட்டவில்லை. ஒதுக்கவும் இல்லை. 'பருத்தி வீரன்' படம் பற்றிய ஒவ்வொரு தகவலும் அவருக்கு அனுப்பப்படுகிறது.
ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' படத்தை பார்த்து விட்டு வெளிநாட்டினர் அசந்து போயினர். பிரியாமணி நடிப்பை பார்த்து இப்படியும் ஒரு பெண் இருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட்டனர். படத்தை அங்கு அனுப்பியதால் தானே இந்த பெருமைகள் கிடைத்தன. ஒரு ஆளாக நின்று தான் இதை செய்கிறேன்.
முந்தைய சற்றுமுன்...: தொடரும் 'பருத்தி வீரன்' பிரச்னை
மாலைமலர்
Posted by
Boston Bala
at
8:29 PM
0
comments
Tuesday, July 31, 2007
ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது
சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் ஷில்பாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்நிலையில், சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது வழங்கப்படவுள்ளது என்று ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தர நிர்ணய ஆணையத்தால் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி தர விருது ஏற்படுத்தப்பட்டது. தரத்தில் சிறந்து விளங்கும் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்திலும் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.
முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, அதி கோத்ரெஜ், ஆனந்த் மஹிந்திரா, சுனில் மித்தல், கிரண் மஜும்தார் ஷாவ், சாந்த் சிங் சத்வால், ஷாருக்கான், தருண் தேஜ்பல், சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
தினமணி
Dr Shilpa Shetty to receive Rajiv Gandhi Award - bollywood news: "To be a worldwide achiever at such a young age; bestowed with flattering accolades, is a matter of utmost prestige for Shilpa. She is extremely grateful to be chosen for this honour." The award has been designed in line with similar awards in other developed countries, like 'Malcolm Baldrige National Quality Award' in USA, 'Deming Prize' in Japan and the 'European Quality Award'.
Posted by
Boston Bala
at
3:08 AM
2
comments
Monday, July 23, 2007
கமல்நாத்துக்கு 'எப்டிஐ' விருது
மத்திய வர்த்தகம மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்ததற்க்கான விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான நிதித்துறை டைம்ஸ் குழும பப்ளிகேஷன் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
'எப்டிஐ' பெர்சனால்டி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை இதற்கு முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூ லா டிசில்வாவும் (uis Inacio Lula da Silva), மெக்சிகோ அதிபர் வின்சென்ட் பாக்ஸ் (Vincente Fox) ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
கமல்நாத்தின் முயற்சியால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ. 5 லட்சத்து 63 ஆயிரத்து 800 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2003-04ம் ஆண்டு ஏற்றுமதியான ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 367 கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
MSN Tamil
The Hindu News :: FT publication names Nath as FDI personality of the year
Kamal Nath, the global FDI person
Posted by
Boston Bala
at
11:30 PM
0
comments
Saturday, July 14, 2007
டி.எம். சௌந்தரராஜனுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் விருது
புகழ்பெற்ற பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜனுக்கு கேரளத்தில் நடைபெறும் கலை மற்றும் கலாசார விழாவில் எம்.எஸ். விஸ்வநாதன் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் இசை உலகில் பின்னணி பாடகராக பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய டி.எம். சௌந்தரராஜனை விருதுக்கு தேர்வு செய்துள்ளதாக கலை மற்றும் கலாசார சங்கம் அறிவித்தது.
கலை மற்றும் கலாச்சார சங்கம் எம்.எஸ். விஸ்வநாதன் விருதை நிறுவியுள்ளது. இந்த விருது ரூ. 25 ஆயிரம் ரொக்கமும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. ஜூலை 15-ம் தேதி திருவனந்தபுரத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது.
தினமணி
Posted by
Boston Bala
at
2:36 AM
0
comments
Thursday, July 12, 2007
கலாமுக்கு இங்கிலாந்தின் உயர் விருது
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இங்கிலாந்தின் மிக உயர்ந்த "இரண்டாவது சார்லஸ் அரசர் விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆக்கப்பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவுக்கு அடுத்த படியாக இந்த விருதைப் பெறும் ஒரு நாட்டின் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார் கலாம். இங்கிலாந்து அரச பரம்பரைத் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறுகையில், வளரும் நாடான இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு தொலைநோக்குத் திட்டம் தீட்டியவர் கலாம் என்று புகழாரம் சூட்டினார்.
வரும் வெள்ளிக்கிழமை தில்லி மற்றும் லண்டனில் நடைபெறுவதாக இருந்த விருது விழா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவையடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின், விருது வழங்குவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தினமணி
The Hindu News :: Kalam chosen for King Charles II Medal
Posted by
Boston Bala
at
1:06 AM
3
comments
Wednesday, July 11, 2007
திருப்பூரில் வைரமுத்து பிறந்த நாள் விழா: கவிஞர் தமிழச்சிக்கு விருது
ஜுலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விழா 13-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூரில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் வைரமுத்து தன் பிறந்த நாளில் கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறார். இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த கவிஞர் தமிழச்சிக்கு ரூ.10 ஆயிரமும், பட்டயமும் கவிஞர் வைரமுத்து வழங்குகிறார்.
தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். கவிஞர் வைரமுத்துவின் புகழ் பெற்ற படைப்புகளான கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் என்ற 2 படைப்புகளின் மையக் கருத்துக்களை அடிப்படை யாகக் கொண்ட சிறப்புப் பட்டி மன்றம் நடக்கிறது.
வெற்றித் தமிழர் பேர வையின் திருப்பூர் நகரத் தலைவர் ஜீவானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். கணக்காயர் லோக நாதன் வரவேற்று பேசுகிறார். சிற்பி ரகுநாதன், நன்றியுரையாற்றுகிறார். விழா நிகழ்ச்சிகளை கனகலட்சுமி தொகுத்து வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்ள கவிஞர் வைரமுத்து நாளை மறுநாள் காலை விமானத்தில் கோவை சென்று திருப்பூர் செல்கிறார்.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
10:39 PM
1 comments
பட்டமளிப்பு விழா: சத்யராஜ், தேவாவுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சத்யராஜ இசையமைப் பாளர் தேவா ஆகியோருக்கு சத்யபாமா பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங் கப்படுகிறது. இதற்கான விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதலைவர் டாக்டர் மாதவன்நாயர் பட் டங்களை வழங்குகிறார். பல்கலைகழக வேந்தர் ஜேப்பியார் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். டாக்டர் மயில்வாகனன்நடராஜன், எம்.பி. நிர்மல் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படு கிறது.
IndiaGlitz - Doctorate for Sathyaraj, Deva - Tamil Movie News
DNA - After Hrs - Tamil hero Satyaraj awarded lifetime contribution - Daily News & Analysis
Posted by
Boston Bala
at
10:31 PM
1 comments
Tuesday, July 10, 2007
நீல பத்மநாபன் எழுதிய நாவலுக்கு ரங்கம்மாள் பரிசு
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நிர்வாக அறங்காவல் சரத் சந்திரன் வெளியிட்ட செய்தி:
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் இரண்டாண்டுக்கொரு முறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த நாவலுக்கு ரொக்கப் பரிசை 'ரங்கம்மாள் பரிசு' என்ற பெயரில் வழங்கி வருகிறது. 2005, 2006-ம் ஆண்டுகளில் வெளியான 23 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்தன. அவற்றில் நீலபத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' என்ற நாவல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பரிசுத்தொகையாக ரூ.15 ஆயிரமும், நாவலை வெளியிட்ட வானதி பதிப்பகத்தினருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. 'இலை உதிர் காலம்' நாவல் முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ளது.
தினமணி
Posted by
Boston Bala
at
2:34 AM
1 comments
Saturday, July 7, 2007
லெனின் தங்கப்பாவுக்கு சிற்பி இலக்கிய விருது
சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்தி:
கடந்த 12 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்து வருகிறது. 2007-ம் ஆண்டுக்கான கவிதை இலக்கிய விருது ம.இ. லெனின் தங்கப்பாவுக்கு வழங்கப்படுகிறது.
'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் அவருடைய நூல் விருதுக்கு உரியதெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாவலர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் என பல்துறை வல்லுநராகப் புதுவையில் பணியாற்றி வருபவர் தங்கப்பா. தமிழ் நலம், சுற்றுச் சூழல் மேம்பாடு, இளைஞர்களிடம் விழிப்புணர்வு முதலிய கொள்கைகளைப் பேணுவதும் வளர்ப்பதும் இவர் வாழ்வுப்பணி.
கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசுக்கு கவிஞர் உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருடைய 'கற்பாவை' என்னும் நூல் பரிசு பெறுகிறது. பெண் கவிஞர்களில் ஒரு தனித்த பார்வையும் நடையும் இவருக்கு உண்டு.
ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது இலக்கிய விருது. ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது கவிதைச் சிறப்புப் பரிசு. பரிசளிப்பு விழா ஜூலை 29-ல் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.
தினமணி
Posted by
Boston Bala
at
4:48 AM
0
comments
Wednesday, July 4, 2007
விஞ்ஞானி அருணாசலத்துக்கு விருது.
முன்னோடியான விஞ்ஞானி அருணாச்சலத்திற்கு இந்த ஆண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1980களில் இந்திய ஏவுகணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் விஞ்ஞானி அருணாச்சலம். மத்திய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய அருணாச்சலம், மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். தற்போது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட கல்வி மையத்தின் தலைவராக இருக்கும் இவருக்கு, இந்தாண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுளளது. இந்த பதக்கத்தை டில்லியிலுள்ள இந்திய தேசிய அறிவியல் கழகம் வழங்கியுள்ளது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானி அல்லது தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த பதக்கத்துடன், ரூ.பத்தாயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பானர்ஜி மற்றும் தேசிய தொலை தூர புலனறி அமைப்பின் முன்னாள் இயக்குனர் தீக்ஷதலு ஆகியோர் பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கத்தை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
நன்றி: தினமலர்
Posted by
வாசகன்
at
9:21 PM
0
comments
Friday, June 29, 2007
சாகித்ய அகாதெமி விருதுகள்
2006-ம் ஆண்டுக்கான சாகித்ய கலா அகாதெமியின் 'பஷா சம்மான்' விருதுக்கு வெட்டூரி சுந்தரமூர்த்தியும், எச்.பி. நாகராஜய்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதத்தில் தெலுங்கு எழுத்தாளரான வெட்டூரி சுந்தரமூர்த்திக்கு விருது வழங்கப்படவுள்ளது.
கன்னட மொழி எழுத்தாளர் எச்.பி. நாகராஜய்யா இதுவரை 60 புத்தகங்களையும், பத்திரிகைகளுக்கு 300-க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
தினமணி
Posted by
Boston Bala
at
4:35 AM
1 comments
Wednesday, June 27, 2007
வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கு சாஸ்திரி விருது
2006க்கான லால்பகதூர் சாஸ்திரி விருது பிரபல வேளாண்துறை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது வணிகம், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் சிறப்பு எய்தியவர்களுக்கு வழங்கப் படுகிறது. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய் சன்மானமும் புகழுரையும் ஒரு நினைவுத்தட்டும் கொண்டது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:03 PM
1 comments
Tuesday, June 19, 2007
உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி
உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழத்தை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்திக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களாக இயந்திர மனிதனை உருவாக்குவதற்கு தேவையான பல வகையான மென்பொருள் மொழிகளை அவர் உருவாக்கியுள்ளார். 1980 களின் தொடக்கம் 1990 ஆம் ஆண்டுகளின் மைய காலம் வரை மருத்துவ துறையில் உதவக் கூடிய வகையில் தன்னிறைவுடன் செயல்படக் கூடிய வகையில் இயந்திர மனிதனின் வடிவமைப்பில் அவர் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
தான் வடிவைமைத்துள்ள இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் பெரிதும் உதவியாக இருக்கும் என டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இந்த ரோபோவின் விலை தற்போது 70,000 அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்தாலும், வணிக ரீதியில் தயாராகும் போது அதன் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
- பிபிசி தமிழ்
1. Deccan Herald - First Indian American woman receives Robotics Tech Award
2. Indian American woman gets US tech award-Software-Infotech-News By Industry-News-The Economic Times
Posted by
Boston Bala
at
11:28 PM
0
comments
b r e a k i n g n e w s...
