எண்ணெய் நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிப்பதற்கு முன்பாக பெட்ரோல், டீசல், உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் கடன் பத்திரங்கள் வெளியிடுதல் தொடர்பாக எந்த முன்நிபந்தனையும் இல்லை. நாள்தோறும் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இதன் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் உத்தேசித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிறுவனங்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்தாமல் இருப்பதால் நாள்தோறும் ரூ.185 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால், விலைகளை உயர்த்தி பொதுமக்களின் தலைகளில் சுமைகளை ஏற்ற வேண்டாம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் சில சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ள நிலையில் இவற்றில் இருந்து 5 சதவீத பங்குகளை அரசு சார்பில் பெற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து வேற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
நஷ்டக் கணக்குகள்: கடந்த பிப்ரவரியில் எண்ணெய் விலைகள் ஏற்றப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டன. இதில், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1-ம் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் காட்டும் நஷ்டக் கணக்குகள் வருமாறு:
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5.88-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4.80-ம், எல்.பி.ஜி. சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.189.14-ம், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14.63-ம் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளன.
விலைகளை ஏற்ற தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருவதால் இதன் விலைகள் ஏற்றப்படுவது மத்திய அரசின் முடிவில் உள்ளது. விலையேற்றத்துக்கு இடதுசாரிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பும். இதையும் மீறி அல்லது அனுசரித்தே தான் விலையேற்றங்கள் இருக்கலாம்.
தினமணி
Sunday, September 2, 2007
மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?
Posted by
வாசகன்
at
5:59 PM
0
comments
Thursday, July 26, 2007
இந்தியா: மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?
இந்தியாவின் நடுவண் அரசு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு ஒரு ரூபாயும் விலை குறைப்பு செய்தது. அதன் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பாரல் ஒன்றுக்கு 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆனால் கடந்த 6 மாதங்களாக இவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 193 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி நீண்ட நாட்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவது சிரமமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. எனவே விரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி முரளி தியோரா நேற்று டெல்லியில் கூறும்போது, "நீண்ட காலமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படாமல் இருக்கிறது. குறைந்த விலையில் இவற்றை விற்பதன் காரணமாக ஒரு நாளைக்கு 193 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சுமையை நாம் எவ்வளவு நாள்தான் சுமந்து கொண்டிருப்பது?.. எனவே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு தொடர்பாக மத்திய நிதி மந்திரியுடன் பேச்சு வார்த்தையும் நடத்தினேன்'' என்று சொன்னார்.
வேறு ஏதேனும் இது தொடர்பாக யோசனைகள் தெரிவிக்கப்பட்டதா? என்று முரளி தியோராவிடம் கேட்டபோது, "இறக்குமதி வரியை குறைப்பது மற்றும் நிலையான விலையை நிர்ணயித்தல் போன்றவை பற்றி பேசப்பட்டது. எனினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆலோசனை தொடர்ந்து நடத்தப்படும். இது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் இடது சாரி தலைவர்களிடமும் தொடர்பு கொள்ளப் பட்டிருக்கிறது'' என்று கூறினார்.
நன்றி: தினத்தந்தி
Posted by
வாசகன்
at
12:07 PM
0
comments
Monday, July 2, 2007
புதுவை: மதிப்பு கூட்டு வரியிலிருந்து பெட்ரோலுக்கு விலக்கு.
ஜூலை 1 முதல் புதுவை மாநிலத்தில் மதிப்பு கூட்டு வரி (VAT) நடைமுறைபடுத்தப்பட்டது. இதில் பெட்ரோல், டீசலுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டிருந்தது.
இதற்கு பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் பெட்ரோல் பங்க்குகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களுக்கான வரி முறைப்படுத்தப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை தெரிவித்தார்.
இதன்படி சமையல் எண்ணெய், ரேஷன் மண்எண்ணெய், புளி, மிளகாய், மஞ்சள், பெருங்காயம், சேமியா, கற்பூரம், விபூதி, நாமகட்டி, காலணி, தீப்பெட்டி, பேனா, பென்சில் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு - ஒரு சதவீதம், உணவு பொருட்களுக்கு 2 சதவீதம், நெய், பேரீச்சம் பழத்துக்கு 4 சதவீதம், பெட்ரோல்-டீசலுக்கு 12 சதவீதமும் பிளாஸ்டிக் பொருட்கள், ஸ்டீல்பர்னிச்சர் களுக்கு 12 சதவீதம், மோட் டார் சைக்கிள்களுக்கு 4 சதவீதம், டயர், டிïப்புகளுக்கு 8 சதவீதம் என வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட சாராயத்திற்கு 15 சதவீதமும், சிகரெட்டுக்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கு சமீபத்தில் விற்பனை வரிக்கு பதிலாக 35 சதவீத கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டது. இதுவே நடைமுறையில் இருக்கும்.
வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான வரி பழைய நிலையில் இருந்து 0.5 சதவீதமே உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் 20 பைசா மட்டுமே உயரும். இதனால் காலையில் கணிசமாக உயர்ந்த விலை மாலையில் சரிந்தது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.41.52-ல் இருந்து ரூ.41.70 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ரூ.43.03-ல் இருந்து ரூ.43.22 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.31.46-ல் இருந்து ரூ.31.60 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.31.87-ல் இருந்து ரூ.32.01 ஆகவும் தற்போது உயர்ந்துள்ளது. இதனால், புதுவை வழியாகச்செல்லும் தமிழக வாகனங்களும் புதுவைப் பகுதியிலேயே தங்களுக்கான பெட்ரோலை நிரப்பிக்கொள்வர்.
மோட்டார் சைக்கிள், டயர் ஆகியவற்றிற்கு பழைய வரியே தொடருவதால் விலையில் பெருமளவு மாற்றம் இருக்காது. சிகரெட்டிற்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை உயரும். என எதிர்பார்க் கப்படுகிறது.
சாராயத்திற்கு ஏற்கனவே 15 சதவீத விற்பனை வரி அமுலில் இருந்தது. இது VATவரியிலும் தொடருகிறது. இதனால் சாராய விலையிலும் மாற்றம் இருக்காது.
Posted by
வாசகன்
at
10:03 PM
0
comments
Thursday, June 28, 2007
இந்தியா : புதிய சேவை வரிகள்
தொலைதொடர்பு சேவை, கட்டடங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட ஏழு சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் சேவை வரி பல்வேறு இனங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் மேலும் ஏழு இனங்கள் புதிதாய் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொலை தொடர்புத் துறை, சுரங்கப் பணிகள், அசையாச் சொத்துகளை வாடகைக்கு விடுதல், ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுதல், வளர்ச்சி மற்றும் விருப்பமான சேவைகளை மேற்கொள்ளுதல், சொத்துகள் மற்றும் நிதி மேலாண்மை, வடிவமைப்பு துறை ஆகிய ஏழு பணிகளை மேற்கொள்வோர் இனிமேல் சேவை வரி செலுத்த வேண்டுமென சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி அசையா சொத்துகளை வாடகைக்கு விடுபவர்களில் ஏழு லட்சம் ரூபாய் வரை வாடகை பெறுபவர்கள் பதிவு மேற்கொள்ள வேண்டும்; எட்டு லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக வாடகை வசூல் செய்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டியது அவசியமாகும்.
சுரங்கப் பணிகளுக்கு இதுவரை சேவை வரி விதிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது சுரங்கப் பணிகளில் ஈடுபடுவோரும் சேவை வரியை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் வழங்கப்படும் சிறப்பு சேவைகளான இசை, படங்களின் தொகுப்பு, வால் பேப்பர், மொபைல் விளையாட்டுகள், ரிங்டோன் போன்றவற்றிற்கு இனி சேவை வரி விதிக்கப்படும்.
வடிவமைப்புத் துறையைப் பொறுத்தவரையில் பர்னிச்சர்கள், நுகர்வோர் பண்டங்கள், தொழில் துறை பொருள்கள், லோகோ, கிராபிக்ஸ், வெப்சைட்டுகள் போன்றவற்றை வடிவமைப்பதற்கு இனி சேவை வரி செலுத்த வேண்டும்.
இதுகுறித்து சேவை வரிகளின் ஆணையர் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிதாக ஏழு இனங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. மேற்கண்ட சேவைப் பணிகளை மேற்கொள்வோர் சேவை வரி செலுத்துவதற்கான பதிவினை வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். முதல் சேவை வரியினை ஜூலை 5ம் தேதி செலுத்த வேண்டும். பதிவு மற்றும் சேவை வரி செலுத்துவோர் வசதிக்காக அண்ணா சாலையில் உள்ள சேவை வரி அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் இயக்கப்படுகின்றன. உரிய காலத்தில் பதிவு மேற்கொள்ளாதவர்கள் மற்றும் சேவை வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு ஜெயின் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
Posted by
வாசகன்
at
10:51 PM
0
comments
பெட்ரோல் டீசல் - விரைவில் விலை உயருகிறது?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து அவ்வப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இடையில், உ.பி. மாநில சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் அதை மனதில் கொண்டு விலை உயர்வை மத்திய அரசு எடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில், இனியும் நஷ்டத்தை தாங்க முடியாது என்று மத்திய அரசுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து ஆலோசிக்கிறது. இக்கூட்டத்தின் இறுதியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 160 வரை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.50 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4.41 வரையிலும் அதிகரிக்கலாம். மண்ணெண்ணையின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posted by
வாசகன்
at
10:47 PM
0
comments
b r e a k i n g n e w s...
