.

Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

Sunday, September 2, 2007

மக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தன் முதலாண்டு வெற்றிப்பயணத்தை முடித்த மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.

இடம் : காமராசர் அரங்கம்,தேனாம்பேட்டை,சென்னை-18

நாள் : 06.09.2007

நேரம் : மாலை 4.00 மணி

கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு

பாராட்டு விழா மாலை 6.00 மணிக்கு

இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இரவு 8.00 மணிக்கு...

நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும்,பொறுப்பாளர்களுக்குப்
பாராட்டும் நடைபெறுகிறது.தொடக்கவிழாவில் நடுவண் தகவல் மற்றும் செய்திஒளிபரப்புத்
துறை அமைச்சர் மாண்புமிகு பிரியரஞ்சன்தாசு முன்சி,மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணிஇராமதாசு கலந்துகொள்கின்றனர்.

தமிழக அமைச்சர்கள் மாண்புமிகுமு.க.ஸ்டாலின்,ஆர்க்காடுவீராசாமி முதலானவர்களும்
பழ.நெடுமாறன்.எம்.கிருட்டிணசாமி,வரதராசன்,இரா.நல்லகண்ணு,தொல்.திருமாவளவன்,
காதர்மொய்தீன் முதலான அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

அழகின்சிரிப்பு என்னும் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரையாற்றுவார்கள்.

தொடர்புக்கு

மின்னஞ்சல்: info@makkal.tv
இணையம் : www.makkal.tv

மு. இளங்கோவன் என்பவர் மின்னஞ்சலில் அனுப்பிய செய்தி

Saturday, September 1, 2007

பத்திரிக்கையாளர் சாய்நாத்துக்கு மகசேசே விருது.

தமிழக ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான மகசாசே விருது இன்று வழங்கப்பட்டது.
ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசாசே விருதை பிலிப்பைன்ஸ் நாடு வழங்கி வருகிறது. இவ்விருதிற்குச் சிறப்பான கிராமிய பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிய தமிழக பத்திரிகையாளர் சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு "சற்றுமுன்" குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

நிருபர்களிடம் அசடு வழிந்தார் புஷ்.

மலேசிய பிரதமர் அப்துல்லா பாத்வி அண்மையில் மறுமணம் செய்து கொண்டதையும், அவருக்கு தான் வாழ்த்து கூறியதையும் அடியோடு மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் புஷ், இறந்துபோன பாத்வியின் மனைவியைப் பற்றி பேசியதால் நிருபர்கள் முன் அசடு வழிந்தார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை ஆசிய பசிபிக் நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் புஷ், "மலேசிய பிரதமர் பாத்வியின் மனைவி 2005-ல் மரணமடைந்த போது, நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தேன்' என்று சோகம் ததும்ப கூறினார்.

பாத்வி கடந்த ஜூனில் மறுமணம் செய்து கொண்டார் என்று புஷ்ஷிடம் நிருபர்கள் நினைவுப்படுத்திய போது, "அப்படியா, நான் உடனே அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமே' என்றார்.

அப்போது குறுக்கிட்ட புஷ்ஷின் நேர்முக செயலாளர், "நீங்கள் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள் அதிபர் புஷ்" என்று நினைவுப்படுத்தினார்.

அதைக்கேட்டதும் நிருபர்கள் மத்தியில் அசடு வழிந்து சிரித்த புஷ், "பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறேன்" என்றார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், பிபிசி நிருபரின் வழுக்கைத் தலையை கிண்டலடித்த புஷ்ஷுக்கு, சரியான பதிலடி கொடுத்திருக்கின்றனர் ஆசிய நிருபர்கள்.

தினமணி

Friday, August 31, 2007

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை

செளதி அரேபியாவில் வெளியாகிவரும் அரபி நாளிதழ் அல் ஹயாத். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் இந்நாளிதழ் செளதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் பதிப்புகளைக் கொண்டுள்ளது. செளதி அரேபியாவில் அதிக பட்ச விற்பனையை இந்நாளிதழ் கொண்டுள்ளது.

சமீபகாலமாக இந்நாளிதழ் செளதி அரேபிய அரசின் கொள்கைகள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதமாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இயாத் மதானி பலமுறை இதுகுறித்து எச்சரித்தும் இந்நாளிதழ் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் சமிப்பத்தில் வெளியான ஈராக் குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் செளதி அரேபியாவில் உள்ள குழுவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அல் ஹயாத் நாளிதழுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடை விதிக்கப்பட்ட காரணம் எதனால் என்பது முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.



http://archive.gulfnews.com/articles/07/08/30/10150147.html
Saudis ban distribution of Al Hayat indefinitely

Friday, August 24, 2007

இயேசு கிறிஸ்து குறித்து வெளியிட்ட படத்துக்காக மன்னிப்பு கோரியது 'மக்கள் ஓசை'

இயேசு கிறிஸ்து அவர்கள் புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்த மலேசிய தினசரி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரியான மக்கள் ஓசையில் இந்தப் படம் வெளியானது. புனித வேதாகமத்திலிருந்து சில போதனை வரிகளுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை இணையதளத்திலிருந்து இறக்கியதாக கூறும் அந்த தினசரி, அதில் இயேசு கிறிஸ்து புகைபிடிப்பது போல் அந்தப் படம் திருத்தப்பட்டிருந்ததை தமது பணியாளர்கள் கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளது.

இது தொடர்பில் கோலாலம்பூரிலுள்ள ரோமன் கத்தோலிக்க ஆயர் அவர்களிடம் இந்த தினசரி எழுத்து மூலமான ஒரு மன்னிப்பு கடிதத்தை அளித்துள்ளது. இவ்வாறான படத்தை வெளியிட்டது மதத்தை இழிவுபடுத்தும் ஒரு செயல் என்று ஆயர் அவர்கள் கூறியிருந்தார்.

தமிழ் பிபிசி

BBC NEWS | Asia-Pacific | Anger at Malaysia 'Jesus cartoon'
Malaysian Paper Sorry for Smoking Jesus - washingtonpost.com

Wednesday, August 22, 2007

பி.டி.ஐ தலைவராக 'தி ஹிண்டு' ரவி தேர்வு

செய்தி முகவர் நிறுவனமான பி.டி.ஐ. நிறுவனத்தின் தலைவராக, "தி ஹிண்டு' நாளிதழ் ஆசிரியர் என்.ரவி, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை துணைத் தலைவராக இருந்துவந்தார்

"வாஷிங்டன்' இதழின் செய்தியாளராக பணியாற்றிய ரவி, 1991ம் ஆண்டு முதல், "தி இந்து' நாளிதழ் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். .பி.டி.ஐ., நிறுவனத்தின் 59வது ஆண்டு வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்தில் பிலிப் மாத்யூ (மலையாள மனோரமா), வினீத் குமார் ஜெய்ன் (டைம்ஸ் ஆப் இண்டியா), சேகர் குப்தா (இண்டியன் எக்ஸ்பிரஸ்), வீரேந்திர குமார் (மாத்ரு பூமி), சாந்த குமார் (டெக்கான் ஹெரால்டு), விஜய் குமார் சோப்ரா (ஹிந் சமாச்சார்) ஆகியோர், பி.டி.ஐ.,யின் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.

புவியியல் வல்லுனர் சி.வி.சிட்னிஸ், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூச்சா, புகழ்பெற்ற நீதிபதி பாலி நரிமன் ஆகியோர், பொது நல இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Friday, August 17, 2007

தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழக அரசு நடத்த இருக்கும் கேபிள் டிவி நிறுவனத்தால் தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனியார் ஒருவரை போல அரசும் ஒரு கேபிள் டிவி நடத்த இருக்கிறது. இது கேபிள் டிவி இணைப்பை பெற்று கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே செய்யும். தமிழக அரசு கேபிள் டிவி கார்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்தும் நிறுவனம் அல்ல தனியார் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனம் அல்ல.

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். யாருடைய தூண்டுதலாலோ பீதி அடைய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் 'புதிய நிலா' 10ம் ஆண்டு விழா

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.

மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் நாணய மாற்று வணிகர் சங்க பொதுச் செயலாளர் எம்.ஒய். முகம்மது ரபீக், மா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்வேள் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் எம். இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

புதிய நிலா பத்தாம் ஆண்டு நிறைவு தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் அ. முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் சையத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

புதிய நிலா இதழின் சிறப்பாசிரியர் மு.ஜகாங்கீர் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்துகிறார்.

இந்த விழா தொடர்பாக முதல்வர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், இதழ் பணி என்பது மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. உண்மைச் செய்திகளை சமுதாய நன்மைக்காக நெஞ்சுரத்துடனும், நடுவு நிலையுடனும் வெளியிடுவது நாட்டில் நேர்மையும் நியாயமும் நிலைக்கச் செய்யும் திருப்பணியாகும். அற வழியில் மக்களை ஆற்றுப்படுத்திடும் அறப்பணியாகும்.

இப்பணியில் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது இதழ் நடத்துவோருக்கு பெருமை சேர்ப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலா இதழின் முகவரி : புதிய நிலா
390 விக்டோரியா தெரு
#01 - 11 கோல்டன் லேண்ட்மார்க் எஸ் சி
சிங்கப்பூர் 188061
தொடர்புக்கு : 9007 2961

Tuesday, August 14, 2007

மும்பை அவுட்லுக் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது

பால் தாக்ரேயை வில்லன்களின் பட்டியலில் சேர்த்து கட்டுரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெர்வித்து சிவ சேனாவினர் மும்பை நரிமன் பாயிண்ட்டில் இருக்கும் அவுட்லுக் அலுவலகத்தை தாக்கினர்.

அவுட்லுக் வெளியிட்டிருக்கும் வில்லங்கள் பட்டியலில் காந்தியைக் கொன்ற கோட்சே, நரேந்த்ர மோடி, முன்னாள் கிரிக்கட் வீரர் முகமது அசாருதீன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். பால் தாக்ரே ஹிட்லர் போல சித்தரிக்கப்பட்டிருந்தார்.

Shiv Sena activists ransack Outlook office in Mumbai The Hindu

முன்னாள் தினமணி ஆசிரியர் சம்பந்தம் மறைவு

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் செய்தித்துறை தலைவராகவும் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய ஆர் எம் டி சம்பந்தம் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மூன்று வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.

தனது இதழியல் பணியை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு நாளிதழில் துவங்கினார். பின் இந்தியன் எக்ச்பிரஸ் நாளிதழிற்கு மாறினார். அக்குழுமத்தின் நாளிதழான தினமணியின் ஆசீரியராகவும் பணியாற்றினார். தன் பணிக்காலத்தில் அரசியல் தலைவர்களான கு.காமராஜ், பெரியார் ஈ வெரா, அண்ணாதுரை, தற்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

அவரது விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக குடும்பத்தினர் கூறினர்.

The Hindu News Update Service

Thursday, August 9, 2007

டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆடெக்ஸ் இந்தியா சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஜனவரி-மே 2007 காலகட்டத்தில் மட்டும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே காலக்கட்டத்தில்தான் சுமார் 255 புதிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் முதன் முதலாக தொலைகாட்சி விளம்பரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விளம்பரத் துறையில் சில்லரை விற்பனை நிறுவனங்களின் பங்களிப்பு 1 சதவீதம் மட்டுமே என்று கூறுகிறது ஆடெக்ஸ் ஆய்வு.

குறிப்பாக 60 பெரிய வர்த்தக நிறுவனங்கள் தென் இந்திய தொலைக்காட்சி சேனல்களிலேயே விளம்பரம் கொடுத்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டு ஜனவரி-மே காலகட்டத்திற்கிடையே நாளொன்றுக்கு ஒளிபரப்பாகும் மொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 45,000. இதில் ஒரு நாளைக்கு 700 விளம்பரங்கள் வீதம் வந்துள்ளதாக அந்த ஆய்வுக்குறிப்பு கூறியுள்ளது.

விளம்பர வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் பொழுதுபோக்கு சேனல்களுக்கே கிடைக்கிறது. சில அரிய வேளைகளில் சில்லறை விற்பனையாளர்கள் இசை சேனல்களிலும் விளம்பரங்கள் அளிப்பதாக ஆடெக்ஸ் ஆய்வு கூறுகிறது.

தமிழ் எம்.எஸ்.என்.

Retailers increase ad spend on TV :: Economic Times
Indiantelevision.com > AdEx India Analysis > Snapshot on TV Advertising in first half of 2007 - Part 1
Social Advertisements on TV in H1 2007

Wednesday, August 8, 2007

'நொறுக்குத் தீனி' விளம்பரங்களுக்குத் தடை: அன்புமணி யோசனை

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் திண் பண்டங்கள் (நொறுக்குத் தீனி) மற்றும் சில குளிர்பானங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்வதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி யோசனை தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ்முன்ஷியுடன் விரைவில் பேச உள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

திண்பண்டங்கள் தவிர வாசனை திரவியங்கள் குறிப்பாக முகப்பூச்சுக்கான கிரீம்கள் தொடர்பான விளம்பரங்கள் தொடர்பாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

தினமணி

Chennai Online News Service - Anbumani seeks policy on junk food ads

Thursday, August 2, 2007

மணிப்பூரில் பத்திரிகைகளை பிரசுரிக்க மறுப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அந்த மாநில பத்திரிகையாளர்கள் தமது பத்திரிகைகளை பிரசுரிக்க மறுத்துள்ளனர்.

உள்ளூர் ஆங்கிலப் பத்திரிகையயான சங்காய் எக்ஸ்பிரஸ் (Sangai Express) நாளேட்டின் ஆசிரியருக்கு தபாலில் கைக்குண்டு ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கங்லேய்பெக் மக்கள் புரட்சிகர இராணுவம் (Peoples Revolutionary Army of Kangleipak (Prepak)) என்னும் பிரிவினைவாதக் கிளர்ச்சிக்குழுவின் ஒரு பிரிவினரே இந்தக் கைக்குண்டை தனக்கு அனுப்பியதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். அந்தக் குண்டு வெடிக்கவில்லை. போட்டிக்குழு ஒன்றின் அறிக்கை ஒன்றைப் பிரசுரித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அந்தக் குழு தன்னை மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC Tamil

BBC NEWS | South Asia | Papers shut in Indian north-east
NDTV.com: Imphal: Militant attack on media house
The Telegraph - Calcutta: Grenade gift sparks media shutdown

Tuesday, July 31, 2007

ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது

சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் ஷில்பாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்நிலையில், சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது வழங்கப்படவுள்ளது என்று ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தர நிர்ணய ஆணையத்தால் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி தர விருது ஏற்படுத்தப்பட்டது. தரத்தில் சிறந்து விளங்கும் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்திலும் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, அதி கோத்ரெஜ், ஆனந்த் மஹிந்திரா, சுனில் மித்தல், கிரண் மஜும்தார் ஷாவ், சாந்த் சிங் சத்வால், ஷாருக்கான், தருண் தேஜ்பல், சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

தினமணி

Dr Shilpa Shetty to receive Rajiv Gandhi Award - bollywood news: "To be a worldwide achiever at such a young age; bestowed with flattering accolades, is a matter of utmost prestige for Shilpa. She is extremely grateful to be chosen for this honour." The award has been designed in line with similar awards in other developed countries, like 'Malcolm Baldrige National Quality Award' in USA, 'Deming Prize' in Japan and the 'European Quality Award'.

Friday, July 27, 2007

'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டி.வி. சேனல் அளித்த விளக்கங்கள் திருப்தியளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பிசிங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு எதிராக கீழ்நீலை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்றதை ரகசிய கேமராவில் படம்பிடித்து 'ஜீ' டி.வி. 2004-ம் ஆண்டு ஒளிபரப்பியது.

இந்தியா முழுவதும் இச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. நீதித்துறையின் கீழ்மட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைகளைச் வெளிக் கொணரவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜீ டிவி தரப்பில் கூறப்பட்டது.

'இந்த ரகசிய கேமரா நடவடிக்கையால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாகக் கேள்விக்குள்ளானது. இது போன்ற செயல்கள் நடந்திருக்குமோ என நாட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல' என தலைமை நீதிபதி கூறினார்.

நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நீதிபதிகளின் கருத்துக்கு டி.வி. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடவேண்டும் என்ற எண்ணம் டி.வி.க்கு இல்லை; மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டி.வி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

'இந்த நடவடிக்கையால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

'இந்த நடவடிக்கை மூலம், அதைச் செய்த செய்தியாளர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவரது செயலால் வாரன்ட் வழங்கிய நீதிபதி இரண்டு ஆண்டுகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் நீதிபதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த ஆவணமும் இல்லாமல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாரன்ட் பெற்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி

NDTV.com: SC orders journalist to apologise
The Hindu News :: Cash-for-warrant: SC for unconditional apology from channel

Friday, June 29, 2007

சீன நிலக்கரி சுரங்க அதிபர் கைது

சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கம் வைத்திருந்ததை ஆராய்ந்ததற்காக லான் (Lan Chengzhang) அடித்துக் கொல்லப்பட்டார். நிருபரை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை தீர்ப்பாகியுள்ளது.

செய்தியாளர் சுரங்க திபரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இந்த முறைகேடுகளை ஆராய்ந்தார் என்னும் குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் எழுந்தது.

அரசின் கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் சீனாவின் சுரங்கங்களில் ஆண்டுதோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் இறக்கிறார்கள்.

BBC NEWS | Asia-Pacific | China mine boss jailed over death

இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: இலங்கை அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது:

ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும்.

தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உத்தியோகப்பூர்வமான தளமாக நாம் அதனைக் கருதவில்லை.

விடுதலைப் புலிகள் இரு உத்தியோகபூர்வமான தளங்களை இயக்கி வருகின்றனர்.

தமிழ்நெட் இணையத்தளம் குறித்து அரசாங்கம் கவலை கொண்டிருக்குமேயானால் ஏன் அந்த இரண்டு இணையத்தளங்களை ஏதும் செய்யாதிருக்கிறோம்? தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தி தொடர்பில் கவலை கொண்டிருந்தோமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக இணையத்தளத்தில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன- அது குறித்து நாம் கவலை கொள்ளாதிருப்போமா? என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

Puthinam Tamil Daily News Page

Sunday, June 24, 2007

அப்துல்கலாம் பத்திரிக்கைகளுக்கு அறிவுரை.

"பத்திரிக்கைகள் கேலிச்சித்திரத்தை முதற்பக்கத்தில் வழங்கிவந்த முந்தைய வழக்கத்துக்கு மாற வேண்டும்" என்று அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பிடிஐ நிறுவன செய்தியாளர்களுடன் நிகழ்ந்த சந்திப்பொன்றில் பதவியிறங்க உள்ள குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு பொதுவாக இவ்வேண்டுகோளை விடுத்தார்.

"ஆணோ, பெண்ணோ ஒரு வாசகன் காலையில் பத்திரிக்கையை திறந்தவுடன் சிரிப்பதாக அமைய வேண்டும்" என்ற கலாம் "கொலை, கொள்ளை செய்திகளை பின் பக்கங்களுக்குத் தள்ள வேண்டும்" என்றும் சொன்னார். அத்துடன் தனது இளமைக்காலத்தை அவர் நினைவுகூரவும் செய்தார். "அப்போதெல்லாம் முதற்பக்கத்தில் வரும் 'கார்ட்டூனை' மிகவும் ரசிப்பேன்".

"தில்லி மட்டுமே செய்திக்கான கிடங்கு இல்லை" என்ற குடியரசுத்தலைவர் "உதாரணத்துக்கு, பஞ்சாபின் காளிபென் ஆறு மக்கள் முயற்சியால் சுத்தமாக்கப்பட்டது பற்றி எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை" என்றார்.

மேலும் படிக்க...பிடிஐ செய்தி

Monday, June 18, 2007

ரத்தம் தேவையா? உதவுது வெப்சைட்.

முக்கியமான ஆபரேசன், விபத்து போன்ற நேரங்களில் ரத்தம் தேவைப்படும்போது, அது கிடைக்காமல் பலரும் தடுமாறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு உதவுகிறது ஒரு
இணையதளம்.www.indianblooddonors.comஎன்ற அந்த இணையதளத்தில், நமக்கு என்ன குரூப் ரத்தம் தேவை என பதிவு செய்தால் போதும். உடனடியாக ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் நோயாளியின் இருப்பிடம் தேடி வருவார்கள். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.எந்த பகுதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு அரிய குரூப் ரத்தம் தேவைப்பட்டாலும் சரி... தகவல் கிடைத்த 30 நிமிடத்தில் ரத்த தானம் செய்வோர் வருவார்கள் என்கிறார் இந்த இணையதளத்தை நடத்தும் குஷ்ரூ போச்சா. நாக்பூரை சேர்ந்த இவர் 2000ம் ஆண்டில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.இந்த இணையதளத்தில் ரத்த தானம் செய்ய விரும்பும் 45 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் பெயர், ரத்த குரூப், தொலைபேசி எண் போன்ற விவரங்களை தந்து பதிவு செய்து கொள்ளலாம்.யாராவது ரத்தம் தேவை என இந்த இணைய தளத்தை தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரத்த தான விரும்பிகளுக்கு தகவல் தரப்படும். அவர்கள் உடனே நோயாளியின் இருப்பிடத்துக்கு சென்று ரத்தம் தருவார்கள். யார் வரப் போகிறார்கள் என்ற விவரம், நோயாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

Saturday, June 16, 2007

ச: பெண்ணைத் தள்ளிய அமைச்சர் மன்னிப்பு கேட்டார்

பிஹாரின் விவசாய அமைச்சர் நரேந்திர சிங்கிடம் தன் மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவைத் தாயாரை தள்ளி விட்டதற்கு இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் நிதீஷ்குமார் ஒரு வாரத்திற்குள் அந்த பெண்மணியின் இறந்த கணவருக்கு உரிய தொகைகளை அவருக்குக் கொடுக்கவும் மகனுக்கு வேலைக்கு ஆணை இடவும் முதன்மை செயலருக்கு உத்திரவிட்டார்.

முன்னதாக அமைச்சர் சிங் பாகல்பூரிலுள்ள விவசாயக் கல்லூரியை காண வருகை தந்தபோது தேவி அவரை அரசு ஊழியராக பணியாற்றிய தன் கணவரின் இறப்புக்குப் பின்னர் தன் மகனுக்கு வேலை தேடி விண்ணப்பத்துடன் அணுகியபோது கூட்டத்தில் அவரை அமைச்சர் தள்ளியது டிவி படப்பிடிப்புகளில் பதிந்தது. அவர் தான் தள்ளவில்லை என்று முதலி மறுத்தபோதிலும் டிவி நிகழ்படங்களை கொண்டு எதிர்கட்சி RJD போராட்டம் நடத்தியது. தன் அரசிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை தவிர்க்கும் முகமாக முதலமைச்சர் நிதீஷ்குமார் உடனே காரியமாற்ற வேண்டியிருந்தது.

மேல் விவரங்கள், நிகழ்படங்களுக்கு: Minister 'pushes' woman| Impact : Bihar, Bhagalapur, Agriculture Minister Narendra Singh, Assault : IBNLive.com : CNN-IBN

-o❢o-

b r e a k i n g   n e w s...