.

Wednesday, August 22, 2007

பி.டி.ஐ தலைவராக 'தி ஹிண்டு' ரவி தேர்வு

செய்தி முகவர் நிறுவனமான பி.டி.ஐ. நிறுவனத்தின் தலைவராக, "தி ஹிண்டு' நாளிதழ் ஆசிரியர் என்.ரவி, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை துணைத் தலைவராக இருந்துவந்தார்

"வாஷிங்டன்' இதழின் செய்தியாளராக பணியாற்றிய ரவி, 1991ம் ஆண்டு முதல், "தி இந்து' நாளிதழ் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். .பி.டி.ஐ., நிறுவனத்தின் 59வது ஆண்டு வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்தில் பிலிப் மாத்யூ (மலையாள மனோரமா), வினீத் குமார் ஜெய்ன் (டைம்ஸ் ஆப் இண்டியா), சேகர் குப்தா (இண்டியன் எக்ஸ்பிரஸ்), வீரேந்திர குமார் (மாத்ரு பூமி), சாந்த குமார் (டெக்கான் ஹெரால்டு), விஜய் குமார் சோப்ரா (ஹிந் சமாச்சார்) ஆகியோர், பி.டி.ஐ.,யின் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.

புவியியல் வல்லுனர் சி.வி.சிட்னிஸ், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூச்சா, புகழ்பெற்ற நீதிபதி பாலி நரிமன் ஆகியோர், பொது நல இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...