.

Wednesday, August 22, 2007

திருச்சி - இலங்கைத் தமிழருக்கு வந்த சோதனை - 3 ஏட்டு கைது

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது பெரியம்மாவின் மகன் ரமேஷ் (32). இலங்கைத் தமிழரான இவர், லண்டனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற இவர்கள், லண்டன் நகரில் உள்ள லெஸ்தர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

கடந்த 3-ம் தேதி லண்டனில் இருந்து திருச்சி வந்த ரமேஷ், தனது உறவினரான ஜெயராஜ் வீட்டில் தங்கியிருந்தார். 19-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் வீட்டுக்கு வந்த 6 பேர் தங்களை சிபிசிஐடி குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வீட்டில் இருந்த ரமேஷ் யார் என்று கேட்டனர்.

பின்னர், ரமேஷைப் பார்த்து, ‘உனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு சில ஆதாரங்களும் உள்ளது. உன் மீது வழக்கு போடாமல் இருக்க எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று கூறி மிரட்டினர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...