.

Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Tuesday, September 4, 2007

நாளை முதல் satrumun.com

சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி satrumun.com எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. satrumun.com பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை http://feeds.feedburner.com/satrumun

சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.

புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க இங்கு செல்லுங்கள்.

புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.

சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.

satrumun.comல் சந்திப்போம்.

Friday, August 31, 2007

குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

அரசு அலுவலகங்களிலும் தூதரகக் கட்டிடங்களிலும் இடம் பெற குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களின் அதிகாரபூர்வ நிழற்படம் இரு வார காலமாக தீர்மானமாகாமல் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை புடைவையில் நீல பார்டரோடு தங்க கோடிட்ட படத்தை குடியரசுத்தலைவரின் நிழற்பட பிரிவு குடியரசுத்தலைவரின் செயலகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிட்டது. இந்தப் படத்தில் புடைவையின் பல்லு பகுதி அவரது தலையை மறைக்குமாறு உள்ளது. முன்னர் வெளியான படத்தை குடியரசுத்தலைவரின் செயலகம் ஆட்சேபித்ததால் திரும்பப் பெறப்பட்டது.

The Hindu News Update Service

Monday, August 6, 2007

சி ஏ வினாத்தாள் வெளியானதால் தேர்வு தள்ளி வைப்பு

சி ஏ நுழைவு தேர்வின் Common Proficiency test (CPT) வினாத்தாள் தேர்விற்கு முன்னாலேயே 'அவுட்' ஆனதால் இந்திய சார்ட்டட் கனக்காய்வாளர்களின் கழகம் ( ICAI) ்இந்த தேர்வினை தள்ளுபடி செய்தது. காலையிலேயே புனேயிலிருந்து வினாத்தாள் வெளியானதாக செய்திகள் வந்தபோதிலும் மதிய தேர்வும் தடைபடாமல் நடந்தது. ஆனால் மாலையில் கூடிய தேர்வுக் கமிட்டியும் நிர்வாக கமிட்டியும் ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்தன.

மறுதேர்வு ஆகஸ்ட் 26 நடைபெறவுள்ளது. 203 இடங்களில் இருந்து எழுதிய 82,000 மாணவர்கள் இந்த முடிவினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி ஒரு உயர்மட்ட குழு விசாரனை நடத்தி மீண்டும் நிகழாவண்ணம் விதிமுறைகளை பரிந்துரைக்கும்.

Paper leaks, ICAI test off

Tuesday, July 24, 2007

சென்னை திரும்பும் அப்துல் கலாமுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!!
குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று மாலை அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் நாளை மாலை விமானம் மூலம் சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து அப்துல்கலாமை வரவேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்துக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தங்கியிருந்து அவர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பார் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Wednesday, July 18, 2007

சென்னை வருகிறார் கலாம்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள் சென்னைக்கு வருகிறார் அப்துல் கலாம். அவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்கள் திரண்டு வந்து தடபுடலான உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஜனாதிபதி என்ற பெயருடனும், பெருமையுடனும், குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து வருகிற 24ம் தேதி ஓய்வு பெறுகிறார் அப்துல் கலாம். ஓய்வுக்குப் பின்னர் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக பணியாற்ற இருக்கிறார்

இதுதொடர்பான தனது விருப்பத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனிடம் நேற்று இரவு தொலைபேசி மூலம் தெரிவித்த அவர்
நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவியருக்கு கலாம் பாடம் எடுக்க விருப்பம் தெரிவித்ததாக விஸ்வநாதன் கூறினார்அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் கலாம் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேறு விசேஷ ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை, தற்போதுள்ள விருந்தினர் மாளிகையே போதும் என கலாம் கூறி விட்டாராம்.
கலாம் 25ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும்போது அவரை பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 20 ஆயிரம் பேரும் திரண்டிருந்து வரவேற்பார்கள் என்று துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Sunday, July 15, 2007

ஸ்பெயின்: குழந்தை பெற்றால் பரிசு.

ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் மனித பிறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி அந்நாட்டு அரசு கவலை கொண்டுள்ளது. பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பெயினில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயில் ரோட்ரிக் ஜபாட்டிரோ இதற்கான அறிவிப்பை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,"நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை மிகவும் முக்கியம். இதனால் பிறப்பு சதவீதத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த பரிசு திட்டம்அறிவிக்கப் பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர்

Monday, July 2, 2007

இந்தியா-குவைத்: விமானப் போக்குவரத்து மீட்பு.

குவைத் நாட்டுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் காலாவதி ஆனதால் ஜுலை 1-ந் தேதி முதல் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று குவைத் அரசு எச்சரித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக இந்திய அதிகாரிகள் குவைத்தில் முகாமிட்டு அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே உடன்பாடு கையெழுத்து ஆனது.

அதன்படி குவைத்தைச் சேர்ந்த குவைத் ஏர்வேஸ், அல்-ஜசீரா விமானங்கள் தினமும் ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா நகரங்களுக்கு வந்து செல்லும். அதே போல இந்தியாவின் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் தினமும் இயக்கப்படுகிறன.

இந்த உடன்பாட்டில் விமான இருக்கை வசதியை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன் மூலம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்படுமோ என்ற பயத்தில் இருந்த பல ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

Friday, June 15, 2007

இணையதளம் மூலம் ஹஜ் யாத்திரை விண்ணப்பம்

ஹஜ் யாத்திரை பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

2007-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன் ஹஜ் விண்ணப்பப் படிவங்கள் ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பணக் கொடுப்பாணை, கேட்புக் காசோலை ஆகியவற்றை அளித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தொகை விண்ணப்பங்களை அன்னியச் செலாவணித் தொகையுடன் சமர்ப்பிக்கும்போது சரி செய்யப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் அன்னியச் செலாவணி முன் பணம் ரூ. 10,700-உடன் இம்மாதம் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணையதள முகவரி: www.hajjtn.org

தினமணி

Tuesday, June 12, 2007

இந்தியா: விரைவில் பெட்ரோல் விலை உயர்வு.

கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலிபுறுத்தி வந்தன. ஆனால் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள், அண்மையில் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்பதாக எண்ணை நிறுவனங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச மத்திய அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகே பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 10, 2007

82 வயதாகும் கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் அரசியலுக்கு ஓய்வு

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளராக இருப்பவர் ஏ.பி. பரதன் 82 வயதாகும் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் பதவி விலகலை அறிவிக்கிறார். அவருக்கு பதில் மூத்ததலைவர்களான

  • எஸ்.சுதாகர்ரெட்டி,
  • சி.கே.சந்திரப்பன்,
  • குருதாஸ் குப்தா,
  • நந்த கோபால் பட்டாச்சார்யா
ஆகியோரில் ஒருவர் பொது செயலாளராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

1996-ல் பொது செயலா ளராக இருந்த இந்திரஜித்குப்தா ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றதால் அவருக்கு பதில் ஏ.பி.பரதன் பொதுசெயலாளர் ஆனார். தற்போது 82 வயதானதால் முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

Wednesday, June 6, 2007

சற்றுமுன் 1000 போட்டி மாற்றங்கள் - அறிவிப்பு

அதிகம்பேர்் பங்கேற்கும் வகையில் சற்றுமுன் 1000 போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

செய்தி விமர்சனக் 'கட்டுரை' என்பதற்குப் பதில் கவிதை, கதை, குறும்படம், குரல்பதிவு(Pod casting) என எல்லா வடிவங்களிலும் செய்தியின் அடிப்படையில் பின்னப்பட்ட படைப்புக்களை வரவேற்கிறோம்்கிறோம். படைப்புக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வகைபபாடுகளின்்டுகளின் கீழ் வரவேண்டும்.

போட்டிக்கான வகைகள்:-

அரசியல்
சமூகம்
அறிவியல் /நுட்பம்
விளையாட்டு
பொருளாதாரம்/வணிகம்

பரிசுத் தொகை மாற்றங்கள்.

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 2500/- மதிப்புள்ள புத்தகங்கள் (முன்பு 1500)

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1750/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 1000)

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 500)

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 10 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். (முன்பு 15 பரிசுகளாக இருந்தது)

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 750/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு) - (முன்பு 500)

போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.
போட்டிக்கு படைப்புக்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 30.

மேற்கூறிய மாற்றங்கள் அல்லாத மற்ற விதிகள் முன்பு அறிவித்தவாறே இருக்கும்.

Monday, June 4, 2007

ச:உ பியில் 4000 சிறைக்கைதிகள் விடுதலை

உத்தரபிரதேச சிறைகளில் பல குற்றங்களுக்காக 18,334 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 4000 பேரை விடுவிப்பதாக முதல்வர் மாயாவதி தன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார். பயங்கர வெளிநாட்டு மற்றும் வெளிமாநில குற்றவாளிகள் விடுவிக்கப் படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 கீழும் குற்றவியல் சட்டம் 432 கீழும் உபி சிறை செயற்புத்தகம் பிரிவு 195,196 மற்றும் 197 கீழும் இவர்களை விடுவிக்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.


About 4000 prisoners to be released from UP jails : Mayawati @ NewKerala.Com News Channel

Thursday, May 31, 2007

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்.

பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும்.
இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 71 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 17 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இருசக்கர வாகனங்களில் ஹெல் மெட் அணியாமல் செல்லும்போது விபத்தில் சிக்கினால் தலையில் காயம் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு முதலில் 100 ரூபாயும் 2வது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் ஒரு இடத்தில் போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தினாலும் சிறிது தூரத்தில் மீண்டும் போலீசாரிடம் மாட்டும்போதும் அபராதம் விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற கம்பெனிகள் தயாரிக்கும் ஹெல்மெட் மட்டுமே அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையட்டி, சென்னை உட்பட மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் குறித்து டி.ஜி.பி.முகர்ஜி நேற்று கூறியதாவது:
சென்னை உட்பட 6 மாநகராட்சி பகுதிகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஜூன் 1 முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் இருப்பவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் சென்று முதல்முறை பிடிபடும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அரசின் உத்தரவுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் முழு ஆதரவு தரவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க வேண்டும்.
அரசு உத்தரவை முறைப்படி அமல்படுத்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முகர்ஜி கூறினார்.

Thursday, May 24, 2007

செளதி: பணம், நகை - கஸ்டம்ஸுக்கு சொல்லுங்க!

செளதி அரேபிய நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, ஜூன் 2 , 2007 முதல் அந்நாட்டினுள் வருகிற; வெளியேறுகிற பயணிகள் தம்மிடமுள்ள பணம்,நகைகள், விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றின் மதிப்பு செளதி ரியால் 60,000/ஐ த் தாண்டும் நிலையில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரப்நியூஸ் செய்தி தெரிவிக்கிறது

Monday, May 21, 2007

திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்: அக்டோபர் முதல் ஒளிபரப்பு

திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்.

மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.

Thursday, May 17, 2007

குடியரசுத் தலைவர் மனைவிக்கு கட்டுப்பாடு அதிகம்: நாராயணமூர்த்தி மனைவி பேட்டி

புணே, மே 17: குடியரசுத் தேர்தலில் 'இன்போசிஸ்' தலைவர் நாராயண மூர்த்தி போட்டியிடப் போவதாக நிலவி வரும் கருத்துக்கள் வெறும் வதந்திகளே என அவரது மனைவி சுதா மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.

"மக்களைச் சந்திப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவையும், புத்தகங்கள் எழுதுவதும் எனக்கு விருப்பமான செயல்கள். ஆனால், குடியரசுத் தலைவரின் மனைவிக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அவ்வாறு வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது கணவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறுவது வெறும் வதந்தி' என அவர் கூறினார்.

Dinamani

Wednesday, May 16, 2007

ச: கிராமங்களில் தொலைதொடர்பு மேம்பாடே தன் முதல் முன்னுரிமை: இராஜா

தனது புதிய துறையின் பொறுப்பை இன்று புதனன்று எடுத்துக் கொண்ட இராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கிராமப்புற வளர்ச்சியே தனது தனிக்கவனத்தைப் பெறும் என்றார். தனக்கு முந்தைய அமைச்சர்கள் காலத்தில் தொலைதொடர்பு பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அவை சென்றடையவில்லை என்று கூறினார். அந்நிய முதலீடு பெருக்குவதும் தன் முன்னுரிமைகளில் ஒன்று என கூறினார்.

Raja to focus rural telephony, foreign investment - India

Tuesday, May 8, 2007

ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?

ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.

அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்களானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.


1000 பதிவுகளில் சிங்கப்பூரில் உணரப்பட்ட நில நடுக்கத்தை கோவி. கண்ணன் சிவபாலனுக்கு தெரிவிக்க மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வ்வரும் முன்னரே சற்றுமுன்னில் வந்த பதிவு ஒரு முக்கிய பதிவாக அமைந்தது எனச் சொல்லலாம். இதுதான் சற்றுமுன்னின் முக்கிய நொக்கம். உலகெங்குமுள்ள பதிவர்கள்மூலம் செய்திகளை சேகரித்து வெளியிடுவது. ஒரு மாபெரும் சேவையை நம்மால் இதன்மூலம் உருவாக்க இயலும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது நடந்த பின்னூட்ட உரையாடல்கள் இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு.

வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.

இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).

பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.

வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முயலுங்கள்.

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா? இதில் பங்களித்து சிறப்பியுங்கள்.

பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.

பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சற்றுமுன் போன்ற குழுத் தளங்களும் குழுக்களும் இதை துரிதப்படுத்துகின்றன என்றே சொல்வேன்.

உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.

சற்றுமுன் குறித்த விமர்சனங்களை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது பின்னூட்டங்களில் தாருங்கள்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

Saturday, May 5, 2007

'சற்றுமுன் 1000' மாபெரும் போட்டி

'சற்றுமுன்...' தளம் துவங்கி நூறு நாட்களுக்குள்ளாகவே ஆயிரம் பதிவுகளை எட்டப் போகிறது. வலைப்பதிவுகளில் இது பெரும் சாதனையாகவே இருக்கும்.


ஆயிரமாவது பதிவை நினைவுகூறும் விதமாகவும் இணையப் பயனர்களிடையே செய்தி விமர்சனம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் மாபெரும் போட்டி ஒன்றை ஒருங்கிணைக்கவுள்ளோம்.

மொத்த பரிசுத் தொகை ரூ. 20,000த்துக்கு மேல். 50க்கும் மேற்பட்ட பரிசுகள்.

இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி. செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட அரசியல், சமூகம், அறிவியல், வணிகம், விளையாட்டு எனும் வகைப்பாடுகளின் கீழ் கட்டுரைகள் வரையலாம்.

போட்டி குறித்த முழு விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

போட்டி குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பரிசுகளை வழங்க சற்றுமுன்னுடன் இணைய விரும்புபவர்கள் சற்றுமுன் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

Friday, May 4, 2007

கக்கனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 4: முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் மற்றும் அவரது பேரனுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கனின் மகன் மற்றும் அவரது பேரன் ஆகியோர் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இப்பிரச்சினையை தகவல் கோரலாக எடுத்துக் கொள்வதாக ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறியது:

கக்கனின் மகன் நடராசமூர்த்தி உடல்நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக சென்னை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இன்னொரு மகன் கே. பாக்யநாதன் வறுமையில் வாடுகிறார். அவரது மகன் கண்ணன் வேலையின்றி உள்ளார் என்று ஞானசேகரன் குறிப்பிட்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கக்கனுக்கு பத்மநாபன், பாக்யநாதன், சத்தியநாதன், காசி விஸ்வநாதன், நடராச மூர்த்தி என 5 மகன்களும், கஸ்தூரி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் பத்மநாபன், காசி விஸ்வநாதன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. மற்றும் சத்தியநாதன் மருத்துவராக பணிபுரிகிறார். மகள் கஸ்தூரி சென்னையில் வசிக்கிறார், அவரது கணவர் அந்தமானில் பொறியாளராக உள்ளார்.

நடராசமூர்த்தி திருமணம் ஆகாதவர். அவர் மனநலம் குன்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அரசு பராமரிப்பில் உள்ளார். அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு மகனான 62 வயதுடைய பாக்யநாதன் எவ்வித ஆதரவுமின்றி சிரமப்படுகிறார். அவரது மகன் கண்ணன் விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இருவரும் சிரம நிலையில் இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு அக்கறையோடு பரிசீலனை செய்ததில் கண்ணன் தாங்கள் வசிக்கும் கிராமத்திற்கு வெளியே நிலமோ, வீட்டு மனையோ பெற்றுக்கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு பாக்யநாதன் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் வங்கியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை அவர்களது மாத செலவுக்கு வழங்க வகை செய்யப்படுகிறது. மேலும் அவர்களது உடனடி தேவையை பூர்த்தி செய்து கொள்ள தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க நிதி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் கருணாநிதி.

-o❢o-

b r e a k i n g   n e w s...