32 வயதாகும் கீதாஞ்சலி நக்பால் ஒரு காலத்தில் முன்னணி விளம்பர நடிகை (Model) என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தோற்றத்தையொத்த கீதாஞ்சலி, குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்.
வாரப்படாத தலை, அழுக்கான ஆடைகளுடன் தெற்கு தில்லியின் சந்தை;அங்காடிப்பகுதிகளில் ஒரு பிச்சைக்காரியாகத் திரிந்த அவரை கண்ட ஒரு ஒளிப்படச்செய்தியாளர் தில்லி பெண்டிர் ஆணையத்திடம் ஒப்படைத்துச்சென்றார்.
மனநிலை குழம்பியிருந்த அவரை VIMHANS (வித்யாசாகர் மனநல ஆராய்ச்சி நிறுவனம்) வசம் சேர்ப்பித்து சிகிச்சையளித்து வருகின்றனராம். முன்னதாக, இது தொடர்பாக, மாநகர குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாம்.
பி/டி/ஐ செய்திகளிலிருந்து...
Former model found begging on the streets of Delhi
Monday, September 3, 2007
தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை.
Posted by
வாசகன்
at
10:09 PM
1 comments
Thursday, August 30, 2007
இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம்.
மணிப்பூர் மாநில மின்துறையில் மின்தடப்பணியாளர் (Lineman) ஒருவருக்கு அவர் இறந்த பின்னும் 16 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
L.நிங்தேம்ஜாவ் என்பது அந்தப் பணியாளரின் பெயர். 1985 ல் இறந்த அவருடைய பணி உரிமைகள் குறித்து வினவ அவரின் மகன் ரிஷிகாந்தாவுக்கு அப்போது போதிய வயதோ, மனைவிக்கு படிப்பறிவோ இருக்கவில்லை.
படிப்பறிவற்ற குடும்பத்தினரருக்கு நண்பர் ஒருவர் வழங்கிய அறிவுரையின் பேரில், ஓய்வூதியம் முதலிய பெறுமதிகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வினவிய போது, இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Man draws salary for 16 years after death.
Posted by
வாசகன்
at
9:23 PM
2
comments
Friday, August 24, 2007
ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;
ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;
17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு!
ஆகஸ்ட் 24, 2007
திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சியில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் நாகப்பட்டணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உள்ளூர் வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். வெளிநாட்டில் வேலை கோரி அவர்களை இவர்கள் அணுகியுள்ளனர்.
அந்த ஏஜென்சி, 27 பேரிடமும் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு முகம்மது ஷியாம் என்கிற இலங்கை நபர் மூலம் ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது. முகம்மது ஷியாம் ரஷிய பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
டூரிஸ்ட் விசா மூலம் 27 பேரும் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு போன பின்னர் அவர்களை இரு பிரிவாக பிரித்துள்ளனர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.
ரஷியா வரை கூடவே வந்த ஷியாம், அங்கு போன பின்னர் தலைமறைவாகி விட்டார். காரணம், இவர்களை ரஷிய காவல்துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தது தெரிய வந்ததால். தான் கூட்டி வந்த அனைவரையும் ரஷியாவில் பரிதவிக்க விட்டு விட்டு அவர் தப்பி விட்டார்.
இந்த நிலையில் இரு பிரிவாக பிரித்து அனுப்பப்பட்டவர்களில் 17 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மற்ற 10 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினர். அங்கு துணைத் தூதர் ஜோர்டானா பாவேலை சந்தித்து தங்களது நிலையைக் கூறியுள்ளனர்.
அவர் உடனடியாக 10 பேரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர் திருச்சி பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரனை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.
இதையடுத்து பாலச்சந்திரன், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கல் குறித்து பாலச்சந்திரன் கூறுகையில், விதிமுறைப்படி, இதுபோல பிடிபடுவோர், ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களில் இந்திய அரசே அந்த செலவுகளை ஏற்றுக் கொள்ளும்.
தற்போது ரஷியாவில் பரிதவிக்கும் நாகை இளைஞர்கள் விஷயத்தைப் பொருத்தவரை, டெல்லி திரும்புதவற்குத் தேவையான ரூ. 30,000 பணத்தை தயார் செய்யுமாறு இந்தியத் துணைத் தூதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளோம்.
இதையடுத்து நேற்று அவர்களின் பெற்றோர்கள் ரூ. 3 லட்சம் பணத்தை இங்கு வந்து செலுத்தியுள்ளனர். நாங்கள் இதை உடனடியாக ரஷியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குத் தெரிவித்து விட்டோம்.
இதையடுத்து 10 பேரும் ஊர் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தாஷ்கண்ட் வழியாக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது.
ஆனால் அவர்களை நாடு திரும்ப ரஷிய போலீஸார் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி அவர்கள் ரஷியாவில் தங்கியுள்ளதாக கூறி கைது செய்து விட்டனர். விடுதலையான பின்னர்தான் 10 பேரும் நாடு திரும்ப முடியும் என்றும் ரஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகம் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை ரஷிய காவல்துறை ஏற்கவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் பாலச்சந்திரன்.
இந்த விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள நாகை இளைஞர்ள் ஊர் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்ளும், குடும்பத்தினரும் கோரியுள்ளனர்.
இதற்கிடையே, ரஷியாவில் சிக்கித் தவிக்கும் இளைஞர் ஒருவரின் உறவினர்கள் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யரிடம் உதவி கோரி அணுகியுள்ளனர்.
ரஷியாவில் சிக்கியுள்ள அனைவரும் நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
www.thatstamil.com
Posted by
முதுவை ஹிதாயத்
at
1:08 PM
0
comments
இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இந்த்னோஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு பணிப்பெண்கள் இறந்தைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் இறந்த பணிப்பெண்களது உடலை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பி வைக்கக் கோரினர்.
எனினும் சவுதி அரேபியாவில் உள்ள இந்தோனேஷிய தூதரக அதிகாரிகள் இறந்தவர்களது உடல்களையும், காயமடைந்தவர்களையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
http://www.arabnews.com/?page=1§ion=0&article=100381&d=24&m=8&y=2007
Indonesians Protest Outside Saudi Embassy in Jakarta
Posted by
முதுவை ஹிதாயத்
at
12:10 PM
0
comments
Wednesday, August 22, 2007
சென்னை: கேள்வி கேட்ட பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன்!!
சென்னை: விமானத்தில் ஏர்-கண்டிசன் செயல்படாததை தட்டிக் கேட்ட 4 பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன் நிறுவனம் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்து அசிங்கப்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.
இன்று காலை சென்னையில் இருந்து மும்பைக்குச் செல்ல இருந்த ஏர் டெக்கன் விமானத்தில் ஏசி செயல்படவில்லை. இதனால் பயணிகள் புழுக்கத்தில் தவித்தனர். விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.
இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ராய் (56) விமானப் பணிப் பெண்களிடம் புகார் செய்தார். ஆனால், அவர்கள் எந்த பதிலும் தரவில்லை. இதையடுத்து அவரது மனைவி (வயது 49) மற்றும் மகள் (வயது 25) ஆகியோர் பணிப் பெண்களை கேள்வி கேட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக கார்த்திகேயன் (47) என்பவரும் பேசினார்.
ஏசி செயல்படாததற்கு பதில் சொல்ல மறுத்த விமான ஊழியர்கள், அவர்களை விமானத்தை விட்டு இறங்குமாறு கூறினர். அதை ஏற்க 4 பயணிகளும் மறுத்தனர்.
இதையடுத்து இவர்கள் இறங்காவிட்டால் விமானத்தை கிளப்ப மாட்டோம் என விமானிகளும் முரண்டு பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து ஏர் டெக்கன் நிறுவன ஊழியர்கள் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் தகவல் கூறினர். அவர்கள் விமானத்தில் ஏறி 4 பயணிகளையும் வெளியேற்றினர்.
பின்னர் அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 6.20க்குப் புறப்பட்டுச் சென்றது.
ஏர் டெக்கன் மீது தவறு இருந்தாலும் பயணிகளை அவர்கள் நடத்திய விதம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறக்கிவிடப்பட்ட பயணிகள் மீது ஏர் டெக்கன் புகார் ஏதும் தரவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் விடுவித்தனர். இன்று மாலை விமானத்தில் அவர்களை மும்பைக்கு அழைத்துச் செல்வதாக ஏர் டெக்கன் உறுதியளித்துள்ளது.
செய்தி வழி : தட்ஸ்தமிழ்.காம்
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
9:18 AM
0
comments
Sunday, August 19, 2007
பெரு: பூகம்ப பூமியில் கலவரம்.
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 510க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். 2000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இதனை தேசியப் பேரழிவாக அறிவித்துள்ளது.
பூகம்பத்தில் வீடுகள் மற்றும் உறவினர்களை இழந் தவர்களுக்கு நிவாரண பொருள்களும் போய்ச் சேரவில்லை.
இந்நிலையில் சமூக விரோதிகள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு சென்று வீடுகளில், கடை களிலும் புகுந்து சூறையாடிவருகிறார்கள். கொலை கொள்ளையிலும் ஈடுபடுகிறார்கள்.
மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினருக்கும், கலவரத்தில் ஈடுபடுகிறவர்களுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர்.
பூகம்பத்தில் பலியானவர்கள் உடல்களை குவியல் குவியலாக போட்டு மொத்தமாக அடக்கம் செய்து வருகிறார்கள். பல நாடுகளும் தங்கள் உதவிகளை அனுப்பி வருகின்றன
மாலைமலர்
Posted by
வாசகன்
at
6:39 PM
0
comments
Monday, August 13, 2007
பெங்களூரில் சிறுநீரக திருட்டு அம்பலம்
ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களை குறைந்த விலை கொடுத்து, போலி ஆவணங்கள் கொண்டு வாங்கி இலாபம் கண்ட கும்பலைச்சார்ந்த மூன்றுபேரை பெங்களூர் போலிஸ் இன்று கைது செய்துள்ளது. இன்னும் இரண்டு பெரும்புள்ளிகளைத் தேடிவருகிறது. இதுவரை இவர்கள் 30 சிறுநீரகங்களை வரை விற்றிருக்கலாம் என்றும், 50 முதல் 85 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தைப் பெற்றுவிட்டு 3 முதல் 4 இலட்சங்களுக்கு விற்பனை செய்வதாக அறியப்படுகிறது.
Kidney racket unearthed; 3 held in Bangalore The Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
5:37 PM
0
comments
Friday, August 3, 2007
'வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் பிரச்சனைக்குள்ளாகிறார்கள்'-ஆய்வு
சென்னை,டெல்லி, கொல்கொத்தா,மும்பை பெங்களூர் ஆகிய நகரங்களில் வேலைக்குச் செல்லும்1000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் எதிர்மறையான சூழல்களை சந்திப்பதாகத் தெரியவந்துள்ளது.
கணவனும், கணவன் வீட்டாரும் நவீன சிந்தனைக் கட்டுக்குள் வராமலிருப்பது இதற்கு ஒரு காரணமாய் அறியப்பட்டுள்ளது.
முக்கிய தெளிவுகள்
- 38% பெண்கள் திருமணத்துக்குப் பின் உடல்ரீதியான கொடுமைகளை ஒருமுறையேனும் அனுபவித்துள்ளனர்.
- 72% மனரீதியாக கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.
- ஸ்திரமான வேலை உள்ள பெண்கள் உடல்ரீதியான தொடர் கொடுமைகளுக்கு அதிகம் ஆளாவதில்லை
- தன் பேரில் சொத்து வைத்துள்ள பெண்களுக்கு கொடுமைகள் குறைவாக நடந்துள்ளன
- தன் பெயரில் சொத்து வைத்துக்கொள்ளாதவர்களில் 35%பேர் தொடர் உடல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகீறார்கள்.
- 80% கணவன் வீட்டார் வேலைக்குப்போகும் பெண்கள,் வேலையை விட வீட்டுக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என விரும்புகிறார்கள்.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
1:10 AM
1 comments
Thursday, August 2, 2007
பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண் கைது
மும்பை புறநகர் பகுதியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியப் பெண் கைது செய்யப்பட்டார். மனிஷா சரோஜா (25) என்பவர் பிறந்து ஒரு நாளே ஆன தனது குழந்தையை பொது குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அந்தக் குழந்தையின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகளை காரணங்களுக்காக குழந்தையை புறக்கணித்ததாகவும் தனக்கு அந்த குழந்தை வேண்டாம் என்றும் சரோஜா கூறியுள்ளார் என காவல்துறை துணை ஆணையர் சிவாஜி போத்கே கூறியுள்ளார்.
தினமணி
Mother of 'stabbed' baby traced - Mumbai - Cities - The Times of India
Mother of abandoned child arrested :: Indian Express
Posted by
Boston Bala
at
6:30 AM
1 comments
Monday, July 23, 2007
ஒரிசா: துண்டு துண்டாய் பச்சிளம் சிசுக்களின் உடல்கள்
ஒரிசா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலை அடி வாரத்தில் கடந்த 14-ந்தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் வீசப்பட்டு இருந்தன. அவை பெண் குழந்தைகள் என்றும், பிறந்த உடன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார் நயகர் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது நபகன் பூர் கிராமத்தில் உள்ள 36 தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த மருத்துவமனையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பிறகு ஆஸ்பத்திரி அருகே மலை போல குவிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரி கழிவு குப்பை பகுதியில் சோதனை நடத்தினார்கள். அந்த குப்பை கிடங்கில் ஏராளமான பாலிதீன் பைகள் இறுக கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன.
அந்த பாலிதீன் பைகளை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாலிதீன் பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல் பாகங்கள் இருந்தன. தலை, வயிறு, கை, கால்கள் என துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருந்தன. எல்லா உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன.
மொத்தம் 132 பாலிதீன் பைகளை போலீசார் கைப்பற்றினார்கள். இதில் சுமார் 30 பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதை உறுதிப்படுத்த 30 பாலிதீன் பைகளில் கண்டெ டுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை களின் உடல்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நபகான்பூர் தனியார் மருத்துவமனை மானேஜர் சியாமாசாகுவை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
7:24 PM
0
comments
Friday, July 20, 2007
முதியோர்களை கவனிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை
குப்பைத் தொட்டி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த 75 வயதான சின்னம்மாள் பழனியப்பன் என்னும் மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ் நாடு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய பேரன்களே தன்னை வீட்டில் இருந்து கொண்டுவந்து குப்பைத் தொட்டியில் போட்டதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.
பெற்றோரை இவ்வாறு தவிக்கவிடுவது மன்னிக்க முடியாதக் குற்றம் எனவும்,இவ்வாறு செய்பவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறுகிறார் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை தெரிவித்தார். கூட்டுக் குடும்ப முறை குறைந்துள்ளதும் வாழ்க்கை முறை மாறியுள்ள்மை போன்றவையே இவ்வாறு முதியவர்கள் கவனிக்கப்படாமல் விடப்படுவதற்கு காரணம் என்றும் அமைச்சர் பூங்கோதை கூறுகிறார்.
முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் அரசு சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
BBC Tamil
BBC NEWS | South Asia | India grandmother 'dumped on tip'
'Trashed' granny found at dump - CNN.com
Posted by
Boston Bala
at
12:51 AM
0
comments
Tuesday, July 17, 2007
'சதி' தடுப்பு சட்டம் தீவிரப்படுத்தப்படலாம்
கணவன் இறந்தபின் சதி செய்துகொள்ளும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை தீவிரப்படுத்த அமைச்சர்களின் குழு ஒன்று பரிந்தூரைகளை முன்வைத்துள்ளது. 1987ல் இயற்றப்பட்டது இந்த சட்டம்.
புதிய மாற்றங்களின்படி சதி செய்யத் தூண்டினால் முழு கிராமத்துக்கெதிராக சட்டபூர்வ நட்டவடிக்கை மேற்கொள்ள வகை செய்யப்படும். மேலும் கிராம அதிகாரிகள் சதி நடப்பதை காவல்துறைக்கு தெரிவிக்காமல் போனால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்ய முற்படும் பெண்களை குற்றம் செய்பவர்களாகப் பார்க்காமல் பாதிக்கப்பட்டவராகப் பார்க்க வகை செய்யப்படும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது சதி செய்வது நடந்துவருவதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
GoM approves anti -sati law amendments Hindustan Times - 1 hour ago
COUNTER VIEW: Centre mulls changes to make sati law more stringent Times of India
Widow burning: India to get tough Independent Online
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:10 PM
1 comments
Monday, July 16, 2007
குஜராத்: போலி என்கவுண்ட்டர் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை
குஜராத்தில், தனக்கு வேண்டாதவர்களாகப் பார்த்து சுட்டுத்தள்ளிய போலி என்கவுண்ட்டர் (தமிழ்ச்சொல் சொல்லுங்க..) வழக்கில் 13 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் மாநில புலனாய்வு அதிகாரிகள் இதனை இன்று பதிவு செய்துள்ளனர். விசாரணை என்ற நிலையில் இருந்த இவ்வழக்கு இதன் மூலம் சற்றே முன்நகர்ந்துள்ளது
Posted by
வாசகன்
at
1:26 PM
0
comments
Saturday, July 14, 2007
பள்ளி ஆசிரியை: நூதன தண்டனை வேதனை ஆனது.
மாணவிகள் மூவரின் சட்டையைக் கழற்ற சொன்ன ஆசிரியை ஒருவர், இந்த அநாகரிகச் செயலால் கழற்றி விடப்பட்டுள்ளார்.
இதுபற்றிய தினமலர் செய்தி பின்வருமாறு:
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத மாணவிகளை மேல்சட்டையை களையச் சொல்லி ஆசிரியை நூதன தண்டனை அளித்தார். விஷயம் தெரிந்து கொதிப்படைந்த பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்ச்சைக்குரிய ஆசிரியையை தனியார் பள்ளி நிர்வாகம் "டிஸ்மிஸ்' செய்தது.
சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பில் மாணவிகள் மோனிஷா, முக்தா, புவனேஸ்வரி படிக்கின்றனர். மூவரும் ரெக்கார்டு நோட்டுக்கு மேல் அட்டை போடாமல் பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். கோபமடைந்த பள்ளி ஆசிரியை ஜெயந்தி "ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத உங்களையும், மேல் சட்டை போடாமல் நிற்க வைத்தால் தான் புத்தி வரும்,' என்று கூறி மூன்று பேரையும் மேல் சட்டையை களையச் சொன்னார்.
அது இருபாலர் படிக்கும் பள்ளி. எனவே, தண்டனையை அவமானமாக கருதிய மாணவிகள் அழுதபடி மறுத்தனர். ஆசிரியை தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால், மாணவிகள் அழுதபடியே வீட்டிற்கு சென்றனர். பெற்றோரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். மாணவிகளை அநாகரிகமாக தண்டிக்க முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையைக் கண்டிப்பதாக கூறியும் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. "இந்த ஆசிரியை இருக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். அவரை "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,' என்று வலியுறுத்தினர்.
தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசாரும் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியை ஜெயந்தி "டிஸ்மிஸ்' செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததை அடுத்தே பெற்றோர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இதே போல் சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் எலிமருந்து சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Posted by
வாசகன்
at
2:01 PM
1 comments
Wednesday, July 11, 2007
சிறுநீரகம் பாதித்த சிறுமியை ஆற்றில் வீசிய தந்தை.
மிகவும் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஆறுவயது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் விரக்தி அடைந்த தந்தை, மகளை ஆற்று நீருக்குள் வீசி எறிந்து விட்டு தப்பி ஓடினார். வெள்ளத்தில் தத்தளித்த சிறுமியை மீனவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
உ.பி., ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள தேவ்காளி என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் பக்கேரு சோன்கர். இவருக்கு ஆறு குழந்தைகள். கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது கடைசி குழந்தையான ஆறு வயது சரிதாவிற்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் சரிதாவை சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "சரிதாவை குணப்படுத்த ரூ.மூன்று லட்சம் செலவாகும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்' என சோன்கரிடம் கூறினார். ஏற்கனவே கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி வந்த சோன்கர், இதனால் அதிர்ச்சி அடைந்தார். "யாரிடம் போய் பணம் கேட்பது, நமக்கு உதவ ஒருவரும் இல்லையே' என விரக்தி அடைந்த அவர், சரிதாவை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் ஜான்பூர் திரும்பினார். சரிதாவுடன் அங்கு ஓடும் கோமதி ஆற்றுக்கு சென்றார். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து, கரை புரண்டு ஓடும் ஆற்று நீருக்குள் சரிதாவை வீசி எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் நடையை கட்டினார்.
அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஒரு சிறுமி நீருக்குள் தத்தளித்துக் கொண்டு இருப்பதையும், அந்த சிறுமி, "அப்பா காப்பாற்றுங்கள், அப்பா கப்பாற்றுங்கள்' என உதவிக் குரல் எழுப்புவதையும் கண்டனர். உடனடியாக சரிதாவை தண்ணீரில் இருந்து மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஜான்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி யோகேந்திர சுக்லா கூறுகையில்,""சரிதாவை ஆற்றுக்குள் வீசிய சோன்கரை தேடி வருகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது எங்கள் கவலை எல்லாம் சரிதாவைப் பற்றித் தான். அந்த குழந்தையை எப்படியாவது காப்பற்ற வேண்டும்,''என்றார்.நினைவு திரும்பிய சரிதா, ""எங்க அப்பா ஏன் என்னையை ஆற்றுக்குள் துõக்கிப் போட்டார்? உங்களுக்கு தெரியுமா?'' என கள்ளம் கபடம் அறியாத மழலை மொழியில் கேட்டது, அங்கிருந்த டாக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மனதை உலுக்கி விட்டது.
Posted by
வாசகன்
at
11:20 PM
7
comments
b r e a k i n g n e w s...

