புதுதில்லி உட்பட நாட்டின் முக்கிய தொடர் வண்டி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 22 தொடர்வண்டி நிலையங்களை உலகத்தரத்திற்கு உயர்த்த தேர்வு செய்துள்ளது.
அதன் முதற்கட்டமாக புதுதில்லி, பாட்னா, ஆக்ரா, ஆனந்த விகார், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் ஆகிய நிலையங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த டெர்ரி பெரல் என்ற நிறுவனம் புதுதில்லி நிலைய பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளது.
தினமணி
Tuesday, September 4, 2007
உலகத் தரத்திற்கு இந்தியத் தொடர்வண்டி நிலையங்கள்.
Posted by
வாசகன்
at
5:53 PM
0
comments
Saturday, September 1, 2007
"கேரளாவுக்காக தனி மண்டலம் சாத்தியமில்லை" - ஆர். வேலு
பாலக்காடு ரெயில்வே கோட்டத்தை பிரித்து சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம் அமைக்கப்படுகிறது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி அச்சு தானந்தன் ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத்யாதவை சந்தித்து தனி கோட்டம் அமைக்க கூடாது என வற்புறுத்தினார். அப்படி தனிக்கோட்டம் அமைப்பதாக இருந்தால் திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட கேரளாவுக்கு என தனி ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து பரிசீலிப்பதாக அவரிடம் லல்லுபிரசாத் யாதவ் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு பதில் அளிக்கையில் கேரளாவில் ரெயில்வே மண்டலம் அமையும் சாத்தியம் இல்லை என்றார்.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் இணை அமைச்சர் ஆர்.வேலு கூறும் போது,
புதிதாக ரெயில்வே மண்ட லம் அமைக்க வேண்டுமானால் பல்வேறு சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன. பரப் பளவு, வேலை பளு, போக்கு வரத்துமுறை, இயக்கம், நிர்வாக தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இத்தகைய புதிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.
இத்தகைய சாத்தியக் கூறுகள் இந்த கோரிக்கையில் இல்லாததால் புதிய மண்டலம் அமைப்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல.
என்று கூறினார்.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
7:29 PM
0
comments
Monday, August 27, 2007
இரயில்களில் ஏ.டி.எம் வசதி விரைவில்.
ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதி விரைவில் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் அரங்க. வேலு வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் கோட்டம் அறிவிக்கப்பட்டு, ரூ. 1.8 கோடியில் கட்டடங்கள் உள்ளிட்ட விரிவாக்கப்பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த கோட்டம் ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இதில் எந்த தடங்கலும் இல்லை. கேரள எம்.பி.க்கள் கூடுதலான பகுதிகளை கேட்டார்கள். அதுகுறித்து பேசி தீர்க்கப்படும்.
பாலக்காடு கோட்டத்தை பிரிப்பதில் எவ்வித வியாபார இழப்பீடும் இல்லை. திருவனந்தபுரம் மண்டலம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் லாலு முடிவு செய்வார். ஓடும் ரயில்களில் விரைவில் தேசிய வங்கிகளின் ஏ.டி.எம். வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தினமணி
Posted by
வாசகன்
at
7:02 PM
0
comments
Saturday, August 25, 2007
இரயில்நிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு
தெற்கு இரயில்வேயின் பாலக்காடு கோட்டதிலிருந்து தமிழகப்பகுதியைப் பிரித்து சேலம் கோட்டம் அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசியலுக்கு எதிராக கேரளாவிற்குச் செல்லும் இரயில்களை மறிக்கும் போராட்டம் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இப்போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பல மலயாளிகள் அவதியுற்றனர். இதனையடுத்து இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் முதல்வர் மு.கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் இரயில்வே கோட்டம் அமைவது குறித்து கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
5:24 PM
0
comments
Thursday, August 9, 2007
ராமேசுவரம் விழா: மக்களைத் தொல்லைப் படுத்தாதீர் - இந்து இயக்கங்கள் கோரிக்கை நிறைவேறியது
ராமேசுவரத்தில் மக்களைத் தொல்லைப்படுத்தாமல் ரயில் சேவைத் தொடக்க விழாவை நடத்த வேண்டும் என்று இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விநாயகர் முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினமான வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள ரயில் சேவைத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கலந்து கொள்வதால் மக்கள் கெடுபிடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆடி அமாவாசையன்று ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ராமேசுவரத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் உட்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு இந்த சோதனை நடவடிக்கை பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
விழா இடத்தை மாற்றலாம்: இதனால், ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக இறைவனை தரிசிக்க வசதியாக, விழா நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்கலாம் என இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு, முன்னதாக சில கிலோ மீட்டர் தொலைவில் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் இருந்து, விடியோ கான்பரசிங் முறை மூலம் தினசரி ரயில் சேவையை முதல்வரும், சோனியாவும் தொடங்கி வைக்கின்றனர்.
இதற்குப் பதிலாக, முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்தும், சோனியா தில்லி அல்லது சென்னையில் இருந்தோ விடியோ கான்பரசிங் முறை மூலம் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கலாம். எப்படியும் விடியோ கான்பரசிங் முறை மூலம் தான் விழா நடைபெறப் போகிறது. அதை எங்கு இருந்து செய்தால் என்ன என்று குறிப்பிட்டார் விநாயகர் முரளி.
இந்த விண்ணப்பத்தை ஏற்று சற்றுமுன் விழாவை மதுரைக்கு மாற்றிவிட்டார்கள்.
தினமணி
The Hindu News :: Hindu outfit to hold black flag demo during Sonia's visit
Chennai Online News Service - View News :: Sonia to inaugurate rly line in TN
Posted by
Boston Bala
at
10:45 PM
0
comments
Tuesday, August 7, 2007
ஜோத்பூர்- ஹௌரா விரைவுவண்டி கான்பூரில் தடம் புரண்டது

செவ்வாய் மதியம் கான்பூர் சென் ட் ரல் இரயில்நிலையத்தில் ஜோத்பூர் - ஹௌரா விரைவு வண்டியின் இஞ்ஜினும் முதல் இரு பெட்டிகளும் தடம் புரண்டது. இதில் 12 பேர் காயமடைந்ததாக இரயில்வே செய்திகள் கூறுகின்றன. இரயில் போக்குவரத்து இந்த பகுதியில் தடைபட்டுள்ளது.
IBNLive.com > Jodhpur-Howrah Express derails near Kanpur : Train, derail, howrah-jodhpur express
Posted by
மணியன்
at
2:19 PM
0
comments
Wednesday, July 11, 2007
ஓடும் இரயிலில் மானபங்க முயற்சி: RPF DIGக்கு வலைவீச்சு
ஜூலை 8 அன்று சம்பூர்ண கிராந்தி விரைவுவண்டியில் குளிரூட்டப்பட்ட முதல்வகுப்பில் பயணித்த வந்தனா எனற பீஹார் மாநில இ.ஆ.ப அதிகாரியையும் அவரது சகோதரியும்கௌதம் சீமா என்ற இ.ஆ.ப அதிகாரியின் மனைவியுமான சுஜாதா என்பவரிடமும் குடிபோதையில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக பி ஜே இராவல் என்ற இரயில்வே பாதுகாப்புப் படையின் டிஐஜி மீது முதல் குற்ற பத்திரிகை பதியப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை கண்கணிப்பாளர் அஜிதாப் குமார் கூறினார். இரு உறுப்பினர்களைக் கொண்ட துறைசார்ந்த விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டு தனது அறிக்கையை ஒருவாரத்திற்குள் சமர்ப்பிக்கும். முன்னர் இரயில்வே அமைச்சர் லாலு 'தன்னிடம் இர.பா.படை தலமைக்காவலர் இதுபோல நடக்கவில்லை ' என்று கூறியதை யடுத்து எழுந்த சர்ச்சையின் பின்னணியில் இந்த விசாரனைக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
2:33 PM
0
comments
Monday, July 9, 2007
பாட்னா இரயில் நிலையம் உலகத்தரத்தில்!
மத்திய ரெயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ்வின் முன் முயற்சியில் பாட்னா ரெயில் நிலையம் உலகத்தரத்தை அடைகிறது. பயணிகளுக்கான அதிகபட்ச வசதிகளும், புதிய அதிவேக தொடர்வண்டிகளும் இயக்கப்பட உள்ளனவாம்.
இதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாம்
TOI செய்தி
Posted by
வாசகன்
at
10:30 PM
0
comments
இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் சோதனை ஓட்டம்
இந்தியா-வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயிலின் சோதனை ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையே முறையான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
'இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவு எக்ஸ்பிரஸ்' என்னும் பொருள்படும் 'இண்டர் கண்ட்ரி மாய்ட்ரி (Moitree) எக்ஸ்பிரஸ்' ரயில், கோல்கத்தாவிலிருந்து வங்கதேசத்தின் மேற்கு தர்ஷனா மாகாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்றடைந்தது.
நீல நிறத்துடன், பளபளப்பான 6 புதிய பெட்டிகள், ஒரு ஆய்வு பெட்டியுடன் சென்ற இந்த ரயிலில் இந்திய கூடுதல் உள்துறை செயலாளர் அஹ்மத் மற்றும் 31 அதிகாரிகள் பயணம் செய்தனர். நட்புறவு ரயில் இரண்டு நிலையங்களில் ஓய்வுக்குப் பிறகு டாக்கா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு சென்று சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா-வங்கதேசம் இடையே ஆகஸ்டு மாத மத்தியிலிருந்து, தொடர்ந்து நேரடி பயணிகள் ரயில் இயக்குவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும், திங்கள்கிழமை டாக்காவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் வங்கதேசத்தின் சார்பில் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டி.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டு, ரயில் போக்குவரத்தை முறைப்படுத்துவது மற்றும் தீவிரவாதிகள் ரயில் மூலம் ஊடுருவுவதைத் தடுப்பது குறித்து பேசுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியேற்றத்துறை அலுவலகத்தை இந்திய எல்லையில் உள்ள ஜீடே மற்றும் வங்கதேச எல்லையில் தர்ஷனா பகுதியில் அமைக்கலாம் என்று புதுதில்லி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும், பயணிகளுக்கு வசதியாக இருப்பதற்காக ரயில்கள் புறப்படும் இடத்திலேயே இந்த அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்று வங்கதேச தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ரயிலின் பயணிகள் பெட்டிகள் இந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, ஷெட்பூர் ரயில்வே பணிமனையில் அவை இணைக்கப்பட்டது. இதில் ஏ.சி. வகுப்பு, ஏ.சி. படுக்கை வசதி, பொதுவகுப்பு, தூங்கும் வசதி கொண்ட பெட்டி, இரு புறத்திலும் மின்சாதன பெட்டி, சமையலறை மற்றும் பிரார்த்தனை செய்வதற்கான பெட்டிகள் உள்ளன.
இந்த பெட்டிகள் ரூ.1.80 கோடி முதல் 3 கோடி வரையிலான மதிப்புள்ளவை என்று ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். பயணக்கட்டணம் ரூ.320, ரூ.480 மற்றும் ரூ.800 என மூன்று விதங்களில் இருக்கும் என்றும், இந்த வருவாயில் சுமார் 78 சதவீதத்தை வங்கதேசமும் மீதமுள்ளதை இந்தியாவும் பங்கிட்டுக் கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 மணி நேர பயணம் இந்த ரயில் பாதையானது 120 கிலோமீட்டர் தூரத்தை இந்தியாவிலும், 418 கிலோமீட்டர் தூரத்தை வங்கதேசத்திலும் கொண்டுள்ளது. 10 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் 760 பயணிகள் செல்ல முடியும்.
இந்த ரயில் தினமும் டாக்காவிலிருந்து காலை 7.45 மணிக்கும், மறுமுனையில் இந்தியாவிலிருந்து 7 மணிக்கும் புறப்படும். இதன் மொத்த பயண நேரம் 11 மணி நேரமாகும். இதில் குடியேற்ற அதிகாரிகளின் சோதனை நேரமும் அடங்கும்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக இருந்தபோது இருநாடுகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்துத் திட்டம் கையெழுத்தானது. ஆனால் கலீதா ஜியா பிரதமராக இருந்தபோது இத்திட்டம் கைவிடப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
BBC NEWS | South Asia | First India-Bangladesh train link
Posted by
Boston Bala
at
5:51 AM
0
comments
Saturday, July 7, 2007
மருத்துவ கல்லூரிகளில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு தடை வராது: கருணாநிதி அறிவிப்பு
முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்த கேள்வி பதில் விவரம் வருமாறு:-
கேள்வி :-"கட்சி பலத்தை ஊரறியக் காட்டி முண்டா தட்டுவதற்காக ஊர்வலம், பேரணி என்று நடத்தி போக்கு வரத்தை மூச்சுத் திணற வைத்து, கட்சித் தொண்டர்களையும், கட்சிக்கே சம்பந்தமில்லாத பொது ஜனங்களையும் ஒரு சேர மண்டை காய வைக்கிற தலைவர்கள் இனியாவது யோசிக்கலாமே!''என்று சென் னையில் நடைபெற்ற மகளிர் பேரணி பற்றி பா. சீனி வாசன் "விகடன்'' இதழில் தலையங்கம் தீட்டியுள்ளாரே?
பதில்:-அறுபது ஆண்டுக் காலசுதந்திரத்தில் முதன் முதலாக ஒரு பெண்மணி "ஜனாதிபதி'' பதவிக்கு வரப் போவதை முன்னிட்டு, தமிழ் நாட்டுத் தாய்க்குலம் நடத்திய பேரணியைப் பற்றி விகடன் சீனு; இப்படி எழுதி யிருக்கிறார். இந்தப் பேரணி யாவது மாலை 4 மணிக்கு நடந்தது.
தி.மு.க. ஆட்சியில் உலகத் தமிழ் மாநாட்டை முதன் முதலாக அண்ணா நடத்திய போது இந்த சீனுவின் பாட்டனார் எஸ்.எஸ். வாசன் முன் நின்று, பகல் 12 மணிக்கு அவ்வளவு பெரிய ஊர்வ லத்தை ஆரம்பித்து ஒத்திகை பார்த்து நடத்தினாரே; அப் போது லட்சக்கணக்கான மக்களின் மண்டைகளையும் வெயிலில் காய வைக்கும் அளவிற்கு -நமது பண்டையப் பெருமைகளைச் சொல்லும் பவனி நடத்தவில்லையாப இப்போதாவது மாலை வெயில்; மனிதருக்கு மருந்து போன்றது!
தம்பி சீனு; விநாயக சதுர்த் தியன்று சென்னை வீதிகளில் செல்லும் ஊர்வலங்களைப் பார்த்ததில்லை போலும்! தற்போது நடைபெற்ற பவனி கூட, சாலையில் ஒரு பக்கத் தில் வழி விட்டு அதுவும் மிகச் சிறிய தூரம் செல்வதற்கு மட்டுமே நடத்தப்பட்ட ஒன்றா கும். அதுவும் மாலை 5 மணி அளவில் ஆரம்பித்து 7.15 மணி அளவில் முடிந்து விட்டது. அதற்காக அந்த வார இதழில் முதல் பக்கத்தில் "வெயிலோடு போராடி, வியர்வை யில் நீராடி'' என்றெல் லாம் தலைப்பிட்டு அந்தப் பதிப்பாளர் இந்த எதிர்ப்பினை முழக்கியிருக்கிறார்.
கே:-ஜெயலலிதா நேற் றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் அலட்சிய போக்கினால் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு மட் டும் 300 மருத்துவர்கள் உருவாவது தடை பட்டு விட்டதாகக் கூறி யிருக்கிறாரே?
ப:-ஜெயலலிதாவின் நேற்றைய அறிக்கைக்கு, நேற்றைய தினமே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் விரிவாக பதில் அளித்துள்ளார். தமிழ் நாட் டில் மூன்று அரசு மருத் துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக 300 மாணவர் களைச் சேர்க்க மத்திய அரசு நிறுவனம் தடை செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்தவுடன், அந்தத் துறையின் அமைச்சரை நான் அழைத்து உடனடியாக டெல்லி சென்று அங்கே அந்தத் துறையின் அமைச்சர் அன்புமணி ராமதாசிடம் விளக்கங்களை அளித்து மீண்டும் அதற் கான அனுமதியினை பெற்று வருமாறு தெரிவிக் கப்பட் டுள்ளது. அவரும் உடனடியாக டெல்லி சென்று, அமைச்சரிடம் விளக்கங்களை அளித்து சாதகமான பதிலைப் பெற்று வந்துள்ளார். எனவே இந்த ஆண்டு 300 மாணவர்களின் சேர்க்கை தடை பட்டு விடும் என்ற ஜெயலலிதாவின் கனவு பலிக்காது.
அது மாத்திரமல்ல, இப்படிப் பட்ட நேர்வுகள் கடந்த கால ஜெயலலிதா ஆட்சியிலும் எந்தெந்த ஆண்டுகளில் இவ் வாறு மத்திய அரசு நிறு வனத்திடமிருந்து அனுமதி மறுக்கப் பட்டன என்பதையும் ஆதாரத்தோடு ஏடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்திலே நடந் ததை அப்படியே மறந்து விட்டு, இந்த ஆட்சியில் தான் இப்படி நடைபெற்ற விட்டது போல கருதிக் கொண்டு, ஜெயலலிதா அவசர அவசரமாக அறிக்கை விடுத்துள்ளார்.
கே:-கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழையி னால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இந்த அணை யிலிருந்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைத்து கர்நாடக துணை முதல்வர் எத்திïரப்பா உத்தரவிட்டுள்ளதாக ஏடு களில் செய்தி வந்துள்ளதே?
ப :-அந்தச் செய்தி உண்மை யானதாக இருக்கக் கூடாது.
அப்படி உண்மையாக இருக்குமேயானால் ஒரு மாநிலத்தின் துணை முதல் வர் அரசியல் சட்டத்தின்மீது கொண்டிருக்கும் மதிப்பை யும் கூட்டாட்சி தத்துவத் தில் அவருக்குள்ள நம்பிக்கை யையும் வெளிப் படுத்துவதாக இருக்காது.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழி தோண்டும் செயலாகவே ஆகிவிடும். இப்போதே மேட்டூர் அணை இன்னும் திறக்கப் படாத நிலைமை உள்ளது. எனவே இதிலே மத் திய அரசும், பிரதமரும் உடன டியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
கே:-கூட்டுறவு தேர்தலில் மாவட்டங்களில் ஆங்காங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனவே?
ப:-கூட்டுறவு தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக் கூடாது என்ற எண்ணம் கொண்டதும் அதை செயல்படுத்துவதும் தான் அரசின் நடைமுறையாகும். இந்த அரசு. எனவே தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை யில் கழகத்தினர் ஜனநாயக மரபுகளை கடைப்பிடிக்க வேண்டு மென்றும், ஆங்காங்கு தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி, இரு தரப்பி னருக்கும் உள்ள வாய்ப் புகளின் அடிப்படையில் போட்டியிடுவது நல்லது என்றும் அதிலே ஏதாவது பிரச் சினைகள் இருக்கு மேயானால் அந்தந்த கட்சி களின் தலைமையோடு தொடர்பு கொண்டு பேசித் தீர்த் துக் கொள்ள முன் வர வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஏனென்றால் இந்தக் கூட்டுறவுத் தேர்தலைப் பயன் படுத்தி தோழமைக் கட்சிகள் இடையே பிரச்சினைகள் வராதா என்று எதிர்க்கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கே:-தமிழகத்திலே மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப் பட்டிருப்பது பற்றி?
ப :- வரவேற்கப்படவேண் டிய ஒன்றாகும். வழக்குகள் தேங்கு வதைத் தவிர்ப்பதற்காக சென்னை உட்பட ஆறு மாநகராட்சிகளில் பதினோரு மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குஜ ராத் மாநிலத்திற்கு அடுத்த படியாக தமிழகத்திலே தான் இத்தகைய மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப்படு கின்றன.
கே:-தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்றும், பொன்னான எதிர் காலம் காத்துக் கொண்டி ருக்கிறது என்றும் ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பது பற்றி?
ப:-ஓடிக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டர்களை பிடித்து நிறுத்துவதற்கு வேறு வழி?
கே:-ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் குடியரசு தலைவர் பொறுப் புக்கு போட்டியிடும் பிரதீபா பட்டீல் குறித்து தொடர்ந்து எதிர் அணியினர் குற்றச் சாட்டுகளை சுமத்திக் கொண் டிருக்கிறார்களே?
ப:-உச்ச நீதி மன்றத்திலேயே வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் பிரதீபா பட் டில் மீது ஊழல் புகார்கள் உள்ளன என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய தேர் தல் ஆணையத்திற்கு உத்தர விட வேண்டுமென்றும் கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பாலசுப்ர மணியம், தருண் சாட்டர்ஜி ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்து, பிரதீபா அம்மையார் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்கள்.
அதற்குப் பிறகும் எதிர் தரப்பினர் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருப்பதற்குக்கார ணம், அரசியல்தான்.
கே:-சேலத்தில் புதிதாக ரெயில்வே கோட்டம் அமைப் பது பற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளர் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறாரேப சேலத்தில் கோட்டம் அமைப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை என்றும் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறாரே?
ப:-இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு திட்டவட்டமாக பதில் அளித் திருக்கிறார். அந்தப் பதிலில் "சேலம் கோட்டம் ஏற் கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று, இதற்கான எல்லைகளும் தீர் மானிக்கப்பட்டு விட்டன.
ரெயில்வே வாரியத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் ஒருவர், ரெயில்வே வாரிய முடிவுகள் குறித்து எதுவும் கூற முடியாது. அதுவும் வரும் 18ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள அவர், ஏன் இப்படி முரண்பாடாக பேசுகிறார் எனத் தெரியவில்லை. சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதர வளித்துள்ளது. இது தொடர் பாக தமிழக அரசு கேரள முதல்வருடன் பேச வேண் டிய அவசியமில்லை. திட்ட மிட்டபடி ஆகஸ்ட் மாதம் துவக்க விழா நடைபெறும்'' என்று தெரிவித்திருக்கிறார். எனவே சேலம் கோட்டம் அமைவது பற்றி நாம் எந்த ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
2:20 AM
1 comments
Friday, July 6, 2007
திருவள்ளூரில் ரயில் பயணிகள் திடீர் மறியல்!
சென்னையில் இருந்து புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் புறநகர் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டதால் அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இன்று பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து மதியம் 12:30 மணி வரை பாதித்தது. ரயில்களின் நேரம் மாற்றப்பட்டதை ரத்து செய்து விட்டு, பழையபடியே இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மறியல் காரணமாக சென்னையில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில்கள் புறப்பட முடியாமல் போனது. ஏலகிரி மற்றும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted by
Adirai Media
at
3:14 PM
0
comments
Thursday, July 5, 2007
இலண்டன் ட்யூப் இரயில் தடம் புரண்டது

இலண்டனில் பாதாள இரயில்வண்டியொன்று இன்று மதியம் தடம் புரண்டதில் நூற்றுக்கணக்கான பயணிகள் அடைபட்டனர். இலண்டனின் சென்ட்ரல் லைனில் மேற்கு நோக்கிசெல்லும் வண்டியொன்று மைல் எண்டிற்கும் பெத்னல் கிரீன் நிலையத்திற்கும் இடையே மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும்...BBC NEWS | UK | England | London | Hundreds stuck in Tube derailment
Posted by
மணியன்
at
6:48 PM
0
comments
Tuesday, July 3, 2007
ராதிகா செல்வி Vs. வேலு
நெல்லையில் செயல்பட்டு வந்த ரயில்வே துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றி இருக்கிறது தென்னக ரயில்வே.
"ரயில்வே அதிகாரிகளின் சுய லாபத்துக்காகவே இந்த மாறுதல்" என்று ரயில்வே ஊழியர்கள் போர்க்கொடி தூக்கும் இந்த விஷயத்தில் தலையிட்டிருக்கிறார் உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி.
"நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு 15 ஆண்டுகள் போராடிய பிறகுதான் தற்போது திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நெல்லையில் செயல்பட்டு வந்த துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றியதை மீண்டும் நெல்லைக்கே மாற்ற வேண்டும்'' என்று ரயில்வே துறை இணை அமைச்சர் வேலுவிடம் நேரடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளாராம் ராதிகா செல்வி.
தமிழன் எக்ஸ்பிரஸ்
Posted by
Boston Bala
at
9:14 AM
0
comments
Saturday, June 30, 2007
சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!
சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக இச்செய்தி தெரிவிக்கிறது.
நியூயார்க்கில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரயில்வே போர்டு தலைவர் ஜே.பி.பத்ரா கையெழுத்திட்டுள்ளார்.
Posted by
வாசகன்
at
6:53 PM
1 comments
இரயில்நிலையங்களில் வைஃபை வசதி
இனி இரயில்வண்டியின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சூடான தேநீர் கிடைக்கிறதா எனத் தேடுவது மட்டுமன்றி மடிக்கணினியில் 'சற்றுமுன்' நடந்ததென்ன என்ற தேடலும் நடக்கும் விதமாக இந்திய இரயில்வேயின் துணைநிறுவனமான ரைல்டெல் 500 இரயில்வே நிலையங்களில் கம்பியில்லா இனையவசதியான வைஃபை நுட்பத்தை நிறுவ உள்ளது. முதற்கட்டமாக 50 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. பெங்களூருவிலிருந்து ஆரம்பிக்கும் இப்பணி அடுத்து ஜெய்பூர் நகர நிலையத்தை எடுத்துக் கொள்ல இருக்கிறது. பெங்களூருவின் ஏர்லிங்க் நிறுவனமும் அமெரிக்க ரொன் டோக் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை அமலாக்க இருக்கின்றன.
மேலும்... The Hindu News Update Service
Posted by
மணியன்
at
1:00 PM
0
comments
Wednesday, June 27, 2007
மேற்கு வங்கத்தில் இரயில்வே நிலையம் கொளுத்தப்பட்டது
மேற்கு வங்கத்தில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தொழிற்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ(மாவோ)வினரின் பொருளாதார தடையின் அங்கமாக புருலியாவிலிருந்து 55 கி.மீ தூரத்திலுள்ள பிராண்தி என்ற இரயில்வே நிலையத்தை மாவோ ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். முன்னதாக துப்பாக்கி முனையில் இரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோரை அப்புறப்படுத்தினர். இதனால் இரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. நீண்டதூர வண்டிகள் மாற்றுப்பாதையில் விடப்படுகின்றன.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
12:02 PM
0
comments
Monday, June 25, 2007
பாலம் உடைந்து இரயில் விபத்து: ஆறு பேர் பலி
அசாமில் வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் ஒரு சரக்கு இரயில் சென்றுகொண்டிருந்தபோது அதனடியே பாலம் முறிந்ததில் ஆறு பேர் மரணம்; ஏழு பேர் காயமடைந்தனர். இறந்ததில் ஒருவர் வண்டி ஓட்டுநர். மற்றவர்கள் சரக்கு இரயிலின் கூரையில் பயணித்த உள்ளூர்வாசிகள்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
5:18 PM
0
comments
Thursday, June 21, 2007
கோவை பெங்களூர் இரயில் எர்ணாகுளம் வரை.
கோவையிலிருந்து பெங்களூர் வரை பகல் நேரத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கோவையும், பெங்களூரும் தொழில் ரீதியில் மிகவும் நெருங்கிய நகரங்களாக இருப்பதால் இரு நகரங்களிலிருந்தும் ஏராளமான பேர் இந்த ரயிலில் பயணித்து வந்தனர்.
கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் கூடுதலாக ஒரு பகல் நேர ரயில் விட வேண்டும் என்று கோவையில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அதைச் செய்யாமல், கோவை-பெங்களூர் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர்.
பாலக்காடு கோட்டத்தின் கீழ் கோவை வருவதால், மலையாள அதிகாரிகள் இதைச் செய்துள்ளனர். இதனால் கோவை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எர்ணாகுளம் வரை இந்த ரயிலை நீட்டித்துள்ளதால் கோவை பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு 800 இருக்கைகளுக்கு கோவையிலேயே முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. எட்டு பெட்டிகளைக் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது.
ஆனால் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவைக்கு தற்போது வெறும் 2 பெட்டி மட்டுமே கிடைத்துள்ளது. அதில் 200 பேர் மட்டுமே செல்ல முடியும். மற்ற பெட்டிகள் அனைத்தும் எர்ணாகுளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே கோவையில் ரிசர்வ் செய்ய முடியும்.
கிடைத்துள்ள 200 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் கூட எர்ணாகுளத்திலேயே புக்கிங் செய்யப்பட்டு விடுவதால் கோவை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் அதிக கட்டணம் கொடுத்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கோவை பகுதி பயணிகளுக்கு உண்டாகியுள்ளது.
ஏற்கனவே எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு இரண்டு ரயில்கள் வாரத்திற்கு 2 நாட்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களை தினசரி ரயில்களாக மாற்றாமல், கோவை ரயிலை கேரள அதிகாரிகள் பறித்துள்ளனர்.
கோவை ரயிலை கேரளா பறித்துள்ள இந்த செயல் கோவை மக்களுக்கு பெரும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது. ஆனால் கோவையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மகா அமைதியாக உள்ளனர்.
இதுவரை ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை. இப்படியே இருந்தால் கோவையில் உள்ள அத்தனை ரயில்களும் கேரளாவுக்கே போனாலும் போய் விடும் என்று மக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.
Posted by
வாசகன்
at
8:49 PM
0
comments
Tuesday, June 12, 2007
ரயில் தடம் புரண்டு 100 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 11.15 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TamilMSN.com
Posted by
Boston Bala
at
8:54 PM
1 comments
விசாகப்பட்டிணம் அருகே ரயில் தடம் புரண்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா என்ற இடத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக ரயிவே வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ள ரயில்வே அதிகாரிகள், மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். சிறப்பு பஸ்கள் மூலம் பயணிகள் விசாகப்பட்டிணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் பலியானதாக இன்றுகாலை தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
Posted by
Adirai Media
at
10:18 AM
0
comments
b r e a k i n g n e w s...
