.

Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Tuesday, September 4, 2007

இந்திய வரையறை நேரத்தை முப்பது நிமிடங்கள் முன்வைத்தால் ஆயிரம் கோடி சேமிக்கலாம்

இந்திய வரையறை நேரத்தை அரைமணிநேரம் முன்னே வைப்பதால் மின்சக்தி/எரிசக்தி பயன்பாட்டில் கணிசமான சேமிப்பு ஏற்படும் என்றும் பண அளவில் ரூஆயிரம் கோடிவரை மிச்சமாகும் என்றும் விஞ்ஞானிகள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. இப்படிச் செய்தால் கிரீன்விச் நடுமட்ட நேரத்தைவிட இப்போதிருக்கும் ஐந்தரை மணி நேரம் முன்னிருப்பதற்கு பதிலாக ஆறுமணி நேர இடைவெளி இருக்கும். தற்போது 82.5 பாகை கிழக்கு நெடுக்கோட்டில் (East Longitude) உள்ள நேர வரையறை 90 பாகைக்கு மாற வேண்டும். சக்தி சேமிப்பிற்காக மற்றநாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட நேர மண்டலங்களை வைத்திருந்தாலும் இந்தியாவிற்கு அவை சரிப்பட்டு வராது என இக்குழு கருதுகிறது.

இக்குழுவின் அறிக்கையின் விவரங்களுக்கு....India eNews - Advance IST by 30 minutes, save Rs.10 bn: scientists

பிராண்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன

பிரான்ஸ் நாட்டு எரிசக்தி நிறுவனங்களான சூயஸ் மற்றும் அரசுக்குச் சொந்தமான காஸ் த பிரான்ஸ் ஆகியவற்றின் இணைப்பை வரவேற்றுள்ள பிரான்ஸின் பிரதமர் பிரன்ஸ்வா ஃபில்லான் அவர்கள், இதன் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சர்வதேச எரிசக்தி வணிகத்தில், வலுவான பிரசன்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தற்போது உலகின் இரண்டு முன்னணி எரிசக்தி நிறுவனங்களைக் தன்வசம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாவது நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டது அரசுக்குச் சொந்தமான மின்சக்தி விநியோக நிறுவனத்தையாகும்.

பிரஞ்சு அதிபர் நிக்கொலஸ் சர்கோசி அவர்களின் ஆதரவு பெற்ற ஒப்பந்தம் ஒன்றின்படி, இந்தப் புதிய நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை அரசாங்கம் தன்வசம் வைத்திருக்கும்.

பிபிசி தமிழ்

French GDF, Suez agree new energy merger | Reuters.co.uk
Suez and Gaz de France Announce Merger - WSJ.com

Monday, September 3, 2007

நக்சல்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் கால்-சென்டர் துவக்கம்

கிருஷ்ணகிரியின் சனசந்திரம் கிராமத்தில் ஊராட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலினால் 'அழைப்பு மையம்' வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. ஃபாஸ்டரா (FOSTERA -fostering technologies in rural areas) அமைப்பின் உதவியுடன் இந்த கால்-சென்டர் துவங்கியது. இதனால், தமிழகத்தின் கிராமங்களையும் விப்ரோ, காமெட் போன்ற நிறுவனங்களின் வேலை சென்றடையும்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 120 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியத்தின் உதவியுடன் கேளமங்கலம், தளி, மாத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம் போன்ற கிராமப்புற பகுதி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐம்பது லட்சம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது.

First rural call centre in naxalite-affected Tamil Nadu district
IndianExpress.com :: Geneva outsources, TN Naxal belt village gets a call centre
DNA - India - From naxal village to BPO hub - Daily News & Analysis

கலாநிதி மாறனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் தலை பத்து பட்டியல்:

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ்: ரூ. 24.51 கோடி
2. கலாநிதி மாறன் - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி
3. காவேரி கலாநிதி - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி

4. சுனில் மித்தல்- பார்தி ஏர்டெல்: 15 கோடி
5. கே அன்ஜி ரெட்டி - டாக்டர் ரெட்டிஸ்: 14.4
6. பி எம் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.99

7. பவன் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.88
8. நவீன் ஜிண்டால் - ஜிண்டால் ஸ்டீல்: 13.5
9. நகாகாவா (Toshiaki Nakagawa) - ஹீரோ ஹோண்டா: 13.44
10. சஜ்ஜன் ஜிண்டால் - JSW ஸ்டீல்: 13.24

Mukesh Ambani's take-home ten times that of brother Anil

Saturday, September 1, 2007

அணுசக்தி : சீனா இந்தியாவுடன் ஒத்துழைக்கும்

இந்திய அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பினை குறித்த தனது எதிர்மறை கொள்கையை சீனா மாற்றிக் கொள்வதாகத் தெரிகிறது. அனைத்துலக அணுசக்தி கழகத்தின் (IAEA) மேற்பார்வையில் அணுசக்தியை அமைதிப்பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து அனைத்து நாடுகளுடன் கூட்டுறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து சென்றிருந்த பதினொரு பேர் அடங்கிய பிரபல மனிதர்கள் குழு சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சியை வெள்ளியன்று சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறாவிடினும் சென்ற வருடக்கடைசியில் சீன அதிபர் ஹு ஜினடோவின் இந்திய வருகையின்போது இந்தோசீன அணுசக்தி கூட்டுறவு குறித்து பேச்சு வார்த்தை நிகழ்ந்ததாகத் ் தெரிகிறது.


China hints at N-cooperation with India

Thursday, August 30, 2007

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிபிசி

The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians)
Udayavani - National Fishworkers Forum appeals to PM

Tuesday, August 28, 2007

நாரீகாவை நாடுகடத்த நீதிபதி ஒப்புதல்

பனாமாவின் முன்னாள் தலைவர் மானுவல் நாரீகா (Manuel Noriega)வை ஃபிரான்சுக்கு நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் சம்மதித்திருக்கிறது. அடுத்த மாதத்துடன் தன்னுடைய ஃப்ளோரிடா சிறைவாசத்தை 73 வயதாகும் நாரீகா நிறைவு செய்கிறார்.

பணமாற்றுதலில் (money-laundering) மோசடி செய்ததற்காக பத்தாண்டு வரை ஃபிரான்சில் தண்டனை கிடைக்கலாம். போதைப்பொருள் கடத்தியதற்காக 1992 முதல் அமெரிக்காவின் மியாமி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

BBC NEWS | Americas | Judge agrees Noriega extradition
America's tyrant | Special reports | Guardian Unlimited: "Manuel Noriega ruled Panama as a favourite of Washington until his dictatorial excesses and green light for cocaine trafficking became too much"

Sunday, August 26, 2007

ரூ 2.30 கோடி கள்ள நோட்டுகள் - ஹைதராபாத்தில் பிடிபட்டன.

ஹைதராபாத் நகரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது.

ஹைதராபாத் விமான நிலையத்தில் துபாயை சேர்ந்த ஒபைது அலி (31) என்பவன் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை துபாய் வழியாக மும்பை கொண்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத்தில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ஒபைதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த கலியா, முகமது நஜாத், செய்யது கவுஸ்பாசா ஆகியோரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதம் கள்ள நோட்டுகளை அவர்கள் ஹைதராபாத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இந்த கள்ள நோட்டு கும்பல் பிடிப்பட்டது.

இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர்சிங் கூறும் போது, இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடல் வழியாக இந்தியா வந்துள்ளது என்றார்.

பிடிபட்ட ஒபைது 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளான். அங்கிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளான். தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவனில் இவனும் ஒருவன்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி:மாலைமலர்

Saturday, August 18, 2007

சில்லறைக்குப் பற்றாக்குறை

இந்தியாவில் சில இடங்களில் சில்லறைக் காசுகளுக்கு பற்றாக்குறை வந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. உலோக விலை அதிகமானதால் காசுகள் உருக்கப் படுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது.

விரைவில் இந்த தட்டுப்பாட்டை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

Govt. admits to shortage of coins The Hindu

Monday, August 13, 2007

டாடா தொழிற்சாலை: இ.கம்யூ எதிர்ப்பு

ஆளும் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பரந்த நிலப்பரப்பை கையகப்படுத்தி டாடாவின் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கடுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடையே பேசும்போது கூறினார்.ஏன் பரந்த நிலப்பரப்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்படவேண்டும் என்றும் நடுவண் அரசே ஏன் இத்திழிற்சாலையை நடத்தக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தங்கள் கட்சி ஏற்கெனவே சாத்தான்குளம், இராதாபுரம் பகுதி மக்களை சந்தித்து 'முதல் தகவல் அறிக்கை' தயாரித்திருப்பதாகவும் மக்களிடையே அச்சமும் குழப்பமும் நிரவி இருப்பதாகவும் அவர் கூறினார்.

கையகப் படுத்தவிருக்கும் 16,000 ஏக்கரா நிலப்பரப்பில் 315 ஏக்கராநிலம் மட்டுமே விளைநிலமென்ற அரசின் கூற்றை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

The Hindu News Update Service

123 உடன்பாடு: பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி உடன்பாட்டினால் நமது பாதுகாப்பு சுதந்திரம் பாதிக்கப்படாது என்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு இடையீடும் வராது என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மக்களவையில் நிகழ்த்திய உரையில் கூறினார். பலத்த கோஷங்களுக்கிடையே தன் உரையை நிகழ்த்திய அவர் இந்திய அணுசக்தி பரிசோதனைகளையோ இராணுவ நடவடிக்கைகளையோ இந்த ஒப்பந்தம் பாதிக்காது என்றும் கூறினார்.் வெளியுறவுக் கொள்கையில் இந்திய அரசின் நேர்மைபற்றி மற்ற நாடுகள் வைத்திருக்கும் அளவாவது தம் அரசின் மீது குறைகாணுபவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றார்.
அவரது உரையின் மற்ற விவரங்களுக்கு....The Hindu News Update Service

அவரது மக்களவை பேச்சின் முழு உரைவடிவம்:

Friday, August 10, 2007

பத்துக்கு எட்டு இந்தியர்கள் ரூ.20க்கு கீழே ஊதியம் வாங்குகின்றனர்

இன்று வெளியான அரசு அங்கீகரித்த ஆய்வறிக்கை 86% தொழிலாளர்கள் ஒருநாளிற்கு ரூ.20 அல்லது அரை அமெரிக்க டாலருக்கும் கீழே ஊதியம் வாங்குவதாக கூறுகிறது.பணிபுரியும் 457 மிலியன் தொழிலாளர்களில் 395 மிலியன் தொழிலாளர்கள் விவசாயம், கட்டிடவேலை, ் மீனவ மற்றும் நெசவு போன்ற அமைப்பற்ற பணிகளில் வேலை செய்கின்றனர்.

மேல் விவரங்களுக்கு.....The Economic Times

Thursday, August 9, 2007

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்கள் குறித்து கவலைகள்

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளின் பாதிப்புகள் குறித்த கவலைகளை அடுத்து, நிதிச் சந்தையில் போதிய பணத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய மத்திய வங்கி தலையிட்டுள்ளது. சந்தையின் ஒழுங்கு நிலையைச் சரி செய்யும் வகையில், ஏனைய வங்கிகளுக்கு, 130 பில்லியன் டொலர்களை ஐரோப்பிய வங்கி கிடைக்கச் செய்துள்ளது.

சாத்தியமான கடன் அழுத்தம் குறித்த அச்சங்கள் காரணமாக நிதி நிறுவனங்களும், கூட்டுத்தாபனங்களும், மற்றும் முதலீட்டாளர்களும் ஆட்டடம் கண்டுள்ளனர்.

இந்த அச்சங்கள் காரணமாக இன்று முன்வேளையில் நியூயோர்க் பங்குச் சந்தையில் பங்கு விலைகளில் வீழ்ச்சியும் காணப்பட்டது.

தமிழ் பிபிசி

Zee News - ECB injects USD 130 bn in European financial system
BBC NEWS | Business | ECB moves to help banking sector
Subprime: The Ugly American Hits Europe - BusinessWeek
Stocks Tumble as Home Loan Worries Spread - New York Times
Economics focus | The mandarins of money | Economist.com: "Central banks in the rich world no longer determine global monetary conditions"
Monetary policy | It ain't easy | Economist.com: "Despite the recent turbulence in the credit markets, the Federal Reserve holds fire on interest rates"

டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆடெக்ஸ் இந்தியா சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஜனவரி-மே 2007 காலகட்டத்தில் மட்டும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே காலக்கட்டத்தில்தான் சுமார் 255 புதிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் முதன் முதலாக தொலைகாட்சி விளம்பரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விளம்பரத் துறையில் சில்லரை விற்பனை நிறுவனங்களின் பங்களிப்பு 1 சதவீதம் மட்டுமே என்று கூறுகிறது ஆடெக்ஸ் ஆய்வு.

குறிப்பாக 60 பெரிய வர்த்தக நிறுவனங்கள் தென் இந்திய தொலைக்காட்சி சேனல்களிலேயே விளம்பரம் கொடுத்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டு ஜனவரி-மே காலகட்டத்திற்கிடையே நாளொன்றுக்கு ஒளிபரப்பாகும் மொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 45,000. இதில் ஒரு நாளைக்கு 700 விளம்பரங்கள் வீதம் வந்துள்ளதாக அந்த ஆய்வுக்குறிப்பு கூறியுள்ளது.

விளம்பர வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் பொழுதுபோக்கு சேனல்களுக்கே கிடைக்கிறது. சில அரிய வேளைகளில் சில்லறை விற்பனையாளர்கள் இசை சேனல்களிலும் விளம்பரங்கள் அளிப்பதாக ஆடெக்ஸ் ஆய்வு கூறுகிறது.

தமிழ் எம்.எஸ்.என்.

Retailers increase ad spend on TV :: Economic Times
Indiantelevision.com > AdEx India Analysis > Snapshot on TV Advertising in first half of 2007 - Part 1
Social Advertisements on TV in H1 2007

Wednesday, August 8, 2007

123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்

பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டியதில்லை என்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்டு பேரம் பேசபோவதில்லை என்றும் பிரதமரின் அலுவலகம் CNN/IBN க்கு தெரிவித்துள்ளது. திங்களன்று பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இதனை அறிவிப்பார் என்றும் அப்போது பிஜேபி மற்றும் இடது கட்சிகளின் கவலைகளுக்கு பதிலளிப்பார் என்றும் பிரதமர் அலுவலகத்தினர் கூறினர்.

மேலும்....IBNLive.com > UPA won't turn Left, says N-deal on right track :

Monday, August 6, 2007

கிருஷ்ணகிரியில் சிறப்பு பொ.ம:ஜிஎம் ஆர் குழுவுடன் உடன்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி எம் ஆர் வணிககுழுவினருடன் ஒருங்கிணைந்து அமைக்க தமிழக அரசு இன்று உடன்பாடு கண்டது. தமிழக தொழில்வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ் இராமச்சந்திரனுக்கும் ஜி எம் ஆர் இன்ஃப்ராஸ்ட் ரக்சரின் இயக்குனர் பிவி நாகேஸ்வர ராவிற்குமிடையே இந்த வணிக ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடுகையில் முதல்வர் கருணாநிதியும் ஜிஎம் ஆர் குழுவின் தலைவர் ஜி மல்லிகார்ச்சுன ராவும் உடனிருந்தனர்.

3300 ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் இந்த சி.பொ.ம ரூ11,000 கோடி வரை முதலீட்டை வரவழைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 70,000 பேர் வரை வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
மேலும்: Chennai Online News Service - View News

Wednesday, August 1, 2007

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணச்சீட்டு விலைகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐநூற்று ஐம்பது மில்லியன் டாலர்கள் அபராதமாக கட்டவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஒழுங்குமுறை ஆணையங்கள் தீர்ப்பளித்துள்ளன.

இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள வான்போக்குவரத்து போட்டி விதிமுறைகளில், இதுவே மிக மோசமான விதிமீறல் என்று இவர்கள் இதை வர்ணித்துள்ளன.

கொரியாவின் தேசிய வானூர்தி நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முன்னூறு மில்லியன் டாலர் அபராதத்தை விதித்திருந்தது.

பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் கட்டணங்களில் கூடுதல் விலையை வசூலித்ததாக கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2004 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தோடு சேர்ந்து, கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாக ஒப்புகொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் நடந்த பெட்ரோலிய விலையேற்றம் காரணமாகவே இந்த கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியுள்ளது.

BBC Tamil

British Airways fined $550 million for ripping off passengers - TIME
How Branson got out of a pickle | Special reports | Guardian Unlimited: "If only British Airways, instead of Virgin Atlantic, had picked up the phone to inform the authorities of the illegal price fixing activities, it might have escaped scot-free. But its arch-rival Virgin Atlantic got there first and, as whistleblower, earned itself immunity from penalties on both sides of the Atlantic."

புதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்; அண்ணா சாலை - ரூ.8,850

தமிழ்நாட்டில் நில விற்பனை யில் சந்தை விலைக்கும், வழி காட்டி மதிப்புக்கும் (அரசு விலை) இடையே வித்தியாசம் அதிகமாக இருந்தது. அதாவது வெளியில் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அதை பதிவு செய்யும் போது அந்த இடத்தில் அரசாங்க மதிப்பு மிக குறைவாக இருக்கும்.

இதனால் பத்திர பதிவில் பல்வேறு மோசடிகள் ஏற்பட்டன. கறுப்பு பண புழக்கம் அதிகரித்து அரசுக்கு வருவாய் இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதை முற்றிலும் களைய தமிழ்நாடு முழுவதும் வழி காட்டி மதிப்பை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டி ருந்தது. இதன்படி புதிய வழி காட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சந்தை விலைக்கும் முந்தை வழிகாட்டி மதிப்புக்கும் இடையே வேறுபாட்டை பாதியாக குறைக்கும் வகையில் இந்த விலை நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

அபிராமபுரம் 2-வது தெருவில் ரூ. 872 ஆக இருந்த சதுர அடி இப்போது ரூ. 2365 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அபிராமபுரம் 4-வது தெருவில் விலை ரூ. 3430 ஆக உள்ளது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் பஸ் நிலையம் முதல் பனகல் பார்க் வரை சதுர அடி ரூ. 11 ஆயிரமாக இருந்த விலை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. நாகேசுவரராவ் ரோடு முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியிலும் ரூ. 12 ஆயிரமாக விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இதே போல் அண்ணா சாலை பகுதி விலை சதுர அடி ரூ. 8850 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் தெருவின் சதுர அடி விலை எவ்வளவு என்பதை பார்க்க இண்டர்நெட்டில் www.tnreginet.net என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரு, அவென்யூ, நகர்களுக்கும் இதில் விரிவாக விலை விவரங்கள் உள்ளன.

மாலைமலர்

Tuesday, July 31, 2007

ரிசர்வ் வங்கி பணவைப்புவிகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது

இன்று வெளியிட்ட காலாண்டு நிதி கொள்கையின் ஆய்வின் முடிவாக வங்கிகள் மத்திய வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பணவைப்பு விகிதத்தை 0.5% அதிகரித்தும் வட்டி விகிதங்களில் மாறுதல் எதுவும் செய்யாமலும் தன் கொள்கையை வெளியிட்டது.
மேலும் விவரங்களுக்கு....The Hindu News

டெல் கணினிகள் சென்னையருகே தயாரிப்பு

உலகில் அதிகமான கணினிகளை தயாரித்துவரும் பன்னாட்டு நிறுவனமான டெல் திங்களன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை துவக்கியது. முதல் கணினியை தனது மிகப் பெரும் வாடிக்கையாளரான இன்ஃபோசிஸிற்கு இலவசமாக கொடுத்து தனது இந்திய அலுவலை துவக்கியது.

வரும் ஐந்தாண்டுகளில் முப்பது மிலியன் டாலர்வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்டிற்கு 40,000 கணிகள்வரை தயாரிக்கக் கூடிய இத்தொழிற்சாலையின் உற்பத்தி இந்தியாவின் 75% தேவையை ஈடுசெய்ய முடியும்.


India eNews - Dell launches first Indian manufacturing base in south India

-o❢o-

b r e a k i n g   n e w s...