.

Monday, August 13, 2007

டாடா தொழிற்சாலை: இ.கம்யூ எதிர்ப்பு

ஆளும் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பரந்த நிலப்பரப்பை கையகப்படுத்தி டாடாவின் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கடுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடையே பேசும்போது கூறினார்.ஏன் பரந்த நிலப்பரப்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்படவேண்டும் என்றும் நடுவண் அரசே ஏன் இத்திழிற்சாலையை நடத்தக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தங்கள் கட்சி ஏற்கெனவே சாத்தான்குளம், இராதாபுரம் பகுதி மக்களை சந்தித்து 'முதல் தகவல் அறிக்கை' தயாரித்திருப்பதாகவும் மக்களிடையே அச்சமும் குழப்பமும் நிரவி இருப்பதாகவும் அவர் கூறினார்.

கையகப் படுத்தவிருக்கும் 16,000 ஏக்கரா நிலப்பரப்பில் 315 ஏக்கராநிலம் மட்டுமே விளைநிலமென்ற அரசின் கூற்றை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...