.

Showing posts with label பதவி விலகல்். Show all posts
Showing posts with label பதவி விலகல்். Show all posts

Monday, August 27, 2007

அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் இராஜிநாமா

அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். நீதித் துறையை அவர் தலைமையேற்று நடத்துவது குறித்து, தொடர்ந்து பல மாதங்களாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.

கடந்த ஆண்டு ஒன்பது அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கப்பட்ட விடயத்தில் அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தீவிரவாதத்தின் மீதான போர் என புஷ் அரசால் கூறப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் அதிபர் புஷ் அவர்களின் அதிகாரங்களை விரிவுபடுத்த அவர் அனுமதித்தார் என்கிற விடயம் தொடர்பாக அவர் அதிகப்படியான அழுத்தத்தை சந்தித்து வந்தார்.

தமிழ் பிபிசி

US Attorney General Gonzales Resigns | World Latest | Guardian Unlimited
Gonzales has been loyal voice for administration - CNN.com

Monday, August 20, 2007

பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அதிமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. கருணாநிதியை பொருத்தவரை இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தே தீரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் விடாபிடியாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் தெரிந்தே பொய் சொல்வது, உண்மைகளை சொல்லாமல் மறைப்பது, மக்களுக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுவது போன்ற நிலைகளில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்பட்டுள்ளார்.

எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும். இல்லை என்றால் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டியது வரும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Friday, July 27, 2007

சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார்.

நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம் வந்துள்ளார். தான் விஞ்ஞானியாக இருக்கும்போது அடிக்கடி சாப்பிடும் ஓட்டலான அண்ணாசாலை அன்னலட்சுமி ஓட்டலுக்கு சென்ற கலாம், அங்கு சாம்பார், ரசம், போண்டா உள்ளிட்டவைகளை ருசித்தார். அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகள் கலாமிடம் வந்து பேசி ஆட்டோகிராப் பெற்றுச் சென்றனர். இரவு 11.45 மணி வரை அவர் அங்கு இருந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Saturday, July 14, 2007

ஆதாயம் தரும் பதவி:பாஜ எம்பி பதவி பறிப்பு

ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக-வின் கிருஷ்ண முராரி மொகேவின் எம்பி பதவியை பறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடவடிக்கை எடுத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான மாநில நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

அரசியல் சட்ட விதிகளின் கீழ் ஆதாயம் தரும் இரண்டு பதவிகளை ஒரேநேரத்தில் கிருஷ்ண முராரி வகித்து வந்ததாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜமுனா தேவி, குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பியிருந்தார்.

- MSN INDIA

BJP loses strength ahead of presidential poll- Hindustan Times
Kalam’s nod to Moghe disqualification

Friday, June 29, 2007

இஸ்ரேல் அதிபர்் பதவி விலகினார்: சர்ச்சை தொடர்கிறது

பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டு சிறை செல்லவேண்டிய நிலையில் தனது ஏழு வருட பதவிகாலத்தில் இரு வாரங்களே பாக்கியுள்ள நிலையில், பலரும் விமரிசிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலிய அதிபர்மோஷே காட்சவ் தனது பதவியை துறந்தார். இதன் காரணமாக தனது முன்னாள் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டது, அவர்களை பெண் என்பதால் அலுவலகத்தில் துன்புறுத்தியது போன்ற சிறு குற்றங்களுக்கே விசாரிக்கப் படுவார். தவிர அவரது சிறை தண்டனை இடைநீக்கம் செய்யப்படும். அட்டார்னி ஜெனரலின் இந்த தாராள மனதிற்கு பெண்ணீயவாதிகளும் அரசியல் நோக்கர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...