.

Friday, July 27, 2007

சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார்.

நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம் வந்துள்ளார். தான் விஞ்ஞானியாக இருக்கும்போது அடிக்கடி சாப்பிடும் ஓட்டலான அண்ணாசாலை அன்னலட்சுமி ஓட்டலுக்கு சென்ற கலாம், அங்கு சாம்பார், ரசம், போண்டா உள்ளிட்டவைகளை ருசித்தார். அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகள் கலாமிடம் வந்து பேசி ஆட்டோகிராப் பெற்றுச் சென்றனர். இரவு 11.45 மணி வரை அவர் அங்கு இருந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...