
புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க....அப்ப பழைய கல்யாணம்?
சற்றுமுன் செய்திகள் இப்போது இங்கே....http://satrumun.com/
Sunday, September 9, 2007
சற்றுமுன்: ஸ்ரீகாந்த் - வந்தனா
Posted by
✪சிந்தாநதி
at
10:36 PM
0
comments
Tuesday, September 4, 2007
ஈழத் தமிழர் வரலாறு
சென்னை, செப். 4: ‘தமிழ் பாசறை’ என்ற பட நிறுவனம் ஈழத் தமிழர் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை வி.சி.குகநாதன் இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். அர்ச்சனா, ராரி, சுஜா நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நவம்பர்-26 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தினகரன் நிருபரிடம் வி.சி.குகநாதன் கூறியதாவது:
ஈழத்தில் வாழும் தமிழர்களின் வரலாறு, அங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற கதைகளை உள்ளடக்கிய வரலாற்று திரைப்படம் இது.
50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தேவா இசையில் 8 பாடல்கள் பதிவாகி இருக்கிறது. இதில் 3 பாடல்களை யார் கண்ணன், புகழேந்தி தங்கராஜ், செல்வராஜன் ஆகியோர் படம் பிடிக்கிறார்கள்.
ரியாஸ்கான் இலங்கை மன்னராக நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஒரு மணி நேர படமாக தயாரிக்கப்பட்டு ஆங்கிலம், ஜெர்மன், கனடா, பிரஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.
இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.
நன்றி: தினகரன்
Posted by
சிவபாலன்
at
5:18 AM
0
comments
Sunday, September 2, 2007
அர்னால்டு இந்தியா வருகிறார்

அணுஆயுத ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு நவம்பர் மாதம் டெல்லி வருகிறார்.
இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்க அரசியலில் அதிரடியாக குதித்தார். அரசியலில் அமோக வெற்றி அவருக்குக்கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக கலிபோர்னியா மாநில கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் அர்னால்டு வருகிற நவம்பர் மாதம் தனது குடும்பத்தாருடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அப்போது அவர் டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். அரசியல் நல்லெண்ண தூதராகவும், அணுஆயுத விவகாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்காவிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் இந்தியா வருகிறார்.
எனவே அவர் டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
6:18 PM
0
comments
கலைமாமணி விழாவில் கருணாநிதி பேச்சு.
2006-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் 69 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
கலைமாமணி விருதுகளை ஆளுநர் பர்னாலா வழங்க, பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். விழாவில், கருணாநிதி பேசியது:
இந்த ஆண்டு சின்னத்திரை கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக, அவர்களிடத்தில் ஒரு ஆதங்கம் இருந்தது. அவர்களுக்கும், விருது வழங்க வேண்டும் என்று. அதுகுறித்து என்னிடம் முறையிட்டார்கள்.
அதை நிறைவேற்றும் இடத்தில் நான் அப்போது இல்லை. தற்போது, நிறைவேறி இருக்கிறது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது முன்பு, சங்கீத நாடக சபா என்று இருந்தது. அதற்கு, திமுக ஆட்சியில் தான் இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றப்பட்டது.
தமிழுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி அஸ்தஸ்து குறித்து பெருமை பேச வேண்டுமானால் என்னைத் தான் (கருணாநிதி) பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார். அதை, புதையலாகப் பாதுகாத்து வருகிறேன்.
இன்று தமிழைக் காப்பாற்ற, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழைக் காப்பாற்றுகிறவர்கள் எனக் கூறுபவர்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. நாமும் ஏமாற்றி விடக் கூடாது.
கலைஞர் "டிவி'யை தமிழில் நடத்த வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். கலைஞர் "டிவி'யில் தமிழ் வாழுமா எனக் கேட்கிறார்கள். கலைஞர் வாழ்கிறாரோ இல்லையோ? தமிழ் வாழும். அது, மற்றவர்களையும் வாழ வைக்கும்.
பகையைக் கக்கிக் கொண்டு தமிழைக் காப்பாற்ற முடியாது. உள்உணர்வுடன் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழைக் காப்போம் என்றார் கருணாநிதி.
தினமணி
Posted by
வாசகன்
at
5:49 PM
0
comments
Friday, August 31, 2007
இளையராஜாவுக்கு என்.டி.ஆர். விருது - ஆந்திர அரசு அறிவிப்பு
சித்தூர், ஆக.31-
நடிகர்கள் கிருஷ்ணா, அம்பரிஷ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு ஆந்திர அரசு சார்பில் என்.டி.ஆர். விருது வழங்கப்படுகிறது.
ஆந்திரா மாநில அரசு சிறந்த கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. 2002க்கு பின்னர் விருது வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
ராஜசேகர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த விருது வழங்குதல் தகவல் துறையில் இருந்து தெலுங்கு சினிமா துறை வளர்ச்சி கழகத்துக்கு மாற்றப்பட்டது.
விருது பெறும் நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு சிபாரிசு செய்ய 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இதில் டி.எல். காந்தாராவ், எம். பாலையா, எம். மோகன்பாபு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த கமிட்டி 2003 முதல் 2005 வரை 3 ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயரை சிபாரிசு செய்து, மாநில தகவல் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயணரெட்டியிடம் அனுப்பியது.
இதையடுத்து என்டிஆர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐதராபாத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று அறிவித்தார்.
அதன்படி 2003ம் ஆண்டுக்கான விருது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கும், 2004ம் ஆண்டுக்கான விருது இசைஞானி இளையராஜா வுக்கும், 2005ம் ஆண்டுக்கான விருது பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ§க்கும வழங்கப்படுகிறது, இதற்கான விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
8:40 PM
0
comments
மான் வேட்டை:சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது
சிங்காரா மான் வேட்டை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமும் ரூ50,000க்கு கடன்பத்திரமும் பெற்று ஜாமீனில் விட உத்திரவிட்டது. வழக்கின் விசாரணை 24 அக்டோபருக்கு தள்ளிப் போடப்பட்டது.
முழு விவரங்களுக்கு Rajasthan HC grants bail to Salman
Posted by
மணியன்
at
6:30 PM
0
comments
Thursday, August 30, 2007
சிவாஜி' (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்
சென்னை, ஆக.29-
ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மேலும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்கிறார்.
மேலும் செய்திக்கு "தினதந்தி".
Posted by
சிவபாலன்
at
3:09 AM
0
comments
Wednesday, August 29, 2007
'டாக்டர்கள்' விஜய், ஷங்கருக்கு எதிராகப் போராட்டம்
நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதைக் கண்டிக்கும் விதமாக கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதுவும் செய்யாத கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகர் விஜய்க்கும், தமிழுக்கு எதிரான படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தை வன்மையாக கண்டிக்கும் வகையில் தான் இப்போராட்டத்தை நடத்தினேன்என்றார்.
Posted by
வாசகன்
at
10:40 PM
0
comments
ஷோலே பட உரிமை: ரூ400 கோடி
இந்தி திரைப்படமான ஷோலே இரமேஷ் சிப்பி இயக்கி ஜிபி சிப்பி தயாரிப்பில் வெளிவந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம். கப்பர்சிங்கின் வில்லத்தன சிரிப்பும் பசந்தியின் தொடர்ந்த வாயாடிப் பேச்சும் இன்னும் அதன் ஈர்ப்பை விடவில்லை. இந்தப் படத்தின் கதையை ஒட்டி தென்னக இராம்கோபால் வர்மா புதிய ஷோலே படத்தை எடுத்துவருகிறார். மோகன்லால், அமிதாப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படம் சர்ச்சையை கிளப்பியது. உரிமை மீறல் வழக்கு காரணமாக முதலில் 'இராம்கோபால்வர்மாவின் ஷோலே' என்றும் பின்னர் இராம்கோபால்வர்மாவின் ஆக் 'என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரிதீஷ் நந்தியின் தயாரிப்பு நிறுவனம் ஷோலே படத்தின் உரிமத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து ரூ400 கோடி($100 மில்லியன்)க்கு வாங்கியுள்லதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி இவர்களே இப்படத்தை மீண்டும் எடுக்கவோ படத்தை ஒட்டிய முன்கதையையோ பின்கதையையோ எடுக்கவும், சித்திரங்களாலான படமெடுக்கவோ உரிமை உள்ளது.
இது பற்றிய செய்தி துணுக்கு: It's official: Pritish Nandy ki Sholay-Entertainment-Media / Entertainment -News By Industry-News-The Economic Times
Posted by
மணியன்
at
1:23 PM
0
comments
Tuesday, August 28, 2007
"சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.
நடிகர் விஜய், டைரக்டர் ஷங்கர் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கான விழா மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல் கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலையில் நடந்தது.
பட்டம் பெற்ற நடிகர் விஜய் நன்றி தெரிவித்து பேசிய தாவது:-
இந்த நேரத்தில் மாண வர்களுக்கு ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உபதேசம் செய்யப் போகிறேன் என்று பயந்து விட வேண்டாம். உலக அரங்கில் இந்தியா 2020-ல் முதல் இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களாகிய நீங்கள் நினைத்தால் 2010-ம் ஆண் டிலேயே இந்தியா அந்த நிலையை அடைந்து விடும். அந்த சாதனையை உங்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.
மாணவர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு செல் கிறார்கள். வெளி நாட்டுக்கு போவதை ஒரு பேஷ னாகவே கருதுகிறார்கள். அறிவை கொடுப்பது நம்நாடு அறுவடை செய்வது அன்னிய நாடா. இங்கு படித்து பட்டம் பெறும் ஒவ்வொரு தமிழ் மாணவ னும் தமிழ்நாட்டில்தான் வேலை செய்ய வேண்டும்.இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் உள்ள மரியாதை உங்களுக்கு தெரியும். நம் அறிவை பயன்படுத்திக் கொண்டு விரட்டி விடுவார்கள். அந்த அறிவை நம் நாட்டுக்கு கொடுக்க வேண்டும். உங்கள் சக்தியும் வியர்வையும் நம்நாட்டில் தமிழ் மண்ணுக்கு பயன்பட வேண்டும்.
மேலும் செய்திக்கு மாலை மலர்
Posted by
சிவபாலன்
at
9:53 PM
39
comments
Monday, August 27, 2007
சந்திரபாபு நாயுடு மகன் பாலகிருஷ்ணா மகளை மணந்தார்
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. தனது மாமாவும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகள் பிராமிணியை அவர் மணந்தார்.
எளிமையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, நாகேஷ்வர ராவ், ஜெயசுதா, கிருஷ்ணம் ராஜூ உள்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் திருமண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் முதல்வர் ராஜசேகர ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் சபாநாயகர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், தெலுங்கு சினிமா உலகில் நீங்கா இடம் பெற்ற, மறைந்த என்.டி. ராமராவின் மகன் ஆவார்.
தினமணி
Posted by
Boston Bala
at
5:13 AM
0
comments
Sunday, August 26, 2007
திடீர் உடல் நலக்குறைவு: நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார்.
ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
6:20 PM
1 comments
Saturday, August 25, 2007
சல்மான்கான் கைது: ஜோத்பூர் விமானநிலையத்தில்
1998இல் நடந்த சிங்காரா மான் வேட்டை வழக்கில் தனது பிணைமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் காவலர்களிடம் சரண் அடைவதற்காக ஜோத்பூர் வந்த இந்தி நடிகர் சல்மான்கானை விமானநிலையத்திலேயே கைது செய்தனர்.
முன்னதாக தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞருடனும் காலை 1130 மணி ஜோத்பூர் விமானத்தில் புறப்படவிருந்த சல்மான் நிருபர்களிடம் பேசும்போது தன்மீது பிணையில் எடுக்கமுடியாத கைது ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதால் தனது சட்ட ஆலோசகர்கள் சரண் அடையுமாறு அறிவுறுத்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக நானே அங்கு சென்று சரண் அடைவேன் என்றும் மேலும் கூறினார்.
Salman Khan arrested at Jodhpur airport-Politics/Nation-News-The Economic Times
Posted by
மணியன்
at
1:46 PM
0
comments
Monday, August 20, 2007
சஞ்சய் தத்துக்கு பெயில்
உச்ச நீதி மன்றம் இன்று சஞ்சய் தத்துக்கு இடைக்கால பெயில் வழங்கியது. மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் சஞ்சய் தத் சார்பி கோர்ட்டில் ஆஜரானார். தடா நீதிமன்றம் தீர்ப்பின் பிரதியை சஞ்சய் தத்துக்கு வழங்கிய உடன் அவர் மீண்டும் கோர்ட்டில்் சரணடைந்து வழக்கமான பெயிலுக்கு மீண்டும் மனு செய்யவேண்டும். இதே கட்டுப்பாடுகளுடன் மேலும் ஐந்துபேருக்கு இடைக்கால பெயில் வழங்கப்பட்டது.
Family, friends cheer reprieve given to Sanjay Dutt Hindu -
Supreme Court Grants Sanjay Dutt, 5 Others Interim Bail
Bollywood Happy, Waits For Sanjay To Get 'regular' Bail
Posted by
சிறில் அலெக்ஸ்
at
5:30 PM
0
comments
Monday, August 13, 2007
"பள்ளிக்கூடம்" வி ம ர் ச ன ம்
‘பத்து மாதம் கருவில் சுமந்த தாயை காலம் முழுவதும் சுமக்கிறோம். ஆனால், 10 வருடம் சுமக்கும் பள்ளியை மறந்து போகிறோம்’ என்ற முன்னுரையோடு தொடங்கும் படம். கிராமத்து பள்ளிக்கூடங்களின் நிலை, அதற்குள் உறங்கி கிடக்கும் உணர்வுகள், அதை வாழவைக்க நல்ல யோசனைப் பற்றி பேசுகிறது.
பல்லவமங்கலம் பச்சைமுத்து உயர்நிலை பள்ளியில் படிக்கும் நரேன் கலெக்டராகிறார், சீமான் சினிமா இயக்குனராகிறார், தங்கர் பச்சான் படிப்பு ஏறாமல் அதே ஊரில் கூலிக்காரராகிறார். சினேகா அதே பள்ளியில் ஆசிரியையாகிறார். போதிய பராமரிப்பின்மையாலும் சொத்துக்கு ஆசைப்படும் நிர்வாகியாலும் பள்ளி மூடப்படும் நிலை வருகிறது. இதனால் முன்னாள் மாணவர்களைத் திரட்டி அவர்களது நன்கொடை மூலம் பள்ளியை மூடாமல் தடுப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. முன்னாள் மாணவர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். கலெக்டர் நரேனை அழைத்து வரும் பொறுப்பை தங்கர் பச்சான் ஏற்றுக்கொண்டு கிளம்புகிறார். சென்ற இடத்தில் இயக்குனர் சீமானையும் சந்திக்கிறார். நரேன், சீமான் இருவருக்குமே கிராமத்தில் அழுத்தமான பிளாஷ்பேக் இருக்கிறது. அந்த உணர்வுகளையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் மீறி அவர்கள் பள்ளியை காப்பாற்றுகிறார்களா? என்பது கதை.
இனி சொந்த ஊருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கும்பிடும் இடம் கோவிலாக மட்டும் இருக்காது, பள்ளிக்கூடமும் அதில் இணைந்திருக்கும். அதைச் செய்திருக்கிறது பச்சானின் இந்தப் பள்ளிக்கூடம்.
முழுவதும் படிக்க "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
9:25 PM
4
comments
ஷங்கர், விஜய்க்கு டாக்டர் பட்டம்
மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் இயகுநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
விஜய்க்கு டாக்டர் பட்டம் - சினி சவுத்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:54 PM
8
comments
Friday, August 10, 2007
கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ....
நடிகர் கமல ஹாசன் தனது தசாவதாரம் படம் பற்றிய வழக்கொன்றிற்க்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். துணை இயக்குனர் செந்தில்குமார் என்பவர் தசாவதாரம் கதை தன்னுடையது , இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் கமலஹாசன் இக்கதை எதையும் தழுவியதில்லை எனவும் தன்னுடைய கதையே எனவும் விவரமாக எடுத்துரைத்தார். ஆங்கிலத்தில் படத்தின்் திரைக்கதையை தரவும் ஒப்புக் கொண்டனர். பல ஆண்டுகளாக பலபரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற தனக்கு யாருடைய கதையையும் திருடவேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.
ஏராளமான கமல் இரசிகர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
IndiaGlitz - Kamal Haasan in court - Tamil Movie News
Posted by
மணியன்
at
7:58 PM
0
comments
Wednesday, August 8, 2007
2005க்கான தேசிய திரைப்பட விருதுகள்
Best feature film
Kaalpurush (Bengali), Director Buddhadeb Dasgupta
Indira Gandhi Award for Best First Film of a Director
Prodip Sarkar, Parineeta (Hindi)
Best Director
Rahul Dholakia, Parzania (English)
Best Actress
Sarika, Parzania
Best playback singer (Male)
Naresh Iyer, Roo ba roo, Rang De Basanti
Best playback singer (Female)
Shreya Ghoshal, Apne aansoo peene ke liye (Paheli)
Best music direction
Lalgudi Jayaraman (Sringaram)
Best Popular Film
Rang de Basanti (Hindi)
Nargis Dutt Award for Best Feature Film on National Integration
Daivanamathil (Malayalam)
Best Actor
Amitabh Bachchan, Black
Best supporting actor
Naseeruddin Shah, Iqbal
Best supporting actress
Urvashi, Achhuvinte Amma
Best child artiste
Sai Kumar, (Bommalata)
Best cinematography
Madhu Ambat, Sringaram
Special jury award
Anupam Kher, Maine Gandhi Ko Nahin Mara
நன்றி: Indian Express
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:39 PM
2
comments
Tuesday, August 7, 2007
‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.

தங்கர்பச்சான் இயக்கியுள்ள ‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி தனது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி ஆகியோருடன் பார்த்தார். முதல்வரை தங்கர்பச்சான், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, தயாரிப்பாளர் விஸ்வாஸ் வி.சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.
Posted by
சிவபாலன்
at
8:21 PM
1 comments
சாலமன் பாப்பையாவை கண்டித்து துண்டுப் பிரசுரம்
விழுப்புரத்தில் கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு தலைமை வகிக்க சாலமன் பாப்பையா வந்தார். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர் ஜோதி நரசிம்மன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
சிவாஜி திரைப்படத்தில் நடித்த சாலமன் பாப்பையா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரை அவமதிக்கும் வகையில் வசனம் பேசியதாகவும், இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து தமிழ் ஆர்வலர்கள் ஜோதி நரசிம்மன், கோ.பாபு, கோ.கணேசன், ஆனந்தன் உள்ளிட்ட 8 பேரை சப் இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்தார்.
தினமணி
Posted by
Boston Bala
at
12:13 AM
19
comments
b r e a k i n g n e w s...
