.

Showing posts with label கருத்துக்கணிப்பு. Show all posts
Showing posts with label கருத்துக்கணிப்பு. Show all posts

Tuesday, August 14, 2007

89% பேர் மீண்டும் இந்தியர்களாகப் பிறக்க விருப்பம்

தேசத்தின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களை முன்வத்து ஏ.சி. நீல்சன் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 89% இந்தியர்கள் வாய்ப்பிருந்தால் மீண்ட்டும் தாய்நாட்டிலேயே பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பிறக்க விருப்பமில்லை எனத் தெரிவித்த 11% பேர் 15-25 வயதுக்குட்பட்டவர்கள்.

15% மட்டுமே இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வியாபாரம் உயர்ந்துள்ளது 57%
அறிவியல் தொழில் நுட்பம் உயர்ந்துள்ளது 43%
கல்வி உயர்ந்துள்ளது 19%
அரசியலில் முன்னேற்றமில்லை 39%

மொத்தம் பங்கெடுத்தவர்கள் 380பேர்.

9/10 Indians want to be reborn as Indians Business Standard
Indians perceive most growth in biz & commerce sector: Nielsen Study Indiantelevision.com

Tuesday, August 7, 2007

மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக 'அட்டாக்' பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

முந்தைய சற்றுமுன்: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

தினமணி

IBNLive.com > Top cop, 15 others charged for Dinakaran attack
DNA - India - 16 chargesheeted in Dinakaran attack case - Daily News & Analysis

உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகிய 4 கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன.

ஐஐடி 57-வது இடத்தையும், ஐஐஎம் 68-வது இடத்தையும், ஜவாகர்லால் நேரு பல்கலை. 183-வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள 3703 கல்வி நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைசிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், தலைசிறந்த 100 அறிவியல் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 33-வது இடத்தையும் ஐஐடி பிடித்துள்ளது. கலைப் படிப்புகளைப் பொருத்தவரையில், தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் தில்லி பல்கலைக்கழகம் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி

Deccan Herald - Four Indian institutions in world university rankings
IITs 57th in list of world's top varsities :: Economic Times

Wednesday, June 20, 2007

மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி யாருக்கு? (குமுதம் கருத்துக்கணிப்பு முடிவுகள்)

இந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் பெருமாளை சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார், அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகம். அவர் இறந்ததையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

மதுரையை இரண்டாகப் பிரித்துச் செல்லும் வைகை ஆற்றின் வடபுறமும் தென்புறமும் வியாபித்துள்ள தொகுதி இது. மதுரையின் அடித்தட்டு மக்கள் முதல் உட்சபட்ச பணக்காரர்கள் வரை இந்தத் தொகுதியில் வசிக்கிறார்கள். மதுரை மாநகராட்சியின் இருபது வார்டுகள் கொண்ட இந்தத் தொகுதியின்
வாக்காளர் எண்ணிக்கை 156,180.
இதில் ஆண் வாக்காளர்கள் 77,531
பெண் வாக்காளர்கள் 78,649

"பெரியாறு அணையில் தண்ணி இல்லே. அடுத்த மாசம் மதுரையில் குடிக்கவே தண்ணீர் இருக்காது. தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் கேரளத்திலுள்ள எல்லாக் கட்சிக்காரங்களும் ஒண்ணா இருக்காங்க. இங்கே அரசியல்வாதிகள் அதைப்பற்றியே கவலைப்படாமல் தெருச்சண்டை போட்டுக் கொண்டு இருக்காங்க. காவிரி பற்றி வாயே திறக்காத ரஜினியின் 'சிவாஜி' படத்தைப் பார்க்க மதுரையில் பாதி ஜனம் தியேட்டர் முன்னாடி நிக்குது. நீங்க பெட்டியைத் தூக்கிட்டு 'எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடப் போறீங்க?'ன்னு கேட்டு வந்துட்டீங்களாக்கும்..." என சட்டையைப் பிடித்திழுக்காத குறையாக கோபப்பட்டவர்களும் உண்டு.

வாக்காளர்களிடம் பெற்ற 1990 ஓட்டுகளில் 'தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்' என காரசாரமாக எழுதிப்போட்டிருந்த நான்கு சீட்டுகளை நீக்கிவிட்டு, மீதமிருந்த 1986 ஓட்டுகளையும் பரிசீலித்தோம்.


கருத்துக் கணிப்பின் போது கணிசமான வாக்காளர்கள் விடாப்பிடியாக 'ஓட்டுப்போட ஓர் ஐந்து ரூபாயாவது தாங்க...' என நம்மிடம் கேட்டது வேதனையான விஷயம். அதனால் இந்தத் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் பணத்துக்குப் பெரும் பங்கு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு முன்னணி அரசியல்கட்சிகள் ரகசியமாக பணப்பட்டுவாடா செய்து கொண்டுதான் இருக்கின்றன.

- ப. திருமலை / குமுதம் ரிப்போர்ட்டர்

Monday, May 21, 2007

சிவாஜி தமிழ் பெயரா?

சற்றுமுன் சர்வே முடிவு


முந்தைய சர்வே: கல்விக்கூடங்களில் ராகிங்...

-o❢o-

b r e a k i n g   n e w s...