மஹாராட்டிர மாநிலத்தில் பர்தூரில் பழங்குடி மக்களுக்காக சிறுவர் பள்ளி/விடுதி ஒன்றில் மூன்று பதின்ம வயது மாண்வர்கள் தங்கள் இளைய பள்ளித்தோழர்களை விடுமுறை கிடைக்கும் என்பதற்காக கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிப்யா காலே,வல்லப் காலே, நாம்தேவ் காலே ஆகிய மூவரும் 8 வயது அஷோக் காலே மற்றும் அவன் தம்பி ஐந்து வயது மங்கல் காலே இருவரையும் செவ்வாய் இரவு பக்கத்தில் இருந்த பண்ணைக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூச்சை நிறுத்தி கொன்றிருக்கிறார்கள். அங்கேயே படிக்கும் இறந்தவர்களின் சகோதரியின் புகாரின் பேரில் தேடத்தொடங்கிய ஆஸ்ரமமசாலை மேலாளர்கள் இருவரின் உடலையும் பள்ளி கழிவறையொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பழங்குடி சிறுவர்களுக்காக நடத்தப்படும் அந்த விடுதியில் யாரேனும் இல்லவாசிகள் இறந்தால் 15 நாட்கள் விடுமுறை விடுவது பழக்கமாயிருந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவரும் இந்த விடுமுறைக்காகவே இக்கொலையை செய்ததாக கூறினர். காவலர்கள் பாலியல் குற்றங்களுக்காக கொலை நடக்கவில்லை என உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனையும் அதனை உறுதிசெய்துள்ளது.
இக்குழந்தைகளின் பெற்றொர் மும்பையில் கூலிவேலை செய்கின்றனர். தங்களால் ஆஸ்ரமத்தில் கிடைக்கும் வசதியை கொடுக்கமுடியாது என்பதால் சகோதரி இந்திராவை அங்கேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
Khabrein.info
Thursday, August 23, 2007
பள்ளி விடுமுறைக்காக கொலை செய்த மாணவர்கள்
Posted by
மணியன்
at
4:56 PM
0
comments
Wednesday, August 22, 2007
திருச்சி - இலங்கைத் தமிழருக்கு வந்த சோதனை - 3 ஏட்டு கைது
திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது பெரியம்மாவின் மகன் ரமேஷ் (32). இலங்கைத் தமிழரான இவர், லண்டனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற இவர்கள், லண்டன் நகரில் உள்ள லெஸ்தர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
கடந்த 3-ம் தேதி லண்டனில் இருந்து திருச்சி வந்த ரமேஷ், தனது உறவினரான ஜெயராஜ் வீட்டில் தங்கியிருந்தார். 19-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் வீட்டுக்கு வந்த 6 பேர் தங்களை சிபிசிஐடி குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வீட்டில் இருந்த ரமேஷ் யார் என்று கேட்டனர்.
பின்னர், ரமேஷைப் பார்த்து, ‘உனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு சில ஆதாரங்களும் உள்ளது. உன் மீது வழக்கு போடாமல் இருக்க எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று கூறி மிரட்டினர்.
மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.
Posted by
சிவபாலன்
at
6:53 PM
0
comments
b r e a k i n g n e w s...
