பெய்ஜிங், மே 30: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முன்னாள் இயக்குனர் ஜெங் ஜியாவோ-க்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.
63 வயதான ஜெங் ஏற்கெனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தனது பதவிக் காலத்தில் பணமாகவும், பரிசுப் பொருள்கள் மூலமாகவும் ரூ.5 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஜெங் தவிர 30 உயர்நிலை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் ஏற்கெனவே செய்திவெளியிட்டு வந்தன. மருந்து நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக ஜெங்கின் மனைவி, மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி
Wednesday, May 30, 2007
சீனாவில் ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை
Posted by
Boston Bala
at
9:15 PM
2
comments
தேசியப் பூப்பந்து போட்டி முடிவுகள்
சென்னை, மே 30: சென்னையில் நடைபெற்ற 52-வது ஆண்டு தேசிய சீனியர் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 13-29, 29-18, 29-25 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் தமிழக ஆடவர் அணியைத் தோற்கடித்தது.
ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து ஆந்திரம் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
கேரளம் வெற்றி:
முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான இறுதி ஆட்டத்தில் கேரள மகளிர் அணி 29-14, 29-15 என்ற செட்களில் கர்நாடகத்தை வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. அந்த அணி தொடர்ந்து 10-வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரை நேர் செட்களில் தோற்கடித்து 3-வது இடத்தை தமிழக அணி பெற்றது.
தினமணி
Posted by
Boston Bala
at
8:58 PM
0
comments
ஃபிரெஞ்ச் ஓபன்: இரண்டாம் சுற்றில் சானியா
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா இத்தாலியின் அல்பெர்ட்டா பிரியாட்டினியை 6-1, 6-1 என்ற நேர்கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் அர்ஜெண்டினாவின் ஜுஆன் மார்ட்டினை போராடி வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
சற்றுமுன் செய்திகளுக்காக வாசகன்.
Posted by
வாசகன்
at
8:29 PM
0
comments
குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு
ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்' என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.
குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.
தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, "இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு'' என்றார்.
தினமணி
முந்தைய சற்றுமுன்-கள்:
ச: இராஜஸ்தான் துப்பாக்கிசூட்டில் ஏழுபேர் மரணம்
ச: ராஜஸ்தானில் காவல் நிலையங்கள் எரிப்பு!
ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்
Posted by
Boston Bala
at
8:11 PM
0
comments
கான்பூரில் தீ விபத்து.
கான்பூரில் உள்ள எட்டடுக்கு வணிக வளாகத்தின் ஆறாம் மாடியில் சற்று முன் சம்பவித்த தீ விபத்தில் 60 பேருக்கும் மேல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியபடவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
டைம்ஸ் ஓஃப் இந்தியா
Posted by
வாசகன்
at
6:38 PM
0
comments
திமுகவுக்கு எதிராக சோனியா-மாறன் சதி
சென்னை, மே 30:
தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக செயல்பட சோனியாவுடன் சேர்ந்து தயாநிதி மாறன் முயற்சி செய்த தாலேயே அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார்.
முழு செய்திக்கு "மாலைச் சுடர்"
Posted by
சிவபாலன்
at
6:21 PM
5
comments
ச: மதுரை இடைத்தேர்தல்: அ தி மு க வை ஆதரிக்க பா ஜ க விருப்பம்.
மதுரை இடைத்தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்த மாநில தலைவர் இல.கணேசனின் நா உலருவதற்குள் அது காங்கிரஸ் கூட்டணியிலில்லாத கட்சிகளை, குறிப்பாக அ தி மு க வை ஆதரிக்கவோ, அவற்றின் ஆதரவை பெறவோ தயாராகி வருவதாக தேசியச் செயலாளர் திரு-நாவுக்கரசர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
இல்லை என்றால் தனித்து போட்டியிடுவோம். வேட்பாளர் பற்றி தேர்தல் குழு முடிவு செய்யும் என்றும் அவர் சொன்னார். மாலைமலர் நாளேட்டில் இச்செய்தி மலர்ந்துள்ளது.
Posted by
வாசகன்
at
6:09 PM
0
comments
ச: மதுரை மேற்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்
மதுரை, மே. 30-
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.
இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஆனாலும் மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ராஜாங்கம், தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ், ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம், கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.
அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை, மாணவரணி செயலாளர் உதய குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம், முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால் கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.
கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.
ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.
எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.
மாலைமலர்
Posted by
✪சிந்தாநதி
at
5:27 PM
0
comments
சீனாவின் சைபர் போலீஸ் - சில மணிகளில் தடை செய்யப்பட்ட ஆபாசத்தளம்
சீனாவில் ஆபாசத்தளம் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் தடை செய்யப்பட்டது.
www.rsf-chinese.org என்ற தளம் மே 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கி ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாகவே இந்தத் தளம் சீனா முழுவதும் தடை செய்யப்பட்டது.
தள நிர்வாகிகள், மூன்று வாரம் கழித்து, வேறொரு நிறுவனத்தின் இணையத் தொடர்புச் சேவையூடாக மே 25ஆம் தேதி மீண்டும் அதே தளத்தை வேறு புதிய பெயரில் வெளியிட்டார்கள். மீண்டும் அதே ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாக இந்த தளம் தடை செய்யப்பட்டு விட்டது.
www.rsf-chinese.org ஐச் சோதனை முயற்சியாகத் தொடங்கிய 'ஊடக சுதந்திரக் குழு', "சீன இணைய காவலர்கள்(cyber police) கீழ்த்தரமான, ஆபாச உள்ளடக்கம் கொண்ட சீன மொழித்தளங்களைக் கண்காணிக்கும் மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்" என்றும், ஆயிரம் இணைய தளத்துக்கு ஒரு தளம் என்ற கணக்கில் சீன மொழித் தளங்கள் இதுபோல் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
பாரிஸ் வழக்கறிஞர் ஒருவர் சீனாவின் இது போன்ற தடைகளை இணைய விரோத நடவடிக்கை என்கிறார். முப்பதாயிரத்திலிருந்து, நாற்பதாயிரம் இணைய காவலர்களை சீன அரசாங்கம் இது போன்ற பணியில் ஈடுபடுத்தி இருக்கும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள்.
DNA செய்தி
Posted by
பொன்ஸ்~~Poorna
at
5:03 PM
12
comments
ச: ரௌடித்தனம் செய்த தன் கட்சி எம்பியையே கைது செய்த முதல்வர்
் அசாம்கர் நகரில் தனக்கு அடிபணிய மறுத்த கடைகாரரின் கடையை தரைமட்டமாக்கிய பிஎஸ்பி கட்சி எம்பி உமாகாந்த் யாதவை உபி முதல்வர் மாயாவதி தன் வீட்டிற்கு அழைத்து காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் தள்ளினார். அவரிடம் விளக்கம் அளிக்க வந்த அந்த எம்பி மாயாவதியின் இந்தச் செய்கையை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. தவிர யாதவின் மகனையும் கட்சியிலிருந்து விலக்கிவைத்தார். இதன்மூலம் சட்டம் ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு வலுவான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Mayawati traps BSP MP in her home, sends him to jail - Yahoo! India News
Posted by
மணியன்
at
4:58 PM
4
comments
ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்
ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்துவரும் குஜ்ஜார் இனக் கலவர்ங்களுக்கு இராஜஸ்தான் அரசை குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி நீதியரசரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. அம்மாநில பிஜேபி அரசின் அடக்குமுறை அனைவரும் அறிந்தது என்று குறைகூறிய அக்கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த அரசு அதனை மக்களிடம் விளக்கமுடியாததால் இந்தக் கலவரங்களும் வன்முறையும் எழுந்துள்ளன என்றும் கூறியுள்ளது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
4:43 PM
0
comments
ச:91% எடுத்தும் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவன்
கொச்சியையடுத்துள்ள ஆலுவாவில் பள்ளியிறுதியில் 91% மதிப்பெண்கள் பெற்றும் பிரின்ஸ் தாமஸ் என்ற மாணவன் தன் பெற்றோர்களால் மேல்படிப்பிற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாதேயென்று தற்கொலை செய்துகொண்டுள்ளான். பிஎஸ்சி நர்சிங் படிக்க விரும்பிய அவன் அதிக நன்கொடை கொடுக்கவேண்டியிருக்கும், பனமுடையிலிருக்கும் தன் பெற்றோருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று இந்த முடிவிற்கு வந்ததாகத் தெரிகிறது.
DNA - India - He scored 91%, but still killed himself - Daily News & Analysis
Posted by
மணியன்
at
4:23 PM
0
comments
பெண்களை போல விமானப்பணியில் ஆண்கள் அறிமுகம்.
மேலும் விபரங்களுக்கு..... மாலை மலர்
Posted by
Adirai Media
at
3:26 PM
1 comments
ராஜஸ்தானில் காவல் நிலையங்கள் எரிப்பு!
குர்ஜார் வகுப்பினரை பழங்குடி வகையிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகைக்கு 'உயர்த்திய' அரசின் செயலைக் கண்டித்து நடைபெறும் கிளர்ச்சியில் இன்று டவுசா ('ர்' இல்லை) மாவட்டத்தில் இரு காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஜெய்ப்பூர் -ஆக்ரா நெடுஞ்சாலைப் போக்குவரத்து இக்கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவலரை காணவில்லை என்று பி.டி.ஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது
Posted by
வாசகன்
at
12:33 PM
0
comments
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் துறை முடிவு செய்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை காலை 11 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியல் எல்லா பள்ளிகளிலும் நாளை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதனால், இணைய தள வசதிகள் இல்லாத ஊர்களில், மதிப்பெண்களை பள்ளிகளிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
www.tnresults.nic.in
www.dge
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
ஆகியவை உட்பட 28 இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மேலும், பி.எஸ்.என்.எல். 7333, 6505, 12555, ஏர்டெல் 646, உள்ளிட்ட 11 எண்களில் எஸ்.எம்.எஸ் அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
Posted by
Adirai Media
at
12:30 PM
0
comments
பாலிவுட்டில் பாப் உல்மர்.
சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாப் உல்மரின் வாழ்க்கை வரலாற்றை இந்திக்காரர்கள் படமாக்கவுள்ளனர்.
பிரபல இயக்குநர் மகேஷ்பட், உல்மரின் கதையைப் படமாக்கப் போகிறாராம். உல்மரின் வாழ்க்கை வரலாறாக இது இல்லாமல், உலகக் கோப்பைப் போட்டியின்போது நடந்த உல்மர் மர்மச் சாவு சம்பவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு படமாக்குகிறாராம்.
படத்தில் உல்மரின் பெயர் ஒரு இடத்தில் கூட வராது என்று கூறும் மகேஷ்பட், இந்தப் படம் உலகக் கோப்பை போட்டியின்போது ஏற்பட்ட சர்ச்சை மரணம் குறித்து மட்டுமே பேசும் என்று விளக்கியுள்ளார். அதேசமயம், படத்தில் அழகான காதலையும் ஒரு கதையாக பின்னியுள்ளாராம். சூதாட்டம், படுகொலை பிளஸ் காதல் பின்னணியுடன் கூடியதாக இந்தப் படம் அமையுமாம்.
தட்ஸ் தமிழ்
Posted by
வாசகன்
at
12:04 PM
0
comments
கருணாநிதி மொத்த குடும்பம் - கனிமொழி - வீடியோ
கலைஞர் கருணாநிதி முதல் மனைவி - பத்மாவதி, குழந்தை - மு.க.முத்து
முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு தயாளு அம்மாள் மனைவியானார். குழந்தைகள் - அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசன்.
கலைஞர் கருணாநிதி - ராஜாத்தி அம்மாள் குழந்தை கனிமொழி.
தனது மகள் கனிமொழியின் அம்மா ராஜாத்தி அம்மாள் என்று சட்டசபையிலே கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழிதான் அவர் குழ்ந்தைகளில் அதிகம் படித்தவர். கான்வென்ட் பள்ளியில் பயின்றவர்.
முதுகலைப் பட்டம் பெற்றவர். Master Degree in Business Economics.
நன்றி: IBN LIVE.COM CNN IBN TV.
முழு விடியோ கிழே
Posted by
சிவபாலன்
at
9:04 AM
4
comments
ரஜினியின் சிவாஜி - EXCULSIVE TRAILER
ரஜினி நடித்து ஜீன் 15 வெளிவர உள்ள சிவாஜி படத்தின் TRAILER தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன் வீடியோ கிழே
நன்றி: IBN LIVE .COM - CNN IBN TV
Posted by
சிவபாலன்
at
8:17 AM
3
comments
எவரெஸ்ட் சிகரத்தை சுத்தமாக்கிய மலையேறிகள்
சாதனைக்காக சிகரத்தின் உச்சியைத் தொட்டு கொடியேற்றுபவர்கள் மத்தியில், ஜப்பானின் கென் நொகுச்சி (Ken Noguchi) தலைமையில் அமைந்த குழு ஐநூறு கிலோ குப்பைகளை எவரெஸ்ட் மலையில் இருந்து துப்புரப்படுத்தி சாதனை படைத்துள்ளார்கள்.
Climbers clear mountain of garbage from Everest: Scientific American
Posted by
Boston Bala
at
3:06 AM
2
comments
'ஆணுறை ராஜா'வுக்கு மில்லியன் டாலர் பேறு
தாய்லாந்தை சேர்ந்த Mechai Viravaidya-வுக்கு உலக சுகாதாரத்துக்கான கேட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆணுறைகளை விநியோகிப்பதில் பல புதுமைகளை செய்து குடும்பக் கட்டுப்பாடு பரவலாவதற்கும் எயிட்ஸ் பரவாமல் தடுப்பதற்கும் தொண்டு செய்ததற்காக ஒரு மில்லியன் பரிசு பெற்றிருக்கிறார்.
Thai "Condom King" wins Gates health award - washingtonpost.com
Thai activist against AIDS gets $1m prize - The Boston Globe
Posted by
Boston Bala
at
3:05 AM
0
comments
ருஷியாவில் தற்பால் நலன்விரும்பிகள் தாக்கப்பட்டு கைது
ஞாயிறன்று ருஷியாவின் மாஸ்கோ நகரில் தற்பால்விரும்பிகளின் நலனுக்கான ஆர்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் மாஸ்கோ நகர மேயரிடம் தற்பாலர் பேரணிக்கான தடையை நீக்கக் கோரி மனு கொடுக்க இருந்தார்கள். நகரத் தந்தை யூரி (Yuri Luzhkov) தற்பாலரை சாத்தானுக்கு ஒப்பாக ஏற்கனவே வர்ணித்துள்ளார்.
மனு கொடுக்கும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூர்க்கமாகத் தாக்கப்பட்டார்கள். தாக்கியவர்களை தடுத்து நிறுத்தவோ கைது செய்யவோ காவல்துறை மறுத்துவிட்டது. மேலும் அடிபட்டவர்களை சிறையில் அடைத்தது.
Gay activists beaten and arrested in Russia | Russia | Guardian Unlimited
Posted by
Boston Bala
at
2:07 AM
0
comments
இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை இந்திய இராணுவம் புதுப்பிக்கக் கூடாது - காஷ்மீர் மதகுரு
இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை கட்டுவது, புதுப்பிப்பபது போன்ற செயல்களில் இந்திய இராணுவத்தினர் ஈடுபடக் கூடாது என்று ஒரு மதஆணையை காஷ்மீரின் முக்கிய முஸ்லீம் மதகுரு வெளியிட்டுள்ளார். இது போன்ற செயல்களை செய்ய முஸ்லீம்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரில் கிளர்சியாளர்களுடன் மோதிவரும் இந்திய இராணுவம், தனது நல்லெண்ண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தான் இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர் தொகையை முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலன்களை சீரமைப்பதற்காக செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஆனால் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையானது, காஷ்மீர் மக்களின் மதச் சுதந்திரத்தில் தேவையில்லாமல் தலையிடும் ஒரு செயல் என்று காஷ்மீரின் தலைமை முஃப்தி பஷிருதீன் கூறியுள்ளார்.
- பிபிசி தமிழ்
BBC NEWS | South Asia | Kashmir fatwa over mosque rebuild
Posted by
Boston Bala
at
1:37 AM
0
comments
நைஜிரியாவில் புதிய அதிபர் பதவியேற்பு
நைஜீரியவின் புதிய அதிபராக உமாரு யார் அடுவா இன்று அதன் தலைநகர் அபுஜாவில் பதவி ஏற்றுக் கொண்டார். வெள்ளை நிற அங்கி அணிந்து ஒரு மேடையின் மீது நின்றவாறு அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக் கொள்வதை குறிக்கும் வகையில் உறுதிமொழியில் அவர் கையொப்பம் இட்டபோது அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தொலிகளை எழுப்பினர்.
தம்மை பதவிக்கு கொண்டு வந்த தேர்தலில் சில குறைபாடுகளும், தவறுகளும் இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்த அதிபர் தேர்தல் தவறானது என சர்வதேச பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நைஜீரிய மக்கள் சிந்தித்து முனைப்போடு சிறப்பாக செயல்படக் கூடியவர்கள் என்றும், பணிவு மற்றும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் குணங்களை பின்பற்றுமாறும் புதிய அதிபர் கோரியுள்ளார்.
எண்ணை வளம் மிகுந்த நிஜர் நதியின் டெல்டாப் பகுதியில் பணிபுரியும் பல வெளிநாட்டவர்களை கடத்தும் ஆயுதக் குழுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் மீது உடனடி கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
- பிபிசி தமிழ்
BBC NEWS | Africa | New Nigerian president sworn in
Posted by
Boston Bala
at
1:35 AM
0
comments
ஸ்பைஸ் ஜெட்டுக்கு 19 கோடி இழப்பு
குறைந்த கட்டண தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் கடந்த ஆண்டில் 19 கோடி ரூபாய் செயல்பாட்டு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் 121 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வர்த்தகம் 640 கோடி ரூபாயாகவும் செயல்பாட்டு செலவுகள் 659 கோடியாகவும் இருந்தது. தற்போது 11 விமானங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் மேலும் 8 விமானங்களை கூட்ட திட்டமிட்டுள்ளது.
MSN INDIA
Posted by
Boston Bala
at
1:26 AM
0
comments
மேற்கு இந்தியத்தீவுகளை இங்கிலாந்து வீழ்த்தியது
மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 283 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இரட்டை சதமடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்ஸன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 570 ரன்கள் எடுத்தது.மேற்கு இந்தியத்தீவுகள் அணி 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து பாலோ- ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய மேற்கு இந்தியத்தீவுகள், இந்த முறையும் 141 ரன்களுக்குள் சுருண்டது.
MSN INDIA - ஹெட்டிங்லி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி
Posted by
Boston Bala
at
1:22 AM
1 comments
b r e a k i n g n e w s...