.

Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Tuesday, September 4, 2007

தீவிரவாத பட்டியல்: வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை.

தீவிரவாத நாடுகள் பட்டியல் : வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை


வடகொரியாவை தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து விடுவிக்க அந்நாட்டிடமிருந்து மேலும் சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற அமெரிக்க வடகொரிய தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கும் என்று வடகொரிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதை மறுத்த அமெரிக்க பிரதிநிதி வடகொரியா அணுஆயுத திட்டங்களில் மேலும் சில நம்பிக்கையான செயல்களில் ஈடுபடும் வரை அந்நாட்டை பட்டியலிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

தினமலர்

பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலி

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் ஆர்.ஏ.பஜார் பகுதியில் அணுசக்தி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் குண்டுவெடித்ததில் 17 பேர் பலியாகினர். இரண்டாவது குண்டுவெடிப்பு ராவல்பிண்டி நகரின் வர்த்தகப்பகுதியான குவாசிம் பஜாரில் நிகழ்ந்தது. இதில்12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் மற்றும் அல்காய்தா அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர்

Saturday, September 1, 2007

சற்றுமுன்:கௌஹாத்தி மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு

கௌஹாத்தியின் மைய சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு இன்று மதியம் நடந்துள்ளது. இதனால் பலர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேல் விவரங்கள் இல்லை.

Blast rocks Guwahati market - Yahoo! India News

கடைசியில் கிடைத்த விவரங்கள்:DNA - India - One killed, 12 injured in Guwahati blast - Daily News & Analysis

Wednesday, August 29, 2007

ஆப்கான்: பணயக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தென் கொரியாவை சேர்ந்த 23சேவை நிறுவன ஊழியர்களை தலிபான் தீவிரவாதிகள் பணயக கைதிகளாக பிடித்துச் சென்றனர். இவர்களில் 2பேரை தீவிரவாதிகள் சுட் டுக்கொன்றனர். 2 பெண் ஊழியர்களை தீவிரவாதிகள் விடுதலை செய்தனர்.

மீதி உள்ள 19 பணயக் கைதிகளை மீட்க தீவிரவாதிகளுடன் தென் கொரிய அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து தென்கொரிய ராணுவத்தினரையும் வாபஸ் பெற அந்த அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதை தீவிரவாதிகள் ஏற்றுக் கொண்டனர். 1 மாதமாக தங்கள் பிடியில் சிக்கி இருக்கும் 19 பணய கைதிகளையும் விடுவிக்க அவர்கள் முன் வந்துள்ளனர்.

மாலைமலர்

Tuesday, August 28, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது

இந்திய உளவுத்துறை ஐந்து மாதங்கள் முன்னரே எட்டு கிலோ இராணுவதர வெடிமருந்துகள் ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்ட சம்பவங்களுக்காக ஹர்கத் உல் ஜிஹாதி யெ இஸ்லாமி தீவிரவாதகுழுவிற்கு கடத்தப்பட்டதை அறிந்திருந்தது. மார்ச் 2007இல் இந்தோ-பங்களா எல்லையில் கைது செய்யப்பட்ட ஹர்கத் குழுவினரிடமிருந்து இதை அறிந்தபோதே எச்சரிக்கை மணி அடிக்க தொடங்கியது. ஔரங்காபாத் நகர கணிப்பொறியாளர் ஷேக் நைமிடமிருந்து ஹைதராபாத்தில் திட்டமிட்டிருந்த செயல்களைப் பற்றி அறிந்தனர். அவர்மூலம் தெரிந்த ஒரு வங்கி ஊழியரை காவலர்கள் வளைத்துப் பிடிக்கும்போது அவரிடமிருந்து வெடிபொருட்கள் கைமாறிவிட்டன. சங்கேதங்கள் மூலமே அறிந்த அவர்களைப் பற்றி காவலர்களால் மேலே தொடரமுடியவில்லை.
The Hindu : Front Page : Intelligence had warned of strikes

Monday, August 27, 2007

துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி

துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி


துபாயில் தொழில்புரிந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் 16 வயது மகன் முஹம்மது யஹ்யா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலியான செய்தியறிந்து உடனடியாக தாயகம் திரும்பினார். இச்செய்தி அலியின் குடும்பத்தினரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.

முஹம்மது யஹ்யா ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா இளநிலை கல்லூரியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து யஹ்யாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து அங்கு சென்ற பொழுது யஹ்யா பிணமாக கிடந்தது கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஆந்திர மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home

Dubai resident's son among the dead in India blasts

ஆப்கன்: அமெரிக்கத் தாக்குதலுக்கு ஹமீத் கர்சாய் கண்டனம்.

ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

தெற்கு பகுதியில் மூசா காலா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறது.

இதை தொடர்ந்து இந்த பகுதிகளில் அமெரிக்க கூட்டு படையினர் விமான தாக்குதல் நடத்தியது.

தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி பொது மக்களின் குடியிருப்புகள் மீது விமானங்கள் சரமாரி குண்டு வீசின. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 அப்பாவி பொது மக்கள் பலியாகி விட்டனர். இன்னும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அமீது கர்சாய் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்

நன்றி: மாலைமலர்

Sunday, August 26, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது.

ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பின்னணியில் இருந்துள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் நாக்பூரில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இக்குண்டு வெடிப்புக்கு உதவியதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமலர்

Thursday, August 23, 2007

சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆனார்.

சஞ்சய் தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை ஆனார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக சஞ்சய்தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் நகலை தயார் செய்ய தாமதமானதால் நேற்று விடுதலை ஆக வேண்டிய அவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அவரை சிறை வாசலில் வந்து அழைத்து சென்றனர். இன்னும் ஒருமாத காலத்திற்கு அவர் வெளியே இருப்பார் என தெரிகிறது.

Wednesday, August 22, 2007

மருத்துவர் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்கிறார்

லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.அவரது ஆஸ்திரேலிய நுழைமதியும் தடை செய்யப்பட்டது. ஒரு மாத கால சிறைவாசத்துக்கு பிறகு ஹனீப் குற்றமற்றவர் என்று கூறி அவரை ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து இந்தியா வந்த ஹனீப், தான் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று பணியாற்ற விரும்புவதாகவும், தடை செய்யப்பட்ட தனது நுழைமதியை மீண்டும் தர வேண்டும் என்றும் கோரினார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஹனீப் தொடர்ந்த வழக்கில் ஹனீப்புக்கு மீண்டும் நுழைமதி வழங்குமாறு உத்தரவானது. இதையடுத்து அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் உறுதிபடுத்தியுள்ளார்.

Tuesday, August 21, 2007

ஜெர்மனியில் இந்தியர்கள் மீது தாக்குதல்

ஜெர்மனியின் மிக்லன் நகரில் ஒரு கண்காட் சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலை நிகழ்ச்சியில் இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான இந்தியர்கள் பார்வையாளர்கள் வரிசை யில் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது ஜெர்மனி நாட்டவர்கள் திடீர் என்று இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்டவர்கள் கண்மூடித்தனமாக தாக் குதல் நடத்தினார்கள். பாட்டில்களாலும் தாக்கி னார்கள். நாற்காலிகளை தூக்கி இந்தியர்களை அடித்தனர்.

இந்தியர்கள் உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள்.உயிர் தப்ப அருகில் உள்ள அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டனர். அந்த கலவரக்கும்பல் விடவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து இந்தியர் அடித்து உதைத்தனர்.

போலீசார் பெரும்பாடுபட்டு வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள்.

இந்தியர்களுக்கு எதிரான இந்த இனவெறி தாக்குதலில் 8 இந்தியர்கள், 2போலீசார் காயம் அடைந்தனர்.

மாலைமலர்

கிளாஸ்கோவில் இறந்தது கபீல் தானா?

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்று, தீயில் கருகி இறந்தவர் பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமதுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பெங்களூர் போலீஸôர் கூறுகின்றனர்.

எனவே, அவரது உடலையும் மருத்துவமனையிலிருந்து யாரும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது எரியும் ஜீப்பை மோதி தகர்க்க பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். அப்போது, தீப் பிடித்து எரிந்த ஜீப்பில் இருந்து ஓர் இளைஞரை பிரிட்டிஷ் போலீஸôர் மீட்டனர். அவர், பெங்களூரைச் சேர்ந்த ஏரோனாட்டிகல் என்ஜினீயர் கபீல் அகமது என்று பிரிட்டிஷ் போலீஸôர் கூறினர்.

90 சதவீத தீக் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர் சில வாரங்களுக்கு முன் இறந்தார். அவரது சடலம் ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

""ஸ்காட்லாந்தில் இறந்தது கபீல் அகமதுதானா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் பிரிட்டனில் இருந்து எங்களுக்கு இதுவரை வரவில்லை'' என்று கர்நாடக காவல் துறையின் குற்றப் பிரிவு இணை ஆணையர் கோபால் ஹொசூர் கூறினார்.

தினமணி

Sunday, August 19, 2007

சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள்

சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள்

சர்வதேச காவல்துறை தேடிவரும் பட்டியலில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகள் ராகத் உசேன் ( வயது 38 ) பெயர் இடம் பெற்றுள்ளது.

தூக்கிலிடப்பட்ட சதாமின் மூத்த மகளான ராகத் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அறிவித்து அவரைத் தேடி வருகிறது. சர்வதேச காவல்துறையான இண்டர்போல் சிவப்பு நோட்டிஸ் ராகத்தின் பெயரில் வெளியிட்டுள்ளது சர்வதேச கைது வாரண்ட் அல்ல. மாறாக வெளிநாட்டு காவல்துறை ராகத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுவதுடன், ஈராக்கிற்கு கொண்டு வர உதவி அந்நாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

ராகத் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஜோர்டான் நாட்டில் வசித்து வருகிறார். சிறிய சதாம் என்றழைக்கப்படும் இவர் தனது தந்தை கைது செய்யப்பட்டதும் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார்.

சதாமின் பாதுக்காப்புக் குழுவில் இடம்பெற்ற ஹிஸாம் அல் கஸ்ஸாவி ராகத் ஜோர்டான் மன்னரின் விருந்தினராக இருந்து வருகிறார். கடந்த வருடம் ஈராக் அரசு ராகத்தை ஒப்படைக்க கேட்டுக் கொண்டாலும் அதனை ஜோர்டான் மறுத்து விட்டது.

நன்றி : Gulf News

இண்டர்போல் இணைய முகவரியில் ராகத் உசேன்

http://www.interpol.com/public/Data/Wanted/Notices/Data/2006/06/2006_54606.asp?HM=1

Saturday, August 18, 2007

துருக்கியில் விமானக் கடத்தல்

துருக்கியில் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல் நோக்கி சென்றுகொண்டிருந்தா விமானத்தை இரு நபர்கள் கத்திமுனையில் கடத்தினர். விமானம் அவசரமாய் தரையிறக்கப்பட்டது. பின்னர் கடத்தல்காரர்கள் நான்குபேரைத் தவிர்த்து மற்ற பயணிகளை விடுவித்தனர்.

இறுதியில் கடத்தல்காரர்கள் சரணடைந்ததால் பெருத்த சேதமின்றி சம்பவம் முடிவுக்கு வந்தது.

Turkish plane hijackers surrender NEWS.com.au
Turkish jet hijack ends peacefully SI.com
Hijackers of Turkish plane are Iranians: report Hindustan Times

Wednesday, August 15, 2007

ஈராக்கில் 175பேர் பலி

ஈராக்கில் சற்றுமுன் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 175பேர் இறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. மூன்று எரிபொருள் லாறிகளைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு ஈராக்கில் யாஜிடீக்கள் எனும் பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

At least 175 killed in north Iraq bombings: army - ்Reuters

Saturday, August 11, 2007

அசோம்: இந்தி பேசுவோர்மீது மீண்டும் வன்முறை: 14 பேர் மரணம்

வெள்ளி இரவு கர்பி அங்லோங் மலைமாவட்டத்தில் டோலோராமா ரங்க் டெரொன் கிராமத்தில் ஆறு குழந்தைகள் உட்பட 14 இந்தி பேசும் மக்கள் மீது சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் 14 பேர் மரணமடைந்தனர்;மேலும் மூவர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் திலீப் சாஹூவின் வீட்டிலிருந்த அரிசி மில்லிற்கும் தீ வைத்தனர். குடும்பத்தலைவரான தில்லி சாஹூ தனது பிகார் கிராமத்திற்கு சென்றிருந்த நேரம் இது நடந்துள்ளது. இவர் வீட்டை அடுத்துள்ள ராம்குமார் சிங், ராம் நரேஷ் சிங் மற்றும் தினநாத் சர்மா ஆகியோர் வீடுகளிலும் உள்ளே நுழைந்து குடும்பத்தினரை சுட்டுக் கொன்றனர்.

மேலும்.Assam: 14 Hindi-speaking people slain

Thursday, August 9, 2007

தீவிரவாதிகள் தாக்குதலில் மணிப்பூர் அமைச்சர், எம்எல்ஏக்கள் தப்பினர்

மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில கல்வி அமைச்சர் ஜெயந்தா குமார், மற்றும் கா ரதான், லோகேஸ்சோர் சிங் ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் உயிர் தப்பினர்.

சாண்டல் மாவட்டம், லோக்சோ பகுதியில் முகாமிட்டிருந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட அமைச்சரின் பாதுகாவலர்கள் தீவிரவாதிகளை திருப்பி தாக்கினர். இருதரப்பினருக்கும் இடையில் அரைமணி நேரத்துக்கு மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில், பாதுகாப்பு வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் அடர்ந்த காடுகளின் வழியாக தப்பி சென்று விட்டனர்.

'குகி தேசிய ராணுவம்' என்ற பெயரில் செயல்படும் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

தினமணி

NDTV.com: Manipur minister escapes militant attack
The Telegraph - Calcutta : Northeast - Militants ambush convoy
Udayavani - 1363 people dead, 2816 injured in extremist violence
July 17: Indian police accused of torturing Kuki rebel leader
July 14: The Telegraph - Calcutta : Northeast - Kuki outfit’s top gun arrested
July 14: Manipur may hold peace talks with Kuki militants

அசோமில் தீவிரவாதம்: இந்தி பேசுவோர் மீது தாக்குதல்

அசோம் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாதத்தை முன்னெடுத்து இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தி அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.இத்தகைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 15 பேர் மரணமடைந்திருக்கின்றனர், 28 பேர் காயமடைந்திருக்கின்றனர். கடைசியாக கர்பி அங்லோங் மாவட்டத்தில் 8 இந்தி பேசும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA)யும் கர்பி லோங்க்ரி வடக்கு கச்சார் விடுதலை முன்னணியும் (KLNLF) சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தொழிலாளிகளை அவர்களது வீட்டிலிருந்து வெளியே இழுத்து தானியங்கி துப்பாக்கி முனையில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும்...India eNews - Terror run in Assam by militants, Hindi-speakers fresh targets

Wednesday, August 8, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 15 பேர் ஜாமீனில் விடுதலை

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறுகுற்றங்கள் செய்த 15 குற்றவாளிகளுக்கு அவர்களது தனிப்பட்ட ஜாமீனில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி உத்திரபதி குற்றம் நிரூபணமான 158 பேரில் 26 பேர்களது மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அதில் 15 பேருக்கு இவ்வாறு ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் ஒன்பது பேரின் மனுவும் புதிய மனுக்கள் பதிமூன்றும் நாளை விசாரிக்கப்படும். மிகுதி இருவரின் மனு ஆகஸ்ட் 17 அன்று விசாரிக்கப்படும்.

மொத்தம் 32பேர் இதுவரை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். இன்னும் 100 பேரின் மனுக்கள் பரிசீலிக்கபட வேண்டும்.

The Hindu News Update Service

Tuesday, August 7, 2007

தாவூத் இப்ரஹாம் மீது கொலை முயற்சி:கராச்சியில் வதந்தி ?

இந்தியாவில் தீவிரவாதத்திற்காகவும் பிற குற்றங்களூக்காகவும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ரஹாமை அவரது ஓட்டல் காவிஷ் க்ரௌன் பிளாசா அருகே கொலைசெய்ய முயன்றதில் அவர் தப்பியதாக கராச்சி நகரெங்கும் வதந்தி பரவியுள்ளது. சிந்து மாகாண தலைமைக் காவலர் இதனை மறுத்துள்ளபோதிலும் அரசின் 'தாவூத் பாகிஸ்தானில் இல்லை' என்ர கூற்றிற்க்கு ஒப்ப அவர் கூறியுள்ளதாக விதயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

DNA - World - Karachi abuzz with rumours of attack on Dawood - Daily News & Analysis

-o❢o-

b r e a k i n g   n e w s...