மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton
In Vidarbha’s darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com
Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt
Sunday, August 26, 2007
விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை
Posted by
Boston Bala
at
7:30 PM
5
comments
Thursday, August 16, 2007
மானாவாரி நிலம் மேம்படுத்த திட்டம்
ஈரோடு, ஆக. 16-
ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்த நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 2002 முதல் 2007ம் ஆண்டு வரை பச்சாம்பாளையம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பச்சாம்பாளையம் கிராமத்தில் 5 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட 7 நீர்வடிப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நீர்வடிப்பகுதிகளிலும் பயனாளி குழுக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு நீர்வடிப்பகுதிகளுக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியாக ரூ.84 லட்சம் பெறப்பட்டு இதுவரை ரூ.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டத்தில் மழை நீரை வீணாக்காமல் தேக்கி வைத்து அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்தி மானாவாரியாக உள்ள நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதாகும். பண்ணை குட்டைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கப்படுகிறது.
இத்தகவலை காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நன்றி "தமிழ் முரசு".
Posted by
சிவபாலன்
at
10:10 PM
0
comments
Wednesday, August 8, 2007
மேட்டூர் அணை நிரம்பியது: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நிரம்பியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாயிருப்பதால் அதிக நீர் திறந்துவிடப்பட்டு வெள்ள அபாயம் ஏற்படாலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:54 PM
0
comments
Monday, July 30, 2007
அரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா
டாடாவின் டைடானியம் டையாக்ஸைட் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக அரசின் அறிவிப்பு அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுசெயலர் ஜெ ஜெயலலிதா கூறினார். தாங்கள் ஆட்சியில் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலனுக்காக பாடுபடும் கட்சி என்பது உறுதியாகியுள்ளது என அவர் மேலும் கூறினார்.
இதுபற்றிய The Hindu News Update Service
Posted by
மணியன்
at
7:14 PM
0
comments
Friday, July 13, 2007
கோதுமை இறக்குமதியில் ரூ.1200 கோடி ஊழல்: பாஜக குற்றச்சாட்டு
ஐம்பது லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதில் ரூ.1200 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. இதற்குப் பொறுப்பேற்று வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் பதவி விலகவேண்டும் எனவும் பாஜக கோரியுள்ளது.
ஒரு டன் கோதுமைக்கு 262 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.10,500) கோரியிருந்த டெண்டரை விலை அதிகம் என்று கூறி மே 2007-ல் தள்ளுபடி செய்தது மத்திய அரசு. அதே 1 டன் கோதுமைக்கு 320 டாலர்கள் (சுமார் ரூ.12,800) முதல் 360 டாலர்கள் (சுமார் ரூ.14,500) கோரியுள்ள 3 நிறுவனங்களின் புதிய டெண்டர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது வியப்பிலும் வியப்புக்குரியது. அதாவது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது டன்னுக்கு 100 டாலர்கள் அதிக விலை தரமுன்வந்துள்ளது.
இந்த 3 நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்கில்' என்ற நிறுவனமும் அடங்கும். இந்த நிறுவனம் இந்திய விவசாயிகளிடம் ரூ.900-க்கு கோதுமை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை ரூ.1300 விலைக்கு அரசுக்கு விற்பதன் மூலம் அந்நிறுவனம் கொள்ளை லாபம் அடைய வாய்ப்புண்டு என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
இந்திய விவசாயிகளுக்கு ரூ.850-க்கு மேல் விலை தர விருப்பமில்லாத மத்திய அரசு, கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1300 விலை தருவதைப் பற்றி கவலைப்படவில்லை.
இந்தியாவில் கோதுமை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள கார்கில் நிறுவனத்திடமிருந்து கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக, புதிய டெண்டர் அனுமதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
டன்னுக்கு 230 டாலர்கள் விலையில் கடந்த ஆண்டுதான் 50 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது மத்திய அரசு எனவும் பாஜக கூறியுள்ளது.
தினமணி
The Hindu : National : Wheat import scandalous: BJP
BJP smells a scam in wheat import contracts :: Economic Times
Govt to import 5.11 lakh tonne wheat at higher cost
Posted by
Boston Bala
at
9:09 AM
0
comments
Wednesday, July 11, 2007
மேட்டூர் அணை ஜூலை 25 திறப்பு
காவேரி டெல்ட்டா பகுதி சம்பா பயிர் விவசாயத்தை முன்னிட்டு தமிழக அரசு மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து ஜூலை 25 முதல் தண்ணீர் திறந்துவிட இன்று முடிவு செய்துள்ளது.
Mettur Dam water to be released from July 25-India-The Times of India
Posted by
மணியன்
at
4:44 PM
1 comments
Friday, June 1, 2007
அமிதாப் பச்சன் விவசாயி அல்ல - நீதிமன்றத் தீர்ப்பு
1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும். 90,000 சதுர அடி விவசாய நிலத்தைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல் டில்லியருகே உள்ள ஜான்பூரில் வசிக்கும் விவசாயி என்று அறிவித்து வாங்கியுள்ளார்.
அந்தப் பகுதியில் வசிக்காத ஒருவருக்கு இவ்வாறு நிலம் ஒதுக்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்று ஃபைசாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
BBC NEWS | South Asia | Bachchan is no farmer, says court
Posted by
Boston Bala
at
11:20 PM
2
comments
Wednesday, May 30, 2007
ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்
ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்துவரும் குஜ்ஜார் இனக் கலவர்ங்களுக்கு இராஜஸ்தான் அரசை குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி நீதியரசரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. அம்மாநில பிஜேபி அரசின் அடக்குமுறை அனைவரும் அறிந்தது என்று குறைகூறிய அக்கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த அரசு அதனை மக்களிடம் விளக்கமுடியாததால் இந்தக் கலவரங்களும் வன்முறையும் எழுந்துள்ளன என்றும் கூறியுள்ளது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
4:43 PM
0
comments
Friday, May 25, 2007
ச: ரிலையன்ஸ் காய்கறி வியாபாரம்: மறுபக்கம்
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக காய்கறி வியாபாரிகள் புதிதாக திறந்துள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் விவசாயிகளோ தங்களுக்கு சரியான நேரத்தில் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சியடைவதாகக் கூறுகின்றனர். இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலையில் தாங்கள் முன்பு ஒன்றும் சொல்ல முடியாதிருந்ததாகவும் சொன்ன பணத்தை இழுபறியின்றி கிடைப்பதாகவும கூறுகின்றனர்.்
மேலும்.. Farmers happy with Reliance entry in vegetable business
Posted by
மணியன்
at
8:37 PM
0
comments
Thursday, May 24, 2007
அனில் அம்பானிக்கு உ.பி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய பிரச்சினை
உத்தர பிரதேச நிர்வாகம் அனில் அம்பானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்த சட்டமீறல்களை சுட்டிக்காட்டி, நடுவண் அரசிடம் தொடர்பு கொண்டுள்ளது. முதல்வர் மாயாவதி பதவியேற்றவுடன் நிகழ்ந்த அதிகாரி மாற்றங்களுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் நண்பர்களின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார்.
நொய்தாவில் ரிலையன்சுக்கு ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலத்தின் நடுவே சாலை அமைந்திருக்கிறது. இது சுங்கச்சோதனைக்கு இடையூறாக இருக்கும்.
சிங்குர் டாடா போராட்டத்தைப் போலவே உத்தர பிரதேச விவசாயிகளும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தாத்ரி மின் நிலையத் திட்டத்தை எதிர்த்து ஜூலை 2006-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
NDTV.com: Anil Ambani's SEZ plan in trouble
Posted by
Boston Bala
at
11:45 PM
0
comments
Friday, April 13, 2007
இந்திய வேளாண் துறையை மேம்படுத்த உலகவங்கி நிதியுதவி
இந்தியாவில் வேளாண் துறையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் உருமாற்றுவதற்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க உள்ளது. உலக வங்கியின் மேம்பாட்டு அமைப்பான சர்வதேச மேம்பாட்டு சங்கத்தின் மூலம் இந்த கடன் வழங்கப்படுவதாகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 50 மில்லியன் டாலர் அளிக்கவிருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
இந்திய வேளாண் துறையை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கும், குறைந்தபட்ச தன்னிறைவை அத்துறை எட்டுவதற்கும் இந்த கடனுதவி வழிவகை செய்யும். வறுமை ஒழிப்பு, வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றையும் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இத்திட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அடுத்த 6 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் துறை வளர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளதாகவும் போதிய அளவுக்கு இல்லை என்றும் கார்ட்டர் கூறினார்.
MSN INDIA
Posted by
Boston Bala
at
1:07 AM
0
comments
Sunday, March 18, 2007
விவசாய செய்திகள்: கரும்பு அரவை துவங்கியது

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று கரும்பு அரவை துவங்கியது. இயந்திரத்தில் கரும்புகளை போட்டு விவசாயிகள் அரவையை துவக்கி வைத்தனர். உள்படம்: கிரேன் மூலம் அரவை இயந்திரத்தில் கரும்புகட்டுகள் போடப்படுகின்றன.
உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பல்லடம், பழனி கிழக்கு, பழனி மேற்கு, நெய்க்காரப்பட்டி ஆகிய 8 கோட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்புகின்றனர். இந்தாண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை கடந்த மாதம் இறுதி முதல் துவங்கியுள்ளது. 6 மாதத்துக்குத் தொடர்ந்து அறுவடை நடக்கிறது.
அமராவதி சர்க்கலை ஆலையில் 2006 - 2007ம் ஆண்டுக்கான அரவைப்பட்டத்தில் 2.60 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாய்லர் இளஞ்சூடேற்றும் பணி கடந்த 9ம் தேதி துவங்கியது.
இன்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் அரவை துவங்கியது. அக்டோபர் வரை அரவை நடைபெறும். நிகழ்ச்சியில் ஆலை தனி அலுவலர் ஜெய்சிங் செல்வராஜ், தலைமை அலுவலர் திருஞானசம்பந்தம், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் வேலுசாமி மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
- மாலை முரசு
Posted by
சிவபாலன்
at
7:25 PM
1 comments
Monday, March 12, 2007
இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு விஞ்ஞானப் பரிசு !
இந்த ஆண்டுக்கான கோசரெல்லி பரிசு (Cozzarelli Paper of the year 2007) இந்திய அமெரிக்கரான வி இராமநாதனுக்கு தன்சக நிபுணர்களான வின்சென் ட், அஃப்ஹாம்மர் உடன் பகிர்ந்து கொடுக்கப் பட்டுள்ளது. தன் ஆய்வில் எவ்வாறு காற்றின் மாசு கட்டுப்பாடு ஏழை நாடுகளில் விவசாயத்திற்கு நன்மை கொண்டு வரும் என காண்பித்துள்ளார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
4:15 PM
0
comments
Saturday, March 10, 2007
விவசாயிகள் தற்கொலை : பவார் அறிவுரை
நாட்டில் விவசாயிகள் தற்கொலையை முழுவதும் தடுப்பதற்கு, அவர்களுக்கு மனோபலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவைக் காட்டிலும் வளம் குறைந்த மாநிலங்களான ஒரிஸ்ஸா, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் எந்த விவசாயிகளும் தற்கொலை செய்துகொள்வதில்லை என்பதை சரத்பவார் சுட்டிக் காட்டினார்.
Yahoo - Tamil
Posted by
சிவபாலன்
at
12:17 AM
0
comments
b r e a k i n g n e w s...
