.

Showing posts with label ஆளுமை. Show all posts
Showing posts with label ஆளுமை. Show all posts

Tuesday, September 4, 2007

ஞாபகத்திறனுக்கொரு முகமது ஃபைசல்.

குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திண்டாடும்போது, 20 வயதான முகமது பைசல் என்பவர், ஒரு நிமிடத்தில் 50 கை பேசி எண்களை மளமளவென்று கூறுகிறார். புதுடில்லி, ராஜ்தானி ஓக்லாவில் வசிப்பவர் முகமது பைசல்(20).

எல்.ஜி., நிறுவனத்தில் சேவைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு நினைவுத் திறன் மிக அதிகமாக உள்ளதால், 50 கை பேசிஎண்களை மளமளவெனக் கூறுகிறார். 224 நாட்டின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.டி., எண் அனைத்தையும் ஒப்பிக்கிறார். எந்த நாட்டைப் பற்றிய செய்தியையும் 0.8 செகண்டில் தந்து, நடமாடும் குறிப்பேடாக (டைரக்டரி)'யாக இருக்கிறார்.

பைசலின் சாதனை இதோடு நிற்கவில்லை. 600 வருடம் வரை உள்ள நாட்காட்டியை முழுவதுமாக நினைவு வைத்துள்ளார். அவர் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருப்பதால், அவருடைய பெயர், "ஹோல்டர்ஸ் ரிபப்ளிக் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு,' மற்றும் "ஓபன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ஞாபகத் திறன் குறித்து பைசல் கூறியுள்ளதாவது: முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்தி வைக்க, ஆர்வம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் எந்த ஒரு பொருளையும் ஐந்து புலன்கள் மூலம் நினைவில் வைத்துக் கொள்வேன். பொருள்களை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து, படித்து, அனுபவித்து மூளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு பைசல் கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே இவரது இலட்சியமாம்.

தினமலர்

Monday, September 3, 2007

கலாநிதி மாறனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் தலை பத்து பட்டியல்:

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ்: ரூ. 24.51 கோடி
2. கலாநிதி மாறன் - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி
3. காவேரி கலாநிதி - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி

4. சுனில் மித்தல்- பார்தி ஏர்டெல்: 15 கோடி
5. கே அன்ஜி ரெட்டி - டாக்டர் ரெட்டிஸ்: 14.4
6. பி எம் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.99

7. பவன் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.88
8. நவீன் ஜிண்டால் - ஜிண்டால் ஸ்டீல்: 13.5
9. நகாகாவா (Toshiaki Nakagawa) - ஹீரோ ஹோண்டா: 13.44
10. சஜ்ஜன் ஜிண்டால் - JSW ஸ்டீல்: 13.24

Mukesh Ambani's take-home ten times that of brother Anil

Sunday, September 2, 2007

தாகூரின் நோபல் பதக்கம் மீட்க இயலாது - சி.பி.ஐ

ரபிந்த்ரநாத் தாகூரின் நோபல் பரிச்சு பதக்கம் திருடப்பட்டதை அடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தியது. மூன்றரை வருட விசாரணைக்குப்பின் பதக்கம் மீட்க்க இயலாதபடி 'நிரந்தரமாக' தொலைந்து போயிருக்கலாம் என்றும். 'இந்த விசாரணையில் இனி பலன் தரும் நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது' என சி.பி.ஐ யின் அறிவிப்பு தெரிவித்தது.

Rabindranath Tagore's Nobel medal lost foreveCNN-IBN
CBI closes Tagore's medal theft case NDTV.com
CBI shuts Nobel chapter after 3 years Times of India

யுஎஸ் ஓபன்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவரும் சென்ற வருடம் கோப்பையை வென்றவருமான மரியா ஷரபோவா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டின் ராட்வான்ஸ்கா (Agnieszka Radwanska)வை சந்தித்தார்.

ஒரு கட்டத்தில் எட்டு ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று, மூன்றாவது செட்டில் சர்வை முறியடித்து முன்னணியில் இருந்த ஷரபோவா, கடைசி ஆறு ஆட்டங்களையும் தவறவிட்டு 4-6, 6-1, 2-6 என்று பதினெட்டு வயதான போலந்து வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் லெய்டன் ஹூவிட், மாரட் சஃபீன் ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

SI.com - 2007 US Open - Radwanska stuns Sharapova at U.S. Open
Sharapova Is Dethroned at U.S. Open - washingtonpost.com

Saturday, September 1, 2007

பத்திரிக்கையாளர் சாய்நாத்துக்கு மகசேசே விருது.

தமிழக ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான மகசாசே விருது இன்று வழங்கப்பட்டது.
ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசாசே விருதை பிலிப்பைன்ஸ் நாடு வழங்கி வருகிறது. இவ்விருதிற்குச் சிறப்பான கிராமிய பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிய தமிழக பத்திரிகையாளர் சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு "சற்றுமுன்" குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

Friday, August 31, 2007

டையனா - 10ஆம் ஆண்டு நினைவு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டையனாவின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இங்கிலாந்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

அவர் குடும்பத்தினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 'உலகின் தலைசிறந்த அன்னை' என டையனாவின் மகன் இளவரசர் ஹாரி பேசினார். டையனாவின் வீட்டின் முன் பொதுமக்கள் பலரும் மலர்கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இளவரசர் சார்லசின் மனைவி கமில்லா கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Diana Remembered at Memorial Service Forbes, NY - 1 hour ago
UK Remembers Diana on 10th Anniversary of Death NPR (படங்கள்)
Princes lead Princess Diana memorial service NEWS.com.au
Diana Memorial: Camilla's Empty Chair ABC News

குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

அரசு அலுவலகங்களிலும் தூதரகக் கட்டிடங்களிலும் இடம் பெற குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களின் அதிகாரபூர்வ நிழற்படம் இரு வார காலமாக தீர்மானமாகாமல் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை புடைவையில் நீல பார்டரோடு தங்க கோடிட்ட படத்தை குடியரசுத்தலைவரின் நிழற்பட பிரிவு குடியரசுத்தலைவரின் செயலகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிட்டது. இந்தப் படத்தில் புடைவையின் பல்லு பகுதி அவரது தலையை மறைக்குமாறு உள்ளது. முன்னர் வெளியான படத்தை குடியரசுத்தலைவரின் செயலகம் ஆட்சேபித்ததால் திரும்பப் பெறப்பட்டது.

The Hindu News Update Service

Monday, August 27, 2007

அன்னை தெரசாவின் 97-வது பிறந்த நாள்

Nuns Mark Mother Teresa's Birthday - washingtonpost.com
கோல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை 97-வது பிறந்த நாளையொட்டி அன்னை தெரசாவின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார் "மிஷனரி ஆப் சாரிட்டிஸ்' தலைவி சகோதரி நிர்மலா.

Japanese PM's wife visits Mother Teresa's home: "Mother Teresa's legacy lives on"

Sister Nirmala :: On September 5, it will be ten years since the death of Mother Teresa

Sunday, August 26, 2007

திடீர் உடல் நலக்குறைவு: நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார்.

ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன.

மாலைமலர்

திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாள்

தமிழ்தென்றல் என போற்றப்படும் திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாளை யொட்டி சென்னை பட்டாளம் மார்க் கெட் அருகில் உள்ள சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மாலை அணி வித்தார்.

இதேபோல் பாரதியஜனதா சார்பில் மாநில தலைவர் இல.கணேசன், பா.ம.க. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

மாலைமலர்

Thursday, August 23, 2007

அமெரிக்க ஓபன்: சானியாவுக்கு தரவரிசையில் 26ம் இடம்





அமெரிக்க ஓபன் டென்னிஸ்தொடருக்கான தரவரிசையில் சானியாவுக்கு 26வது இடம் அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

Tuesday, August 21, 2007

தென் ஆப்பிரிக்கா சென்றார் சோனியா.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 பயணமாக திங்கள்கிழமை இரவு தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா தென்ஆப்பிரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்க அதிபர் தபோ பெகியைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ள சோனியா, முன்னாள் அதிபர் நெல்சன் மன்டேலாவையும் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார்.

"21-ம் நூற்றாண்டில் காந்தியத் தத்துவங்களின் பொருத்தப்பாடு" என்ற தலைப்பில் கேப்டவுன் பல்கலை.யில் உரையாற்ற உள்ளார் சோனியா காந்தி.

Monday, August 20, 2007

அணுசக்தி உடன்பாடு: நடுக்கத்தில் நடுவன் அரசு.

கவிழ்வதைத் தடுக்க காங். தீவிரம்.
இடதுசாரிகளின் கடும் எச்சரிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து ஆராயும்.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்தனர். ஆரம்பத்தில் இடதுசாரிகளின் எச்சரிக்கையை படு சாதாரணமாக எடுத்துக் கொண்டது காங்கிரஸ். வாபஸ் பெற்றால் கவலையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அலட்சியமாக பதிலளித்தார்.

இதனால் கடுப்பான இடதுசாரிகள், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர். ஒப்பந்தம் அமல்படுத்தப்படக் கூடாது. மீறினால் ஆதரவு நிச்சயம் வாபஸ் பெறப்படும், தேவையில்லாத பல விளைவுகள் ஏற்படும் என பிரதமரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்தார். மேலும்...

Saturday, August 18, 2007

தஸ்லிமாவின் விசா நீட்டிக்கப்பட்டது

தாக்குதல், கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் தாஸ்லிமா நஸ் ரீனின் இந்திய விசா பிப்ரவரி 2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஸ்லிமா இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தபோதும் அரசு தற்போது விசாவை நீட்டிப்பதையே அனுமதித்துள்ளது.

Taslima's visa extended till February 2008 The Hindu

Tuesday, August 14, 2007

மும்பை அவுட்லுக் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது

பால் தாக்ரேயை வில்லன்களின் பட்டியலில் சேர்த்து கட்டுரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெர்வித்து சிவ சேனாவினர் மும்பை நரிமன் பாயிண்ட்டில் இருக்கும் அவுட்லுக் அலுவலகத்தை தாக்கினர்.

அவுட்லுக் வெளியிட்டிருக்கும் வில்லங்கள் பட்டியலில் காந்தியைக் கொன்ற கோட்சே, நரேந்த்ர மோடி, முன்னாள் கிரிக்கட் வீரர் முகமது அசாருதீன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். பால் தாக்ரே ஹிட்லர் போல சித்தரிக்கப்பட்டிருந்தார்.

Shiv Sena activists ransack Outlook office in Mumbai The Hindu

மாரத்தான் சிறுவனின் பயிற்சியாளர் கைது

மாரத்தான் சிறுவன் புத்தியா சிங்கின் பயிற்சியாளர், தன்னை கொடுமைக்குள்ளாக்கினார் என அவன்ன் தந்த புகாரின் எதிரொலியாக பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் கைது செய்யப்பட்டார்.

தாஸ் புத்தியாவும் அவன் தாயும் பிறர் தூண்டுதலின்பேரில் இந்தப் புகாரைக் ஏழுப்பியுள்ளதாகவும் இதுவரை கிடைத்த நன்கொடை ரூ1.32 இலட்சத்தில் பெரும்பகுதி புத்தியா சிங்க்குக்கே செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Budhia’s coach arrested on charges of torture - The Hindu

Monday, August 13, 2007

ஷங்கர், விஜய்க்கு டாக்டர் பட்டம்

மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் இயகுநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.

விஜய்க்கு டாக்டர் பட்டம் - சினி சவுத்

புஷ்ஷின் 'வலது கை' பதவி விலகுகிறார்

புஷ்ஷின் நீண்ட நாள் ஆலோசகரும் வெள்ளை மாளிகையில் அதிபருக்கு அடுத்த அதிமுக்கிய உறுப்பினருமான கார்ல் ரோவ் தன் பதிவியிலிருந்து சுயவிலக்கம் செய்துள்ளார். தன் குடும்பத்திற்காக இதைச் செய்வதாகவும் தான் பதவி விலக கட்டாயப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் முடிவில் அவர் வெள்ளை மாளிகை பதவியிலிருந்து விடுப்பு பெறுவார். கார்ல் ரோவ் தன் அரசின் கொள்கைகளின் சிற்பி என அதிபர் புஷ்ஷினால் வர்ணிக்கப்பட்டவர். ்ஷஅ

புத்தகம் ஒன்றை எழுதுவதிலும் ஆசிரியராய் கல்வி புகட்டுவதிலும் நேரம் செலவிடப் போவதாக கார்ல் அறிவித்துள்ளார்.

Rove says he was not forced to quit CNN International
Karl Rove quits Economist
Karl Rove To Resign At End Of August Guardian Unlimited

Thursday, August 9, 2007

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: மகா. அரசு நடவடிக்கை எடுக்கும்

1992-93 வருடங்களில் மும்பையில் நடந்த கலவரங்கள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை ஆய்வு செய்ய காவல்துறையையும் சட்டத்துறையையும் மகாராட்டிர முதல்வர் விலாஸ்ரராவ் தேஷ்முக் ஆணையிட்டுள்ளார். இந்தக் கலவரங்களில் பங்கேற்ற அரசியல் தலைவர்களின் மீது, சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே உட்பட, நடவடிக்கை எடுப்பது பற்றிய நிகழ்வறிக்கையையும் காங்கிரஸ் மேலிடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். கட்சியின் பொது செயலர் மார்கரேட் ஆல்வா கடந்த ஏழாம் தேதியன்று மூம்பை வந்திருந்தபோது இந்த அறிக்கையை அவரிடம் கொடுத்தார். பிரபல சினிமா இயக்குனர் மகேஷ் பட்டும் முன்னாள் அமைச்சர் நசீம் கானும் இந்த அறிக்கை மீது தகுந்த எஅடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டி மனு கொடுத்துள்ளனர்.ஆகஸ்ட் 20ம் தேதி யன்று பல முஸ்லிம் அமைப்புக்கள் இவ்வறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.

The Hindu News Update Service

Saturday, August 4, 2007

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக எப்போதும் கடைப்பிடித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். பெங்களுரில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

அரசியலில் பிளவுபடுத்தும் கொள்கையை கொண்டிருப்பது பாஜகவின் முக்கிய கொள்கையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 5 ஆண்டுகளில் நாட்டை பல்வேறு வழிகளில் பிளவுபடுத்தி வைத்திருந்தது. அதை கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீர்படுத்தியுள்ளது. மேலும், முதலீடு, சேமிப்பு ஆகியவை நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 35 சதவீதமாக அதிகரிக்கச் செய்துள்ளன. இதனால் இந்தியாவை உலக நாடுகள், பொருளாதாரத்தில் மிகவேகமாக வளர்ந்துவரும் நாடு என்று அங்கீகரித்துள்ளன.

இது இந்தியாவுக்கு பெருமையைத் தந்துள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

நன்றி: தமிழன் செய்திகள்

-o❢o-

b r e a k i n g   n e w s...