இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாராவும் இதில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களான இன்சமாம் உல்ஹக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத், முகமது யூசுப் ஆகியோர் இதில் இணைய உள்ளனர். அவ்வாறு இணைபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்படும் எனவும் விரைவில் தங்கள் முடிவை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஷ்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமலர்
Tuesday, September 4, 2007
ICL அமைப்பில் இணையும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஆயுட்காலத் தடை?
Posted by
வாசகன்
at
4:02 PM
0
comments
பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலி
பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் ஆர்.ஏ.பஜார் பகுதியில் அணுசக்தி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் குண்டுவெடித்ததில் 17 பேர் பலியாகினர். இரண்டாவது குண்டுவெடிப்பு ராவல்பிண்டி நகரின் வர்த்தகப்பகுதியான குவாசிம் பஜாரில் நிகழ்ந்தது. இதில்12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் மற்றும் அல்காய்தா அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர்
Posted by
வாசகன்
at
3:59 PM
0
comments
Monday, September 3, 2007
இடிந்து விழுந்த மேம்பாலம்

பாகிஸ்தானின் கராச்சி புறநகரில் சனிக்கிழமை இடிந்து விழுந்த மேம்பாலம். இதில் பத்து பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இப் பாலத்தை அதிபர் முஷாரப் திறந்து வைத்தார்.
தினமணி
Daily Times - Leading News Resource of Pakistan - The authorities just can’t be trusted any more: Karachi residents
Ten dead in Karachi bridge collapse, inquiry ordered- Hindustan Times
Posted by
Boston Bala
at
9:26 AM
4
comments
Friday, August 24, 2007
அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்
அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக இருந்து வந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர். அமீரகம் மற்றும் யுனிசெப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக செயல்பட பணத்திற்காக அரபகங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்னதான் சட்டங்கள் போட்டாலும் சிறுவர்களைக் கடத்தும் போக்கு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August685.xml§ion=theuae&col=
Over 600 child camel jockeys repatriated to Pakistan
Posted by
முதுவை ஹிதாயத்
at
11:50 AM
0
comments
Thursday, August 23, 2007
இம்ரான் கானுக்கு மீண்டும் திருமணம்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் இம்ரான்கான் ஜெமிமா என்ற வெள்ளைக்காரப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சுலைமான், காசிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
அவர்களுக்குள் கருத்து வேருபாடு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து இம்ரான்கான் இப்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். இந்தத் தடவை பாக்கிஸ்தான் பெண்ணையே மணக்க அவர் விரும்புகிறார். இதற்காக பெண் தேடும் படலம் நடந்து வருகிறது. விரைவில் திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
11:09 PM
0
comments
Tuesday, August 21, 2007
அணுசக்தி ஒப்பந்தம்: சீனாவுடன் பாக்கிஸ்தான்.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போன்று தங்கள் நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சீனாவும் பாக்கிஸ்தானும் முயன்று வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில் இவ்விரு நாடுகளும் இம்முயற்சியில் இறங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை, அணுசக்தி தயாரிப்புக்கான மூலப் பொருள்களை விற்கும் நாடுகள் (என்எஸ்ஜி) அங்கீகரித்துவிட்டால் பாக்கிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கிவிடும் என்று பெய்ஜிங்கில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.
அணுசக்தி விஷயத்தில் இந்தியா பலம் பெற்றுவிட்டால் அதற்கு இணையான பலத்தைப் பெற தங்களுக்கும் உதவ வேண்டும் என்று சீனாவிடம் பாக்கிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவுக்கு போட்டியாக அல்லது பதிலடியாக தானும் பாக்கிஸ்தானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சீனாவும் விரும்புகிறது.
இதற்கு முன்னோடியாக பாக்கிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி ஒரு உயர்நிலைக் குழுவுடன் இம்மாத ஆரம்பத்தில் சீனா சென்று சீன துணை அதிபர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்திவிட்டு வந்துள்ளார்.
பதிலுக்கு சீனாவும் தனது உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் குய் தியான்காயை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி உள்ளிட்டோரை சந்திக்க வைத்துள்ளது. அப்போது "சீனா-பாக்கிஸ்தான் சிவிலியன் அணுசக்தி உத்தேச ஒப்பந்தம்" குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
சீனாவுக்கும் இப்போது இந்தியா மீது பலவிதங்களில் அதிருப்தி இருக்கிறது. எல்லைப் பிரச்னையில் உள்ள தேக்க நிலை, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் நெருக்கம் ஆகியன சீனாவை எரிச்சலூட்டி வருகின்றன.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்கள் அதன் தூய நோக்கம் கெடாதபடி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தி கூறி வருகிறது.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் சர்வதேச ஆயுதப் பரவல் தடை முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று சீனாவின் 2 அதிகாரபூர்வ ஏடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும்'
அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்திய அரசியலில் புயல் கிளம்பும். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் சீனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தி தொடர்பான 123 ஒப்பந்தம் பற்றிய இடதுசாரிகளின் கருத்துகளை சீனப் பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு உலக அரங்கில் இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் சீன பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன.
தினமணி
Posted by
வாசகன்
at
7:16 PM
0
comments
Thursday, August 9, 2007
பாக்கிஸ்தானில்்தானில் எமர்ஜென்சி?
பாக்கிஸ்தானின் முஷ்ரப் ஒரு மாதத்துக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தவிருப்பதாக பாக்கிஸ்தானின் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. நம்பத்தகும் ஆதாரங்களிலிருந்த செய்தி கிடைத்திருப்பதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தான் அரசு இந்த செய்திகளை மறுத்துள்ளது.
Emergency imposed in Pak? -Zee News
Emergency likely to be declared in Pak - TOI
Musharraf set to impose emergency: Reports - NDTV
Posted by
சிறில் அலெக்ஸ்
at
1:36 AM
1 comments
Tuesday, August 7, 2007
தாவூத் இப்ரஹாம் மீது கொலை முயற்சி:கராச்சியில் வதந்தி ?
இந்தியாவில் தீவிரவாதத்திற்காகவும் பிற குற்றங்களூக்காகவும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ரஹாமை அவரது ஓட்டல் காவிஷ் க்ரௌன் பிளாசா அருகே கொலைசெய்ய முயன்றதில் அவர் தப்பியதாக கராச்சி நகரெங்கும் வதந்தி பரவியுள்ளது. சிந்து மாகாண தலைமைக் காவலர் இதனை மறுத்துள்ளபோதிலும் அரசின் 'தாவூத் பாகிஸ்தானில் இல்லை' என்ர கூற்றிற்க்கு ஒப்ப அவர் கூறியுள்ளதாக விதயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
DNA - World - Karachi abuzz with rumours of attack on Dawood - Daily News & Analysis
Posted by
மணியன்
at
1:40 PM
3
comments
Friday, August 3, 2007
காமன்வெல்த் வாலிபால்: ஆஸி.க்கு இந்தியா அதிர்ச்சி
கோல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த 2-வது காமன்வெல்த் சீனியர் வாலிபால் போட்டியில் இந்திய அணியினர் 19-25, 25-21, 25-23, 27-25 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர்களின் சவாலை அடக்கி, 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.
அதே சமயம் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா மற்றொரு அரையிறுதியில் விளையாடுகிறது.
தினமணி
Zee News - India, Australia reach Commonwealth Volleyball semis
The Hindu : Sport : India finally in semifinals
Posted by
Boston Bala
at
1:36 AM
3
comments
Thursday, July 26, 2007
பாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு போட்டி
வழக்கமான மற்றும் மாறுபட்ட அணு ஆயுதங்களை ஏற்றி 700 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதனை ஓட்டம் விட்டது. இது பாகிஸ்தானின் முன்னேற்பாட்டை ஒருங்குபடுத்தி நாட்டின் பாதுகாப்பை வலுவாக்கும் என பாதுகாப்புதுறை அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் காரணமாக அமைந்த விஞ்ஞானிகளை அதிபர் முஷரஃப்பும் பிரதமர் சௌகத் அசீஸும் பாராட்டினர். இந்த சோதனை பற்றி இந்தியாவிற்கு முன்னதாக தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள உடன்பாடு தானே விழும் (ballistic missile) ஏவுகணைகளுக்கே பொருந்தும். பாபர் தரையிலுள்ள ரடார் மூலம் முழுவதும் கட்டுப்பாட்டிலுள்ள (Cruise missile) ஏவுகணையாகும்.
IBNLive.com > Pak test-fires Babur missile, the rival to Brahmos :
Posted by
மணியன்
at
5:13 PM
2
comments
Saturday, July 21, 2007
பாகிஸ்தானின் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை நீதிபதியான இவ்திஹார் சௌத்ரி அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அதிபர் முஷாரப்பின் உத்தரவுகளின் பேரில், கடந்த மார்ச் மாதத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பணி நீக்கம் சட்டவிரோதமானது என்று கூறிய நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தது. தாம் இந்த தீர்ப்பை மதிப்போம் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு வெளியே சௌத்ரி அவர்களின் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடியதையும் காணக்கூடியதாக இருந்தது. செளத்ரியை பதவி நீக்கம் செய்ததானது, அதிபர் முஷாரப்பை இரண்டாவது ஆட்சிக்காலம் ஒன்றுக்கு மீண்டும் தேர்ந்தெடுப்பது, அவரே இராணுவத்தின் தலைவராகவும் தொடருவது ஆகியவற்றுக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.
வீடியோ: BBC Tamil
The Hindu News :: Aziz says Govt. accepts Pak SC verdict reinstating suspended CJ
BBC NEWS | South Asia | Pakistan's top judge reinstated
Posted by
Boston Bala
at
12:06 AM
0
comments
Sunday, July 15, 2007
லால் மசூதி தாக்குதல்: முஷாரஃப் கருத்து.
அரசின் அமைதி முயற்சிக்கு பயங்கரவாதிகள் ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது என்று லால் மசூதி தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில்,
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. இஸ்லாமின் உண்மையான கருத்துக்களை பின்பற்றி நாம் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமியர் என்ற பெயரில் சில தீய சக்திகள், சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல், உண்மையான இஸ்லாமியர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். இது ஒரு தவறான வழிகாட்டுதல். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. தீயவை அழிக்கப்படுவது தான் அவசியம். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
தினமலர்
Posted by
வாசகன்
at
11:28 PM
0
comments
Friday, July 13, 2007
பாகிஸ்தானிய அமைதிப்படையினர் காங்கோவில் தங்கம் கடத்தியமை குறித்த ஆதாரம்
காங்கோ ஜனநாயகக் குடியரசில், சில பாகிஸ்தானிய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், ஒரு நபர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கத்துக்குப் பதிலாக காங்கோலிய கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆயுத விநியோகம் செய்வதுடன் தொடர்புடைய துப்பாக்கிகளின் கடத்தல்களிலும், குறித்த பாகிஸ்தான் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக, கடந்த மே மாதத்தில் நடந்த பிபிசியின் புலன்விசாரணை ஒன்றிலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆதாரம் எதுவும் தமது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
இந்த அறிக்கை தொடர்பில் பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்புப் பணிகளின் தலைவரான, ஜீன் மரியே கொகென்னோ தெரிவித்துள்ளார்.
- BBC Tamil
BBC NEWS | South Asia | Peacekeeper 'smuggled Congo gold': "A United Nations inquiry has confirmed that a Pakistani peacekeeper in the Democratic Republic of Congo was involved in smuggling gold."
Associated Press of Pakistan - Pakistani peacekeepers not involved in weapons trade in DRC: Munir Akram
Posted by
Boston Bala
at
10:49 PM
0
comments
Tuesday, July 10, 2007
லால் மசூதியில் நுழைந்தது பாக். இராணுவம்:43 பேர் பலி
கடந்த ஒருவாரமாக முற்றுகையிடப்பட்டிருந்த இஸ்லாமாபாத்தின் லால் மசூதிக்குள் பாக்கிஸ்தான் இராணுவம் அதிரடியாக நுழைந்து நடத்திய தாக்குதலில் 40 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 3 இராணுவத்தினர் பலியாயினர் என்றும் தெரிகிறது. 50 போராளிகள் கைது செய்யப்பட்டுள்லனர். மசூதியின் பெரும்பகுதியை கைப்பற்றியபின்னும் பிணையாக வைக்கப்பட்டிருந்த பெண்களையும் சிறுவர்களையும் இன்னும் காணவில்லை. இந்த தாக்குதல் தொடர்கிறது.
மேல் விவரங்க்களுக்கு...Pakistani forces storm Lal Masjid; at least 43 dead | Reuters.com
Posted by
மணியன்
at
1:16 PM
0
comments
Sunday, July 8, 2007
பாக்கிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு முஷாரப் எச்சரிக்கை!
செம்மசூதியிலிருந்தபடி தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுவோருக்கெதிராக பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"சரணடையுங்கள், இல்லையேல் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்" என்று முஷாரப் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
'அமைதிக்கும் நாட்டின் சட்டத்திற்கும் எதிராக ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" என்றார் அவர்.
மேலும் படிக்க...TOI
Posted by
வாசகன்
at
4:51 PM
1 comments
Friday, July 6, 2007
முஷாரப்பைக் கொல்ல முயற்சி
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சென்ற விமானத்தை குறிவைத்து நடந்த ராக்கெட் தாக்குதலில், அவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப், இன்று ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்திலிருந்து பலுச்சிஸ்தான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக விமானம் ஒன்றிள் புறப்பட்டு சென்றார்.
அவரது விமானம் பறக்க தொடங்கிய சில விநாடிகளில், அவரது விமானத்தை குறிவைத்து அவரது விமானத்தை குறிவைத்து ராக்கெட் மட்டுமல்லாது விமான எதிர்ப்பு துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடைபெற்றதாகவும்,இத்தாக்குதல் விமான ஓடு தளத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் விமானத்தை எட்டமுடியாமல் தப்பித்தார். இந்த செய்தியை இராணுவம் மறுத்தபோதிலும் அதிகாரியொருவர் இதனை தனிமையில் உறுதி செய்தார்.
இஸ்லாமாபாத்தின் லால்மசூதியில் தஞ்சம் அடைந்துள்ள மதகுருவும் அவரது ஆதரவாளர்களும் தாங்கள் இறந்தாலும் இறப்போம் ஆனால் சரண் அடையமாட்டோம் என சூளுரைத்துள்ளனர்.அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
Shots fired at Pakistani leader; mosque siege drags on - Yahoo! India News
Posted by
மணியன்
at
7:03 PM
0
comments
பாக். லால் மசூதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் லால் மசூதியில் தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இன்று நீடித்தது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்த மசூதிக்குள் நுழையும்பொருட்டு, இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மசூதியைச் சுற்றி நின்ற பாதுகாப்புப் படையினர், சரண் அடையுமாறு மசூதிக்குள் உள்ள தீவிரவாதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் யாரும் சரண் அடையவில்லை என்று தெரிகிறது. இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் சரண் அடைந்துள்ள நிலையில், மற்றவர்களையும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
- MSN INDIA
BBC NEWS | South Asia | Blasts at radical Pakistan mosque: "There have been two large explosions in the buildings of a rebellious mosque in the Pakistani capital, Islamabad, which is being besieged by security forces."
Posted by
Boston Bala
at
12:05 AM
0
comments
Thursday, July 5, 2007
மணிசங்கர் அய்யருக்கு 67 வயதில் பிறப்புசான்றிதழ்
பாகிஸ்தானில் லாகூரில் பிறந்த மணிசங்கர அய்யரின் தற்போதைய வரவின்போது கேட்ட சில மணித்துளிகளுக்குள்ளேயே லாகூர் நகராட்சி அதிகாரிகள் அவரது பிறப்புச்சான்றிதழை கொடுத்து வியப்பில் ஆழ்த்தினர்.
இதே விதயம் அதிபர் முஷாரப்பிற்கு தில்லியில் அவரது வருக்கையின் போது நம்மால் கொடுக்கமுடியாது போயிற்று.
மேலும்...Mani Shankar Aiyar gets birth certificate at 67 - Yahoo! India News
Posted by
மணியன்
at
3:44 PM
0
comments
பாகிஸ்தானில் சற்றுமுன் நிகழ்ந்த பஸ் விபத்தில் 18 பேர் பலி.
பாகிஸ்தானில் உள்ள மன்ஷரா மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலர் காயமடைந்து அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted by
Adirai Media
at
3:29 PM
0
comments
Tuesday, July 3, 2007
கிரிக்கெட்: இந்தியா- பாக் ஒருநாள் போட்டி மழையால் தாமதம்
இன்று இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காலை 1045க்குத் துவங்கவேண்டிய இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் ஆட்டம் தொடர்ந்தமழை மற்றும் ஆடுகளம் ஈரமாக இருப்பதால் தாமதமாக துவங்கும். நடுவர்கள் உள்ளூர் நேரம் 1400 மணிக்கு பார்வையிட்டு விளையாட இயலுமா என முடிவு செய்வார்கள்.
Rain delays start of India-Pakistan clash
Posted by
மணியன்
at
5:34 PM
0
comments
b r e a k i n g n e w s...
