பூமிக்கு நிலையான வட்டப்பாதையில் துணைக்கோள்களை செலுத்தவல்ல ஜிஎஸ் எல்வி ஏவுகணையை நாளை விண்ணில் இந்திய நேரம் 4:21 மணிக்கு அனுப்ப இன்று மதியம் 2 மணியிலிருந்து எண்ணிக்கை குறைப்பு ஆரம்பமானது. இந்த ஏவுகணை இந்திய தொலைதொடர்பிற்கான துணைக்கோள் இன்சாட்-4CR ஐ ஏற்றிச் செல்லும். இந்த துணைக்கோளில் வீட்டிற்கு நேரடி தொலைக்காட்சி (DTH), வழங்க ஏதுவாக 12 அதிக சக்தி Ku பட்டையில் இயங்கும் ஒளிபரப்பு சாதனங்கள் அமைந்துள்ளன. சென்றமுறை இன்சாட் -4C உடன் செலுத்திய இவ்வித ஏவுகணை பாதியிலேயே தனது சக்தியை இழந்து வீழ்ந்ததின் பின்ன்ணியில் நாளைய விண்ணேற்றம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
The Hindu News Update Service
Zee News - INSAT-4CR launch put off by a day to Sept 2
Saturday, September 1, 2007
GSLV-F04 விண்ணேற்றத்திற்கு தயார்நிலை ஆரம்பம்
Posted by
மணியன்
at
5:11 PM
0
comments
Sunday, August 26, 2007
திடீர் உடல் நலக்குறைவு: நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார்.
ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
6:20 PM
1 comments
Friday, August 24, 2007
பிக் பிரதர் 2008 ஒளிபரப்பாகாது
2008- ஆம் வருடத்திற்கான பிக் பிரதர் (Celebrity Big Brother) நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சென்ற வருடம் இனவெறியை ஆதரிக்கும் விதமாக ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் விமர்சித்ததாக சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. மீண்டும் 2009-ல் ஒளிபரப்பைத் தொடரலாமா என்பதற்கான முடிவை அடுத்த வருடம் எடுக்கப் போவதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.
BBC NEWS | Entertainment | Celebrity Big Brother 2008 axed
Posted by
Boston Bala
at
9:44 PM
0
comments
Sunday, August 19, 2007
கேபிள் டி.வி இணைப்புகள்: தமிழக அரசு அறிக்கை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்று ஒரு சில தொலைக்காட்சி செய்திகளில் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கு வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை உள்ளதாகவும், இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு பின்வரும் தெளிவுரையை வழங்குகிறது.
கடந்த 11.8.2007 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தொலைக்காட்சி நடத்துபவர்களிடமிருந்து சிக்னல்களைப் பெற்று மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே அரசு செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையிலேயே 13.8.2007 அன்று அரசாணை வெளி யிடப்பட்டது.
மத்திய அரசு சட்டத்தின்படி, சென்னை போன்ற பெருநகரங்களில் தொலைக்காட்சி நடத்துபவர்களிட மிருந்து சிக்னல்களைப் பெற்று அந்தந்தப்பகுதிகளிலுள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்கு எம்.எஸ்.ஓ. எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே பணியைப் பிற பகுதிகளில் செய்வதற்கு கேபிள் ஆபரேட்டர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், அமைச் சரவை முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநில அரசு, தொலைக் காட்சி நடத்துபவர்களிட மிருந்து எம்.எஸ்.ஓ. அமைப்பின் மூலம் சிக்னல்களைப் பெற்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளிக்கும் பணியினை சென்னை அல்லாத பிற இடங்களில் செய்யும் பொழுது அந்தப் பணியையும் "கேபிள் ஆபரேட்டர்கள்'' என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது.
ஏற்கனவே, 17.8.2007 அன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "யாரும் புகுந்து குழப்பம் ஏற்படுத்திட வழியின்றி, அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்துகிற நிறுவனமும் அல்ல, தனியார் வீடுகளுக்கும், இடங்களுக்கும் நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனமும் அல்ல'' என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
எனவே மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் கேபிள் டி.வி.க்கான அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளை முன்னமேயே ஏற்படுத்தி அவற்றின் மூலமாக வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கி தொழில் செய்து வருவோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படை யிலேயே, தொலைக்காட்சி களிலிருந்து சிக்னல்களைப் பெற்று அவர்களுக்கு அளிக்கும் பணியை மட்டும் அரசு மேற்கொள்ள முடிவு செய் துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
மாலைமலரிலிருந்து நேரடிப்பதிவு
Posted by
வாசகன்
at
6:34 PM
0
comments
Friday, August 17, 2007
தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக அரசு நடத்த இருக்கும் கேபிள் டிவி நிறுவனத்தால் தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனியார் ஒருவரை போல அரசும் ஒரு கேபிள் டிவி நடத்த இருக்கிறது. இது கேபிள் டிவி இணைப்பை பெற்று கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே செய்யும். தமிழக அரசு கேபிள் டிவி கார்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்தும் நிறுவனம் அல்ல தனியார் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனம் அல்ல.
கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். யாருடைய தூண்டுதலாலோ பீதி அடைய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
Posted by
Adirai Media
at
11:50 AM
0
comments
Thursday, August 9, 2007
டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆடெக்ஸ் இந்தியா சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஜனவரி-மே 2007 காலகட்டத்தில் மட்டும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே காலக்கட்டத்தில்தான் சுமார் 255 புதிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் முதன் முதலாக தொலைகாட்சி விளம்பரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விளம்பரத் துறையில் சில்லரை விற்பனை நிறுவனங்களின் பங்களிப்பு 1 சதவீதம் மட்டுமே என்று கூறுகிறது ஆடெக்ஸ் ஆய்வு.
குறிப்பாக 60 பெரிய வர்த்தக நிறுவனங்கள் தென் இந்திய தொலைக்காட்சி சேனல்களிலேயே விளம்பரம் கொடுத்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டு ஜனவரி-மே காலகட்டத்திற்கிடையே நாளொன்றுக்கு ஒளிபரப்பாகும் மொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 45,000. இதில் ஒரு நாளைக்கு 700 விளம்பரங்கள் வீதம் வந்துள்ளதாக அந்த ஆய்வுக்குறிப்பு கூறியுள்ளது.
விளம்பர வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் பொழுதுபோக்கு சேனல்களுக்கே கிடைக்கிறது. சில அரிய வேளைகளில் சில்லறை விற்பனையாளர்கள் இசை சேனல்களிலும் விளம்பரங்கள் அளிப்பதாக ஆடெக்ஸ் ஆய்வு கூறுகிறது.
தமிழ் எம்.எஸ்.என்.
Retailers increase ad spend on TV :: Economic Times
Indiantelevision.com > AdEx India Analysis > Snapshot on TV Advertising in first half of 2007 - Part 1
Social Advertisements on TV in H1 2007
Posted by
Boston Bala
at
12:13 AM
0
comments
Wednesday, August 8, 2007
'நொறுக்குத் தீனி' விளம்பரங்களுக்குத் தடை: அன்புமணி யோசனை
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் திண் பண்டங்கள் (நொறுக்குத் தீனி) மற்றும் சில குளிர்பானங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்வதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி யோசனை தெரிவித்தார்.
இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ்முன்ஷியுடன் விரைவில் பேச உள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
திண்பண்டங்கள் தவிர வாசனை திரவியங்கள் குறிப்பாக முகப்பூச்சுக்கான கிரீம்கள் தொடர்பான விளம்பரங்கள் தொடர்பாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி
Chennai Online News Service - Anbumani seeks policy on junk food ads
Posted by
Boston Bala
at
9:56 PM
0
comments
Tuesday, July 31, 2007
ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது
சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் ஷில்பாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்நிலையில், சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது வழங்கப்படவுள்ளது என்று ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தர நிர்ணய ஆணையத்தால் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி தர விருது ஏற்படுத்தப்பட்டது. தரத்தில் சிறந்து விளங்கும் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்திலும் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.
முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, அதி கோத்ரெஜ், ஆனந்த் மஹிந்திரா, சுனில் மித்தல், கிரண் மஜும்தார் ஷாவ், சாந்த் சிங் சத்வால், ஷாருக்கான், தருண் தேஜ்பல், சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
தினமணி
Dr Shilpa Shetty to receive Rajiv Gandhi Award - bollywood news: "To be a worldwide achiever at such a young age; bestowed with flattering accolades, is a matter of utmost prestige for Shilpa. She is extremely grateful to be chosen for this honour." The award has been designed in line with similar awards in other developed countries, like 'Malcolm Baldrige National Quality Award' in USA, 'Deming Prize' in Japan and the 'European Quality Award'.
Posted by
Boston Bala
at
3:08 AM
2
comments
Friday, July 27, 2007
'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் டி.வி. சேனல் அளித்த விளக்கங்கள் திருப்தியளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ரூ.40 ஆயிரம் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பிசிங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு எதிராக கீழ்நீலை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெற்றதை ரகசிய கேமராவில் படம்பிடித்து 'ஜீ' டி.வி. 2004-ம் ஆண்டு ஒளிபரப்பியது.
இந்தியா முழுவதும் இச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. நீதித்துறையின் கீழ்மட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைகளைச் வெளிக் கொணரவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜீ டிவி தரப்பில் கூறப்பட்டது.
'இந்த ரகசிய கேமரா நடவடிக்கையால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாகக் கேள்விக்குள்ளானது. இது போன்ற செயல்கள் நடந்திருக்குமோ என நாட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல' என தலைமை நீதிபதி கூறினார்.
நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கவே இந்த ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நீதிபதிகளின் கருத்துக்கு டி.வி. தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடவேண்டும் என்ற எண்ணம் டி.வி.க்கு இல்லை; மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டி.வி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
'இந்த நடவடிக்கையால் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
'இந்த நடவடிக்கை மூலம், அதைச் செய்த செய்தியாளர் மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவரது செயலால் வாரன்ட் வழங்கிய நீதிபதி இரண்டு ஆண்டுகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் நீதிபதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த ஆவணமும் இல்லாமல் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாரன்ட் பெற்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி
NDTV.com: SC orders journalist to apologise
The Hindu News :: Cash-for-warrant: SC for unconditional apology from channel
Posted by
Boston Bala
at
2:50 AM
0
comments
அனைத்து ஊர்களுக்கும் ஆப்டிக் பைபர் வயர் மூலம் கேபிள் டி.வி. இணைப்பு: தமிழக அரசு முடிவு
தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் இணைப்பு வழங்குவது எப்படி? டி.வி. ஒளிபரப்பு தெளிவாக இருக்கும் வகையில் எவ்வாறு இணைப்பு கொடுப்பது என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
தொலைபேசி, இணைய தள வசதிக்காக ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும், ஆப்டிக் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்கினால் 17 ஆயிரம் வருவாய் கிராமங்களுக்கு இது பயன்படும்.
டி.வி. தவிர டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகளையும் இதன் மூலம் வழங்க முடியும். இதனால் தமிழ் நாட்டின் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும், விரைவில் கேபிள் டி.வி. இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் வசதிகளை வழங்க முடியும். தற்போது ஒன்றியங்கள் அளவில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் இணைப்பு சிறிய கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டால், 2 வருடங்களில் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்க முடியும்.
இந்த தகவலை எல்காட் நிறுவன நிர்வாக இயக்கு னர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ரூ.500 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேபிள் இணைப்புகளை பராமரித்தல், கட்டணம் வசூல் செய்தல் ஆகிய பணிகளை உள்ளாட்சி துறை மற்றும் சுய உதவிகுழுக்கள் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நகர் புறங்களில் 6 மாதங்களுக்குள்ளும், கிராமங்களில் ஒரு வருடங்களுக்குள்ளும் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்காக சென்னையிலும், மதுரையிலும் தனி அலுவலகங்ககள் அமைக்கலாம்.
'டிஜிட்டல்' முறையில் இந்த இணைப்பு வழங்கப்பட்டால் தெளிவான ஒளிபரப்பு கிடைக்கும். பணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்க முடியும். கட்டண வசூலையும் 'ஆன்லைன்' செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
ELCOT to bring all households under cable TV network in Tamil Nadu @ NewKerala.Com News Channel
Posted by
Boston Bala
at
2:25 AM
0
comments
Friday, July 20, 2007
தமிழக அரசு தொடங்கும் புதிய `கேபிள் டி.வி.'- கருணாநிதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். எனவே அரசே கேபிள் டி.வி.யை ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தியதால் கேபிள் டி.வி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்த தொழில் நுட்பத் துறை அதிகாரிகளை முதல்- அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார்.
அப்போது டாக்டர்ராமதாஸ் "தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டுமானால் எல்லா கேபிள் டி.வி.க்களையும் அரசே கையகப்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்'' என்று ஆலோசனை தெரிவித்தார்.
தனியார் கேபிள் டி.வி.க் களை கையகப்படுத்தும் பட்சத்தில் அதில்சட்ட சிக்கல்கள் எழலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
புதிய கேபிள் டி.வி.யை தமிழக அரசு சொந்தமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கேபிள் டி.வி.யையும் அரசு கையகப்படுத்த முடியாது. அது தேவை இல்லாத சட்ட பிரச்சினைகளை உருவாக் கலாம். எனவே தான் அரசே சொந்தமாக கேபிள் டி.வி.தொழிலில் ஈடுபடுகிறது.
'டாஸ்மாக்' போல கேபிள் டி.வி.யும் தமிழக அரசுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும். முதல் கட்டமாக கேபிள் டி.வி. தொழில் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வருமானம் அரசின் மேம்பாட்டு பணிகளுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் தற்போது முதல் கட்ட அளவில் தான் உள்ளது.
புதிய கேபிள் டி.வி.யை அமல்படுத்த கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை. அரசின் கேபிள் டி.வி.யை சிறப்பாக கூடுதல் லாபத்துடன் இயங்க வைக்கும் வழிகள் குறித்து தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுடன் நாங்கள் கருத்து கேட்டு இருக்கிறோம்.
நிபுணர்களின் முழுமை யான ஆலோசனை கிடைத்த தும் அரசின் புதிய கேபிள் டி.வி. நடைமுறைக்கு வரும் முதலிலேயே தமிழ்நாடு முழுவதிலும் அரசின் கேபிள் டி.வி.யை கொண்டு வர இயலாது. படிப்படியாக அரசின் கேபிள் டி.வி. தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
முந்தைய சற்றுமுன்...: டிடீஎச் கட்டணங்களை ட்ராய் கட்டுப்படுத்தாது
மாலைமலர்
The Hindu : Front Page : Government-run cable TV service coming
Posted by
Boston Bala
at
10:14 PM
2
comments
Friday, July 13, 2007
விசாகப்பட்டினத்தில் தொலைக்காட்சி கோபுரம் குண்டு வைத்து தகர்ப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சின்னட்டபள்ளி கிராமத்தில் உள்ள தூர்தர்சனுக்கு சொந்தமான கோபுரத்தை நேற்று இரவு நக்சல் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
Zee News - Centre ascertaining facts on Naxal attack: Minister
IBNLive.com > Naxals blow up Doordarshan office in Andhra Pradesh: "They also blew up an ex MLA's house in the city and damaged the Roads and Building department building in Chintappali. PTI reports Maoists were reportedly protesting against the proposed bauxite mining project."
Posted by
Boston Bala
at
1:19 AM
1 comments
Tuesday, July 10, 2007
கலர் டி.வி.க்கு ரூ.500 லைசென்ஸ் கட்டணம்: மத்திய அரசு புதிய திட்டம்
மத்திய அரசுக்கு சொந்த மான பிரசார் பாரதி கார்ப்ப ரேஷனுக்கு அதிகநிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதன்படி புதிதாக கலர் டி.வி. வாங்குவோரிடம் இருந்து ரூ.500 உரிமம் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. கறுப்பு வெள்ளை டி.வி.க்கு உரிமம் கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இது பற்றி நாளை நடைபெறும் மந்திரி கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
இது தவிர இன்னொரு திட்டம் ஒன்றும் உள்ளது. கலர் டி.வி.யின் விலையில் 10 சதவீதம் உரிமம் கட்டண மாக வசூலிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது. ஒவ் வொரு கலர் டி.வி.யின் விலை யில் 10 சதவீதம் உரிமம் கட்ட ணமாக வசூலித்தால் பிரசார் பாரதி கார்ப்பரேசனுக்கு ஆண்டுக்கு ரூ.898 கோடி வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் உரிமம் கட்டணத்தை உற்பத்தி வரியில் சேர்த்தால் டி.வி.வாங்குவோர் அதை சுமையாக நினைக்க மாட்டார்கள். ஆனால் டி.வி. வாங்கிய பிறகு ரூ.500 உரிமம் கட்டணம் என்றால் கூடுதல் சுமையாக கருதக்கூடும். இதனால் உற்பத்தி வரியி லேயே ரூ.500 உரிமம் கட்ட ணத்தை சேர்க்கலாமாப என் பது பற்றியும் நாளைய மந் திரிகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதே போல் ரேடியோ வுக்கும் உரிமம் கட்டணம் வசூலிக்கலாமா என்பது பற்றியும் முடிவு செய்யப்பபடுகிறது.
பிரசார் பாரதி கார்ப்ப ரேசனுக்கு ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை செலவாகிறது. ஆனால் தனியார் டி.வி.க்கள் ஆதிக்கத்தால் வருமானம் கணிசமான அளவுக்கு குறைந்து விட்டது. தற்போது ஆண்டுக்கு ரூ.1600 கோடி தான் வருமானமாக கிடைக் கிறது. டி.வி.க்கு உரிமம் கட் டணம் வசூலிக்கப்பட்டால் பிரசார் பாரதி கார்ப்பரேச னுக்கு ஏற்படும் நஷ்டம் குறைக்கப்படும்.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
7:19 PM
3
comments
Wednesday, July 4, 2007
தொலைகாட்சி: விரைவில் கட்டுப்பாடு தளர்வு.
இரவு 11 மணிக்கு மேல் வயது வந்தோருக்கு மட்டுமான நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது.
ஆபாசக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தற்போது மத்திய செய்தி ஒளிபரப்புத் துறையின் தடை உள்ளது. ஆனாலும் இதை மீறி எப் டிவி உள்ளிட்ட சில சேனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன. இதையடுத்து சமீபத்தில் ஏஎக்ஸ்என், எப் டிவி ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் மாறி வரும் உலக மனோபாவத்திற்கு ஏற்ப தொலைக்காட்சிகளில் நள்ளிரவுக்கு மேல் ஆபாசக் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகளைக் காட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதையடுத்து இந்தக் கோரிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. தற்போது ஆபாசக் காட்சிகளுடன் கூடிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் காட்ட பச்சைக் கொடி காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
முற்றிலும் வயது வந்தோர் மட்டுமே பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா வருகிற மழைக்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தட்ஸ் தமிழ்
Posted by
வாசகன்
at
9:42 PM
0
comments
Monday, June 11, 2007
ச:கிரிகின்ஃபோ தளத்தை ESPN வாங்கியது
விளையாட்டுத் துறை ஊடகங்களில் கிரிக்கெட் விளையாட்டினை இணையத்தில் கொணர்வதில் முன்னோடியான கிரிகின்ஃபோ தளத்தை விளையாட்டு தொலைகாட்சிகளில் முன்னணியில் இருக்கும் ESPN நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது. 1993இல் துவங்கிய இந்தத் தளம் 99இல் சிஃபியால் வாங்கப் பட்டது. பின்னர் 2003இல் விஸ்டன் குழுமம் வாங்கியது. தற்போது நான்காம் முறையாக கை மாறியுள்ளது.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:08 PM
0
comments
`தசாவதாரம்' படத்தையும் கலைஞர் டி.வி. வாங்கியது
கலைஞர் டி.வி.' என்ற பெயரில் புதிய சேனல் ஆகஸ்டு 15-ந்தேதி உதயமாகிறது. இந்த சேனலில் ஒளி பரப்ப புதுப்படங்கள் வங்கப்படு கின்றன. ரஜினியின் மெகா பட்ஜெட் படமான சிவாஜி'யை கலைஞர் டி.வி. வாங்கியது. இப்படம் ரிலீசுக்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பப்படும்.சிவாஜியை தொடர்ந்து கமலின் பிரமாண்டமான தசாவதாரத்தையும் வாங்க கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. டி.வி. நிர்வாகத்தினரும் தசாவதாரம் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. `சிவாஜி'யை விட 1000 ரூபாய் அதிகமாக தசாவதாரம் விலை போய் இருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மல்லிகா ஷெராவத், ஜெயப் பிரதா, நெப்போலியன், சந்தான பாரதி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக் கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு அதிக செலவில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவில் 20 அமெரிக்க அழகிகளுடன் கமலும், மல்லிகா ஷெராவத்தும் நடனமாடும் காட்சியொன்றும் ஆடம்பர நடன கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது. 747 ஜெட் விமானத்துக்குள் கமலஹாசன் ஊடுருவும் காட்சி யொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந் துள்ளது. சிவாஜியை தொடர்ந்து தசாவதாரத்தையும் வாங்கியதன் மூலம் இரு மெகா ஸ்டார்களின் படங்கள் கலைஞர் டி.வி. கைவசமாக்கியுள்ளது. போக்கிரி, தர்மபுரி, முனி, கேடி படங்களையும் கலைஞர் டி.வி. வாங்கி இருக்கிறது. கமலின் பழைய படமான ராஜபார்வை இதுவரை டி.வி. சேனலுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. அதையும் கலைஞர் டி.வி. வாங்கி இருக்கிறது.
Posted by
Adirai Media
at
4:29 PM
1 comments
Saturday, June 2, 2007
ராஜ் டிவி உரிமையாளர் திமுகவில் இணைந்தார்.
எனது பிறந்த நாள் பரிசாக ராஜ் டிவியும், அதன் உரிமையாளர் ராஜேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளனர்.
என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக தொலைக்காட்சி களத்தில் காட்சிகள் மாறியுள்ளன. திமுக சேனலாக இருந்து வந்து சன் டிவி திமுகவிலிருந்து தூர தள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ராஜ் டிவி அமர்ந்துள்ளது. கூடவே கலைஞர் டிவியும் விரைவில் வரப் போகிறது. இந்த நிலையில், ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுதொடர்பாக தனியாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்குப் பிறந்த நாள் பரிசாக ராஜேந்திரன் சகோதரர்களும், ராஜ் டிவியும் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்றுதான் ராஜேந்திரன் திமுகவில் இணைகிறார் என்று யாரும் கருத வேண்டாம். அவர் எப்போதும் திமுக ஆதரவாளர்தான். சங்க இலக்கியத்தில் காதலர்கள் யாருக்கும் தெரியாமல் சந்தித்துப் பேசுவார்கள். அதற்கு களவியல் என்று பெயர். எனக்கும், ராஜ் டிவிக்கும் இன்று அந்த முறை முடிந்து, திருமண வைபோகம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் எப்போது திமுகவில் இணைந்தீர்களோ, அப்போதே எனது உடன் பிறவா சகோதரர்களாகி விட்டீர்கள் என்றார் கருணாநிதி. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஏ.வ.வேலு, ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Posted by
Adirai Media
at
11:15 AM
3
comments
Friday, May 25, 2007
சன் டிவி அதிகாரிக்கு கொலை மிரட்டல்.
சன் டிவியின் துணைத் தலைவரும், தலைமை நிகழ்ச்சி அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஹன்ஸ் ராஜ் சக்ஸேனா, ஆணையர் லத்திகா சரணைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், தனது செல்போனைத் தொடர்பு கொண்ட ஒருவர், உடனடியாக சன் டிவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாக தனது புகாரில் கூறியுள்ளார் சக்ஸேனா. இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், பி.சி.ஓ.விலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது. விரைவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என லத்திகா சரண் தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்தே ஆட்களை இழுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சன் டிவியின் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Posted by
Adirai Media
at
10:07 AM
0
comments
Monday, May 21, 2007
வெனிசுவேலாவில் தொலைக்காட்சி நிலையத்தின் உரிமம் ரத்து: மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்சிடிவி (RCTV) வெனிசுவேலாவில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சியாகும். அதிபர் ஹ்யூகோ சாவஸ் இந்த தொலைக்காட்சி நிலையத்தை மூட உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆர்சிடிவி துணை போனதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், துன்மார்க்க நெடுந்தொடர்களினால் கலாச்சாரம் சீர்கேட்டுக்கு உள்ளாவதை காரணங்காட்டி, மே 27 காலாவதியாகும் உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளார்.
ஆர்சி டிவிக்கு பதிலாக அரசே புதிய தொலைக்காட்சியைத் துவங்க இருக்கிறது.
BBC NEWS | Americas | Venezuelans rally for TV station: "Tens of thousands of Venezuelans have rallied in the streets of Caracas to protest against President Hugo Chavez's plans to close a private TV station."
Posted by
Boston Bala
at
9:02 PM
0
comments
திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்: அக்டோபர் முதல் ஒளிபரப்பு
திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்.
மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.
Posted by
Boston Bala
at
7:18 PM
1 comments
b r e a k i n g n e w s...
