.

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Thursday, August 30, 2007

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது

அனைத்து இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறு விலக்கிக் கொள்ளவில்லையெனின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக தில்லி உயர்நீதிமன்றம் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காண அரசிற்கு கெடு விதித்தது. மருத்துவ பட்டச் சான்றிதழ்கள் வழங்கப் படாவிடில் நீதிமன்றம் தலையிடவேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தது. இதனை அடுத்து உலக உடல்நல நிறுவன சந்திப்பொன்றிற்கு பூடான் செல்லவிருந்து உடல்நல அமைச்சர் அன்புமணி தன் பயணத்தை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. சான்றிதழ்களில் கையொப்பமிட்டிருந்த தாளாலர் மரு.சந்தீப் அகர்வால் நியமனம் செல்லாது என்று அமைச்சர் முன்னதாக கையெழுத்திட மறுத்து வந்தார்.

AIIMS doctors end strike

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிபிசி

The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians)
Udayavani - National Fishworkers Forum appeals to PM

Wednesday, August 29, 2007

பட்டங்கள் கொடு: AIIMS மருத்துவர்கள் போராட்டம்

அனைத்து இந்திய மருத்துவகல்வி கழகத்தில் (AIIMS) இல் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு மருத்துவ இளங்கலை,முதுகலை மற்றூம் பட்டமேற்படிப்பு் பட்டங்களை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பதாக குற்றம் சாஅட்டி செவ்வாய் இரவிலிருந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். தாங்கள் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ வெளிநாட்டில் மேற்படிப்பு தொடரவோ ஒரிஜினல் சான்றிதழ்கள் இல்லாமல் துன்புறுவதாக கூறினர். இந்த வேலைநிறுத்தத்தால் மருத்துவமனை செயல்கள் முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளது. அவசர சிகிட்சைப் பிரிவும் தீவிர சிகிட்சைப் பிரிவும் மட்டும் இயங்குவதாக போராடும் மருத்துவர்கள் கூறினர். இன்று மாலை ஐந்து மணிக்குள் தங்கள் பட்டங்கள் கிடைகாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.

AIIMS resident doctors strike continues-India-The Times of India

Saturday, August 25, 2007

இரயில்நிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

தெற்கு இரயில்வேயின் பாலக்காடு கோட்டதிலிருந்து தமிழகப்பகுதியைப் பிரித்து சேலம் கோட்டம் அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசியலுக்கு எதிராக கேரளாவிற்குச் செல்லும் இரயில்களை மறிக்கும் போராட்டம் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இப்போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பல மலயாளிகள் அவதியுற்றனர். இதனையடுத்து இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் முதல்வர் மு.கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் இரயில்வே கோட்டம் அமைவது குறித்து கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

Wednesday, August 22, 2007

தாக்காவில் மாணவர் கலவரம்

பங்களாதேசத்தின் இடைக்கால அரசு அடக்கமுயன்றாலும் மாணவர்களின் கலவரம் தாக்கா நகரெங்கும் பரவி வருகிறது. நேற்று இரவு கல்வி அமைச்சர் அயூப் கத்ரியின் வீட்டை சூழ்ந்து கல்லெறிந்தனர்.தாக்கா பல்கலையில் மாணவர்களை இராணுவத்தினர் அடித்ததாக கூறப்படும் நிகழ்வை நீதிபதி ஒருவர் மூலம் விசாரிக்கவும் பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.

NDTV.com: Student riots spread in Dhaka

Monday, August 13, 2007

டாடா தொழிற்சாலை: இ.கம்யூ எதிர்ப்பு

ஆளும் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பரந்த நிலப்பரப்பை கையகப்படுத்தி டாடாவின் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கடுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடையே பேசும்போது கூறினார்.ஏன் பரந்த நிலப்பரப்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்படவேண்டும் என்றும் நடுவண் அரசே ஏன் இத்திழிற்சாலையை நடத்தக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தங்கள் கட்சி ஏற்கெனவே சாத்தான்குளம், இராதாபுரம் பகுதி மக்களை சந்தித்து 'முதல் தகவல் அறிக்கை' தயாரித்திருப்பதாகவும் மக்களிடையே அச்சமும் குழப்பமும் நிரவி இருப்பதாகவும் அவர் கூறினார்.

கையகப் படுத்தவிருக்கும் 16,000 ஏக்கரா நிலப்பரப்பில் 315 ஏக்கராநிலம் மட்டுமே விளைநிலமென்ற அரசின் கூற்றை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

The Hindu News Update Service

Wednesday, August 8, 2007

சிண்டிகேட் வங்கி: இந்தி தெரிந்தால் தான் வேலை

இந்தி மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற சிண்டிகேட் வங்கியின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

சிண்டிகேட் வங்கி நானூறு எழுத்தர்கள், முன்னூறு அதிகாரிகளை பணியமர்த்த அறிவிப்பு செய்தது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பில் இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்தியை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது.

தினமணி

Saturday, August 4, 2007

நடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்.

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விமானத்திற்குள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தாவிலிருந்து தனியார் நிறுவன விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். ஆனால் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கழிப்பறை ஏன் மூடப்பட்டுள்ளது என்று பயணிகள் கேட்டதற்கு விமான ஊழியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அத்தனை பயணிகளும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமானம் சென்னைக்கு வந்து சேர்ந்ததும், விமான ஊழியர்கள், ஒரு பயணியை ரகளை செய்ததாக கூறி விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதைப் பார்த்ததும் மற்ற பயணிகள் திரண்டு வந்து மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர்.

கழிப்பறைக் கதவு ஏன் மூடப்பட்டிருந்தது என்று கேட்பது குற்றமா, அதற்காக தண்டனையா என்று ஆவேசமாக கேட்டபடி மேலாளரை முற்றுகையிட்டு கோபத்துடன் பேசினர். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அத்தனை பயணிகளும் கையெழுத்திட்டுப் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், நடந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் வருத்தம் கேட்டனர். இதுபோல இனி நடக்காது என்று உறுதியளித்தனர். இதையடுத்து பயணிகள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.

Wednesday, August 1, 2007

பாலக்காடு வட்டம்: முழு கேரள அமைச்சரவையும் தில்லியில் ஆர்பாட்டம் நடத்தும்

நடுவண் அரசு மாநிலத்திற்கு வெள்ள நிவாரண உதவி கொடுக்கப் படாததிற்கும் பாலக்காடு இரயில்வே வட்டம் பிரிக்கப்பட்டு சேலம் வட்டம் உருவாக்கப் படுவதையும் எதிர்த்து முழு கேரள அமைச்சரவையும் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் திகதி தில்லியில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன் இந்த தகவலைத் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் மாநில எம் பி களும் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வர் என்றும் கூறினார். ஆகஸ்ட் 10 அன்று துவங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் மாநில எம் பிக்கள் இப்பிரச்சினையை எழுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

The Hindu News Update Service

Saturday, July 28, 2007

ஆந்திர மாநிலத்தில் 9 பேர் போலிசாரால் சுட்டுக் கொலை !

ஜூலை 28, 2007 ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 'பந்த்' தின் போது ஏற்பட்ட வன்முறையறையை கட்டுப்படுத்த எடுத்த போலிசார் நடவடிக்கையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து எதிர்கட்சிகள் முதல்வரை பதவி விலக் கோரி அறிக்கை விடுத்துள்ளனர்.

********

தட்ஸ் தமிழில் இதுபற்றிய வந்த செய்தி குறிப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பந்த்தில் பெரும் வன்முறை மூண்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்த பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என தெலுங்குதேசம் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தன.

அரசின் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏழை விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலையும், ஆளும் காங்கிரசின் அராஜக செயலையும் கண்டித்து இன்று பிரதான எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் விடுத்த பந்த்தை மீறி ஆந்திரா அரசு இன்று நகரில் பஸ் மற்றும் ரயில்களை இயக்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பல இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் மீது தெலுங்குதேசம், பாஜகவினர் அடித்து நொறுக்கினர். ரயில் மறியலும் நடந்தது.

இந்த பந்தையொட்டி அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், கடைகள், தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை.

பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாயினர்.

Thursday, July 26, 2007

மேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்

கடந்த ஓராண்டாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகம் (எய்ம்ஸ்) மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, கடந்த 8 நாள்களாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்போக்கு டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைப்பு என்ற போர்வையின் கீழ் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு எய்ம்ஸ் இயக்குனர் பி. வேணுகோபாலுக்கு, தேசிய எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எய்ம்ஸ் பேராசிரியர்கள், உள்ளுறை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப்பிரச்னை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபாலுடன், தேசிய எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் தலைவர் பூடா சிங் இம்மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

எய்ம்ஸ்-ஸின் 'ஃபுளோட்டிங் ரிசர்வேஷன்' கொள்கை சட்டவிரோதமானது என்று பூடா சிங் கூறியுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மீது பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் சக்தி குமார் குப்தா. 1993-ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எய்ம்ஸ் முழுமையாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

Govt asks AIIMS to give it information regarding reserved posts - India - The Times of India
The Hindu News :: Govt. to amend law governing AIIMS, PGIMER
News From Sahara Samay:: HC notice to Ramadoss, Thorat

Tuesday, July 24, 2007

3ஆம் வகுப்பு மாணவி பாலியல்பலாத்காரம்

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு துணைபோன பள்ளியின் உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் சென்னையில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திர்யா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவியை பள்ளியின் லேப்டெக்னீஷியன் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு துணைபோன உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஞானம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். தி.நகர் துணை ஆணையர் லட்சுமி நேரில் வந்து பெற்றோர்களின் சார்பில் பள்ளி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தமினார். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் துணை ஆணையர் லட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னர் பெற்றோர்கள் கலைந்துசென்றனர்

Wednesday, July 11, 2007

கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: என்.வரதராஜன்

தமிழகத்தில் முறைகேடாக நடத்தப்பட்டுள்ள கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தினார்.

மேலும் கூட்டுறவுத் தேர்தலில் திமுகவுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து அக்கட்சி சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தல் 90 சதவீத இடங்களில் முறைகேடாக நடந்துள்ளது. ஆளும் கட்சியினருடன் அதிகாரிகள் இணைந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் தமிழக அரசுதான் இத் தேர்தலை நடத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அளித்த பேட்டி சரியல்ல. என்னோடு தொடர்புகொள்ள முடியவில்லை என அவர் கூறியிருப்பது தவறு செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் செயலாகும்.

கூட்டுறவுத் தேர்தலை ஜனநாயக ரீதியாக நடத்துங்கள் எனக் கூறியபோது முதல்வர் தலையசைத்தார். ஆனால் படிப்படியாக வளர்ந்து ஜனநாயக விரோதத்துக்குள் திமுக சிக்கிக்கொண்டுள்ளதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மத்திய அரசின் ஆன்லைன் வர்த்தகத்தில் திமுக தலையீடு, மின்சார உற்பத்தியில் தனியார் கூடாது என்பது, மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, சென்னை விமான நிலைய விஸ்தரிப்பை தனியாரிடம் தரக் கூடாது ஆகியவற்றில் திமுக செயல்பாட்டை வரவேற்றோம். ஆனால் இந்த ஆதரவு ஜனநாயகத்தை அழிப்பதற்கான அனுமதியாக திமுக கருதக் கூடாது என்றார் வரதராஜன்.

தினமணி

CPM alleges DMK 'high-handedness' in Coop Elections

Tuesday, July 10, 2007

லால் மசூதியில் நுழைந்தது பாக். இராணுவம்:43 பேர் பலி

கடந்த ஒருவாரமாக முற்றுகையிடப்பட்டிருந்த இஸ்லாமாபாத்தின் லால் மசூதிக்குள் பாக்கிஸ்தான் இராணுவம் அதிரடியாக நுழைந்து நடத்திய தாக்குதலில் 40 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 3 இராணுவத்தினர் பலியாயினர் என்றும் தெரிகிறது. 50 போராளிகள் கைது செய்யப்பட்டுள்லனர். மசூதியின் பெரும்பகுதியை கைப்பற்றியபின்னும் பிணையாக வைக்கப்பட்டிருந்த பெண்களையும் சிறுவர்களையும் இன்னும் காணவில்லை. இந்த தாக்குதல் தொடர்கிறது.
மேல் விவரங்க்களுக்கு...Pakistani forces storm Lal Masjid; at least 43 dead | Reuters.com

Thursday, July 5, 2007

இடஒதுக்கீடு: முஸ்லிம்கள் போராட்டம்

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மகளிர், சிறுவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

'இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவீதத்தினரும், அகில இந்திய அளவில் 20 சதவீதத்தினரும் உள்ளனர். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் விகிதாசாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.

மத்தியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், தமிழகத்தில் உள்ள திமுக அரசும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொருந்தாத காரணங்களைக் கூறி காலம் கடத்துவதை கைவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், தனி இட ஒதுக்கீடு பெறும் வரை தீவிர போராட்டம் நடைபெறும்' என்று மாநிலச் செயலர் சுலைமான் தெரிவித்தார்.

நெல்லையில்...: திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் சுமார் 400 குழந்தைகள் உள்பட 3,400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேலப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சேலம்: சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 213 பெண்கள் உள்படட 787 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி: திருச்சியில் நடந்த போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 6,124 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி

Zee News - Over 1500 court arrest in TN

Wednesday, July 4, 2007

மணிப்பூரில் ஏழு பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது

மணிப்பூரின் மூன்று மலைமாவட்டங்களில் ஏழு அரசு உயர்நிலைப்பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப் பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இந்த செயலை செய்தவர்களைப்பற்றியும் இதற்கான காரணங்கள் பற்றியும் எதுவும் தெரியவில்லை. சிலகாலமாக மலைவாழ் மாணவர்கள் சங்கம் தங்கள் பள்ளிகள் நாகாலாந்து உயர்கல்வி ஆணையத்துடன் இணைக்கப்படவேண்டும என கோரிவந்ததால் அவர்களின் பங்கு சந்தேகிக்கப் படுகிறது.

The Hindu News Update Service

Wednesday, June 27, 2007

சில்லறை வியாபாரம்: கேரளாவில் இன்று கடையடைப்பு

சில்லறை வியாபாரத்தில் உள்நாட்டு பெரும் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபடுவதை எதிர்த்து கேரளாவின் வணிகர்கள் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர். கடையடைப்பு பல நகரங்களில் முழுமையாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
The Hindu News Update Service

Monday, June 25, 2007

ச:சிரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் ஊர்வலம்

சிரீலங்காவில் தொடர்ந்துவரும் தமிழ் இனப்படுகொலைகளை எதிர்த்து டர்பனில் இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வர்த் பகுதியிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணியில் நூற்றுக்கணக்கானவர் பங்கு கொண்டனர்.

மேல் விவரங்கள்...The Hindu News Update Service

Saturday, June 23, 2007

ச:சபரிமலை தந்திரியின் பேரன் கைது

குருவாயூர் விவகாரத்தின் தொடர்ச்சியாக இன்று திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகம் முன்னர் தேவஸ்வம் போர்ட் மந்திரியின் கூர்றை எதிர்த்து அவருக்கு நல்வழி காட்ட பூசை செய்ய முயன்ற சபரிமலை தலமை பூசாரி (தந்திரி)யின் பேரன் ராகுல் ஈஸ்வரை காவலர் கைது செய்தனர்.

மேலும்... The Hindu News Update Service

Thursday, June 21, 2007

ச:சென்னை விமானநிலையத்தில் மனிதசங்கிலிப் போராட்டம்

சென்னை உள்நாட்டு விமானமையத்தின் முன்னர் நூற்றுக்கணக்கான உடலூனமுற்றவர்கள் ஏர் சகாராவில் மூளைகுறைவுற்ற ராஜனை ஏற்ற மறுத்த விவகாரத்தில் விமான சேவைகளில் உடல் ஊனமுற்றோருக்கு மற்றவர்களுக்கு இணையான சேவை வழங்கவேண்டும் என்று கோரிக்கை அட்டைகளை வைத்துக் கொண்டு தங்கள் சக்கரநாற்காலிகளில் இருந்தவாறே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மேலும்..The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...