.

Sunday, July 15, 2007

லால் மசூதி தாக்குதல்: முஷாரஃப் கருத்து.

அரசின் அமைதி முயற்சிக்கு பயங்கரவாதிகள் ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது என்று லால் மசூதி தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில்,

பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. இஸ்லாமின் உண்மையான கருத்துக்களை பின்பற்றி நாம் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமியர் என்ற பெயரில் சில தீய சக்திகள், சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல், உண்மையான இஸ்லாமியர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். இது ஒரு தவறான வழிகாட்டுதல். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. தீயவை அழிக்கப்படுவது தான் அவசியம். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.


தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...