.

Tuesday, September 4, 2007

ஞாபகத்திறனுக்கொரு முகமது ஃபைசல்.

குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திண்டாடும்போது, 20 வயதான முகமது பைசல் என்பவர், ஒரு நிமிடத்தில் 50 கை பேசி எண்களை மளமளவென்று கூறுகிறார். புதுடில்லி, ராஜ்தானி ஓக்லாவில் வசிப்பவர் முகமது பைசல்(20).

எல்.ஜி., நிறுவனத்தில் சேவைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு நினைவுத் திறன் மிக அதிகமாக உள்ளதால், 50 கை பேசிஎண்களை மளமளவெனக் கூறுகிறார். 224 நாட்டின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.டி., எண் அனைத்தையும் ஒப்பிக்கிறார். எந்த நாட்டைப் பற்றிய செய்தியையும் 0.8 செகண்டில் தந்து, நடமாடும் குறிப்பேடாக (டைரக்டரி)'யாக இருக்கிறார்.

பைசலின் சாதனை இதோடு நிற்கவில்லை. 600 வருடம் வரை உள்ள நாட்காட்டியை முழுவதுமாக நினைவு வைத்துள்ளார். அவர் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருப்பதால், அவருடைய பெயர், "ஹோல்டர்ஸ் ரிபப்ளிக் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு,' மற்றும் "ஓபன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ஞாபகத் திறன் குறித்து பைசல் கூறியுள்ளதாவது: முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்தி வைக்க, ஆர்வம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் எந்த ஒரு பொருளையும் ஐந்து புலன்கள் மூலம் நினைவில் வைத்துக் கொள்வேன். பொருள்களை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து, படித்து, அனுபவித்து மூளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு பைசல் கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே இவரது இலட்சியமாம்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.