.

Tuesday, September 4, 2007

'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது' - ஈரான் அதிபர்

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத். அதற்கான வலுவான கணித ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் அவர்.

"அடிப்படையில் நான் ஒரு பொறியாளர். அதிலும், கணக்கிடுதல், அட்டவணைப்படுத்துதலில் நிபுணர். என்னுடைய கணித ஆற்றலை பயன்படுத்தி பல மணி நேரம், விதவிதமான ஹிபோதிசஸ் கணக்குகளை போட்டுப் பார்த்தேன். இதிலிருந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். என் கணக்குப்படி, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்பே இல்லை' என்று உறுதிப்பட கூறுகிறார் மஹமூத் அகமதிநிஜாத்.

போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடுதல் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றிருக்கும் அவர், ஏராளமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

மிகுந்த மத நம்பிக்கையுடைய அவர் மேலும் கூறுகையில், "நீதியின் வழியில் நடப்பவர்கள் வெற்றியடைவார்கள் என்று இறைவன் கூறியிருப்பதை நான் நம்புகிறேன். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்' என்கிறார்.

அதிபர் மஹமூத் அகமதுநிஜாத் கூறியதாக திங்கள்கிழமை பத்திரிகைகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி தான் ஈரான் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் மஹமூத், அப்படி என்ன கணக்கு போட்டு பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

கடந்த 2003-ல் அணுகுண்டை தேடுகிறோம் என்று இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதேபாணியில் ஈரான் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதற்கு அச்சாரமாக அதிபர் புஷ்ஷுன் அண்மைக்கால பேச்சுக்களும் அட்சதை தூவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...