.

Wednesday, August 22, 2007

மருத்துவர் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்கிறார்

லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.அவரது ஆஸ்திரேலிய நுழைமதியும் தடை செய்யப்பட்டது. ஒரு மாத கால சிறைவாசத்துக்கு பிறகு ஹனீப் குற்றமற்றவர் என்று கூறி அவரை ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து இந்தியா வந்த ஹனீப், தான் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று பணியாற்ற விரும்புவதாகவும், தடை செய்யப்பட்ட தனது நுழைமதியை மீண்டும் தர வேண்டும் என்றும் கோரினார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஹனீப் தொடர்ந்த வழக்கில் ஹனீப்புக்கு மீண்டும் நுழைமதி வழங்குமாறு உத்தரவானது. இதையடுத்து அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் உறுதிபடுத்தியுள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...