.

Wednesday, August 22, 2007

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர்: புதியநிலா மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டுவிழா சுல்தான் பள்ளிவாசல் இணைமண்டபத்தில் 19-08-2007 மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவுக்கு மா.அன்பழகன் மற்றும் எம்.ஒய்.முஹம்மது ர•பீக் முன்னிலை வகிக்க , திரு எம். இலியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மூத்த கவிஞர் திரு இக்குவனம் தொகுப்பாசிரியர் திரு ஜஹாங்கீர் அவர்களைப் பாராட்டி அந்தாதி வெண்பா பாடி மகிழ்ந்தார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு அ.முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் வாழ்த்துரை வழங்கினர்.

புதியநிலா பத்தாமாண்டு நிறைவு தொகுப்பு மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சுமார் ஒரு மணி நேரம் நூலின் நயங்களைச் சுவையுடன் விரித்துரைத்தார்.

சிங்கப்பூர் எம்.இ.எஸ். உரிமையாளர் ஹாஜி அப்துல் ஜலீல், ஜமால் கஜூரா உரிமையாளர் ஹாஜி ஜமால் முஹம்மது ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
புதியநிலா இதழின் நிறுவனரும் சிறப்பாசிரியரும் சிறப்பு மலரின் தொகுப்பாசிரியருமான திரு மு.ஜஹாங்கீர் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தினார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நிகழ்ச்சிகளை கவித்துவமாய்த் தொகுத்து வழங்கிய அவ்விழாவில் சிங்கப்பூர் கவிச்சோலை/ கவிமாலைக் கவிஞர்கள் ஆறுபேர் 'புதியநிலா' என்ற தலைப்பில் கவிதை பாடியமைக்காக நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

சிங்கப்பூரின் முன்னணி பத்திரிகையாளர்கள் /படைப்பிலக்கியவாதிகள்/தமிழறிஞர்கள்/வணிகர்கள்/பிரமுகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட அவ்விழா ஓர் இலக்கியச் சங்கமமாகத் திகழ்ந்தது.

செய்தி: 'ஐனுல் மாஹிரா' , சிங்கப்பூர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...