.

Wednesday, August 22, 2007

ஆந்திர ஆளுநராக திவாரி பதவியேற்பு

மூத்த காங்கிரஸ் தலைவர் என் டி திவாரி இன்று ஆந்திர மாநில ஆளுநராக இராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ஜி எஸ் சிங்வி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மாநில முதல்வர் இராஜசேகர ரெட்டி, அவரது அமைச்சர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் இவ்வைபவத்தில் பங்கேற்றனர்.உத்தரபிரதேச முதல்வராக மூன்றுமுறையும் புதியதாக உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில முதல்வராகவும் திவாரி பணியாற்றியுள்ளார். இதுவரை ஒரிசாவின் ஆளுநர் ராமேஷ்வர் தாக்குர் ஆந்திராவிற்கும் ஆளுநராக அதிகபொறுப்பு வகித்துவந்தார்.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...