கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி எம் ஆர் வணிககுழுவினருடன் ஒருங்கிணைந்து அமைக்க தமிழக அரசு இன்று உடன்பாடு கண்டது. தமிழக தொழில்வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ் இராமச்சந்திரனுக்கும் ஜி எம் ஆர் இன்ஃப்ராஸ்ட் ரக்சரின் இயக்குனர் பிவி நாகேஸ்வர ராவிற்குமிடையே இந்த வணிக ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடுகையில் முதல்வர் கருணாநிதியும் ஜிஎம் ஆர் குழுவின் தலைவர் ஜி மல்லிகார்ச்சுன ராவும் உடனிருந்தனர்.
3300 ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் இந்த சி.பொ.ம ரூ11,000 கோடி வரை முதலீட்டை வரவழைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 70,000 பேர் வரை வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
மேலும்: Chennai Online News Service - View News
Monday, August 6, 2007
கிருஷ்ணகிரியில் சிறப்பு பொ.ம:ஜிஎம் ஆர் குழுவுடன் உடன்பாடு
Labels:
தமிழ்நாடு,
பொருளாதாரம்,
வேலைவாய்ப்பு
Posted by
மணியன்
at
3:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment