.

Wednesday, August 1, 2007

புதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்; அண்ணா சாலை - ரூ.8,850

தமிழ்நாட்டில் நில விற்பனை யில் சந்தை விலைக்கும், வழி காட்டி மதிப்புக்கும் (அரசு விலை) இடையே வித்தியாசம் அதிகமாக இருந்தது. அதாவது வெளியில் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அதை பதிவு செய்யும் போது அந்த இடத்தில் அரசாங்க மதிப்பு மிக குறைவாக இருக்கும்.

இதனால் பத்திர பதிவில் பல்வேறு மோசடிகள் ஏற்பட்டன. கறுப்பு பண புழக்கம் அதிகரித்து அரசுக்கு வருவாய் இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதை முற்றிலும் களைய தமிழ்நாடு முழுவதும் வழி காட்டி மதிப்பை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டி ருந்தது. இதன்படி புதிய வழி காட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சந்தை விலைக்கும் முந்தை வழிகாட்டி மதிப்புக்கும் இடையே வேறுபாட்டை பாதியாக குறைக்கும் வகையில் இந்த விலை நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

அபிராமபுரம் 2-வது தெருவில் ரூ. 872 ஆக இருந்த சதுர அடி இப்போது ரூ. 2365 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அபிராமபுரம் 4-வது தெருவில் விலை ரூ. 3430 ஆக உள்ளது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் பஸ் நிலையம் முதல் பனகல் பார்க் வரை சதுர அடி ரூ. 11 ஆயிரமாக இருந்த விலை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. நாகேசுவரராவ் ரோடு முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியிலும் ரூ. 12 ஆயிரமாக விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இதே போல் அண்ணா சாலை பகுதி விலை சதுர அடி ரூ. 8850 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் தெருவின் சதுர அடி விலை எவ்வளவு என்பதை பார்க்க இண்டர்நெட்டில் www.tnreginet.net என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரு, அவென்யூ, நகர்களுக்கும் இதில் விரிவாக விலை விவரங்கள் உள்ளன.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...