.

Wednesday, August 1, 2007

இந்தியாவில் வெள்ளம் காரணமாக ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

அடைமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுமார் ஒருகோடிபேர் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்களில் பலர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். விளைநிலங்கள் பெருமளவு நீரில் மூழ்கியதால், பரவலாக பயிர் நாசமாகியிருக்கிறது.

அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரக்கணக்கான கிராமசவாசிகளுக்கு, ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் இராணுவத்தினர் நிவாரணப் பொருட்களை அளித்துவருவதாக, அசாம் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளத்திலிருந்து தப்பும் நோக்கத்தில் அவசரமாக படகில் பயணம் செய்யமுயன்ற கிராமவாசிகள் 28 பேர், அவர்கள் பயணம் செய்த படகு மூழ்கியதில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக வட இந்திய மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய சற்றுமுன்...: வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

BBC Tamil

BBC NEWS | South Asia | Flood evacuees die in India storm
Floods worsen in India's Assam state, 5 million displaced

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...