.

Saturday, September 1, 2007

"கேரளாவுக்காக தனி மண்டலம் சாத்தியமில்லை" - ஆர். வேலு

பாலக்காடு ரெயில்வே கோட்டத்தை பிரித்து சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம் அமைக்கப்படுகிறது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி அச்சு தானந்தன் ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத்யாதவை சந்தித்து தனி கோட்டம் அமைக்க கூடாது என வற்புறுத்தினார். அப்படி தனிக்கோட்டம் அமைப்பதாக இருந்தால் திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட கேரளாவுக்கு என தனி ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து பரிசீலிப்பதாக அவரிடம் லல்லுபிரசாத் யாதவ் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு பதில் அளிக்கையில் கேரளாவில் ரெயில்வே மண்டலம் அமையும் சாத்தியம் இல்லை என்றார்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் இணை அமைச்சர் ஆர்.வேலு கூறும் போது,

புதிதாக ரெயில்வே மண்ட லம் அமைக்க வேண்டுமானால் பல்வேறு சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன. பரப் பளவு, வேலை பளு, போக்கு வரத்துமுறை, இயக்கம், நிர்வாக தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இத்தகைய புதிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.

இத்தகைய சாத்தியக் கூறுகள் இந்த கோரிக்கையில் இல்லாததால் புதிய மண்டலம் அமைப்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல.


என்று கூறினார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...