.

Saturday, September 1, 2007

நிருபர்களிடம் அசடு வழிந்தார் புஷ்.

மலேசிய பிரதமர் அப்துல்லா பாத்வி அண்மையில் மறுமணம் செய்து கொண்டதையும், அவருக்கு தான் வாழ்த்து கூறியதையும் அடியோடு மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் புஷ், இறந்துபோன பாத்வியின் மனைவியைப் பற்றி பேசியதால் நிருபர்கள் முன் அசடு வழிந்தார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை ஆசிய பசிபிக் நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் புஷ், "மலேசிய பிரதமர் பாத்வியின் மனைவி 2005-ல் மரணமடைந்த போது, நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தேன்' என்று சோகம் ததும்ப கூறினார்.

பாத்வி கடந்த ஜூனில் மறுமணம் செய்து கொண்டார் என்று புஷ்ஷிடம் நிருபர்கள் நினைவுப்படுத்திய போது, "அப்படியா, நான் உடனே அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமே' என்றார்.

அப்போது குறுக்கிட்ட புஷ்ஷின் நேர்முக செயலாளர், "நீங்கள் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள் அதிபர் புஷ்" என்று நினைவுப்படுத்தினார்.

அதைக்கேட்டதும் நிருபர்கள் மத்தியில் அசடு வழிந்து சிரித்த புஷ், "பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறேன்" என்றார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், பிபிசி நிருபரின் வழுக்கைத் தலையை கிண்டலடித்த புஷ்ஷுக்கு, சரியான பதிலடி கொடுத்திருக்கின்றனர் ஆசிய நிருபர்கள்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...