.

Saturday, September 1, 2007

அப்பல்லோ: மேலும் 100 மார்புவலி சிகிட்சை மையங்கள்

இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 18 - ம் தேதிக்குள் 100 மார்பு வலி சிகிட்சை மையங்களைத் திறக்க அப்பல்லோ மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் ப்ரீதா ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சென்னை மேற்கு சிஐடி காலனியில் உள்ள விஜய் மருத்துவமனையில் மார்பு வலி சிகிட்சை மையம் (Clinic) திறந்து வைத்து அவர் பேசியது:

அப்பல்லோ மருத்துவமனையின் ஆண்டு விழா செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியா முழுவதும் 100 மார்பு வலி சிகிட்சை மையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை, 40 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மார்பு வலி ஏற்படும்போது, அருகாமையில் உள்ள மருத்துவ மையங்களில் நோயாளிகள் உடனடியாக செல்வதற்கு வசதியாக இது போன்ற மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன என்றார் ப்ரீதா ரெட்டி. நிகழ்ச்சியில், விஜய் மருத்துமனையின் மேலாண்மை இயக்குநர் பி.குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...