.

Sunday, June 10, 2007

82 வயதாகும் கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் அரசியலுக்கு ஓய்வு

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளராக இருப்பவர் ஏ.பி. பரதன் 82 வயதாகும் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் பதவி விலகலை அறிவிக்கிறார். அவருக்கு பதில் மூத்ததலைவர்களான

  • எஸ்.சுதாகர்ரெட்டி,
  • சி.கே.சந்திரப்பன்,
  • குருதாஸ் குப்தா,
  • நந்த கோபால் பட்டாச்சார்யா
ஆகியோரில் ஒருவர் பொது செயலாளராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

1996-ல் பொது செயலா ளராக இருந்த இந்திரஜித்குப்தா ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றதால் அவருக்கு பதில் ஏ.பி.பரதன் பொதுசெயலாளர் ஆனார். தற்போது 82 வயதானதால் முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...