.

Sunday, June 10, 2007

இரத்தம் உறிஞ்சும் சிகிச்சை - மருத்துவ விநோதம்.

இரத்தம் உறிஞ்சும் அட்டைகளைக் கொண்டு, நோயாளிகளின் அசுத்த இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதன் மூலம் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று ஸ்ரீநகரார் ஒருவர் நிரூபித்துள்ளார்.

காஷ்மீரில் ஹஸ்ரத் பால் தர்காவின் அருகில் வசிக்கும் அப்துல்காதிர், தொடக்கப்பள்ளியில் கூட படித்தவரில்லை என்றும் ஆனால் 'இரத்தம் எடுத்தல்' சிகிச்சையின் மூலம், பல்வலியிலிருந்து மூட்டுவலி வரை பல நோய்களை குணப்படுத்திவிடுவதாகவும் கூறுகிறார்.


அசுத்தமடைந்த இரத்தக்கட்டிகளே வியாதிகளின் வேராக விளங்குவதாகவும், அட்டைப்பூச்சிகளை அவ்விடத்தில் இரத்தம் உறிஞ்ச வைப்பதன் மூலம் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு வியாதி குணமடைவதாகவும் அவர் கூறினார். இரத்தம் உறிஞ்சி எடுக்கும் முறை பற்றி இஸ்லாமிய ஹதீஸ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் கூறுவதை ஆமோதிக்கும் நோயாளிகள், இச்சிகிச்சைக்குப்பின்னர் நோய் நிவாரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.