.

Monday, July 23, 2007

காஞ்சி சங்கராச்சாரியார் மீது குற்றம் பதியப்பட்டது

சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் காஞ்சி மடாதிபதி மற்றும் 11 பேர் மீதான ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் அடிதடி வழக்கில் குற்றங்கள் பதியப்பட்டன(Framing of charges). செப்டம்பர் 2002இல் மடத்தின் கணக்காய்வாளராக பணியாற்றிய ஜி இராதாகிருஷ்ணன், அவரதுமனைவி மற்றும் ஊழியரை அவர்கள் வீட்டில் ஆள்வைத்து அடிக்க திட்டம் வகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜெயெந்திரரைத் தவிர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன்,மீனாட்சிசுந்தரம், ஆனந்த்,லக்ஷ்மணன், பூமிநாதன், கண்ணன், குமார்,ரவி சுப்பிரமணியம் ஆகியோர் மீதும்குற்றங்கள் பதியப்பட்டன. இந்திய குற்றவியல் பிரிவுகள் 120-B, 307/109 கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை 2005இல் பதியப்பட்டது.

IBNLive.com > Kanchi seer, 11 others charged in assault case : Sankararaman murder, Kanchi Seer

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...