.

Monday, September 10, 2007

ஜெயலலிதா தேர்தல் வழக்கு

அதிமுக தலைவர் ஜெயலலிதா 2001 தமிழக தேர்தல்களில் போட்டியிட்டபோது விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நடப்பு வழக்கில், தேர்தல் அதிகாரிகளின் கவனமான ஆய்வின்படி, 177 பிரிவு( பொய்த் தகவல்களை அரசு அதிகாரிக்கு தருதல்) படி எந்தக் குற்றமும் காண இயலவில்லை என கூறியுள்ளது. தேர்தல் விண்ணப்பங்களில் பொய்த் தகவல்கள் கூறியதாக தன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றத்தின் ஜூன் 13 ஆணையிட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் உச்சநீதிமன்ரத்தில் பதிந்த மேல்முறையீட்டினை ஒட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றம் தேர்தல் ஆனையத்தை குறைகண்டிருந்ததை குறிப்பிட்டு " தேர்தல் அதிகாரிகளே சட்டப்படி விண்ணப்பங்களை வாங்கவும் பரிசீலிக்கவும் தகுதியானவர்கள்; அதனால் இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்தான் இம்மனுக்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 177 உடன் பிரிவு 195 படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்; அவர்கள் இவ்விதயத்தில் செயல் நீதிமன்ற அதிகாரத்தைப் பெறுகிறார் " என அவர்களை கைகாட்டி விட்டது.

இந்த நிலைப்பாட்டால் நாளை தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமா இல்லை புதிய பிரச்சினைகள் கிலம்புமா எனத் தெரியவில்லை.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...