.

Tuesday, July 31, 2007

டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய ஒருவருக்கு' 1000 ஏக்கராவில் தாது பிரித்தெடுக்கும் உரிமையை வழங்கியதே டாடாவிற்கு அனுமதி வழங்காமல் இருந்ததிற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதனை ஜெயலலிதா 'கற்பனை' என்று கூறி மானநட்ட வழக்குப் போடப் போவதாகக் கூறியிருந்தார். இன்று மீண்டும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'அந்தக் குறிப்பிட்ட நபர்' தொழில் அமைச்சர் நயனார் நாகேந்திரன் நவம்பர்22,2005 இல் கூட்டிய கூட்டத்திற்கும் வந்திருந்ததாகக் கூறியுள்ளார். டாடா ஸ்டீல் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை எனவும் வினவியுள்ளார்.
முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...