.

Saturday, June 9, 2007

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி முதலிடம் வென்ற மாணவி

Thanks to Viduthalaiஉத்தரபிரதேச மாநிலம் தல்லபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திரபிரதான். இவரது மனைவி சூர்யாபத்தி. இவர்களுக்கு 4மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ராணிவர்மா. இவர் கடந்த 2001ம் ஆண்டில் நடந்த விபத்து ஒன்றில் 2 கைகளையும் இழந்தார்.

அவர் கால்களால் எழுத பயிற்சி பெற்று, சிறிது நாட்களிலேயே கையால் எழுதும் வேகத்தைப் போல கால்களால் கடகடவென எழுதக் கற்றுக் கொண்டார்.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராணி வர்மா மாநிலத்தில் முதலிடம் வென்று சாதனை படைத்தார். பிரதமர் மன்மோகன்சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்து, அவரது படிப்பு செலவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதுபற்றி ராணி வர்மா கூறும்போது, இந்த உலகத்தில் என்னைப் போல யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது. நான் படித்து உயர் அதிகாரியாகி வாகன விபத்துகளைத் தடுப் பதற்காக முயற்சிகளை மேற் கொள்வேன்.

நான் படித்து இந்த நிலைக்கு வர காரணமானவர் என் அம்மாதான். அவர் 2 மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தால் என்னை விட பல மடங்கு சந்தோஷப்பட்டிருப்பார் என்றார்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...